என் மலர்
1980-களில் தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி 1978-ம் ஆண்டு ‘சமயமாயில்லா போலும்’ என்ற படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்று முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்களில் கொடி கட்டிப் பறந்தார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1990 வரை நம்பர் ஒன் இடத்தில் இருந்த நடிகை அம்பிகா அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடு பட்டார். தற்போது 54 வயதாகும் அம்பிகா தனது மகன் ராம்கேசவை சினிமாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இதுபற்றி அம்பிகா கூறுகையில், “எனது மகன் கேசவ் சினிமாவில் நடிக்க தயாராகி விட்டான். தமிழ்- மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறான். இந்த தகவலை முன்கூட்டியே வெளிப்படுத்தி இருக்கிறேன். சிறப்பான முறையில் அவனை நடிகனாக அறிமுகப்படுத்த இருக்கிறேன்” என்றார்.
அதில் இருந்த நபர்கள் பாவனாவின் காருக்குள் ஏறிக் கொண்டனர். அவர்கள் ஓடும் காரில் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுபற்றி பாவனா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாவனாவின் கார் டிரைவர் மற்றும் கூலிப்படையினர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது சுனில் என்ற பல்சர் சுனில் என தெரிய வந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். அவர், போலீசாரிடம் கூறும்போது, பாவனாவிடம் பணம் பறிக்கவே கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறினார். ஆனால் பாவனா விவகாரத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகருக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.

அதில், நடிகை பாவனாவுக்கும், நடிகர் திலீப்புக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்ததாகவும் அவர்தான் நடிகை பாவனா விவகாரத்தில் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது. இதனை திலீப் மறுத்தார். ஒருபோதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை என்றும், வேண்டுமென்றே எனது பெயரை கெடுப்பதற்காக சிலர் வதந்தி பரப்புவதாக கூறினார். அத்துடன் இந்த பிரச்சினை கிணற்றில் போடப்பட்ட கல் போல ஆனது.
இதற்கிடையே பாவனா, வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி பல்சர் சுனில், அடைக்கப்பட்ட ஜெயில் அறையில் அவருடன் ஜின்சன் என்ற கைதியும் தங்க வைக்கப்பட்டார். அவர் பல்சர் சுனிலுடன் நெருங்கி பழகினார். அப்போது பல்சர் சுனில், பாவனா கடத்தல் விவகாரத்தில் வெளிவராத மற்றும் போலீசாரிடம் கூறாத சில முக்கிய தகவல்களை ஜின்சனுடன் பகிர்ந்து கொண்டார். அந்த தகவல்களை ஜின்சன் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கூறினார்.
இதனால் நடிகை பாவனா வழக்கில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை பாவனாவை இந்த வழக்கை விசாரிக்கும் பெண் ஏ.டி.ஜி.பி. சந்தியா அழைத்து பேசினார். அப்போது பாவனாவும் பல்வேறு புதிய தகவல்களை கூறினார்.
இதையடுத்து பாவனா வழக்கு மீண்டும் சூடு பிடித்தது. விரைவில் மலையாள சினிமா நட்சத்திரம் ஒருவர் இந்த வழக்கில் சிக்குவார் என்று கூறப்பட்டது. அந்த நட்சத்திரம் யார்? என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் நடிகர் திலீப் திடீரென போலீஸ் டி.ஜி.பி.யை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், பாவனா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் பல்சர் சுனில் தனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியிருப்பதாகவும், அவரது நண்பர் எனக்கூறி விஷ்ணு என்பவர் டெலிபோனில் ரூ.1½ கோடி பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று திலீப்புக்கு பல்சர் சுனில், காக்கநாடு சப்-ஜெயிலில் இருந்து எழுதிய கடிதம் ஜெயில் முத்திரையுடன் சமூக ஊடகங்களில் வெளியானது. கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. திலீப் அண்ணா, நான் சுனில். ஜெயிலில் இருந்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். இப்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. வழக்கை நடத்தவும், மற்ற செலவுகளுக்கும் பணம் தேவைப்படுகிறது. எனவே எனக்கு உடனே பணம் தரவும். அந்த பணத்தை இந்த கடிதம் கொண்டு வரும் நண்பன் விஷ்ணுவிடம் கொடுக்க வேண்டும். இந்த கடிதம் கொண்டு வரும் நண்பருக்கு வழக்கு பற்றி எதுவும் தெரியாது.
எனவே நீங்களும் அவரிடம் எதுவும் பேச வேண்டாம். பணத்தை மட்டும் கொடுத்து விடவும். ஒரே தவணையாக கொடுக்க முடியாவிட்டால் 5 மாதங்களில் 5 தவணையாக கொடுக்கவும். உங்களைதான் மிகவும் நம்பி இருக்கிறேன். இந்த வழக்கில் உங்களது பெயரை கூறுமாறு மலையாள நடிகர், ஒரு நடிகை மற்றும் டைரக்டர் ஒருவர் என்னிடம் அடிக்கடி வலியறுத்தி வருகிறார்கள்.
இதற்காக அதிக பணம் தருவதாகவும் ஆசை காட்டி வருகிறார்கள். ஆனால் நான், உங்களின் நம்பிக்கைக்கு உரியவன். எனவே நான் எதையும் கூறவில்லை. ஆனால் இப்படியே எப்போதும் இருப்பேன் என்று கூற முடியாது. உங்கள் முடிவு உடனே தெரியாவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கும். தங்களின் விசுவாசமுள்ள பல்சர் சுனில் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் நகலையும், பல்சர் சுனிலின் நண்பன் விஷ்ணு டெலிபோனில் பேசிய பேச்சுக்களின் பதிவையும் போலீசாரிடம் திலீப் கடந்த ஏப்ரல் மாதமே அளித்துள்ளார். ஆனால் இப்போதுதான் இந்த விவகாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. விசாரணை தீவிரமாகும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாவதோடு முக்கிய நபர்களும் கைதாகலாம் என்ற பரபரப்பு மலையாள திரையுலகில் ஏற்பட்டுள்ளது.
இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-
"இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்தைத் தொடர்ந்து மீண்டும் டைரக்டர் ஸ்ரீதரின் "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்துக்கும் இசை வாய்ப்பு வந்தது. இந்தப் படமும் ஹிட்டாகி பாடல்களும் ஹிட்டானதில் மகிழ்ச்சி.
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "கடவுள் அமைத்த மேடை''படத்தில்தான், ஒரு பரிசோதனை முயற்சி செய்யவேண்டும் என்று தோன்றியது.
அதாவது கர்நாடக சங்கீத ராகங்களை எடுத்துக்கொண்டு, அதன் ஆழம் குறையாமல் கிராமியப் பாணியின் சந்தங்களை மெட் டாக அமைத்து, பாடும்போது அதன் இரண்டு வேறுபட்ட தனிப்பட்ட தன்மைகளை இணைத்துப் பாடவைக்கலாமே என்று தோன்றியது.
அதை உடனே செய்யலாம் என்ற எண்ணத்தில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சொன்ன ஒரு டூயட்டிற்கு ஹம்சத்வனி ராகத்தில் கிராமியத்தனமான மெட்டமைத்தேன். பாடலை வாலி எழுதினார். "மயிலே மயிலே உன் தோகை எங்கே?'' என்ற அந்தப் பாடல்தான் இந்தப் பரிசோதனை முயற்சியில் உருவான பாடல்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், ஜென்சியும் இந்தப் பாடலை பாடியிருந்தார்கள்.
இதே படத்தில்தான், பி.பி.சீனிவாசும் முதன் முதலாக என் இசைக்கு பாடினார். அதுவும் ஒரு சிறிய கஜல் போன்ற பாடல். "தென்றலே நீ பேசு'' என்பது அதன் பல்லவி.
பஞ்சு சார் கமல், ரஜினி இரண்டு பேரையும் தனித்தனியாக போட்டு படம் எடுக்க முடிவு செய்தார். அப்போது கமல் - ரஜினி இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்த நேரம்.
கமலை வைத்து "கல்யாணராமன்'', ரஜினியை வைத்து "ஆறில் இருந்து அறுபதுவரை'' ஆகிய படங்களை எடுத்தார்.
இரண்டுமே வெற்றி பெற்றன.
கல்யாணராமன் படத்தில் `ஆஹா வந்துருச்சு' பாடலும், அதற்கு கமல் ஆடிய வித்தியாசமான நடனமும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தன.
பஞ்சு சார் அடுத்து "கவரிமான்'' என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)
என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். "ப்ரோவ பாரமா?'' என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.
சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.
ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா' என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.
ராகம்பாடி, `ப்ரோவ பாரமா' தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.
ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.
இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், "எப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.
"என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?'' என்று கேட்டார் சிவாஜி.
"நடிகர் திலகம்'' என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?
"லட்சுமி'' படத்தில் கிராமிய சந்தத்தை வேகமாக அமைத்துப் பாடிய பாடல் "தென்ன மரத்துல தென்றலடிக்குது நந்தவனக் கிளியே.''
நானும் பி.சுசீலாவும் பாடினோம். இந்த வகையில் இது சுசீலா அவர்களுடன் நான் சேர்ந்து பாடிய முதல் பாடல்.
பண்ணைபுரத்தில் உள்ள எங்கள் வீட்டில், தம்புராவுடன் சுசீலா இருக்கும் படத்தை பிரேம் போட்டு நான் மாட்டி வைத்திருந்தது, இந்தப் பாடலை அவருடன் பாடும்போது நினைவுக்கு வந்தது.
கோவை செழியன் தயாரிப்பில் வந்த "முதல் இரவு'' படத்தில், "மஞ்சள் நிலாவுக்கு இன்று முதல் இரவு'' என்ற பாடல் பிரபலமானது. டைரக்டர் ஸ்ரீதர் இந்தப் பாடலை கேட்டு என்னை மிகவும் பாராட்டினார்.
பாரதிராஜா டைரக்ஷனில் "நிறம் மாறாத பூக்கள்'' படத்துக்கு பாடல் பதிவுடன் பூஜை.
ஒரு ஓட்டலில் கதையை பாக்யராஜை சொல்லச் சொன்னார், பாரதி. கோர்வையாக,அதே நேரம் நகைச்சுவை கலந்து நன்றா கவே கதை சொன்ன பாக்யராஜை பாராட்டினேன். பாரதியும், "அதனால்தான் அவனையே சொல்லச்சொன் னேன். நல்ல திறமைசாலி'' என்று பாராட்டினார்.
இடைவேளைக்குப்பிறகு சில மாற்றங்கள் இருக்கலாம்.
பூஜைக்கு இரு நாயகியரும் கதாநாயகனும் பாடுகிற மாதிரி ஒரு பாடலை எடுத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லிவிட்டார்கள்.
தயாரிப்பாளர் வீட்டிலேயே கம்போசிங் நடந்தது. அப்போது அவர் தயாரிப்பில் வெளிவந்த "வருவான் வடிவேலன்'' படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.
கவியரசர் கண்ணதாசன் அதுவரை காலை 10 மணிக்கு முன்னதாக பாட்டெழுத வந்தது கிடையாது. எனக்கு 9 மணிக்கு பின்னணி இசை வேலை இருந்ததால் கவியரசர் முதன் முதலாக எனக்காக காலை 71/2 மணிக்கு பாட்டெழுத வந்துவிட்டார்.
கதையைச் சொல்லி டிïனை வாசித்த உடனே,
"ஆயிரம் மலர்களே மலருங்கள்!
அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள்''
என்று எழுதினார். பாரதி உள்பட அனைவருக்கும் பிடித்திருந்தது. பாரதிராஜா இயக்கிய இந்த நான்காவது படமும் நன்றாக ஓடியது.
"ஊர்வசி நீனே நன்ன ப்ரேயசி'' என்ற கன்னடப்படம் தெலுங்கிலுமாக இரு மொழிப்படமாக வந்தது. இதன் மலையாளம் டைரக்டர் ஐ.வி.சசி இயக்கிய "பகலில் ஓர் இரவு'' படம். ஸ்ரீதேவி நடித்திருந்தார்.
பாம்குரோவ் ஓட்டலில் கம்போசிங் நடந்தது கவியரசர் "இளமையெனும் பூங்காற்று'' என்று எழுதினார்.
இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். கவியரசர் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து செய்த பாடல்கள் எல்லாம் மிகவும் நல்ல லட்சண அமைப்புடன் இருக்கும்.
முதல் வரி தொடங்க, அதே சந்தத்தில் குறைந்தது நான்கு அடிகளாவது வரும்.
உதாரணமாக,
"எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி
வேறு பட்டு நின்றானடி''
"கண்ணன் என்னும் மன்னன்
பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய்
மாறும் மெல்ல மெல்ல''
- இப்படி எந்தப் பாடலை எடுத்தாலும் ஒரு ஒத்த அழகுடன் இருக்கும்.
இதை நான் மாற்ற எண்ணினேன்
ஒரு அடிபோல் இன்னொரு அடி வராமல் போனாலும், அழகு கெடாமல் இருக்க வேண்டும் என்றும், `இங்கே நான் நிறுத்த வேண்டும் - இங்கே நீட்ட வேண்டும்' என்ற வரைமுறைகளைத் தாண்ட வேண்டுமென்றும் என்னுடைய மெட்டுக்களை அமைத்தேன். அதிலும் ஒரு அழகு இழையோடும் விதமாக கவியரசர் எழுதிவிட்டார்.
"இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே நாதம்''
இசையோடு இந்த வரிகள் கொஞ்சிக் குழையும் என்பது அவருக்கும் தெரிந்தே இருந்தது.
இதில் இன்னும் ஒரு பாடல் பரிசோதனை முயற்சியாக, "தாம்த தீம்த'' என்று தொடங்கும் பாடலில், ஆண் - பெண் கோரசை வைத்தே, இசைக்குழு இல்லாமல், பாடலுக்கு இடையில் வரும் இசையை கோரசே இசைப்பது போல அமைத்திருந்தேன்.
நன்றாக இருந்தாலும் வெளியே தெரியாமல் போன காரணம் தெரியவில்லை.
`பஞ்ச பூதாலு' என்ற தெலுங்குப்படம் தமிழில் சிவாஜி நடிக்க "பட்டாக்கத்தி பைரவன்' ஆனது. இந்தப் படத்தை நினைத்தாலே "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் பாடல்தான் மனதில் ஓடிவரும்.
என் முதல் படமான "அன்னக்கிளி''யின் கதையை எழுதிய செல்வராஜ், முதன் முதலில் "பொண்ணு ஊருக்குப் புதுசு'' என்ற படத்தை டைரக்ட் செய்தார். இதில் எல்லாப் பாடல்களுமே என்றைக்கும் கேட்க சுகமானவை.
"ஓரம்போ''
"சாமக்கோழி கூவுதம்மா''
"ஒனக்கெனத்தானே இந்நேரமா''
- போன்ற படத்தின் எல்லாப் பாடல்களையும் அமர்தான் எழுதினான்.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு ரூ.7 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சினிமா தயாரிப்பு மேலாளர்கள் ஸ்ரீநிவாஸ், ரவி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனை நடந்த நிறுவனத்தின் முதல் மாடியில் நடிகை ஜீவிதாவின் சினிமா தயாரிப்பு அலுவலகம் உள்ளது. மேலும் கைதான ஸ்ரீநிவாஸ், நடிகை ஜீவிதாவின் மேலாளர் ஆவார்.

இதனால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.7 கோடி ஜீவிதாவுக்கு சொந்தமானதா என்றும், ஸ்ரீநிவாஸ் அவரது சகோதரர் என்றும் தகவல் பரவியது. இதுதொடர்பாக விளக்கம் அளித்து நடிகை ஜீவிதா கூறியதாவது:-
கைதாகி உள்ள ஸ்ரீநிவாஸ் எனது கணவர் நடித்து வரும் கருடலேகா படத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதேபோல் பலருக்கும் மேலாளராக பணியாற்றி வருகிறார். எனது சகோதரர் பெயர் முரளி ஸ்ரீநிவாஸ். அவர் சிறுநீரகம் பாதிப்பு அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.7 கோடி என்னுடையது அல்ல. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘‘என்னை ஒரு கிரிக்கெட் வீரராக ஆக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தந்தையின் கனவு. ஆனால் நானே என்னுடைய விருப்பப்படி ஆடை வடிவமைப்பாளராகி விட்டேன். என்னுடைய தந்தையின் கனவை நனவாக்க தற்போது நடிகராக களம் இறங்கியுள்ளேன். என்னுடைய இலக்கு ஆண்டுதோறும் திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் கலந்து கொண்டு கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது தான்.
அதற்காகவே நான் நடிக்கத் தொடங்கினேன், சின்ன சின்ன கேரக்டரில் ஏழு படங்களில் நடித்திருக்கிறேன் என்றார்.
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆர்யாவுக்கு நடிகைகள் பலர் தோழியாக உள்ளனர். தமிழ் சினிமாவின் ரோமியோவாகவும் வலம் வருகிறார். ஆனால் அவர் இது வரை எந்த நடிகைகளுடனும் சேர்த்து கிசுகிசுக்கப்படவில்லை.
பிரியாணி செய்து கொடுத்தே ஆர்யா நடிகைகளை வளைத்து விடுவார் என்று அவரை சக நடிகர்கள் கிண்டல் அடிப்பதுண்டு.

இந்த நிலையில் நடிகர் ஆர்யா பெண் தோழியை தேடத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் ‘உடனடியாக தனக்கு ஒரு கேள் பிரண்ட் வேண்டும்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
ஆர்யாவின் வீடியோ அறிவிப்பை நடிகை வரலட்சுமி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஆர்யா கூறி இருப்பதாவது:-
“நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஆர்யா. நான் இப்போது முக்கியமான பிரச்சினையில் இருக்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, எனக்கு உதவுங்கள். உடனடியாக எனக்கு கேர்ள் பிரண்ட் தேவை. பிளீஸ்...”
இவ்வாறு ஆர்யா கூறியுள்ளார்.

வரலட்சுமி தயாரிப்பில் உருவாக இருக்கும் நடன நிகழ்ச்சியின் புரமோஷனுக்காக ஆர்யா இந்த வீடியோவை பதிவு செய்திருக்கிறார். ஆர்யாவை தொடர்ந்து பிரசன்னாவும் இதுபோன்ற ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
இந்த வீடியோ பதிவை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர். ‘காபியில் போடாத சுகரும், ஆர்யாவுக்கு மசியாத பிகரும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை’ என்று கூறியுள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ல் ரிலீசாக இருக்கிறது. அதற்கு முன்னதாக ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், `2.0' படத்தின் புரமோஷனில் புதுமையான முயற்சியை படக்குழு மேற்கொள்ள இருக்கிறது. அதாவது, படத்தின் புரமோஷனுக்காக ஒரு உலக சுற்றுலாவை தொடங்கியிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
சாதாரணமாக ஒரு தமிழ் படத்திற்கு புரமோஷன் செய்தால், படக்குழு ஒரு உள்ளூர் சுற்றுலா அல்லது பக்கத்து மாநிலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளும். இந்நிலையில், தமிழ் படம் ஒன்றின் புரமோஷனுக்காக உலக சுற்றுலா நடத்த இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் இன்னமும் வெளியாகவில்லை.

இதற்கு முன்பாக `பாகுபலி 2' படத்தின் புரமோஷனுக்காக துபாய், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு `பாகுபலி' படக்குழு சென்றிருந்தது. விரைவில் சீனாவில் புரமோஷன் பணிகளில் ஈடுபட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சமூக வலைதளங்களில் திரை உலகை சேர்ந்த யார் யார் பிரபலமாக இருக்கிறார்கள் என்பது பற்றி கருத்துக்கணிப்பு நடந்தது. இதை அனாலைட்டிக்ஸ் நிறுவனமான எம்விபி இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் பிரியங்கா சோப்ரா முதல் இடத்தில் இருக்கிறார்.
ஹாலிவுட் நடிகர் ராக் (டிவைன் ஜான்சன்) 2-வது இடத்தில் உள்ளார். ஹாலிவுட் பிரபலங்கள் ஹெலின் ஹார்ட் கேடாக், கேரா டெலபிஞ்ச், வின்டீசல், ஜெனிபர் லோபஸ், ஆஷ்லிபென்சன், ஜாக் எப்ரான், ஷேபிட்சல் ஆகியோர் முதல் 10 இடங்களில் இருக்கிறார்கள்.
இது தொடர்பாக கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகை பாவனாவின் முன்னாள் டிரைவர் மார்ட்டின் உள்பட 4 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பாவனா கடத்தல் விவகாரத்தில் மலையாள திரையுலக பிரபலங்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தது. ஆனால் இதற்கு தகுந்த சாட்சியங்கள் இல்லாததால், புகார்களின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்ட பல்சர் சுனிலுடன் ஒரே அறையில் தங்கியிருந்த ஜின்சன் என்ற கைதியுடன் பல்சர் சுனில் நட்பாக பழகினார். நட்பு நெருக்கமானதும் ஜின்சனிடம், பல்சர் சுனில் சகஜமாக பேசினார்.
அப்போது நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை குறித்த சம்பவத்தில் வெளிவராத பல ரகசிய தகவல்களை ஜின்சனிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.
பல்சர் சுனில் தெரிவித்த தகவல்களை ஜின்சன், ஜெயில் அதிகாரிகளிடம் கூறிவிட்டார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதனை போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கூறினர்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த பெண் ஏடிஜிபி சந்தியா, இது தொடர்பான சில தகவல்களை அறிய விரும்பினார். இதற்காக நடிகை பாவனாவை நேற்று ஆலுவாவில் உள்ள போலீஸ் கிளப்புக்கு வரவழைத்து அவரிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டார்.
அப்போது பாவனா, இச்சம்பவம் பற்றி சில முக்கிய தகவல்களை ஏடிஜிபி சந்தியாவிடம் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலும், ஜெயிலுக்குள் நண்பனிடம் பல்சர் சுனில் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் இந்த வழக்கை புதிய கோணத்தில் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
போலீசாரின் விசாரணை தீவிரமாகும்போது மலையாள திரையுலக முக்கிய பிரமுகர்கள் மற்றும் நடிகர், இயக்குனர் ஒருவர் போலீசாரிடம் சிக்குவார்கள் என்று தெரிகிறது. அப்போது மலையாள திரையுலகில் மீண்டும் ஒரு பூகம்பம் கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளமையில் நாடக நடிகராக இருந்தபோதே அரசியலில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார் எம்.ஜி.ஆர். காங்கிரஸின் மீது பெரும் பற்று கொண்டவராகவும், தேசியத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் இருந்தார். அந்நாட்களில் அவர் கதர் வேஷ்டி சட்டைகள் மட்டுமே அணிந்தார்.

திரைத்துறையில் அவர் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தபோது, அவரது புகழையும், கவர்ச்சியையும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட திராவிட முன்னேற்றக் கழகம் அவரைத் தன்பால் ஈர்த்துக் கொண்டது.
என்றாலும், அண்ணாவின் மறைவிற்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகளில் ஒவ்வாமை கொண்ட எம்.ஜி.ஆர் அதிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். தன் வாழ்வின் இறுதிவரை யாராலும் வெல்ல முடியாத சரித்திர நாயகனாக சாதனை படைத்தார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராக சாதித்த அவர் தமது படங்களை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடும் வகையில் தொழில்ட்பம், உருவாக்கத்தில் அக்கறை செலுத்தினார். காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி என்று திறந்த உள்ளத்துடன் ஒப்புக் கொண்ட அவர், தன் ஆட்சிக் காலத்தில் காமராஜரின் மதிய உணவுத்திட்டத்தை சத்துணவு திட்டமாக திறம்பட தொடர்ந்தார்.

அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திராவிட கட்சியில் இணைந்தவர், தமது திரைப்படங்களில் தேசத் தந்தை மகாத்மா காந்தியையும், புத்தரையும் தாங்கிப் பிடித்தார்.
அவர் திரைத்துறையிலும், அரசியலிலும் சந்தித்த சவால்கள், சோதனைகள், சூழ்ச்சிகள், அதை முறியடித்து வெற்றிக் கண்ட சுவாரஸ்யமான சம்பவங்கள் திரைக்கதையாக தொகுக்கப்பட்டுள்ளது. எவ்வித சமரசமுமின்றி எம்.ஜி.ஆர்-ன் வாழ்க்கை சம்பவங்களை கொண்டு மிகப் பிரம்மாண்டமாய் தயாராகும் இப்படத்திற்கு, அன்றைய அரசியல் தலைவர்களின் உருவ ஒற்றுமையுள்ள நடிகர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் துவங்க உள்ளது.
மெர்சரல் படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா என நட்சத்திர பட்டாளமே களமிறங்கி இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து வரும் மெர்சல் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது. இதில் தெலுங்கு பதிப்பின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மதியம் 1 மணிக்கு வெளியானது. மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு அதிரிந்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகிறது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதித்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் நிர்வாகம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதை பதில் மனுவாக தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக நில நிர்வாகத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘கட்டணத்தை நிர்ணயம் செய்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவையும், ஐகோர்ட்டின் தடை உத்தரவையும் மீறி தியேட்டர் உரிமையாளர் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றனர். எந்தெந்த தியேட்டர்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற விவரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரவை மீறிய தியேட்டர்களுக்கு அபராதம் விதித்தல், உரிமத்தை நிறுத்தி வைத்தல் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நீதிபதி, ‘கூடுதல் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள தடை உத்தரவு, திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்து வரும் ஜூலை 10-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.








