search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishagan Vanangamudi"

    நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan
    ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 8-ந்தேதி விருந்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

    இதில் ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள், மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் பங்கேற்றனர். அப்போது விருந்தினர்களுக்கு ரஜினி விதை பந்து கொண்ட தாம்பூலப்பை கொடுத்து அசத்தினார்.

    9-ந்தேதி ரஜினி வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடந்தது. இதில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். நேற்றும் திருமணத்துக்கான பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் மற்றும் மெகந்தி விழா நடந்தன.

    சவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.



    திருமணத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், மு.க.அழகிரி, இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



    நெருங்கிய உறவினர்கள், முக்கிய நண்பர்களும் திருமணத்தில் பங்கேற்றனர்.

    திருமணத்தை தொடர்ந்து இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan

    ராதா கல்யாண வைபவத்துடன் சவுந்தர்யா - விசாகன் திருமணம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற விருந்தில் தாம்பூலப்பையில் விதைகள் கொடுத்து ரஜினி அசத்தினார். #SoundaryaRajinikanth
    ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கும் பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளர் விசாகனுக்கும் நாளை (10-ந்தேதி) ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் திருமணம் நடக்க உள்ளது.

    திருமண நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக நேற்று ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    ரஜினியுடன் நட்புடன் இருக்கும் நல்லி குப்புசாமி, கண்ணதாசன் மகன் குடும்பம், ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள் என சினிமா சாராத நபர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

    பொதுவாக, திருமணத்துக்கு வந்து வாழ்த்துபவர்களுக்குத் தாம்பூலப்பை கொடுப்பது தான் வழக்கம். சிலர் மரக்கன்றுகளைக் கொடுக்கின்றனர். ரஜினி வித்தியாசமாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தினார்.



    அந்த விதைப்பந்தில் உள்ளது எந்த மரத்தின் விதைகள் என்ற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது. மரம் வளர்க்க விரும்புபவர்கள், முடிந்தவர்கள் அந்த விதைகளை நட்டு மரம் வளர்க்கலாம். முடியாதவர்கள் ஏதோ ஒரு இடத்தில் வீசி எறிந்தால் போதும். அந்த விதை செடியாக வளர்ந்துவிடும். ரஜினியின் இந்த அசத்தல் ஐடியாவுக்கு சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இன்று ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடக்கிறது. நாளை மிக நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது.

    அதைத் தொடர்ந்து 11-ந்தேதி எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். #SoundaryaRajinikanth #VishaganVanangamudi

    ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும், தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi
    நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா, ‘கோச்சடையான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன் சந்திரமுகி, சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றினார்.

    சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அஸ்வின் - சவுந்தர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். பின்னர் அதிகாரபூர்வமாக விவகாரத்தும் பெற்றனர்.

    அதனை தொடர்ந்து சவுந்தர்யா, தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். சில மாதங்களுக்கு முன்பாக சவுந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாகவும், விசாகன் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.



    விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் ஆவார். இவர் அமெரிக்காவில் படித்தவர். ‘வஞ்சகர் உலகம்‘ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரும் திருமணமாகி விவாகரத்தானவர்.

    தற்போது சவுந்தர்யா விசாகன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. “சவுந்தர்யா, விசாகன் திருமணம் வருகிற பிப்ரவரி 11-ந் தேதி நடைபெற உள்ளது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி பிப்ரவரி 9-ந் தேதி முதல் மெகந்தி, வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi

    ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யாவின் மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். #SoundaryaRajinikanth
    நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். சமீபத்தில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர்.

    இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த தொழில்அதிபரின் மகனை சவுந்தர்யா மறுமணம் செய்ய உள்ளார். எளிமையான முறையில் கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    சவுந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்த்துடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். இவர்களுடன், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 20 பேர் சென்றனர். திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர்கள் இரவு தங்கி ஓய்வு எடுத்தனர்.



    நேற்று காலை சிறப்பு தரிசனத்தில் சுவாமி ஏழுமலையானை, சவுந்தர்யா, லதா தரிசனம் செய்தனர்.

    திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்து பின்னர் பெற்றுக் கொண்டனர். லதா ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்குத் தீர்த்த பிரசாதம் வழங்கினர். #SoundaryaRajinikanth

    ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு, தொழிலபதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடி உடன் மறுமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi
    ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

    இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் இருக்கிறான். சவுந்தர்யா தனது மகனுடன் போயஸ் தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கணவனை பிரிந்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்திய சவுந்தர்யா தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தை இயக்கினார்.

    இந்த நிலையில், சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    அமெரிக்காவில் எம்.பி.ஏ., முடித்த விசாகன், தமிழகத்தில் மருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அத்துடன் வஞ்சகர் உலகம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

    குடும்பத்தினரது சம்மதத்துடன் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi

    ×