search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Remya Nambeesan"

    பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் குருஷேத்திரா படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், சினேகா இந்த படத்தில் திரவுபதியாக நடித்திருக்கிறார்.
    அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும் நடித்துள்ள குருஷேத்திரா என்ற கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட மெகா பட்ஜெட் படம் இது. 

    துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும், வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


     
    பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

    சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் விமர்சனம்.
    கவின், அருண்ராஜா காமராஜ், ராஜூ மூன்று பேரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். இந்த நிலையில், பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஏற்படும் ஒரு சம்பவத்திற்கு பிறகு பெண்களை நம்ப கூடாது. இனி நமது வாழ்வில் பெண்களே கிடையாது என்று முடிவு செய்கிறார்கள்.

    வேலை இல்லாமல் ஊர் சுற்றி வரும் இவர்கள், சுயமாக ஒரு தொழில் தொடங்க முடிவு செய்கிறார்கள். கல்யாணத்திற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து கொடுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பணியை தொடங்குகிறார்கள்.



    இந்த நிலையில், ரம்யா நம்பீசனை பார்க்கும் ராஜூவுக்கு காதல் வந்து விட, அடிக்கடி ரம்யாவை பார்க்க செல்கிறார். இது மற்ற இருவருக்கும் சந்தேகத்தை உண்டுபண்ண, ராஜூ தனது நண்பர்களை கூட்டிச் சென்று ரம்யா நம்பீசனை காட்டுகிறார். ரம்யாவை பார்க்கும் இருவருக்குமே பிடித்துப் போகிறது.

    இந்த நிலையில், அருண்ராஜா காமராஜ் கவினை உசுப்பேற்றிவிட கவின் ரம்யாவை காதலிப்பதாக கூறுகிறார். ரம்யாவும், எந்தவித எதிர்ப்பும் இன்றி கவினின் காதலை ஏற்றுக் கொள்கிறார். இதனால் இவர்களது நட்பில் விரிசல் ஏற்படுகிறது.

    கடைசியில், நண்பர்கள் இணைந்தார்களா? கவின் - ரம்யா நம்பீசன் காதல் சேர்ந்ததா? அதன் பின்னணியில் நடக்கும் பின்னணியே நட்பான மீதிக்கதை.



    இந்த படத்தின் மூலம் கவின் தன்னை ஒரு நாயகனாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். நண்பர்களுடனான காட்சியிலும் சரி, காதலியுடனான காட்சியிலும் சரி சிறப்பாக நடித்திருக்கிறார். முன்று நண்பர்களின் நட்புக்கு இடைஞ்சலாக வரும் கதாபாத்திரத்தில் ரம்யா நம்பீசன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    இயக்குநராக வெற்றி வாகை சூடியிருக்கும் அருண்ராஜா காமராஜூக்கு இந்த படம் நடிப்பில் சொல்லிக் கொள்ளும் படமாக இருக்கும் எனலாம். இனி முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அனைத்தையும் விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் ராஜூ தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.



    மற்றபடி இளவரசு, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், ரமா ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    தனது முதல் படத்திலேயே நட்பு, காதலை மையப்படுத்திய கதையை இயக்கி இளைஞர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குநர் சிவா அரவிந்த். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மனதில் பதியும் வரை மெதுவாக போகும் கதை, கதாபாத்திரங்கள் பற்றிய புரிதல் ஏற்படும் போது புத்துணர்ச்சியை கொடுக்கிறது. காதலும், நட்புப் போட்டி போட்டுக் கொண்டு விளையாடும் இந்த கதையில், காமெடிக் காட்சிகள் பெரும்பங்கு வகிக்கிறது. நண்பர்கள் முன்று பேருமே அவர்களது கதாபாத்திரங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் வசனங்கள் படத்திற்கு முக்கிய பலம்.

    சி.தரண்குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இடத்திற்கு தகுந்தாற்போல் வந்து ரசிக்க வைக்கிறது. கே.யுவராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `நட்புனா என்னானு தெரியுமா' கலாட்டா.

    சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் முன்னோட்டம்.
    லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’.

    நாயகனாக புதுமுகம் கவின் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். 

    ஒளிப்பதிவு - யுவா, இசை - தரண், எடிட்டிங் - ஆர்.நிர்மல், கலை - எம்.எஸ்.பி. மாதவன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன், தயாரிப்பு - ரவீந்தர் சந்திரசேகரன், இயக்கம் - சிவா அரவிந்த். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.



    படம் பற்றி இயக்குனரிடம் பேசியதாவது,

    “இது நண்பர்களின் உண்மை கதை. உண்மையான நட்பு பற்றி சொல்லும் ஜாலியான படமாக உருவாகி இருக்கிறது. வழக்கமாக ஒரு நண்பனின் காதலுக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். திருமணம் செய்து வைக்கவும் முன்னால் நிற்பார்கள். ஆனால், இதில் ஒரு இளைஞன் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அதற்கு உதவி செய்யாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள்.

    பின்னர் அந்த காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை, கொஞ்சம் சினிமா கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் நாயகன் கவின் சினிமாவுக்கு புதியவர். என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ரம்யா நம்பீசன் நடிப்பு சொல்லிக் கொடுத்து ஒத்துழைத்தார். இதில் ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.

    நட்புனா என்னானு தெரியுமா டிரைலர்:

    ‘அக்னி தேவி’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். #AgniDevi #BobbySimha
    ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘அக்னி தேவி’.

    இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பாபி சிம்ஹா இயக்குனர் மற்றும் படக்குழு மீது பல்வேறு புகார்களை கூறினார். தான் ஏமாற்றப்பட்டதாகவும், டூப் வைத்து எடுத்த காட்சிகளை தன் காட்சிகள் என்று படத்தில் வைத்திருப்பதாகவும் கூறி வழக்கும் தொடர்ந்தார்.

    மேலும் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜே.பி.ஆர் என்கிற ஜான் பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



    இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளாக எஸ்.எஸ்.துரைராஜ், பிரவீன் காந்தி உள்ளிட்டோர் இன்று கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

    அதில் பாபிசிம்ஹா கூறிய குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும், அவரால் தான் படக்குழு கடுமையாக பாதிக்கப்பட்டது, போலீசார் ஜான் பால்ராஜுக்கு எந்த நெருக்கடியும் தராமல் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AgniDevi #BobbySimha

    அக்னி தேவி பட விவகாரத்தில் நடிகர் பாபி சிம்ஹா கொடுத்த வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் பாபி சிம்ஹா நடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. #AgniDevi #BobbySimha
    ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி, பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘அக்னி தேவி’. இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பாபி சிம்ஹா ஒரு புகார் கூறினார்.

    நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். நான் டப்பிங் பேசவே இல்லை. எனக்கு டூப் போட்டு எடுத்த காட்சிகளை படத்தில் சேர்த்துள்ளார்கள்’ என்று கூறினார். படக்குழுவினர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.

    அக்னிதேவி படம் கடந்த வாரம் ரிலீசானது. பட வெளியீட்டுக்குப் பிறகு, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பாபி சிம்ஹா எப்படி எல்லாம் தங்களுக்கு தொல்லைகள் கொடுத்தார் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

    இதில், ‘பாபி சிம்ஹா மற்றும் ‘அக்னி தேவி’ படக்குழுவினர் கலந்து கொண்டனர். இரண்டு தரப்புக்குமே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விசாரித்தபோது படத்தின் மீது பாபி சிம்ஹா போட்டுள்ள மொத்த வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பாபி சிம்ஹா ஏதேனும் ஒரு வகையில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.



    இதில் எதற்குமே ஒத்துழைக்க முடியாது என்று கூறிவிட்டு பாபி சிம்ஹா வெளியேறி இருக்கிறார்.

    கூட்டத்தில் பேசிய வி‌ஷயங்கள் குறித்து தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    ‘பாபி சிம்ஹாவுக்கு, அவரை டப்பிங் பேச வைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை. ஆனால் தயாரிப்பாளருக்கோ ரூ.10 கோடி வரை நஷ்டம். இயக்குனரே கஷ்டப்பட்டு படத்தை தயாரித்து இருக்கிறார். பாபி சிம்ஹாவுடன் ஏற்பட்ட பிரச்சினை, வட்டி கட்ட முடியவில்லை போன்ற சிக்கல்களால் படத்தை வெளியிட்டுவிட்டார்.

    எங்களிடம், நடிகர் சங்கம் ஆகியோரிடம் வந்து தயாரிப்பாளர் உதவி கேட்டார். பேசி தீர்க்கலாம் என்று முயற்சி செய்தோம். ஆனால் யார் என்ன சொன்னாலும் பாபி சிம்ஹா அவருடைய வி‌ஷயத்தில் இருந்து பின்வாங்கவே இல்லை.

    அந்த இயக்குனர் தலைமறைவாகும் அளவுக்கு என்ன தவறு செய்தார்? எப்.ஐ.ஆர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?. சினிமா ஒன்றும் குற்றம் அல்ல. எதுவாக இருந்தாலும் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். இப்படத்தால் வந்த நஷ்டத்துக்கு ஏதாவது பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அதையும் முடியாது என்று சொல்லிவிட்டார்.

    எதற்குமே ஒத்துழைக்கவில்லை என்றால், அவரை வைத்துப் படம் தயாரிக்க அனைவருமே யோசிப்பார்கள். அடுத்த வாரத்தில் ஒரு கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் அனைத்து தயாரிப்பாளர்களையும் வரவைத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். பாபி சிம்ஹா தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள்’.

    இவ்வாறு தயாரிப்பாளர் தெரிவித்தார். #AgniDevi #BobbySimha #JPR

    ஜான்பால்ராஜ் தயாரித்து இயக்கியுள்ள அக்னி தேவி படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார் கூறியுள்ளார். #AgniDevi #BobbySimha
    பிரபல நடிகர் பாபிசிம்ஹா. பேட்டை, ஜிகர்தண்டா, நேரம், கருப்பன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இவர் டைரக்டரும், தயாரிப்பாளருமான கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் மீது பரங்கிமலை போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கி, தயாரித்த ‘அக்னிதேவி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 5 நாட்கள் நடித்தேன்.

    என்னிடம் கூறிய கதைப்படி எடுக்காமல் வேறு கதையில் படம் எடுக்கப்பட்டதால் நான் தொடர்ந்து நடிக்கவில்லை.

    மேலும் ஏற்கனவே நடித்த காட்சிகளை போட்டு காண்பிக்க மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த படத்தில் இருந்து விலகினேன்.

    இது தொடர்பான வழக்கு கோவை சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் படத்தின் பெயரை ‘அக்னி தேவி’ என்று மாற்றி 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.



    மேலும் அதில் நான் நடித்து உள்ளதாக விளம்பரமும் செய்து இருக்கிறார்கள்.

    எனக்கு பதிலாக ‘டூப்’ போட்டும், ‘கிராபிக்ஸ்’ செய்தும் படத்தை முடித்து உள்ளனர். இது தொடர்பாக டைரக்டர் ஜான் பால்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி நந்தம்பாக்கம் போலீசாருக்கு துணை கமி‌ஷனர் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் டைரக்டர் ஜான்பால்ராஜ் மீது நந்தம்பாக்கம் போலீசார் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #AgniDevi #BobbySimha #JPR

    பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #AgniDevi
    ‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அக்னி தேவி’. 

    பாபி சிம்ஹா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், வில்லியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அதன்படி படம் வருகிற மார்ச் 22-ந் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் இரண்டாவது டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார். சீன்டோ ஸ்டூடியோ சார்பில் ஜே.பி.ஆர் இந்த படத்தை தயாரித்துள்ளார். #AgniDevi #BobbySimha #RemyaNambeesan

    மீ டூ இயக்கம் இந்திய அளவில் பெரும் அலையாக மாறியிருக்கும் நிலையில், கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக நடிகை ரம்யா நம்பீசன் வேதனை தெரிவித்துள்ளார். #RemyaNambeesan #MeToo
    பீட்சா, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ரம்யா நம்பீசன். இவர் நடிப்பில் அடுத்ததாக நட்புன்னா என்னானு தெரியுமா என்கிற படம் ரிலீசாக இருக்கிறது.

    இந்த நிலையில், ரம்யா அளித்துள்ள பேட்டியில் ’மீ டூ இயக்கம் ஒரு பெரும் அலையாக இப்போது பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு ஓராண்டுக்கு முன்பே கேரள சினிமா துறையைச் சேர்ந்த பெண்கள், ‘டபுள்யூசிசி’ எனும் சினிமாவில் பணிபுரியும் பெண்களுக்கான அமைப்பை உருவாக்கினார்கள். 

    தங்களுடைய பிரச்சினைகளை நியாயமான முறையில் பேசத் தொடங்கியவர்களில் பலரை இந்த ஓராண்டில் கட்டம் கட்டி ஒதுக்கியிருக்கிறது கேரள சினியுலகம். கேள்வி கேட்கிறேன் என்பதற்காகவே நான்கு ஆண்டுகளாக எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன” என்று வேதனை தெரிவித்திருக்கிறார். #RemyaNambeesan #MeToo

    சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் முன்னோட்டம். #NatpunaEnnanuTheriyuma
    லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’.

    நாயகனாக புதுமுகம் கவின் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். 

    ஒளிப்பதிவு - யுவா, இசை - தரண், எடிட்டிங் - ஆர்.நிர்மல், கலை - எம்.எஸ்.பி. மாதவன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன், தயாரிப்பு - ரவீந்தர் சந்திரசேகரன், இயக்கம் - சிவா அரவிந்த். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “இது நண்பர்களின் உண்மை கதை. உண்மையான நட்பு பற்றி சொல்லும் ஜாலியான படமாக உருவாகி இருக்கிறது. வழக்கமாக ஒரு நண்பனின் காதலுக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். திருமணம் செய்து வைக்கவும் முன்னால் நிற்பார்கள். ஆனால், இதில் ஒரு இளைஞன் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அதற்கு உதவி செய்யாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள்.

    பின்னர் அந்த காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை, கொஞ்சம் சினிமா கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் நாயகன் கவின் சினிமாவுக்கு புதியவர். என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ரம்யா நம்பீசன் நடிப்பு சொல்லிக் கொடுத்து ஒத்துழைத்தார். இதில் ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.

    நட்புனா என்னானு தெரியுமா - டீசர்:

    ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அக்னி தேவ்’ படத்தில் பாபி சிம்ஹா ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #AgniDev #RemyaNambeesan
    பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த ஆண்டு ‘கருப்பன்’, ‘திருட்டு பயலே 2’ என இரண்டு படங்கள் வெளியாகிய நிலையில், அவர் வில்லனாக நடித்துள்ள ‘சாமி ஸ்கொயர்’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

    பாபி சிம்ஹா தற்போது ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ‘அக்னி தேவ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்து மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த படத்தில் பாபி சிம்ஹா ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.



    நடிகை மதுபாலா, சதிஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். #AgniDev #RemyaNambeesan

    நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப்பை மீண்டும் சேர்த்ததற்கு எதிராக மோகன்லாலை விமர்சனம் செய்ததால், தனக்கு படவாய்ப்புகள் மறுக்கப்படுவதாக நடிகை ரம்யா நம்பீசனுக்கு கூறியுள்ளார். #RemyaNambeesan
    கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை, மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கடுமையாக விமர்சித்த ரம்யா நம்பீசன், அதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். 

    இது கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள சினிமாவில் இருந்து ரம்யா நம்பீசன் ஓரம்கட்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்களாம்.

    கேரளாவில் நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டமொன்றில் பங்கேற்று பேசிய ரம்யா நம்பீசன் பேசும்போது, “நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியவரை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை எதிர்த்து நான் ராஜினாமா செய்ததால் எனக்கு பிரச்சினைகள் வருகின்றன. புதிய படங்களில் நடிக்க விடாமல் தடுக்கும் சூழ்நிலை இருக்கிறது. எனக்கு எதிராக தவறான வதந்திகளும் பரப்புகின்றனர். படப்பிடிப்பில் தொல்லை கொடுக்க கூடியவர் ரம்யா நம்பீசன் என்று அவதூறு பரப்பியும் பட வாய்ப்புகளை கிடைக்க விடாமல் செய்கிறார்கள்” என்றார். 



    மலையாள நடிகர் சங்க தலைவராக இருக்கும் மோகன்லால், அவருக்கு எதிராக செயல்படுவதாக ரம்யா நம்பீசன் மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறப்படுகிறது. #RemyaNambeesan #AMMA #MalayalamActorsAssociation`

    சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் முன்னோட்டம். #NatpunaEnnanuTheriyuma
    லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’.

    நாயகனாக புதுமுகம் கவின் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். 

    ஒளிப்பதிவு - யுவா, இசை - தரண், எடிட்டிங் - ஆர்.நிர்மல், கலை - எம்.எஸ்.பி. மாதவன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன், தயாரிப்பு - ரவீந்தர் சந்திரசேகரன், இயக்கம் - சிவா அரவிந்த். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “இது நண்பர்களின் உண்மை கதை. உண்மையான நட்பு பற்றி சொல்லும் ஜாலியான படமாக உருவாகி இருக்கிறது. வழக்கமாக ஒரு நண்பனின் காதலுக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். திருமணம் செய்து வைக்கவும் முன்னால் நிற்பார்கள். ஆனால், இதில் ஒரு இளைஞன் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அதற்கு உதவி செய்யாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள்.

    பின்னர் அந்த காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை, கொஞ்சம் சினிமா கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் நாயகன் கவின் சினிமாவுக்கு புதியவர். என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ரம்யா நம்பீசன் நடிப்பு சொல்லிக் கொடுத்து ஒத்துழைத்தார். இதில் ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.

    படம் வருகிற ஜூலை 20-ல் ரிலீசாக இருக்கிறது. #NatpunaEnnanuTheriyuma #Kavin #RemyaNambeesan

    ×