என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டிற்கு தயாராகி வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடப்பு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருக்காது. மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்காக 11-ம் வகுப்பு பாடங்களையே நடத்தாமல் 12-ம் வகுப்பு பாடங்களை நேரடியாக தனியார் பள்ளிகள் எடுத்து வந்த காரணத்தினால் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்க முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது 11-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வை எழுதுவதற்கு சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால் கல்வித்துறை யோசித்திருக்கலாம் என கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

    2022-2023 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என வைகோ கூறுகிறார்.
    • நான் விலகுவதாக அறிவித்த பின்னர் எந்த தகவலும் கட்சியில் இருந்து வரவில்லை.

    திருப்பூர்:

    கட்சியின் நலன் கருதி ம.தி.மு.க.-வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டுமென அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, வைகோவுக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதிலளித்த வைகோ, 'தி.மு.க.-வில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

    துரைசாமி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்றார். இதையடுத்து திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் இருந்து விலகினார். இதனிடையே ம.தி.மு.க.வில் அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெறும் ம.தி.மு.க. 29-வது பொதுக்குழுவில் நிர்வாகிகள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

    இந்தநிலையில் திருப்பூரில் இன்று துரைசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என வைகோ கூறுகிறார். அப்படியானால் எதுக்கு தனிக்கட்சி. தி.மு.க.வுடன் இணைக்க வேண்டியது தானே. வைகோவிற்கு இப்போதைய நிலையில் திறமை, ஆற்றல் இல்லை. இனியும் அவரால் கட்சியை நடத்த முடியாது.

    நான் விலகுவதாக அறிவித்த பின்னர் எந்த தகவலும் கட்சியில் இருந்து வரவில்லை. தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க நான் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறுகிறார்கள். 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்., வைகோ கையெழுத்து போடும்போது நானும் உடன் இருந்தேன். அப்படியிருக்கும் பட்சத்தில் எப்படி நான் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
    • இவர் இளைஞர் நலத்துறை அமைச்சரும் நகரி எம்.எல்.ஏவுமாக இருக்கிறார்.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கிய ரோஜா ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். இவர் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமாக இருக்கிறார்.

    சென்னையில் உள்ள வீட்டில் நேற்று இரவு தங்கியிருந்த அமைச்சர் ரோஜாவுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. வலியால் அவர் அவதிப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரோஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரோஜாவின் கால் வீக்கத்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    ரோஜாவின் கால் வீக்கத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதற்காக மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்பல்லோ மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு ரோஜாவின் கால் வலி குறைந்திருப்பதாக தெரிகிறது. இதையடுத்து அவர் விரைவில் விடுதிரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோடி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் நடுத்தர மக்களின் நிதிநிலை வேகமாக உயர்ந்துள்ளது.
    • ரூ.7 லட்சம் வரையிலான வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் இன்று கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி கடந்த 9 ஆண்டுகளில் புதிய கல்வி நிறுவனங்களை திறந்தும், மானிய விலையில் வீடுகள் வழங்கியும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியும், நடுத்தர மக்களின் கனவுகளை நிறைவேற்றி உள்ளார்.

    மோடி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் நடுத்தர மக்களின் நிதிநிலை வேகமாக உயர்ந்துள்ளது.

    ரூ.7 லட்சம் வரையிலான வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது. காப்பீடு, மலிவான பயணம் என பிரதமர் மோடி நடுத்தர வர்த்தகத்தினரை நிதி ரீதியாக ஆதரித்து வருகிறார்.

    இவ்வாறு அமித்ஷா கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 96.53 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
    • விழாவில் 50 ஆயிரம் பேருக்கு நல உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார்.

    சேலம்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் செல்லும் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இன்று மாலை 6 மணி அளவில் சேலம் மாவட்ட தி.மு.க செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனை வழங்கி பேசுகிறார். இதில் சேலம் மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இன்று இரவு சேலம் அஸ்தம்பட்டி மாளிகையில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை 9 மணிக்கு சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 96.53 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார்.

    அதன்பிறகு கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த விழாவில் ரூ.33.60 கோடியில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம் ரூ.10.58 கோடியில் மறு சீரமைக்கப்பட்ட போஸ் மைதானம், ரூ.12.34 கோடியில் ஆனந்தா பாலம் வாகன நிறுத்துமிடம், ரூ.14.97 கோடியில் வ.உ.சி மார்க்கெட், புது பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.13.04 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், ரூ.12 கோடியில் தொங்கும் பூங்காவில் கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    மேலும் முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். அதே போல புதிய திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். விழாவில் 50 ஆயிரம் பேருக்கு நல உதவிகளையும் அவர் வழங்குகிறார்.

    நாளை மதியம் 4 மணிக்கு மேல் மேட்டூருக்கு புறப்பட்டு செல்லும் அவர், அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அப்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்குகிறார்.

    12-ந் தேதி காலை 10 மணிக்கு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விடுகிறார். 3 நாள் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், சேலத்தில் இருந்து விமானத்தில் சென்னை செல்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு கோடியே இருபது லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    • 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள அண்ணா சதுக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    நீண்ட நாட்களாக பஸ் நிலையம் திறந்த வெளியில் இருந்ததால் வெயில், மழை காலங்களில் பயணிகள் ஒதுங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அங்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பஸ் நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

    ஒரு கோடியே இருபது லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. அண்ணா சதுக்கத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்காதது குறித்த தீவிர விசாரணை செய்த பின் தான் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தகவல் பரிமாற்ற குழப்பத்தால் இது நடந்து விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறாமல் இருந்து உள்ளது. காணொலி மூலமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். அதன் பின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுள்ளனர். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எழிலன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், மண்டல குழு தலைவர் மதன்மோகன், பணிகள் நிலைக்குழு தலைவர் சிற்றரசு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வளைகுடா நாடான துபாயில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நடத்தி வருபவர் லஹிர் ஹாசன். கோடீஸ்வரர்.
    • ஹபீஸ், மாமனாரின் வங்கி கணக்குகளில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.107.99 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடான துபாயில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நடத்தி வருபவர் லஹிர் ஹாசன். கோடீஸ்வரர்.

    இவரது ஒரே மகளுக்கும் கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த வாலிபர் ஹபீசுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னர், லஹிர் ஹாசனின் தொழில் நிறுவனங்களின் வரவு-செலவுகளை ஹபீஸ் பார்த்து கொண்டார்.

    அப்போது லஹிர் ஹாசனின் வங்கி கணக்குகளில் இருந்து பலகோடி பணம் எடுக்கப்பட்டது. இதுபற்றி அவர் கேட்ட போது, நிறுவனத்தில் நடந்த சோதனைகள், வருமான வரித்துறைக்கு அளித்த தொகை என ஹபீஸ் பல்வேறு சாக்குபோக்குகளை கூறினார்.

    இதுபற்றி லஹிர் ஹாசன், தனது மகளிடம் கூறினார். அவர், தந்தையின் நிறுவன கணக்குகளை ஆய்வு செய்த போது பலகோடி பணம் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது. மேலும் வருமான வரித்துறையினர் அளித்த நோட்டீசு என ஹபீஸ் அளித்த கடிதங்கள் அனைத்தும் போலி எனவும் தெரியவந்தது.

    மேலும் இந்த போலி கடிதங்கள் மூலம் ஹபீஸ், மாமனாரின் வங்கி கணக்குகளில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.107.99 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி ஹபீசின் மனைவி கேரளா போலீசில் புகார் செய்தார். கேரள குற்றப்பிரிவு போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஹபீசின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இருவரும் சேர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் போல் போலி நோட்டீசு தயாரித்து அதனை காண்பித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து கேரளாவின் ஆலுவா மற்றும் கோவா மாநில போலீசார் ஹபீஸ் மீது இந்திய தண்டனை சட்டம் 465, 468, 471 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இதை அறிந்ததும் ஹபீஸ் தலைமறைவாகி விட்டார். அவரை கோவா போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற கோவா போலீசார் ஹபீசை கைது செய்தனர். பின்னர் அவரை போன்டாவில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் 5 நாட்கள் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்று முதல் அவரிடம் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பால்டிக் கடல் எல்லையில் ரஷியாவின் நடவடிக்கையை தடுக்க சுவீடன் இந்த முடிவை எடுத்துள்ளது
    • சுவீடன் முழுநேர உறுப்பினராக துருக்கி தடையாக உள்ளது

    நேட்டோ அமைப்பில் முழுநேர உறுப்பினராவதற்காக நீண்ட காலமாக சுவீடன் முயற்சித்து வருகிறது. இருப்பினும், முழு நேர உறுப்பினராகும் முன்னதாகவே நேட்டோவுடன் இணைந்து பணியாற்றுவதை வரவேற்பதாக சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்ஸன் தெரிவித்துள்ளார்.

    நேட்டோ மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்ஸன், ராணுவ மந்திரி பால் ஜான்சனுடன் இணைந்து தெரிவித்திருக்கிறார்.

    சுவீடன் மண்ணில் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் ராணுவ தளவாடங்களை இறக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கவும் இந்த கூட்டு முயற்சியில் அனுமதிக்கப்படும் என தெரிவித்தார். இந்த செய்தி ரஷியாவுக்கு விடப்பட்ட ஒரு சமிக்ஞை செய்தியாகவும், சுவீடனின் தற்பாதுகாப்புக்கும் உதவும் ஒரு நிகழ்வாகவும் இந்த செய்தி பார்க்கப்படுகிறது.

    சுவீடனில் நேட்டோவின் இருப்பு அனுமதிக்கப்படுவதால், பால்டிக் கடற்பகுதியில் ரஷியா ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதை தடுக்கக்கூடிய வகையிலும் இது அமையக்கூடும் எனபதால், சுவீடனின் தற்பாதுகாப்புக்கான ஒரு முக்கிய செயலாக பார்க்கப்படுகிறது.

    சுவீடன் நாட்டின் நேட்டோ உறுப்பினருக்கான கோரிக்கை இன்னமும் ஏற்கப்படாமல் தடைசெய்யப்பட்டுள்ளது. நேட்டோவில் 2022-ம் வருடத்திலிருந்து சுவீடன் இணைய அழைப்பு இருந்தும் அதை உறுதி செய்ய வேண்டிய 31 உறுப்பினர் நாடுகளில், துருக்கி மற்றும் ஹங்கேரியும் சம்மதிக்கவில்லை.

    நேட்டோவின் சட்டப்பிரிவு 5-ன்படி ஒரு உறுப்பினர் நாடு மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பினர்களின் மீதும் நடத்தப்பட்டதாக கருதப்படும். ஆனால், இந்த பாதுகாப்பு அம்சம் முழு உறுப்பினர்கள் நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

    கடந்த மே மாதம், துருக்கி நாட்டின் அதிபராக எர்டோகன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் சுவீடனின் உறுப்பினர் அந்தஸ்து குறித்து இதுவரை அவர் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

    துருக்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் சுவீடன் நிறைவேற்றி விட்டதால் விரைந்து முடிவெடுக்கும்படி துருக்கியை மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கேட்டுக் கொண்டுள்ளது. இதில் துருக்கி நாட்டால் பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்ட குர்திஷ் இன போராட்டக்காரர்களின் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மீது சுவீடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் அடங்கும்.

    ஆனால், சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் குடியேறியுள்ள ஒரு சில துருக்கி நாட்டு ஆர்வலர்களையும், சுவீடன் வெளியேற்ற வேண்டும் என துருக்கி நிர்பந்திக்கிறது. இதற்கு சம்மதிக்க மறுக்கும் சுவீடன், தங்கள் நாட்டில் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதாகவும், இந்த விஷயத்தில் தலையிட முடியாதெனவும் அறிவித்தது.

    இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சுவீடன் தமது நாட்டின் ராணுவத்திற்கான செலவினங்களையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான மத்திய மந்திரி அமித்ஷா வியூகம் வகுத்து உள்ளார்.
    • கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா நள்ளிரவு 2 மணி வரை நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்கு அனைத்து மாநிலங்களிலும் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அதே நேரத்தில் மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

    அந்த வகையில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநில கட்சிகள் மற்றும் தங்களுக்கு சாதகமாக உள்ள பாராளுமன்ற தொகுதிகளை குறி வைத்து இப்போதே பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறது.

    இதன்படி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான மத்திய மந்திரி அமித்ஷா வியூகம் வகுத்து உள்ளார்.

    இது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவதற்காக அமித்ஷா இன்று சென்னை வருகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதற்கு முன்பு போட்டியிட்ட இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் களம் இறங்க முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் வகையிலேயே அமித்ஷாவின் சென்னை பயணம் அமைந்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விமானத்தில் இன்று இரவு 9 மணி அளவில் அமித்ஷா சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் அவர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் தங்குகிறார்.

    அங்கு வைத்தே அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். அதே நேரத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். எந்த மாநிலத்துக்கு சென்றாலும் நள்ளிரவு வரை பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவது அமித்ஷாவின் வழக்கம்.

    அந்த வகையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா நள்ளிரவு 2 மணி வரை நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

    இதன் பின்னர் நாளை 2 கூட்டங்களில் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதில் ஒன்று பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம். இன்னொன்று பொதுக்கூட்டமாகும். தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் கோவிலம்பாக்கத்தில் உள்ள ராணி மகால் மண்டபத்தில் வைத்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

    அங்கு சுமார் ஒரு மணி நேரம் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் அமித்ஷா பின்னர் கிண்டி ஓட்டலுக்கு சென்று தங்குகிறார்.

    மாலையில் வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்காக நாளை பிற்பகலில் அமித்ஷா ஹெலிகாப்டரில் வேலூருக்கு செல்கிறார்.

    பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டமாக நடைபெற உள்ள வேலூர் கூட்டத்தில் பேசும் போது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக மத்தியில் ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு பாரதிய ஜனதா கட்சி திட்டம் போட்டு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

    மாநில அளவில் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களுக்கு தேவையான, செல்வாக்கு மிக்க தொகுதிகளை கேட்டுப்பெற்று வெற்றி பெற வேண்டும் என்பதே அமித்ஷாவின் இலக்காக உள்ளது.

    குறிப்பாக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்கிற நிலையில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களில் தென் சென்னை போன்ற பாராளுமன்ற தொகுதிகளை கேட்டு பெற்றால் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்பதும் அமித்ஷாவின் கணக்காக உள்ளது.

    தென்சென்னை தொகுதியில் இதற்கு முன்பு பாரதிய ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் தனித்து போட்டியிட்டு 1 லட்சம் ஓட்டுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போன்று வேலூரிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக அக்கட்சியினர் கூறி வருகிறார்கள். இதன் காரணமாகவே சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை வேலூரில் நடத்துவதற்கு பாரதிய ஜனதா மூத்த நிர்வாகிகள் முடிவு செய்து கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமி தற்போது சேலத்தில் உள்ள தனது வீட்டில் கால் வலிக்காக சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வருகிறார். அவர் இன்று மாலை அல்லது நாளை காலையில் அமித்ஷாவை சந்தித்து பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பான உறுதியான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

    ஓ.பன்னீர்செல்வமும் அமித்ஷாவை சந்தித்து பேசுவாரா? என்பதும் இன்னும் உறுதிப்படுத்தப்படாமலேயே உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் பணிக்காக அமித்ஷா முன் கூட்டியே ஆலோசனை கூட்டங்களை தமிழகத்தில் மேற்கொள்வது அரசியல் களத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேகத்தை காட்டுவதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரும்பாலான நபர்கள் வீடு கட்டும் சமயத்தில் அரண்மனை, பங்களா அல்லது கப்பல் போல் பிரம்மாண்டமாக வீடு கட்ட வேண்டும் என வார்த்தைக்கு கூறி வந்ததை கேட்டிருப்போம்.
    • கடலூரில் நிஜமாகவே கப்பல் போல் தனது மனைவிக்காக பிரம்மாண்ட வீட்டினை கட்டிக் கொடுத்துள்ளார் சுபாஷ்.

    கடலூர்:

    கடலூரை சேர்ந்தவர் சுபாஷ் மரைன் என்ஜினீயர். இவர் கார்கோ ஷிப் எனப்படும் சரக்கு கப்பலில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருவதோடு பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    இவரது மனைவி சுபஸ்ரீ கப்பல் போல் வீடு கட்ட வேண்டும் என ஆசையாக கூறி வந்த நிலையில், தானும் கப்பலில் பணிபுரிவதால் கப்பல் போன்று வீடு கட்ட முடிவு செய்தார்.

    இந்த நிலையில் கடலூர் வண்ணாரபாளையம் பகுதியில் 11,000 சதுர அடியில் ஒரு இடத்தினை வாங்கி அதில் 4 ஆயிரம் சதுர அடியில் கப்பல் போன்ற வடிவமைப்பில் வீட்டினை கட்டத் தொடங்கினார்.

    கடந்த 2 ஆண்டாக வீடு கட்டும் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முடிவடைந்து புதுமனை புகுவிழா நடைபெற்றது.

    பிரம்மாண்ட கப்பல் போன்று தோற்றம் உள்ள இந்த வீட்டினை சுற்றி தண்ணீர் நிற்கும் விதமாக வழிவகை செய்துள்ளார். வீட்டிற்குள் சென்றவுடன் கப்பலில் இருப்பது போன்று படிக்கட்டுகள் அமைத்து அதன் வழியாக 6 அறைகளை கட்டி இந்த வீட்டினை பிரம்மாண்டப்படுத்தி உள்ளார்.

    மேலும் நீச்சல் குளம், வீட்டில் உடற்பயிற்சி கூடம் என தனித்தனியாக அறைகள் ஒதுக்கியும், நன்கு காற்றோட்டம் வீட்டிற்குள் வரும் விதமாகவும், கப்பல் கேப்டன் அமர்ந்து கப்பலை செலுத்தும் விதமாக இருப்பது போன்று ஒரு அறை அமைத்து அதன் வழியாக வெளி