search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soundarya Rajinikanth"

    • சவுந்தர்யா ரஜினிகாந்த் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார்.

    நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ள சவுந்தர்யா, அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து 'கேங்க்ஸ்' என்ற புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.


    நோவா ஆபிரஹாம் இயக்கும் இந்த வெப்தொடரில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். 'கேங்க்ஸ்' வெப்தொடரின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சவுந்தர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    அதில், "2010-ஆம் ஆண்டு கோவா திரைப்படத்தை தயாரித்தேன். 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்ந்துள்ளேன். இன்று படப்பிடிப்பு தொடங்கியது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    • ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா.
    • இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார்.

    நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ள சவுந்தர்யா, அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து 'கேங்க்ஸ்' என்ற புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.


    நோவா ஆபிரஹாம் இயக்கும் இந்த வெப்தொடரில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். 'கேங்க்ஸ்' வெப்தொடரின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் கிளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சவுந்தர்யா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
    • இவருக்கு சமீபத்தில் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்ற ஆண் குழந்தை பிறந்தது.

    நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். சவுந்தர்யா ரஜினிகாந்த் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவருடன் விவாகரத்து பெற்றதை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.


    சவுந்தர்யா-விசாகன் தம்பதி

    இதைத்தொடர்ந்து சவுந்தர்யா-விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் தம்பதியினர் பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் தம்பதியினர் தருமை ஆதினம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்குனராக உள்ளார்.
    • இவர் ’கோச்சடையான்', 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார்.

    நடிகர் ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யா தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    சவுந்தர்யா ரஜினிகாந்த்

    இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவும் இயக்குனராக உள்ளார். இவர் ரஜினியின் 'கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். இந்நிலையில், இவர் தற்போது வெப் தொடர் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஓடிடி தளத்திற்காக உருவாகும் இந்த வெப் தொடரில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப்தொடர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த்துக்கு சில தினங்களுக்கும் முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
    • தற்போது இவர் தனது குழந்தையுடன் பகிர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

    நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். சவுந்தர்யா ரஜினிகாந்த் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவருடன் விவாகரத்து பெற்றதை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.

    சவுந்தர்யா ரஜினிகாந்த்

    சவுந்தர்யா ரஜினிகாந்த்

     

     

    இதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு சவுந்தர்யா-விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்தார்.

     

    ரஜினிகாந்த்துடன் - சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் வீர்

    ரஜினிகாந்த்துடன் - சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் வீர்

    இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது மகன் மற்றும் தனது அப்பா ரஜினிகாந்த் ஆகியோருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, நேற்று எனது பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, கடவுள் எனக்கு இந்த ஆண்டு என்னுடைய வீரா பாப்பாவை பரிசாக அளித்து வாழ்த்தியுள்ளார். மேலும் இந்த கடவுளின் குழந்தை (ரஜினிகாந்த்) எப்பொழுதும் என் பின்னால் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
    • இவர் தனது குழந்தை குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். சவுந்தர்யா ரஜினிகாந்த் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவருடன் விவாகரத்து பெற்றதை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.


    சவுந்தர்யா

    இதைத்தொடர்ந்து நேற்று சவுந்தர்யா - விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை சவுந்தர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கடவுளின் கருணையினாலும் பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், விசாகன், வேத் மற்றும் நான் வேத்தின் இளைய சகோதரன் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மருத்துவர்களுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

    இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan
    ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 8-ந்தேதி விருந்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

    இதில் ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள், மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் பங்கேற்றனர். அப்போது விருந்தினர்களுக்கு ரஜினி விதை பந்து கொண்ட தாம்பூலப்பை கொடுத்து அசத்தினார்.

    9-ந்தேதி ரஜினி வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடந்தது. இதில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். நேற்றும் திருமணத்துக்கான பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் மற்றும் மெகந்தி விழா நடந்தன.

    சவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.



    திருமணத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், மு.க.அழகிரி, இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



    நெருங்கிய உறவினர்கள், முக்கிய நண்பர்களும் திருமணத்தில் பங்கேற்றனர்.

    திருமணத்தை தொடர்ந்து இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். #ARRahman #Rajinikanth #SoundaryaRajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.

    இதற்கிடையே, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.



    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சவுந்தர்யா ரஜினிகாந்தின் வரவேற்பு புகைப்படத்தை பதிவிட்டு, திருமண வாழ்த்துக்க்ள் என குறிப்பிட்டுள்ளார். #ARRahman #Rajinikanth #SoundaryaRajinikanth 
    ராதா கல்யாண வைபவத்துடன் சவுந்தர்யா - விசாகன் திருமணம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற விருந்தில் தாம்பூலப்பையில் விதைகள் கொடுத்து ரஜினி அசத்தினார். #SoundaryaRajinikanth
    ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கும் பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளர் விசாகனுக்கும் நாளை (10-ந்தேதி) ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் திருமணம் நடக்க உள்ளது.

    திருமண நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக நேற்று ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    ரஜினியுடன் நட்புடன் இருக்கும் நல்லி குப்புசாமி, கண்ணதாசன் மகன் குடும்பம், ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள் என சினிமா சாராத நபர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

    பொதுவாக, திருமணத்துக்கு வந்து வாழ்த்துபவர்களுக்குத் தாம்பூலப்பை கொடுப்பது தான் வழக்கம். சிலர் மரக்கன்றுகளைக் கொடுக்கின்றனர். ரஜினி வித்தியாசமாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தினார்.



    அந்த விதைப்பந்தில் உள்ளது எந்த மரத்தின் விதைகள் என்ற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது. மரம் வளர்க்க விரும்புபவர்கள், முடிந்தவர்கள் அந்த விதைகளை நட்டு மரம் வளர்க்கலாம். முடியாதவர்கள் ஏதோ ஒரு இடத்தில் வீசி எறிந்தால் போதும். அந்த விதை செடியாக வளர்ந்துவிடும். ரஜினியின் இந்த அசத்தல் ஐடியாவுக்கு சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இன்று ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடக்கிறது. நாளை மிக நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது.

    அதைத் தொடர்ந்து 11-ந்தேதி எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். #SoundaryaRajinikanth #VishaganVanangamudi

    சோழர்களில் முக்கியமானவனும், ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருள்மொழிவர்மன் பற்றிய பொன்னியின் செல்வன் புத்தகத்தை தமிழில் இணைய தொடராக்கும் முயற்சியில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இறங்கியிருக்கிறார். #PonniyinSelvan
    எழுத்தாளர் கல்கியின் அமர காவியமான `பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கவும் அதில் வந்தியத்தேவனாக நடிக்கவும் எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் என பலரும் விரும்பினார்கள். ஆனால் நிறைவேறவில்லை. இப்போது தான் இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக இயக்க ஆரம்ப கட்டப் பணிகளில் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி ஒரு சரித்திர வலைத்தொடரை தயாரிக்க உள்ளார்.

    இதுகுறித்து சவுந்தர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பல்லாண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரசின் காலத்தைப் பற்றி விறுவிறுப்பும் வீரமும், தொன்மையும், காதலும், நகைச்சுவையும் கலந்த காவியமாக இது இருக்கும். இந்த நாவலைப் படித்த நாள் முதலே எனக்கு இதைக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


    இந்த தொடரைத் தயாரித்து கிரியேட்டிவ் ஹெட்டாகவும் பொறுப்பை மேற்கொள்கிறார் சவுந்தர்யா. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளராக இருந்த சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகிறது தொடர். இதில் நடிக்கும் நடிகர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. டைம்ஸ் இன்டெர்நெட் நிறுவனம் வழியே தயாராகும் இந்த வெப் சிரீஸ் மட்டும் அல்லாமல், தமிழில் பல தொடர்களையும் தயாரிக்க உள்ளது. #PonniyinSelvan #SoundaryaRajinikanth #SuriyaPrathap

    ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும், தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi
    நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா, ‘கோச்சடையான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன் சந்திரமுகி, சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றினார்.

    சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அஸ்வின் - சவுந்தர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். பின்னர் அதிகாரபூர்வமாக விவகாரத்தும் பெற்றனர்.

    அதனை தொடர்ந்து சவுந்தர்யா, தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். சில மாதங்களுக்கு முன்பாக சவுந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாகவும், விசாகன் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.



    விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் ஆவார். இவர் அமெரிக்காவில் படித்தவர். ‘வஞ்சகர் உலகம்‘ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரும் திருமணமாகி விவாகரத்தானவர்.

    தற்போது சவுந்தர்யா விசாகன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. “சவுந்தர்யா, விசாகன் திருமணம் வருகிற பிப்ரவரி 11-ந் தேதி நடைபெற உள்ளது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி பிப்ரவரி 9-ந் தேதி முதல் மெகந்தி, வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi

    ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யாவின் மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். #SoundaryaRajinikanth
    நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். சமீபத்தில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர்.

    இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த தொழில்அதிபரின் மகனை சவுந்தர்யா மறுமணம் செய்ய உள்ளார். எளிமையான முறையில் கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    சவுந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்த்துடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். இவர்களுடன், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 20 பேர் சென்றனர். திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர்கள் இரவு தங்கி ஓய்வு எடுத்தனர்.



    நேற்று காலை சிறப்பு தரிசனத்தில் சுவாமி ஏழுமலையானை, சவுந்தர்யா, லதா தரிசனம் செய்தனர்.

    திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்து பின்னர் பெற்றுக் கொண்டனர். லதா ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்குத் தீர்த்த பிரசாதம் வழங்கினர். #SoundaryaRajinikanth

    ×