search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bava Lakshmanan"

    • மாயி, ஆனந்தம், ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதத்தில், அரசு, காதல் சடுகுடு, வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பவா லட்சுமணன்.
    • இவர் நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் பவா லட்சுமணன். இவர் மாயி, ஆனந்தம், ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதத்தில், அரசு, காதல் சடுகுடு, வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். குறிப்பாக மாயி படத்தில், "வா மா மின்னல்" என்று இவர் பேசிய வசனம் இன்றுவரை பலரின் நினைவுகளில் நிற்கிகிறது.


    பவா லட்சுமணன்

    பவா லட்சுமணன்

    சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் வருமானமின்றி தவித்து வந்த பாவா லட்சுமணன், ஐந்து வருடங்களாக பெயிண்டர் வேலை செய்து வந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களாக சக்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த பவா லட்சுமணன், சக்கரை நோயின் தாக்கம் அதிகமானதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவரின் கால் கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. 

    ஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் `அய்யா உள்ளேன் அய்யா' படத்தின் முன்னோட்டம்.
    சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை, வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர். அத்துடன் முதல் சீதனம், சிம்மராசி உள்ளிட்ட படங்களையும் இயக்கி இருக்கிறார். இவர் தற்போது "அய்யா உள்ளேன் அய்யா" என்ற படத்தை இயக்குகிறார்.

    இந்த படத்தில் அவரது பேரன் கபிலேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு எதிர்மறை நாயகனாக அவரது தம்பி மகன் பால சபரீஸ்வரன் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சந்துரு, இசை - மகேந்திரன், தயாரிப்பு - வீர ஸ்ரீ சந்தன கருப்பராயன் புரொடக்‌ஷன்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஈரோடு செளந்தர்.


    படம் பற்றி இயக்குநர் கூறியதாவது,

    10-ஆம் வகுப்பு பள்ளிக்கூட கதை என்பதால் இந்த கதைக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் தனது பேரன் சரியாக இருப்பான் என்பதால் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்.

    மாணவர்களின் எதிர்காலம் என்பது 10-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு கால கட்டம் தான். அதை மட்டும் மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட்டால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடம் மாறினாலும் அவர்கள் வாழ்க்கை திசை மாறி விடும் என்கிற கருத்தை சொல்கிற படமாக இது உருவாகிறது என்றார். படப்பிடிப்பு 4ம் தேதி ஈரோட்டில் துவங்கிறது.
    ×