என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை பாந்தர்ஸ்"

    • முதலில் விளையாடிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
    • 19-வது ஓவரில் 5 பந்துகளை வீசிய சூர்யா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

    சேலம்:

    8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன.

    இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய நெல்லை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இதன்மூலம் நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

    எளிதாக வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்த நெல்லை அணியின் வெற்றியை ஒரே ஓவரில் மதுரை அணியின் வீரர் சூர்யா ஆனந்த பறித்து விட்டார். 12 பந்தில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி விளையாடியது. 19-வது ஓவரை சூர்யா ஆனந்த வீசினார்.

    அந்த ஓவரில் முதல் பந்தில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த சோனு யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த பந்து ரன் ஏதும் கொடுக்கவில்லை. அடுத்த 3 பந்தில் 3 விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டை சூர்யா பதிவு செய்தார். இதன்மூலம் நடப்பு சீசனில் 2-வது ஹட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சூர்யா ஆனந்த பதிவு செய்துள்ளார்.

    நடப்பு சீசனில் இதற்கு முன்பு நெல்லை அணியை சேர்ந்த சோனு யாதவ், திருச்சி அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சூர்யா ஆனந்த் கூறும் போது, 'ஹாட்ரிக் சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டனும், பயிற்சியாளர்க ளும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தது சந்தோசமாக இருந்தது' என்றார்.

    • துண்டுகளின் மூலத்தையும், பந்தை சேதப்படுத்தும் பிற முறைகளையும் ஆராய வேண்டும்.
    • கோவை, மதுரை பலமுறை எச்சரித்த போதும் நடுவர்கள் நடவடிக்கை எடுக்க தவறியது கவலை அளிக்கிறது.

    சென்னை:

    டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடந்த 14-ந்தேதி சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.

    இந்தப் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனம் தடவப்பட்ட துண்டுகளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகம் புகார் அளித்து உள்ளது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கோரி மதுரை அணியின் தலைமை செயல் அதிகாரி டி.பூஜா தமிழ்நாடு பிரீமியர் லீக் தலைமை செயல் அதிகாரி பிரசன்னாவுக்கு நேற்று இ.மெயில் அனுப்பியுள்ளார்.

    இதற்கிடையே பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக அஸ்வின் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீது அவசர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்னாவுக்கு மதுரை பாந்தர்ஸ் அணியின் சி.ஒ.ஒ. எஸ்.மகேஷ் கடிதம் எழுதி உள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    எங்களுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டியில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஒரு தீவிரமான விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக இதை நான் எழுதுகிறேன்.

    போட்டிக்கு முன்பு நடுவர்கள் பலமுறை எச்சரிக்கை செய்த போதும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனங்கள் தடவப்பட்டதாக தோன்றும் துண்டுகளை பயன்படுத்தி பந்தை வெளிப்படையாக சேதப்படுத்தியது.

    இதனால் பந்தின் தன்மை அதிர்ச்சி அளிக்கும் வகையில் கடினமான கல் போல் இருந்தது. பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்கும் போது உலோக ஒலியை உருவாக்கியது.

    இது ஆட்டத்தின் முடிவை பாதித்தது மட்டுமல்லாமல் எங்கள் இளம் அணியை மனசோர்வடைய செய்தது. நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    1. துண்டுகளின் மூலத்தையும், பந்தை சேதப்படுத்தும் பிற முறைகளையும் ஆராய வேண்டும். பந்தை சேதப்படுத்த பயன்படுத்தப்பட்ட துண்டுகள் எங்கிருந்து வந்தது, அதை வழங்கியவர்கள் யார் என்பதை டி.என்.பி.எல். நிர்வாகம் கண்டறிய வேண்டும்.

    2. அந்த துண்டுகளில் வேதியியல் மாற்றங்கள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய ஆய்வக சோதனை நடத்த வேண்டும்.

    3. அஸ்வின், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மற்றும் இந்த மோசமான விவகாரத்தில் தொடர்புடைய மற்ற அனைவருக்கும் கடுமையான தண்டனையை அளிக்க வேண்டும்.

    பந்து வீச்சாளர்கள் மற்றும் பீல்டர்கள் பந்தை சேதப்படுத்த பயன்படுத்திய பிற சாத்தியமான முறைகள் குறித்தும் எங்கள் தொழில் நுட்ப குழு ஆய்வு செய்து வருகிறது. அதன் விவரங்களை விரிவான அறிக்கையாக நாங்கள் வழங்குவோம். வேண்டுமென்றே சேதப்படுத்துதல் மற்றும் முன் கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதை ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    எனவே விளையாட்டின் நேர்மையை நிலை நிறுத்த நாங்கள் விரிவான நவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    எங்கள் தலைமை பயிற்சியாளர் சுர்ஜித் சந்திரன், உதவி பயிற்சியாளர் எஸ்.கார்த்திக் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளை எங்கள் அணியின் தலைமை செயல் அதிகாரி டி.பூஜா ஏற்கனவே உங்களுக்கு அனுப்பியுள்ளார். போட்டியின் போது பந்தின் தன்மை வியக்கத்தக்க முறையில் மாறியது என்பது தெளிவாகிறது.

    பவர்பிளேயின் போது பந்து சரியான நிலையில் இருந்தது. மேலும் எங்கள் அணியின் ஸ்கோர் அதை பிரதிபலித்தது. ஆனால் போட்டி தொடர்ந்து செல்லும் போது பந்து ஒரு உலோக ஒலியை உருவாக்க தொடங்கியது. கடினமான உலோக கல் போல் பந்தின் தன்மை இருந்தது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் துண்டுகளை பயன்படுத்தியதால் பந்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணங்களாக ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்.

    லைகா கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் பலமுறை எச்சரித்த போதும் மைதான நடுவர்களும், போட்டி நடுவர்களும் நடவடிக்கை எடுக்க தவறியது கவலை அளிக்கிறது.

    இந்த விஷயத்தை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டு ஆட்டத்தின் நேர்மையை காப்பதற்கும், மதுரை அணிக்கு தரப்பட வேண்டிய புள்ளிகளை வழங்குவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக விளையாடிய சேலம் வீரர் ராஜகோபால் 60 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அத்திக் உர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ராம் அரவிந்த் 37 ரன்கள் அடித்தார்.

    சேலம் அணி தரப்பில் முஹமது 2 விக்கெட்டுகளும் அஜித் ராம், ஹரீஸ் குமார், ரஹில் சஞ்சய் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் அணி 18.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராஜகோபால் 60 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    மதுரை தரப்பில் முருகன் அஷ்வின், குர்ஜப்னீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • அத்திக் உர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்
    • சேலம் அணி தரப்பில் முஹமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அத்திக் உர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ராம் அரவிந்த் 37 ரன்கள் அடித்தார்.

    சேலம் அணி தரப்பில் முஹமது 2 விக்கெட்டுகளும் அஜித் ராம், ஹரீஸ் குமார், ரஹில் சஞ்சய் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 171 ரன்கள் என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கவுள்ளது.

    • போட்டியின் 4-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.
    • முதல் போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கோவை:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. போட்டியின் 4-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    • மதுரை சார்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    • இறுதியில் ஸ்ரீஅபிஷேக் 32 (28) ரன்களும், சுவப்நில் சிங் 25 (16) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    சேலத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் சேலம் ஸ்பர்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது.

    ஆரம்பம் முதலே மதுரை அணி துல்லியமாக பந்து வீசியது. இதனால் சீரான இடைவெளியில் சேலம் அணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இறுதியில், சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் தன்வார் 29 ரன்களை எடுத்தார்.

    அமித் சாத்விக், கௌரிசங்கர் தலா 17 ரன்கள் எடுத்தனர். மதுரை சார்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட்டும், முருகன் அஷ்வின், கவுதம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணியின் சார்பில் களமிறங்கிய கேப்டன் நிஷாந்த் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆதித்யா 8 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஜெகதீசன் கவுசிக் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்ததாக ஸ்ரீஅபிஷேக்குடன், சுவப்நில் சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ரன் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில் ஸ்ரீஅபிஷேக் 32 (28) ரன்களும், சுவப்நில் சிங் 25 (16) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மதுரை அணி 13 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்றது.

    • முதலில் ஆடிய சேலம் 180 ரன்களை குவித்தது.
    • அந்த அணியின் கவின், விஷால் வைத்யா அரை சதமடித்தனர்.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கவின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.
    • முருகன் அஷ்வின் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரை அணியை வெற்றி பெறவைத்தார்.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கவின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சுரேஷ் 38 பந்துகளில் 69 ரன்கள் விளாசி அவுட்டானார். நிதானமாக விளையாடிய ஜெகதீசன் 57 ரன்கள் அடித்தார்.

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இருந்த முருகன் அஷ்வின் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரை அணியை வெற்றி பெறவைத்தார்.

    3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரையை வெற்றி பெற வைத்த முருகன் அஷ்வின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருச்சி அணி 193 ரன்கள் குவித்தது.

    சேலம்:

    டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில், இன்று இரவு நடந்த 7-வது லீக்கில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் சந்தித்தன. டாஸ் வென்ற

    மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அர்ஜுன் மூர்த்தி ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய ஷியாம் சுந்தர் 30 ரன்னில் வெளியேறினார்.

    வசீம் அகமதுடன் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவ் பொறுப்புடன் ஆடினார். இருவரும் அரை சதமடித்தனர்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. வசீம் அகமது 55 பந்தில் 90 ரன்னும், சஞ்சய் யாதவ் 60 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    • மதுரை அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹரி 20 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • திருச்சி அணி தரப்பில் சஞ்சய் யாதவ், ராஜ்குமார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    சேலம்:

    டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடந்த 7-வது லீக்கில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அர்ஜுன் மூர்த்தி ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய ஷியாம் சுந்தர் 30 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து வசீம் அகமது- சஞ்சய் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடினார். இருவரும் அரை சதமடித்தனர்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. வசீம் அகமது 55 பந்தில் 90 ரன்னும், சஞ்சய் யாதவ் 60 ரன்னும் எடுத்து அவுட் ஆகவில்லை.

    இதனையடுத்து இமாலய இலக்குடன் மதுரை அணி களமிறங்குகியது. தொடக்க வீரரான லோகேஸ்வர் 7 ரன்னிலும் அடுத்து வந்த கவுசிக் 1, என்.எஸ்.சதுர்வேத் 7, அக்ரம் கான் 11 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹரி 20 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற மதுரை அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் எடுத்தது. திருச்சி அணி தரப்பில் சஞ்சய் யாதவ், ராஜ்குமார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய மதுரை 156 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து விளையாடிய திருப்பூர் 157 ரன்களை எடுத்து வென்றது.

    கோவை:

    டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்துது. சசிதேவ் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கவுஷிக் 28 ரன்னும், ஸ்ரீ அபிஷேக் 21 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    திருப்பூர் சார்பில் அஜித் ராம் 3 விக்கெட்டும், ராமலிங்கம் ரோகித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பாலசந்தர் அனிருத் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், திருப்பூர் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முகமது அலி 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நடப்பு தொடரில் திருப்பூர் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

    மதுரை சார்பில் முருகன் அஷ்வின் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • டி.என்.பி.எல். தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடந்து வருகின்றன.
    • டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நெல்லை:

    8-வது டி.என்.பி.எல். தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் ஓரளவு விளையாடி 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    19-வது ஓவரில் கோவை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களை எடுத்தது. கேப்டன் ஷாருக் கான் 5 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 26 பந்தில் 51 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.

    மதுரை அணி சார்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டும், மிதுன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    ×