என் மலர்
நீங்கள் தேடியது "சௌந்தர்யா ரஜினிகாந்த்"
- படத்தில் 'டி-ஏஜிங்' பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
- லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் "கூலி". பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், கூலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே வந்தது. எனினும், கடந்த ஆண்டு தமிழ் திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் கூலி இரண்டாவது இடம் பிடித்தது.
இந்த நிலையில் கூலி படம் குறித்த கேள்விக்கு தயாரிப்பாளரும், நடிகர் ரஜினியின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் மனம்திறந்து பதிலளித்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகி இருக்கும் "வித் லவ்" திரைப்படம் நாளை (பிப். 6) வெளியாக இருக்கிறது. இதையொட்டி தனியார் செய்தியாளருக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் "கூலி" படம் பற்றி பேசியுள்ளார்.
உங்களுக்கு கூலி படம் பிடித்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், "படத்தின் கடைசி 10 நிமிடங்கள் அதாவது 'டி-ஏஜிங்' பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தலைவர் ரஜினிகாந்தின் ரசிகன் என்ற முறையில், அவரை இன்னும் அதிகமாக பார்க்க விரும்பினேன். எனக்குப் படம் பிடித்திருந்தது, ஆனால் இது அப்பாவின் மிகவும் பிடித்த படங்களின் பட்டியலில் இல்லை."
"என் கருத்துப்படி, இப்போதெல்லாம் மக்கள் அதிகப்படியான வன்முறையை விரும்புவதில்லை என நினைக்கிறேன். 'கூலி' படம் பற்றி நான் மேலும் விரிவாக பேச விரும்பவில்லை, ஏனென்றால் பல நல்ல படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு," என்றார்.
வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்தான் நடிகர் ரஜினி. ரஜினிகாந்த் திரையில் அறிமுகமாகி இந்தாண்டோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தன. இதற்கு பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த திரைசாதனையை கொண்டாடும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி, அவரது 'படையப்பா' படம் மீண்டும் திரையரங்குகளில் புதிய பொலிவுடன் திரையிடப்படுகிறது.
இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினி பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோவும் இன்று மாலை வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் வீடியோ வெளியாகவில்லை. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்துள்ளார். விரைவில் வீடியோ வெளியிடப்படும் எனவும் தெரிவிதார்.
ஆனால், ரசிகர்கள் நீண்ட நேரமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், வீடியோ வெளியாகவே இல்லை. இந்த நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிய போஸ்டருடன் அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்," படையப்பா படத்தின் மாயாஜாலத்தை மீண்டும் அனுபவிக்கும் வகையில், தலைவரின் பிரத்யேக வீடியோ இன்றிரவு 7 மணிக்கு வௌியாகும்" என குறிப்பிட்டுள்ளார்.







