என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் காந்திக்கு வயநாடு பயநாடாக அமையும்- இல.கணேசன்
Byமாலை மலர்1 April 2019 5:51 AM GMT (Updated: 1 April 2019 7:15 AM GMT)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வயநாடு பயநாடாக அமையும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார். #LokSabhaElections2019 #BJP #LaGanesan #RahulGandhi
மதுரை:
மதுரையில் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் பலம் குறைந்து இருக்கும் என அவர் நம்புகிறார். அவரது நம்பிக்கை கானல் நீராகி விடும். தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என கூட்டணி அமைத்துள்ளது. அது நடக்கப்போவதில்லை.
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
பகுத்தறிவுவாதிகள் இந்து மத புராணங்களை படித்து தெரிந்திருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் அது தவறு என கி.வீரமணி நிரூபித்து விட்டார். கிருஷ்ணர் குறித்து அவதூறு பேசிய கி.வீரமணி மன்னிப்பு கேட்பது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.
அமேதி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஸ்மிருதி இரானி சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அவரது வெற்றி உறுதியாகி விட்டது. எனவே தான் கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். வயநாடு அவருக்கு பயநாடாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #BJP #LaGanesan #RahulGandhi
மதுரையில் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத்தில் மோடி செய்த சாதனைகளை கூறி ஓட்டு கேட்டோம். தற்போது மத்திய அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை கூறி ஓட்டு கேட்டு வருகிறோம். நிச்சயம் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.
தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் பலம் குறைந்து இருக்கும் என அவர் நம்புகிறார். அவரது நம்பிக்கை கானல் நீராகி விடும். தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என கூட்டணி அமைத்துள்ளது. அது நடக்கப்போவதில்லை.
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
பகுத்தறிவுவாதிகள் இந்து மத புராணங்களை படித்து தெரிந்திருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் அது தவறு என கி.வீரமணி நிரூபித்து விட்டார். கிருஷ்ணர் குறித்து அவதூறு பேசிய கி.வீரமணி மன்னிப்பு கேட்பது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.
அமேதி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஸ்மிருதி இரானி சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அவரது வெற்றி உறுதியாகி விட்டது. எனவே தான் கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். வயநாடு அவருக்கு பயநாடாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #BJP #LaGanesan #RahulGandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X