என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலத்த காற்றுடன் மழை"

    • சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னையில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்த நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள சந்தோஷ் திரையரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்துள்ளது.

    இதனால், சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்தநிலையில் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈவிபி பிலிம் சிட்டி அருகே ஈவிபி திரையரங்கம் அண்மையில் சந்தேஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியுள்ளது.

    சென்னை புறநகர் பகுதிகளிலும் காற்று பலமாக வீசவதால் வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இருப்பினும், காலை முதல்  வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென வானம்  மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இது வெயிலை தணித்து இதமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால், பொது மக்கள் உற்சாகமாக உள்ளனர். மேலும், பலத்த மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மயைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • மரங்கள் முறிந்து சுண்ணாம்பு காரை மூலம் போடப்பட்ட தார்சு கூரை இடிந்து விழுந்தது.
    • இந்த மழையால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து மாலை நேரத்தில் ஊட்டி போல் காட்சியளித்து வருகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாலை பாலக்கோடு, அரூர் தருமபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்துள்ளது. இந்த சாலையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பாப்பாரப்பட்டியில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. விடிய விடிய செய்த கனமழையால் பாப்பாரப்பட்டி மெயின் ரோட்டில் துவக்கப் பள்ளிக்கு அருகில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தின் முன்பகுதி இடிந்து மெயின் ரோட்டில் விழுந்தது.

    அதிகாலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    பழுதடைந்த நிலையில் இருந்த கட்டிடத்தின் தார்சு கூரையின் அடிப்பகுதியில் இருந்த மரங்கள் முறிந்து சுண்ணாம்பு காரை மூலம் போடப்பட்ட தார்சு கூரை இடிந்து விழுந்தது.

    இந்த மழையால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து மாலை நேரத்தில் ஊட்டி போல் காட்சியளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டு சந்தோசம் அடைவதுடன் இந்த மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.

    ×