search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கயல் சந்திரன்"

    கயல் படம் மூலம் நடிகராக அறிமுகமான சந்திரன், தற்போது தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். #KayalChandran
    பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான படம் ‘கயல்’. இதில் சந்திரன் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறவே, கயல் சந்திரன் என்று பலராலும் அழைக்கப்பட்டு வந்தார். தற்போது தன்னுடைய உண்மை பெயரான சந்திரமௌலி என்று அழைக்க வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்துள்ள அறிக்கையில், ‘எனது அறிமுக படமான ‘கயல்’ முதல் பேராதரவு நல்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். எனதுள்ளம் நன்றிப்பெருக்கில் நிறைந்திருக்கும் இவ்வேளையில், உங்கள் நல் ஆதரவோடு மேலும் ஊக்கமுடன் உழைத்து நல்ல படங்களில் நடித்து உங்களை மகிழ்விக்க மனம் விழைகிறது.



    இதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட நான் இனி என் உண்மை பெயரான “சந்திரமௌலி” என அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, அனைவரும் “சந்திரன்” என்ற என் பெயரை இனி “சந்திரமௌலி” என்று அழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது. #PARTY #VenkatPrabhu
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'.

    வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.


    முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து `மாநாடு' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். #PARTY #VenkatPrabhu

    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி படத்தில் நடித்துள்ள சஞ்சிதா ஷெட்டி, படப்பிடிப்பின் போது ரெஜினா உட்கார்ந்தபடியே தூங்குவார் என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra
    பார்ட்டி படத்தில் ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என 3 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள். ரெஜினாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி. நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கும் பழக்கம் ரெஜினாவுக்கு இருக்கு.

    இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது அவரால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. நானும் அப்படித் தூங்க முயற்சி பண்ணேன். முடியவில்லை. சூதுகவ்வும் வெளிவந்த சமயத்துல ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்குப் போய் இருந்தேன். அங்கே `பிரியாணி’ படப்பிடிப்பு நடந்துவந்தது.



    அங்கேதான் வெங்கட் பிரபுவை முதன்முதலாக சந்தித்தேன். `சூதுகவ்வும்‘ படத்தைப் பாராட்டியவர், கொஞ்ச நாளைக்கு அப்புறம் `பார்ட்டி’ படத்துல நடிக்கிறீங்களானு கேட்டார். கதை பிடிச்சிருந்தது, ஓகே சொல்லிட்டேன்’ என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra

    முதல் முறையாக கயல் சந்திரனும் அஞ்சனாவும் தங்களுடைய குழந்தை புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். #KayalChandran #Anjana
    பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர் சந்திரன். இப்படம் ரசிகர்களை கவர்ந்ததால், கயல் சந்திரன் என பெயர் வைத்துக் கொண்டார். இவரும் டி.வி. தொகுப்பாளினி அஞ்சனாவும் காதலித்து வந்தார்கள்.

    பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் 2016ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகு டி.வி நிகழ்ச்சிகளுக்கு இடைவெளிவிட்ட அஞ்சனா, கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமடைந்தார். இவருக்கு சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், சில தினங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்தது. 



    தற்போது முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #PARTY #VenkatPrabhu
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'. 

    வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #PARTY #VenkatPrabhu

    மகா விஷ்ணு இயக்கத்தில் கயல் சந்திரன் - அஞ்சு குரியன் நடிப்பில் உருவாகும் `நான் செய்த குறும்பு' படத்தின் போஸ்டர் சர்ச்சைக்கு நடிகர் சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். #NaanSeidhaKurumbu #Chandran
    மகா விஷ்ணு இயக்கத்தில் கயல் சந்திரன் - அஞ்சு குரியன் நடிப்பில் உருவாகும் படம் `நான் செய்த குறும்பு'. இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளாகியது. போஸ்டரில் கயல் சந்திரன் கர்ப்பிணி பெண் போன்ற தோற்றத்தில் மகப்பேறு பெறுவது போல் அந்த போஸ்டர் இருந்தது. இதனால் அந்த போஸ்டருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தது.

    இந்த நிலையில், படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் முக்கிய அம்சமாக கர்ப்பிணிப் பெண்கள் ஐந்து பேருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் சந்திரன் பேசும்போது,

    `இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்து ட்விட்டரில் பலவிதமான கருத்துகள் வந்தன. சிலர் ஒரு மாதிரியான படமாக இருக்குமோ என்று கூறியிருந்தார்கள். நான் சொல்கிறேன் இது சுரேஷ் கிருஷ்ணாவின் `ஆஹா' படம் மாதிரி குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும். நான் செய்த குறும்பு அடல்ட் காமெடி படம் கிடையாது. பெண்களை கிண்டல் செய்யும் விதத்தில் இந்த போஸ்டரை வெளியிடவில்லை. பெண்கள் படும் கஷ்டத்தை ஒரு ஆணும் பட வேண்டும். அப்போது தான் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் புரியும்' என்றார்.



    ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் தொடக்க விழாவில் நாயகி அஞ்சு குரியன், மிர்ச்சி விஜய், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, ஒளிப்பதிவாளர் ரமணன் புருஷோத்தமா, கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன், எடிட்டர் மணிக்குமரன் சங்கரா, நிர்வாகத் தயாரிப்பாளர் சுரேஷ் ராஜா, இணைத் தயாரிப்பாளர் எஸ்.பி. சுரேஷ், தயாரிப்பு நிர்வாகி ஹென்றி குமார், தயாரிப்பாளர்கள் டெல்லி பாபு,  பானு பிக்சர்ஸ் ராஜா, விநியோகஸ்தர் ஜேகே, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். #NaanSeidhaKurumbu #Chandran

    ×