search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நித்யா மேனன்"

    • ஷோபனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.
    • இன்று நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    வித்ய லக்ஷ்மி இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான 'நூற்றெம்பது' படத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

    இதனை தொடர்ந்து வெப்பம், பேச்சுலர் பார்டி, உஸ்தட் ஹோட்டல், பெங்களூரு டேஸ், காஞ்சனா-2 , 24 , மெர்சல், ஒகே கண்மணி போன்ற பல்வேறு படங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என வேறுபாடின்றி நடித்துள்ளார்.

    2022 ஆம் ஆண்டு மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ், பாரதி ராஜா, பிரியா பவானி ஷங்கர், போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார்.

    ஷோபனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். எல்லா ஆண்களுக்கும் ஷோபனா போன்ற ஒரு பெண் தோழி வேண்டும் என இன்ஸ்டாகிராமில் மீம்ஸ்கள் வைரலாகியது.

    இந்நிலையில் அடுத்ததாக அறிமுக இயக்குனரான காமினி இயக்கத்தில் 'டியர் எக்சஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஃபாண்டசி ரோம் காம் கதைகளத்தில் அமைந்து இருக்கிறது இந்த படம்.

    பிரதீக் பாபர், வினய் ராய், நவ்தீப் மற்றும் தீபக் பரம்பொல் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இன்று நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    இயக்குனர் வெங்கட் பிரபு அவரது எக்ஸ் பக்கத்தில் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். போஸ்டரில் நித்யா மேனன் மஞ்சள் புடவையில் கையில் மெஹந்தியுடன் கண்ணில் ஸ்டைலான கூலர்ஸுடன் காணப்படுகிறார். மறு கையில் உள்ள போனில் அவரது எக்ஸ் கால் செய்வதுப் போல் காட்சி அமைந்துள்ளது மை டியர் எக்சஸ் படப் போஸ்டரில்.

    காதல் தோல்வியில் உள்ள பெண்ணைப் பற்றிய கதைக்கருவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • காமெடி கலந்த ஃபேண்டசி கதையம்சம் கொண்டிருக்கிறது.

    தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அந்த வகையில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படம் ரொமான்ஸ் காமெடி கலந்த ஃபேண்டசி கதையம்சம் கொண்டிருக்கிறது.

    இந்த படத்தில் வினய் ராய், நவ்தீப், பிரதீக் பாப்பர், தீபக் பரம்போல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இயக்குநர் விஷ்ணு வர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காமினி இந்த படத்தை எழுதி இயக்குகிறார்.

    ஒளிப்பதிவு பணிகளை ப்ரீத்தா ஜெயராமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகராஜா கவனிக்க உள்ளார். மேலும் இப்படம் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    • சிவா, பிரியா ஆனந்த் நடித்த 'வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி
    • அடுத்ததாக இவர் 'காதலிக்க நேரமில்லை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    "கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில், இசை புயல் A.R .ரகுமானின் இசையில், ஸ்ருதிஹாசனின் குரலில் "காதலிக்க நேரமில்லை" என்ற திரைப்படத்திற்காக நான் எழுதியப் பாடல் பதிவானது" என பாடலாசிரியர் சினேகன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    சிவா, பிரியா ஆனந்த் நடித்த 'வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் ஆண்டனி நடித்த 'காளி', 'பேப்பர் ராக்கெட்' என்ற வெப்தொடர் ஆகியவற்றை இயக்கினார்.

    அடுத்ததாக இவர் 'காதலிக்க நேரமில்லை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளனர். யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கைன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    தமிழில் இதற்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில் 1964-ம் ஆண்டு இதே தலைப்பில் படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ரொமான்ஸ் படமான இப்படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
    • இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 'இறைவன்', 'சைரன்' போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.



    இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி, 'வணக்கம் சென்னை', 'காளி', 'பேப்பர் ராக்கெட்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வினய், யோகிபாபு, லால், ஜான் கெக்கன், லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கவாமிக் யூ ஆரி ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


    காதலிக்க நேரமில்லை போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'காதலிக்க நேரமில்லை' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • நடிகை நித்யா மேனன் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். கடந்த ஆண்டு இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னை துன்புறுத்தியதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலர் அவருடன் நடித்த தமிழ் பட நடிகர்களை பட்டியலிட தொடங்கினர்.


    நித்யா மேனன் பதிவு

    இந்நிலையில், இந்த செய்தியை நித்யா மேனன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், " இது முற்றிலும் தவறான வதந்தி. இது மாதிரியான ஒரு நேர்காணலை நான் கொடுக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சினிமா துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன்.
    • இவர் பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். கடந்த ஆண்டு இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவர் நடித்த தேன் மொழி கதாப்பாத்திரம் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "தெலுங்கு திரையுலகில் நான் எந்த விதமான பிரச்சினையையும் எதிர்கொண்டதில்லை. ஆனால் தமிழ் திரையுலகில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறேன். தமிழ் ஹீரோ ஒருவர் என்னை படப்பிடிப்பில் துன்புறுத்தினார்" என்று பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல்கி பகவானின் ஆசிரமத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நடிகை நித்யா மேனன் தவறாமல் வந்து செல்வது வழக்கம்.
    • கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்துக்கு சென்ற நித்யா மேனன் அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்தார்.

    திருப்பதி:

    தமிழில் ஓ.காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன்.

    ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயா பாளையத்தில் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளது.

    இந்த ஆசிரமத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நடிகை நித்யா மேனன் தவறாமல் வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அந்த ஆசிரமத்திற்கு நடிகை நித்யா மேனன் வந்தார்.

    அப்போது அங்கு நடைபெற்ற சிறப்பு தியானத்தில் கலந்து கொண்டார். பின்னர் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்தார்.

    அங்குள்ள மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்றுக்கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • வெப்பம், ஓகே கண்மணி, காஞ்சனா 2, 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நித்யா மேனன்.
    • தற்போது நித்யா மேனன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை குழப்பியுள்ளது.

    நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். சமீபத்தில் இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவர் நடித்த தேன் மொழி கதாப்பாத்திரன் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது 'தி அயன் லேடி' என்ற படத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.

    நேற்று நித்யா மேனன் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த புகைப்படத்தில் நித்யா மேனன் கர்ப்பமாக இருப்பது போன்று இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படம் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

     

    நித்யா மேனன்

    நித்யா மேனன்

    இந்நிலையில் நித்யா மேனன், தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. அந்த கதாப்பாத்திரத்தின் புகைப்படத்தையே அவர் பகிர்ந்துள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    திருச்சிற்றம்பலம்

    "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதில் நித்யா மேனனின், ஷோபனா கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

    இந்நிலையில், நடிகை நித்யா மேனன் தனது சமூகவலைதளப் பக்கத்தின் நேரலையில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தயவு செய்து தன்னை "தாய்க்கிழவி" என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

    நித்யா மேனன்

    நித்யா மேனன்

     

    இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     

    நித்யா மேனன்

    நித்யா மேனன்

    இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது. இதில் படக்குழு திரையுலகினர் என பலரும் கலந்துக் கொண்டனர். அந்த விழாவுக்கு நித்யா மேனன் வீல் சேரில் வந்திருக்கிறார். நடிகை நித்யா மேனன் சமீபத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டார். அதனால் தான் அவர் வீல் சேரில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நித்யா மேனன், "நீங்க இல்லாமல் எப்படி, வீல் சேரிலாவது வரவேண்டும்.." என தனுஷ் கூறியதால் அவர் வந்ததாக தெரிவித்துள்ளார்.

    'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன்.
    • இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '19(1)(a)' .

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான நித்யா மேனன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'திருசிற்றம்பலம்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மேலும், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள '19(1)(a)' படத்தில் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனிடையே நடிகை நித்யா மேனனுக்கும், மலையாள நடிகர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்ற தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியது.


    நித்யா மேனன்

    இதனை மறுத்துள்ள நித்யா மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் "என் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளில் முற்றிலும் உண்மை இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடும் முன் ஊடகங்கள் உண்மையை சரிபார்க்க முயற்சி செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
    • அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

    '19(1)(a)' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கருத்து சுதந்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.


    19(1)(a) போஸ்டர்

    மேலும், '19(1)(a)' திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமா அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

    நித்யா மேனன் எழுத்தாளராக உருவாக விஜய் சேதுபதி உதவி செய்வது போன்று வெளியாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    ×