search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை பாந்தர்ஸ்"

    • மதுரை சார்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    • இறுதியில் ஸ்ரீஅபிஷேக் 32 (28) ரன்களும், சுவப்நில் சிங் 25 (16) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    சேலத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் சேலம் ஸ்பர்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது.

    ஆரம்பம் முதலே மதுரை அணி துல்லியமாக பந்து வீசியது. இதனால் சீரான இடைவெளியில் சேலம் அணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இறுதியில், சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் தன்வார் 29 ரன்களை எடுத்தார்.

    அமித் சாத்விக், கௌரிசங்கர் தலா 17 ரன்கள் எடுத்தனர். மதுரை சார்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட்டும், முருகன் அஷ்வின், கவுதம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணியின் சார்பில் களமிறங்கிய கேப்டன் நிஷாந்த் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆதித்யா 8 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஜெகதீசன் கவுசிக் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்ததாக ஸ்ரீஅபிஷேக்குடன், சுவப்நில் சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ரன் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில் ஸ்ரீஅபிஷேக் 32 (28) ரன்களும், சுவப்நில் சிங் 25 (16) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மதுரை அணி 13 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்றது.

    • முதலில் விளையாடிய மதுரை அணி 126 ரன்களை எடுத்தது.
    • கோவை அணி விளையாடும் போது மழை பெய்ததால் ஆட்டம் பாதிப்பு

    8 அணிகள் பங்கேற்ற 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில், இன்று சேலத்தில் நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி, ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியை எதிர் கொண்டது.

    டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆதித்யா 17 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய அனிருத் 7 ரன்னிலும், கேப்டன் சதுர்வேத் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஜெகதீசன் கவுசிக் 17 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் பொறுப்புடன் ஆடினார். அருண் கார்த்திக் 47 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் மதுரை அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார், அஜித் ராம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 127 ரன்கள் என்ற இலக்குடன் கோவை அணி களம் இறங்கியது. 9.5 ஓவர் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. கோவை தொடக்க வீரர்கள் ஸ்ரீதர் ராஜூ 49 ரன்னும், சுரேஷ்குமார் 20 ரன்னும் எடுத்த களத்தில் இருந்தனர்.

    மழை தொடர்ந்த நிலையில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி கோவை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டி.என்.பி.எல். தொடரில் இருந்து மதுரை அணி வெளியேறியது. கோவை அணி அடுத்ததாக, நாளை நடைபெறும் முதலாவது தகுதி சுற்றில் தோற்கும் அணியுடன் மோதுகிறது.

    • வெளியேற்றுதல் சுற்றில் மதுரை, கோவை அணிகள் மோதின.
    • முதலில் ஆடிய மதுரை அணி 126 ரன்களை எடுத்துள்ளது.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில், இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்சை அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆதித்யா 17 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய அனிருத் 7 ரன்னிலும், கேப்டன் சதுர்வேத் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் கவுசிக் 17 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் பொறுப்புடன் ஆடினார்.

    இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது. அருண் கார்த்திக் 47 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார், அஜித் ராம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 127 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 136 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய திருச்சி 100 ரன்களில் சுருண்டது.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்றது.

    இன்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அனிருத் 34 ரன்கள் எடுத்தார். ஆதித்யா 26 ரன்னிலும், ஜெகதீசன் கவுசிக் 22 ரன்னிலும் வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் சன்னி சந்து 8 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    திருச்சி அணி சார்பில் பொய்யாமொழி 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. ஆரம்பம் முதல் மதுரை வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். இதனால் திருச்சி அணி ரன்கள் எடுக்க முடியாமல் திணறியது.

    இறுதியில், திருச்சி அணி 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சந்தோஷ் ஷிவ் 31 ரன்னும், அமித் சாத்விக் 23 ரன்னும் எடுத்தனர்.

    இதன்மூலம் மதுரை அணி 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது. ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்தது.

    மதுரை அணி சார்பில் ஜெகதீசன் கவுசிக் 4 விக்கெட்டும், கிரண் ஆகாஷ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 136 ரன்களை எடுத்தது.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

    இன்று நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அனிருத் 34 ரன்கள் எடுத்தார்.

    அனிருத் , ஆதித்யா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆதித்யா 26 ரன்னில் அவுட்டானார். அருண் கார்த்திக் 5 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சதுர்வேதி 15 ரன்னிலும், ஜெகதீசன் கவுசிக் 22 ரன்னிலும் வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் சன்னி சந்து 8 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    திருச்சி அணி சார்பில் பொய்யாமொழி 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.

    • திருப்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
    • இரண்டாவதாக ஆடிய மதுரை அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மான் பாஃப்னா ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார். அரவிந்த் 19 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, திருப்பூர் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 45 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்த மதுரை அணி, அதன்பின்னர் சரிவில் இருந்து மீள முடியவில்லை.

    இறுதியில், மதுரை அணி 76 ரன்களில் சுருண்டது. இதனால் திருப்பூர் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • சேலம் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
    • மதுரை அணி சார்பில் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் சேலம் அணியை மதுரை அணி எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அருண் கார்த்திக் 13 ரன்னிலும், ராஜ்குமார் 29 ரன்னிலும், விக்னேஷ் அய்யர் 16 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கேப்டன் சதுர்வேதியுடன், விக்கெட் கீப்பர் ஈஸ்வரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர்.

    ஈஸ்வரன் 27 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார். சதுர்வேதி 34 ரன்னில் வெளியேறினார். இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 166 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து விளையாடிய சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.

    அந்த அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கோபிநாத் 15 ரன்களிலும் அபிஷேக் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டேரில் பெராரியோ 19 ரன்கள், கேப்டன் முருகன் அஸ்வின் 10 ரன்கள், ஜாஃபர் ஜமால் 13 ரன்களில் அவுட்டாகினர். அதிகபட்சமாக பிரனவ் குமார் 25 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. மதுரை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரகுபதி சிலம்பரசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் ராக்கி மற்றும் சரவணன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். சன்னி சந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    • 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சதுர்வேதி, விக்கெட் கீப்பர் ஈஸ்வரன் ஆகியோர் 59 ரன்கள் சேர்த்தனர்.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெறும் போட்டியில் சேலம் அணியை மதுரை அணி எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அருண் கார்த்திக் 13 ரன்னிலும், ராஜ்குமார் 29 ரன்னிலும், விக்னேஷ் அய்யர் 16 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் சதுர்வேதியுடன், விக்கெட் கீப்பர் ஈஸ்வரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர். ஈஸ்வரன் 27 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார். சதுர்வேதி 34 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 166 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.

    • மதுரை அணியின் கேப்டன் சதுர்வேத் அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 75 ரன்கள் குவித்தார்.
    • கோவை அணிக்கு எதிராக மதுரை அணியின் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. முகிலேஷ் அபாரமாக ஆடி 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சுரேஷ் குமார் 22 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்தார்.

    மதுரை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டும், சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆதித்யா, பால்சந்ஹர் அனிருத் ஆகியோர் டக் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் அருண் கார்த்திக் நிதானமாக ஆடினார்.

    கேப்டன் சதுர்வேத் பொறுப்புடன் ஆடினார். இவர் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தார். கார்த்திக் 38 ரன்னில் அவுட்டானார்.

    அபாரமாக ஆடிய சதுர்வேத் அரை சதமடித்து, 75 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெகதீசன் கவுசிக் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மதுரை அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.

    • கோவை அணியில் அதிரடியாக ஆடிய முகிலேஷ், 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் குவித்தார்.
    • மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட், சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெறும் 2வது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி கேப்டன், பீல்டிங்கைத் தேர்வு செய்ய, கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    கோவை அணியின் துவக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய் சுதர்சன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தனர். சஜித் சந்திரன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம், மறுமுனையில் சுரேஷ் குமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறுதல் அளித்தார். அவர் 22 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்தார்.

    அதன்பிறகு முகிலேஷ் அபாரமாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. தொடர்ந்து அதிரடி காட்டிய முகிலேஷ், 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.

    மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட் கைப்பற்றினார். சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    ×