என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "soundarya rajinikanth"

    • சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிருந்தார் அபிஷன் ஜீவிந்த்.
    • படம் 10 நாள்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது

    அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷந்த் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமான படம் 'வித் லவ்'. இபட்டதில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பாசிலியன் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    கடந்த ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் மதனும், தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்தும் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

    வித் லவ் திரைப்படம் வெளியான 10 நாள்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • வித் லவ் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், 'வித் லவ். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.

    இதில் தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது, 'வித் லவ்' படத்துக்கு ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    அந்த சந்தோஷத்துடன் படக்குழுவை அழைத்துக்கொண்டு என் அப்பாவை (ரஜினிகாந்த்) பார்க்க சென்றேன். என் அப்பா என்னை கட்டிப் பிடித்து, என்னை பார்த்து ஒருமாதிரியாக சிரித்தார். அப்போது நான் கேட்டேன். 'அப்பா இது தான் வெற்றியா?" என்று...

    அப்பாவின் அந்த சிரிப்பை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. 18 ஆண்டு திரைப்பயணத்தில் நான் அடைந்த முதல் வெற்றி இது. 'வித் லவ்' படக்குழுவால் தான் அது அமைந்தது. அனஸ்வரா ராஜனை பார்த்து, 'இத்தனை நாள் எங்கங்க இருந்தீங்க...' என்று அப்பா ஆச்சரியத்துடன் கேட்டார். அபிஷனையும் பாராட்டி தீர்த்துவிட்டார். இந்த குழு மீண்டும் இணைந்தாலும் நான் ரெடி. ஓகே சொல்லட்டும். பட்டறையை போட்டுடலாம், என்றார்.

    • படத்தில் 'டி-ஏஜிங்' பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
    • லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் "கூலி". பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், கூலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே வந்தது. எனினும், கடந்த ஆண்டு தமிழ் திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் கூலி இரண்டாவது இடம் பிடித்தது.

    இந்த நிலையில் கூலி படம் குறித்த கேள்விக்கு தயாரிப்பாளரும், நடிகர் ரஜினியின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் மனம்திறந்து பதிலளித்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகி இருக்கும் "வித் லவ்" திரைப்படம் நாளை (பிப். 6) வெளியாக இருக்கிறது. இதையொட்டி தனியார் செய்தியாளருக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் "கூலி" படம் பற்றி பேசியுள்ளார்.

    உங்களுக்கு கூலி படம் பிடித்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், "படத்தின் கடைசி 10 நிமிடங்கள் அதாவது 'டி-ஏஜிங்' பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தலைவர் ரஜினிகாந்தின் ரசிகன் என்ற முறையில், அவரை இன்னும் அதிகமாக பார்க்க விரும்பினேன். எனக்குப் படம் பிடித்திருந்தது, ஆனால் இது அப்பாவின் மிகவும் பிடித்த படங்களின் பட்டியலில் இல்லை."

    "என் கருத்துப்படி, இப்போதெல்லாம் மக்கள் அதிகப்படியான வன்முறையை விரும்புவதில்லை என நினைக்கிறேன். 'கூலி' படம் பற்றி நான் மேலும் விரிவாக பேச விரும்பவில்லை, ஏனென்றால் பல நல்ல படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு," என்றார்.

    தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்தார்.

    வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்தான் நடிகர் ரஜினி. ரஜினிகாந்த் திரையில் அறிமுகமாகி இந்தாண்டோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தன. இதற்கு பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த திரைசாதனையை கொண்டாடும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி, அவரது 'படையப்பா' படம் மீண்டும் திரையரங்குகளில் புதிய பொலிவுடன் திரையிடப்படுகிறது.

    இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினி பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோவும் இன்று மாலை வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

    ஆனால் வீடியோ வெளியாகவில்லை. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்துள்ளார். விரைவில் வீடியோ வெளியிடப்படும் எனவும் தெரிவிதார்.

    ஆனால், ரசிகர்கள் நீண்ட நேரமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், வீடியோ வெளியாகவே இல்லை. இந்த நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிய போஸ்டருடன் அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில்," படையப்பா படத்தின் மாயாஜாலத்தை மீண்டும் அனுபவிக்கும் வகையில், தலைவரின் பிரத்யேக வீடியோ இன்றிரவு 7 மணிக்கு வௌியாகும்" என குறிப்பிட்டுள்ளார்.

    • ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்குனராக உள்ளார்.
    • இவர் ’கோச்சடையான்', 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார்.

    நடிகர் ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யா தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    சவுந்தர்யா ரஜினிகாந்த்

    இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவும் இயக்குனராக உள்ளார். இவர் ரஜினியின் 'கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். இந்நிலையில், இவர் தற்போது வெப் தொடர் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஓடிடி தளத்திற்காக உருவாகும் இந்த வெப் தொடரில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப்தொடர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
    • இவருக்கு சமீபத்தில் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்ற ஆண் குழந்தை பிறந்தது.

    நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். சவுந்தர்யா ரஜினிகாந்த் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவருடன் விவாகரத்து பெற்றதை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.


    சவுந்தர்யா-விசாகன் தம்பதி

    இதைத்தொடர்ந்து சவுந்தர்யா-விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் தம்பதியினர் பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் தம்பதியினர் தருமை ஆதினம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா.
    • இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார்.

    நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ள சவுந்தர்யா, அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து 'கேங்க்ஸ்' என்ற புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.


    நோவா ஆபிரஹாம் இயக்கும் இந்த வெப்தொடரில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். 'கேங்க்ஸ்' வெப்தொடரின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் கிளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சவுந்தர்யா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


    • சவுந்தர்யா ரஜினிகாந்த் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார்.

    நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ள சவுந்தர்யா, அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து 'கேங்க்ஸ்' என்ற புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.


    நோவா ஆபிரஹாம் இயக்கும் இந்த வெப்தொடரில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். 'கேங்க்ஸ்' வெப்தொடரின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சவுந்தர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    அதில், "2010-ஆம் ஆண்டு கோவா திரைப்படத்தை தயாரித்தேன். 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்ந்துள்ளேன். இன்று படப்பிடிப்பு தொடங்கியது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    • ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த்துக்கு சில தினங்களுக்கும் முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
    • தற்போது இவர் தனது குழந்தையுடன் பகிர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

    நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். சவுந்தர்யா ரஜினிகாந்த் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவருடன் விவாகரத்து பெற்றதை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.

    சவுந்தர்யா ரஜினிகாந்த்

    சவுந்தர்யா ரஜினிகாந்த்

     

     

    இதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு சவுந்தர்யா-விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்தார்.

     

    ரஜினிகாந்த்துடன் - சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் வீர்

    ரஜினிகாந்த்துடன் - சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் வீர்

    இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது மகன் மற்றும் தனது அப்பா ரஜினிகாந்த் ஆகியோருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, நேற்று எனது பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, கடவுள் எனக்கு இந்த ஆண்டு என்னுடைய வீரா பாப்பாவை பரிசாக அளித்து வாழ்த்தியுள்ளார். மேலும் இந்த கடவுளின் குழந்தை (ரஜினிகாந்த்) எப்பொழுதும் என் பின்னால் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
    • இவர் தனது குழந்தை குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். சவுந்தர்யா ரஜினிகாந்த் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவருடன் விவாகரத்து பெற்றதை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.


    சவுந்தர்யா

    இதைத்தொடர்ந்து நேற்று சவுந்தர்யா - விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை சவுந்தர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கடவுளின் கருணையினாலும் பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், விசாகன், வேத் மற்றும் நான் வேத்தின் இளைய சகோதரன் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மருத்துவர்களுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

    இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan
    ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 8-ந்தேதி விருந்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

    இதில் ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள், மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் பங்கேற்றனர். அப்போது விருந்தினர்களுக்கு ரஜினி விதை பந்து கொண்ட தாம்பூலப்பை கொடுத்து அசத்தினார்.

    9-ந்தேதி ரஜினி வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடந்தது. இதில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். நேற்றும் திருமணத்துக்கான பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் மற்றும் மெகந்தி விழா நடந்தன.

    சவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.



    திருமணத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், மு.க.அழகிரி, இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



    நெருங்கிய உறவினர்கள், முக்கிய நண்பர்களும் திருமணத்தில் பங்கேற்றனர்.

    திருமணத்தை தொடர்ந்து இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். #ARRahman #Rajinikanth #SoundaryaRajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.

    இதற்கிடையே, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.



    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சவுந்தர்யா ரஜினிகாந்தின் வரவேற்பு புகைப்படத்தை பதிவிட்டு, திருமண வாழ்த்துக்க்ள் என குறிப்பிட்டுள்ளார். #ARRahman #Rajinikanth #SoundaryaRajinikanth 
    ×