search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரையரங்கு"

    • மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • திரையரங்குகளை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் டிக்கெட் கட்ட ணத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திரையரங்குகளை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். திரையரங்குகளை தொடர்ந்து நடத்த ஏதுவாக விதிகளை தளர்த்த கோரி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்களில் நடிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் திரையரங்குகளில் படங்கள் வெளியான 8 வாரத்துக்கு பின்னரே ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என்றும் டிக்கெட் கட்டணத்தில் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. கட்டணமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    • பழங்குடியின மக்களுக்கு டிக்கெட் காலியானதாக கூறி, டிக்கெட் வழங்குபவர் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • டிக்கெட் இல்லையென கூறிவிட்டு, பின்னால் வந்தவர்களுக்கு டிக்கெட் வழங்கியதாகவும் பழங்குடியின மக்கள் கூறினர்.

    சென்னை:

    சென்னை கல் மண்டபம் பகுதியில் உள்ள திரையரங்கிற்கு சென்ற பழங்குடியின மக்களுக்கு டிக்கெட் காலியானதாக கூறி, டிக்கெட் வழங்குபவர் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தங்களுக்கு டிக்கெட் இல்லையென கூறிவிட்டு, பின்னால் வந்தவர்களுக்கு டிக்கெட் வழங்கியதாகவும் பழங்குடியின மக்கள் கூறினர். பணம் கொடுத்து தானே டிக்கெட் கேட்கிறோம் என கூறிய அவர்கள், டிக்கெட்டை வைத்துகொண்டே இல்லை என கூறிய காரணம் என்ன? என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.

    சமீபத்தில் ரோகிணி திரையரங்கிற்கு 'பத்து தல' படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்களை சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
    • அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிட வேண்டும்.

    தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் புதிய திரைப்படங்ள் வெளியாகும் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில், தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கில், ''கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்களை சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், ''தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் சோதனை நடத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என்று கூறி அதற்குரிய பட்டியலை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ''திரையரங்குகளை தொடர்ந்து கண்காணித்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

    • மதுரை மாவட்டத்திலுள்ள 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
    • ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 1955ன் படி திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11ம் தேதி விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்கள் வெளியாகின.

    இந்நிலையில் 11, 12, 13 மற்றும் 18ம் தேதிகளில் காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு மட்டுமே அரசாணையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து 11ம் தேதியன்று நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு திரைப்படங்களை திரையிட்டுள்ளதாக மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

    குறிப்பாணை கிடைத்த 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையென்றால் தமிழ்நாட்டின் திரையரங்கு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 1955ன் படி திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

    ×