search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்திக்கு வயநாடு பயநாடாக அமையும்- இல.கணேசன்
    X

    ராகுல் காந்திக்கு வயநாடு பயநாடாக அமையும்- இல.கணேசன்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வயநாடு பயநாடாக அமையும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார். #LokSabhaElections2019 #BJP #LaGanesan #RahulGandhi
    மதுரை:

    மதுரையில் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத்தில் மோடி செய்த சாதனைகளை கூறி ஓட்டு கேட்டோம். தற்போது மத்திய அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை கூறி ஓட்டு கேட்டு வருகிறோம். நிச்சயம் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.



    தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் பலம் குறைந்து இருக்கும் என அவர் நம்புகிறார். அவரது நம்பிக்கை கானல் நீராகி விடும். தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என கூட்டணி அமைத்துள்ளது. அது நடக்கப்போவதில்லை.

    பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

    பகுத்தறிவுவாதிகள் இந்து மத புராணங்களை படித்து தெரிந்திருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் அது தவறு என கி.வீரமணி நிரூபித்து விட்டார். கிருஷ்ணர் குறித்து அவதூறு பேசிய கி.வீரமணி மன்னிப்பு கேட்பது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.

    அமேதி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஸ்மிருதி இரானி சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அவரது வெற்றி உறுதியாகி விட்டது. எனவே தான் கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். வயநாடு அவருக்கு பயநாடாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #BJP #LaGanesan #RahulGandhi
    Next Story
    ×