search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dileep"

    • நடிகை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு கேரளாவில் நடந்து வருகிறது.
    • இந்த வழக்கு விசாரணையை அடுத்த வருடம் ஜனவரி 31-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கேரளாவில் 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மலையாள முன்னணி நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அவரும் கைதானார்.

     

    திலீப்

    திலீப்

    தற்போது திலீப் ஜாமீனில் வந்துள்ள நிலையில் விசாரணை அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இன்னொரு வழக்கும் திலீப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை கடத்தல் வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு பின்னர் திலீப்பும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

     

    திலீப்

    திலீப்

    இந்த விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் முடிக்கும்படி ஏற்கனவே விசாரணை குழுவுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றம் மனுதாக்கல் செய்தது. இதையடுத்து நடிகை கடத்தல் வழக்கு விசாரணையை அடுத்த வருடம் ஜனவரி 31-ம் தேதிக்குள் முடிக்க அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கும் நவ்யா நாயர், சினிமாவில் அறிமுகமாகும் போது, சங்கடத்தில் இருந்த எனக்கு திலீப் தைரியம் தந்ததாக கூறியுள்ளார். #NavyaNair #Dileep
    அழகிய தீயே படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நவ்யா நாயர். தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். 2010-ல் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறான். 

    திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நவ்யா நாயர், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். சினிமா அனுபவங்கள் குறித்து நவ்யா நாயர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    நான் நடித்த முதல் மலையாள படம் இஷ்டம். 2001-ல் வெளியானது. டைரக்டர் சிபி மலயில் எனது போட்டாவை பார்த்துவிட்டு ஒரு ஓட்டலுக்கு அழைத்து நடிப்பு திறமையை பரிசோதித்தார். அதை வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவை பார்த்த திலீப்புக்கு எனது நடிப்பு பிடித்ததால் இஷ்டம் படத்தில் நடிக்க அவரும், மஞ்சுவாரியரும் என்னை தேர்வு செய்தனர்.



    அப்போது வேண்டாம் என்று அவர் ஒதுக்கி இருந்தால் நான் சினிமாவுக்கே வந்து இருக்க முடியாது. அதன் படப்பிடிப்புக்காக போட்டோ ஷூட் எடுத்தனர். அப்போது திலீப் எனது தோளில் கைவைத்தபடி போஸ் கொடுத்தார். உடனே எனக்கு படபடப்பு ஏற்பட்டது. இதய துடிப்பும் அதிகமானது. 

    கிராமத்தில் இருந்து வந்த என்மீது அறிமுகம் இல்லாத ஆண் கைவைத்ததால் சங்கடத்துக்கு உள்ளானேன். அதை புரிந்துகொண்ட திலீப் பயப்பட வேண்டாம். எல்லோரும் ஆதரவாக இருப்போம். இந்த படத்தில் ஒன்றாக பணியாற்ற போகிறோம் என்று தைரியம் சொன்னார். அதை எப்போதும் மறக்க முடியாது.’’

    இவ்வாறு நவ்யா நாயர் கூறினார். #NavyaNair #Dileep

    சமூக வலைதளங்களில் எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் மிரட்டல்கள் வருவதாகவும், தினமும் அச்சத்திலேயே இருப்பதாகவும் பார்வதி கூறியுள்ளார். #Parvathy
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பார்வதி. தமிழில் பூ திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர்.

    மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அந்த நடிகைக்கு ஆதரவாகவும், நடிகர் திலீப்புக்கு எதிராகவும் பார்வதி பேசி வருகிறார். மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்த்த மோகன்லாலையும் கண்டித்தார்.

    பார்வதி அளித்துள்ள பேட்டியில், “நடிகைகள் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம்.

    அதன்பிறகு எனக்கும் அந்த அமைப்பில் இருக்கும் மற்ற நடிகைகளுக்கும் புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள். பாலிவுட்டில் மீ டூவில் பாலியல் புகார் கூறிவரும் நடிகைகளுக்குகூட படவாய்ப்புகள் அளிக்கின்றனர்.



    தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் புதிய படங்களில் அவர்களை ஒப்பந்தம் செய்கின்றார்கள். ஆனால், கேரளாவில் அப்படி இல்லை. இங்கு கதாநாயகர்களை கடவுளாக பார்க்கின்றனர். நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமாக மாறி இருக்கிறது.

    அவர்கள் சமூக வலைதளங்களில் எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் கொலை மிரட்டல், பாலியல் மிரட்டல்கள் விடுக்கின்றனர். தினமும் அச்சத்திலேயே இருக்கிறோம். நிறைய வெற்றிப்படங்களில் நடித்துள்ள எனக்கு ஒரு வருடமாக படங்கள் இல்லை” என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். #Parvathy

    நடிகை பலாத்கார வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் தெரிவித்துள்ளார். #ActressAbductionCase #Dileep #Mohanlal
    கேரளாவில் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    நடிகை கடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பிரபல நடிகர் திலீப்பை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் திலீப் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    தற்போது அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். திலீப் கைது செய்யப்பட்டதும், அவர், மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து நீக்கப்பட்டார்.

    திலீப்பை நீக்கியபோது, நடிகர் சங்க தலைவராக இருந்த இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகினார்.

    அவருக்கு பதில் நடிகர் மோகன்லால், மலையாள நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றார். அதன் பிறகு நடந்த சங்க கூட்டத்தில் நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

    நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்க்க மலையாள நடிகைகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே நடிகர் சங்கத்தில் நடிகை பலாத்கார விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நடிகைகள் ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் உள்பட 3 பேர் ராஜினாமா செய்தனர்.

    இந்த நிலையில் திலீப்பை நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டதை அறிந்ததும் மேலும் சில நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மலையாள படவுலகில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.



    நடிகைகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து நடிகர் திலீப் சங்கத்தில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதுபற்றி நேற்று கொச்சியில் நடிகர் சங்கத்தலைவர் மோகன்லால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் திலீப், சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை சங்கம் ஏற்றுக் கொண்டது. இது நடிகர் சங்க நிர்வாகிகள் மூலம் நடந்துள்ளது.

    நடிகை விவகாரம் தொடர்பாக அம்மாவில் இருந்து விலகிய நடிகைகள் மீண்டும் சங்கத்தில் சேர வேண்டுமென்றால் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

    மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக புகார் கூறுபவர்கள் அதை நடிகர் சங்கத்தில் முறையாக புகார் அளிக்க வேண்டும். அதன் பேரில் நடிகர் சங்கம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ActressAbductionCase #Dileep #Mohanlal

    நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலீப், சங்கத்துக்கு நன்கொடை கொடுத்ததால் அவருக்கு விசுவாசமாக இருப்பதாக நடிகர் ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ActressAbductionCase #Dileep
    கேரளாவில் கடந்த ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் முன்னணி நடிகர் திலீப் குற்றம்சாட்டப்பட்டு தண்டனைக்குள்ளானார். வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    நடிகைகள் ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் அடங்கிய மலையாள நடிகைகள் கூட்டமைப்பான டபிள்யூ.சி.சி திலீப்பை மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் சேர்க்கக்கூடாது எனத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.



    கடந்த சனிக்கிழமை கொச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த இவர்கள் ‘மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவில் இருந்து திலீப் வெளியேற்றப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட நடிகை வெளியே உள்ளார். திலீப்பை நீக்காமல் பொதுக்குழுவில் அதுபற்றி பேசுவதாக சொல்கிறார்கள். நடிகைகளுக்குத் தொழில் பாதுகாப்பு வேண்டும் என பல குற்றச்சாட்டுகளை அம்மா அமைப்பு மீது வைத்தனர்.

    இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சங்கம், ‘இது தவறு. கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை திலீப்பை குற்றவாளியாக நாங்கள் பார்க்க முடியாது. அதேநேரம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் ‘அம்மா’ உறுதியாக உள்ளது.



    இதற்கிடையே திலீப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையாள நடிகர் மகேஷ் பேசியது இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லாஸ்ட் பென்ச் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார் மகேஷ்.

    அவர் இந்த விவகாரம் குறித்து பேசும்போது, ’பார்வதி, ரேவதி போன்றோர் சங்கத்தின் எந்த நடவடிக்கைக்கும் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். அமைப்பில் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே அவர்களால் கூற முடியும். ஆனால் திலீப்போ ரூ.5 கோடிக்கும் அதிகமான பணத்தை சங்கத்துக்காக நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அவருக்கு சங்கம் விசுவாசமாக இருந்தால் என்ன தவறு?” எனக் கேட்டுள்ளார். இவரது பேச்சு மலையாள பட உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ActressAbductionCase #Dileep #AMMA

    நடிகை கடத்தில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பதற்கு நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கான நடவடிக்கைகள் குறித்து மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார். #MohanLal #Dileep
    நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். 85 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வந்த அவரை, சங்கத்துக்கு புதிய தலைவராக பொறுப்பேற்ற மோகன்லால் பொதுக்குழுவை கூட்டி மீண்டும் சங்கத்தில் சேர்ப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

    இதற்கு நடிகைகள் ரேவதி, பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திலீப்பை சேர்க்கும் முடிவை நடிகர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது. ஆனாலும் திலீப்பை சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றியதற்கு விளக்கம் அளிக்கும்படி மோகன்லாலுக்கு நடிகைகள் கடிதம் அனுப்பினர்.

    இதுகுறித்து ரேவதி கூறும்போது, “நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா இல்லையா என்பதை நடிகர் சங்கம் தெளிவுப்படுத்தும்படி கடிதம் அனுப்பியும் இதுவரை பதில் இல்லை” என்று கண்டித்தார். இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கொச்சியில் நடந்தது.



    இந்த கூட்டம் முடிந்ததும் மோகன்லால் நிருபர்களிடம் கூறும்போது, “நடிகைகள் கடிதம் சம்பந்தமாக திலீப் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து செயற்குழுவில் விவாதிக்கவில்லை. சங்கத்தின் பொதுக்குழு கூட்டித்தான் இதுகுறித்து முடிவு எடுக்க முடியும். அதுவரை நடிகைகள் பொறுத்து இருக்க வேண்டும்” என்று கூறினார். கேரள வெள்ள பாதிப்புக்கு அபுதாபியில் நட்சத்திர கலைவிழா நடத்தி நிதி திரட்டவும் செயற்குழுவில் முடிவு செய்துள்ளனர். #MohanLal #Dileep

    நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் திலீப்புக்கு எதிராக சில நடிகைகள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். #Dileep
    நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். இப்போது அவர் ஜாமீனில் வெளிவந்து இருக்கிறார்.

    சமீபத்தில் நடந்த மலையாள நடிகர் சங்க தேர்தலில் புதிய தலைவராக தேர்வான மோகன்லால் நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் திலீப்பை சங்கத்தில் சேர்த்தார்.

    இது மலையாள நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மோகன்லால் நடவடிக்கையை கண்டித்து ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் பல நடிகைகள் குற்றவாளியை எப்படி சங்கத்தில் சேர்க்கலாம் என்று விமர்சித்து நடிகர் சங்கத்துக்கு கடிதங்கள் அனுப்பினார்கள். 

    எதிர்ப்பு காரணமாக மோகன்லால் பின் வாங்கினார். கோர்ட்டில் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை சங்கத்தில் இருந்து திலீப் தள்ளி இருப்பார் என்று அறிவித்தார். அதன்பிறகு அதிருப்தி நடிகைகளை அழைத்து சமரச பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை அடங்கி இருந்தது. 

    இந்த நிலையில் நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி ஆகியோர் மீண்டும் நடிகர் சங்கத்துக்கு எதிராக கிளம்பி இருக்கிறார்கள். மூவரும் இணைந்து நடிகர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு மேலும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் ‘‘திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க ஏன் முடிவு எடுத்தீர்கள்? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.

    இந்த கடிதம் மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப்பை மீண்டும் சேர்த்ததற்கு எதிராக மோகன்லாலை விமர்சனம் செய்ததால், தனக்கு படவாய்ப்புகள் மறுக்கப்படுவதாக நடிகை ரம்யா நம்பீசனுக்கு கூறியுள்ளார். #RemyaNambeesan
    கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை, மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கடுமையாக விமர்சித்த ரம்யா நம்பீசன், அதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். 

    இது கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள சினிமாவில் இருந்து ரம்யா நம்பீசன் ஓரம்கட்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்களாம்.

    கேரளாவில் நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டமொன்றில் பங்கேற்று பேசிய ரம்யா நம்பீசன் பேசும்போது, “நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியவரை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை எதிர்த்து நான் ராஜினாமா செய்ததால் எனக்கு பிரச்சினைகள் வருகின்றன. புதிய படங்களில் நடிக்க விடாமல் தடுக்கும் சூழ்நிலை இருக்கிறது. எனக்கு எதிராக தவறான வதந்திகளும் பரப்புகின்றனர். படப்பிடிப்பில் தொல்லை கொடுக்க கூடியவர் ரம்யா நம்பீசன் என்று அவதூறு பரப்பியும் பட வாய்ப்புகளை கிடைக்க விடாமல் செய்கிறார்கள்” என்றார். 



    மலையாள நடிகர் சங்க தலைவராக இருக்கும் மோகன்லால், அவருக்கு எதிராக செயல்படுவதாக ரம்யா நம்பீசன் மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறப்படுகிறது. #RemyaNambeesan #AMMA #MalayalamActorsAssociation`

    திலீப் விவகாரத்தால் ஏற்பட்ட எரிச்சலால் மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக நடிகர் மோகன்லால் கூறி வருவதாக கூறப்படுகிறது. #Mohanlal #Dileep
    கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் நடந்ததும் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டார். தற்போது மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவராக நடிகர் மோகன்லால் நியமனம் செய்யப்பட்டார்.

    அவர் பொறுப்பேற்றதும் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு நடிகைகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில நடிகைகள் நடிகர் சங்க பொறுப்பில் இருந்தும் விலகினர்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகை, தனது புகார் குறித்த வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி தலைமையில் தனிக்கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதற்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து கேள்விகள் எழுப்பியது.

    இந்நிலையில் மோகன்லால் நடிகர் சங்க நிர்வாகிகள் இடைவேளை பாபு உள்பட சிலரை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது நடிகர் திலீப், நடிகை விவகாரத்தில் குற்றம் செய்யவில்லை என்றால், ஏன் பயப்பட வேண்டும்? எல்லா வி‌ஷயத்திலும் தேவையில்லாமல் ஏன் மூக்கை நுழைக்கிறார்? இதனால் நடிகர்களுக்கு சமூகத்தில் கெட்டப்பெயர் ஏற்படுகிறது.



    இதே நிலை நீடித்தால் நான் நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகி விடுவேன். ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.

    மோகன்லாலின் திடீர் ஆவேசத்திற்கு நடிகர் சங்கம் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை மனு முதல்-மந்திரியின் கவனத்திற்குச் செல்லாமல் தடுக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

    நடிகை பலாத்கார வழக்கில் தனிகோர்ட்டு அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று மலையாள நடிகர் சங்கம் சில நாட்களுக்கு முன்பு முடிவு செய்தது. இது தொடர்பாக கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு முதல்-மந்திரி பார்வைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த தகவல் திலீப்பிற்கு தெரிய வந்ததாகவும், அவர் இடையில் தலையிட்டு இந்த மனு முதல்-மந்திரி அலுவலகத்திற்கு செல்லாமல் தடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் மோகன் லாலுக்கு தெரியவந்ததால் தான் அவர் எரிச்சல் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. #Mohanlal #Dileep #AMMA

    மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட இருந்த தன்னை சிலர் தடுத்துவிட்டதாக பார்வதி கூறிய நிலையில், பார்வதி விரும்பினால் அவருக்கு பொறுப்பு அளிக்க தயாராக இருப்பதாக மோகன்லால் கூறியுள்ளார். #Mohanlal #Parvathy
    நடிகை பார்வதி மலையாள நடிகர் சங்கம் குறித்து கூறிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    முன்னணி நடிகரும், நடிகர் சங்க தலைவருமான மோகன்லால் பார்வதி மீதான தன் கோபத்தை பதிவு செய்துள்ளார்.

    மலையாள நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் முன்னணி நடிகர் மோகன்லால் தலைவராக பொறுப்பேற்றார். நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது கடும் சர்ச்சை ஆனது. மலையாள நடிகைகள் நடிகர் சங்கத்தின் மீது தங்கள் வெறுப்பை காட்டி வருகின்றனர்.

    முன்னணி நடிகையான பார்வதி ஒரு பேட்டியில் நடிகர் சங்க தேர்தலில் முக்கிய பொறுப்புக்கு போட்டியிட விரும்பியதாகவும், சிலர் தன்னை தடுத்து விட்டதாகவும் கூறி இருந்தார். மோகன்லால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே இது சர்ச்சை ஆனது.



    இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த மோகன்லால், ‘பார்வதியை போட்டியிட வேண்டாம் என்று யார் தடுத்தது? இதை நான் நம்பவில்லை. இது உண்மை என்றால் சமீபத்தில் கூடிய பொதுக்குழுவில் அவர் கலந்துகொண்டு இதை தெரிவித்து இருக்கலாம்.

    எங்களில் யாராவது விட்டுக்கொடுத்து விலகி இருப்போம். இப்போது கூட அவர் விரும்பினால் பொறுப்புகள் தர தயாராக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். #AMMA #MalayalamNadigarSangam #Mohanlal #Parvathy

    நடிகர் சங்கத் தேர்தலில் பார்வதியை போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும், மலையாள நடிகர் சங்கம் நடிகைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் நடிகை பத்மபிரியா குற்றம்சாட்டியுள்ளார். #AMMA #MalayalamNadigarSangam #Dileep
    மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் புதிய தலைவராக போட்டியின்றி நடிகர் மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியதால் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு மலையாள நடிகைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர். மேலும் பல நடிகைகளும் திலீப்பை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விவகாரம் பெரிதானது.



    இந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் மோகன்லால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார். மோகன்லால் கூறும்போது, நடிகை பலாத்கார வழக்கில் திலீப் சிக்கியதும், மம்முட்டி வீட்டில் அவசரமாக செயற்குழு கூட்டம் நடத்தி திலீப்பை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது நடந்தது அதிகாரப்பூர்வமான கூட்டம் இல்லை என்பதால் அடுத்த கூட்டத்தில் இதுபற்றி பேசி திலீப் நீக்கம் பற்றி இறுதி முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நடிகர் சங்க கூட்டத்தில் திலீப்பை மீண்டும் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதுபற்றி கூட்ட அஜண்டாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் முதலில் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திலீப்பை சேர்த்த பிறகு எதிர்க்கிறார்கள். வழக்கில் இருந்து விடுதலை ஆகும் வரை திலீப் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்க மாட்டார். பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகவே நடிகர் சங்கம் உள்ளது.



    நடிகை பாவனா, ரம்யா நம்பீசன் ஆகியோரின் ராஜினாமா கடிதம் மட்டும் தான் கிடைத்துள்ளது. மற்றவர்கள் கடிதம் எதுவும் எங்களுக்கு வரவில்லை. நடிகைகள் தேர்தலில் போட்டியிட யாரும் அவர்களுக்கு தடை விதிக்கவில்லை. நடிகர் சங்கம் கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் நடிகர் மோகன்லாலின் கருத்துகளுக்கு நடிகை பத்மபிரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மலையாள நடிகர் சங்கத்தில் ஜனநாயகம் இல்லை. இந்த சங்கம் நடிகைகளுக்கு எதிராகதான் செயல்படுகிறது. நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட பார்வதி முடிவு செய்தபோது அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போதைய பொதுச் செயலாளர் இடைவேளை பாபு அவரை போட்டியிட விடாமல் தடுத்தார்.



    நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்ப்பது பற்றி எந்தவித தகவலும் கூட்ட அஜண்டாவில் தெரிவிக்கப்படவில்லை.

    இரண்டு நடிகைகளின் ராஜினாமா கடிதம் மட்டும் தான் கிடைத்துள்ளது என்று மோகன்லால் ஏன் கூறுகிறார் என்று தெரியவில்லை. 4 நடிகைகள் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் நடிகை பத்மபிரியாவின் குற்றச்சாட்டை நடிகர் சங்க பொதுச் செயலாளர் இடைவேளை பாபு மறுத்துள்ளார். பத்மபிரியாவின் குற்றச்சாட்டு தவறானது என்றும், அவர் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதை தான் தடுக்கவில்லை என்றும் கூறி உள்ளார். #AMMA #MalayalamNadigarSangam #Dileep #Padmapriya

    மலையாள நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் வெளியேறிய நிலையில், இளம் நடிகர், நடிகைகள் இணைந்து புதிய சங்கத்தை நிறுவ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #AMMA #Dileep
    மலையாள நடிகர் சங்கத்துக்கு புதிய தலைவராக மோகன்லால் பொறுப்பு ஏற்றதும் பின்னர், நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் நடிகர் சங்கத்தில் இருந்து நீங்கப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தார். இது மலையாள பட உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. திலீப் சேர்க்கப்பட்டதை கண்டித்து முன்னணி நாயகிகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் மற்றும் கடத்தலால் பாதிக்கப்பட்ட நடிகை ஆகிய 4 பேரும் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள். 

    மேலும் 14 நடிகைகள் நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக எச்சரிக்கை விடுத்தனர். குற்றவாளிக்கு நடிகர் சங்கம் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். கேரள மகளிர் ஆணையமும் மோகன்லால் முடிவை விமர்சித்தது. பொதுக்குழுவில் ஒருமனதாக தீலிப்பை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டதாக மோகன்லால் விளக்கம் அளித்தார். 

    திலீப் விவகாரத்தால் மலையாள நடிகர் சங்கத்தில் தற்போது மோதல் முற்றியுள்ளது. எதிர்ப்பாளர்கள் இணைந்து புதிய சங்கத்தை தொடங்க முடிவு எடுத்துள்ளனர். நடிகரும், இயக்குனருமான ஆஷி அபு, ராஜீவ் ரவி ஆகியோர் இந்த போட்டி சங்கத்துக்கு தலைமை வகிக்கின்றனர். திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் சினிமா பெண்கள் கூட்டுக்குழு இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.



    திலீப்பை சேர்த்ததை எதிர்க்கும் மேலும் 100 நடிகர்-நடிகைகளும் புதிய சங்கத்தில் இணைய முன்வந்துள்ளனர். மேலும் கடந்த காலங்களில் மலையாள நடிகர் சங்கத்தால் நடவடிக்கைகளுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட நடிகர்-நடிகைகளும் போட்டி சங்கத்தில் சேருகிறார்கள். நடிகர் ஆஷி அபு தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் திருவனந்தபுரம் திரும்பியதும் புதிய சங்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் மூத்த நடிகர் ஒருவர் கூறினார். 

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனையும், போட்டி சங்கத்தை உருவாக்கும் நடிகர்-நடிகைகள் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. #AMMA #MalayalamActorsAssociation #Dileep
    ×