என் மலர்
நீங்கள் தேடியது "Siechem Madurai Panthers"
- டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- அதன்படி, முதலில் ஆடிய கோவை 169 ரன்கள் எடுத்துள்ளது.
கோவை:
டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர் ஜிதேந்திர குமார் 17 ரன்னும், சுரேஷ் லோகேஷ்வர் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாலசுப்ரமணியன் சச்சின் 15 ரன்னும், ஆண்ட்ரி சித்தார்த் 20 ரன்னும், மாதவ பிரசாத் 4 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.
இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்துள்ளது. ஷாருக் கான் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.
- டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.
- கோவை மற்றும் மதுரை அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளன.
கோவை:
டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோவை மற்றும் மதுரை அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளன.
இந்நிலையில், டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்குகிறது.
- மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
- அதிரடியாக விளையாடிய சேலம் வீரர் ராஜகோபால் 60 ரன்கள் அடித்து அவுட்டானார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அத்திக் உர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ராம் அரவிந்த் 37 ரன்கள் அடித்தார்.
சேலம் அணி தரப்பில் முஹமது 2 விக்கெட்டுகளும் அஜித் ராம், ஹரீஸ் குமார், ரஹில் சஞ்சய் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதனையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் அணி 18.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராஜகோபால் 60 ரன்கள் அடித்து அவுட்டானார்.
மதுரை தரப்பில் முருகன் அஷ்வின், குர்ஜப்னீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- அத்திக் உர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்
- சேலம் அணி தரப்பில் முஹமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அத்திக் உர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ராம் அரவிந்த் 37 ரன்கள் அடித்தார்.
சேலம் அணி தரப்பில் முஹமது 2 விக்கெட்டுகளும் அஜித் ராம், ஹரீஸ் குமார், ரஹில் சஞ்சய் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதனையடுத்து 171 ரன்கள் என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கவுள்ளது.
- போட்டியின் 4-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.
- முதல் போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோவை:
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. போட்டியின் 4-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.
மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
- திருச்சி அணியில் அதிகபட்சமாக மணிபாரதி 48 ரன்கள் சேர்த்தார்.
- மதுரை அணி தரப்பில் சரவணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சேலம்:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பால்சி திருச்சி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய திருச்சி அணி 18.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மணிபாரதி 48 ரன்கள் சேர்த்தார்.
பிரான்சிஸ் 18 ரன்கள், டேரில் பெராரியோ 21 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீர்ர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். மதுரை அணி தரப்பில் சரவணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குர்ஜப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது.
- டாஸ் வென்று முதலில் ஆடிய திருச்சி அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- தொடர்ந்து ஆடிய மதுரை 108 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பால்சி திருச்சி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் ஆடிய திருச்சி அணி 18.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மணிபாரதி 48 ரன்கள் சேர்த்தார்.
மதுரை சார்பில் சரவணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குர்ஜப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் 11 ரன்னும், ஜெகதீசன் கவுசிக் 19 ரன்னும் எடுத்தனர். சுரேஷ் லோகேஷ்வர் நிதானமாக ஆடி 32 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், மதுரை அணி 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வென்றது. ஸ்வப்னில் சிங் 25 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இது மதுரை அணி பெற்ற 3வது வெற்றி ஆகும்.
- சேப்பாக் அணி 6 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
- மதுரை அணி ஏற்கனவே இந்த தொடரில் இருந்து வெளியேறி விட்டது.
8 அணிகள் இடையிலான 8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றனர்.
இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சேப்பாக் அணி 6 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி 2-வது இடத்துக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. மதுரை அணி ஏற்கனவே இந்த தொடரில் இருந்து வெளியேறி விட்டது.
- அதிரடியாக விளையாடிய லோகேஸ்வர் 55 ரன்கள் விளாசினார்.
- சேப்பாக் தரப்பில் அபிஷேக், பாபா அப்ரஜித், சிலம்பரசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி மதுரை அணியின் தொடக்க வீரர்களாக லோகேஸ்வர்- நிஷாந்த் களமிறங்கினர். இதில் லோகேஸ்வர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இதனால் பவர் பிளேயில் 51 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய லோகேஸ்வர் அரைசதம் விளாசினார். அவர் 55 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்த சிறிது நேரத்தில் நிஷாந்த 37 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சரவணன் அதிரடியாக விளையாடிய 13 பந்தில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து சசிதேவ் 2 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து கவுசிங்- சதுர்வேத் அதிரடியாக விளையாடினர். இதனால் மதுரை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.
சேப்பாக் தரப்பில் அபிஷேக், பாபா அப்ரஜித், சிலம்பரசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதோஷ் அரை சதம் விளாசினார்.
- மதுரை தரப்பில் கார்த்திக் மணிகண்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி முதலில் விளையாடிய மதுரை அணியில் லோகேஸ்வர் அரைசதம் விளாசினார். அவரை தொடர்ந்து நிஷாந்த 37, சரவணன் 25, கவுசிங் 43 என ரன்கள் எடுத்தனர். இதனால் மதுரை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது.
சேப்பாக் தரப்பில் அபிஷேக், பாபா அப்ரஜித், சிலம்பரசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனையடுத்து சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன் - சந்தோஷ் குமார் களமிறங்கினர். இதில் 6 ரன்னில் ஜெகதீசன் அவுட் ஆனார். அடுத்து வந்த அப்ராஜித் அதிரடியாக விளையாடி 2 சிக்சர் 1 பவுண்டரி விளாசி 17 ரன்னில் வெளியேறினார்.
இதனை தொடர்ந்து சந்தோஷ் - பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சந்தோஷ் 48 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதோஷ் (52) அரை சதம் விளாசி அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்.
இதனால் சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதனால் மதுரை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மதுரை தரப்பில் கார்த்திக் மணிகண்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- மதுரை அணியின் கேப்டன் சதுர்வேத் அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 75 ரன்கள் குவித்தார்.
- கோவை அணிக்கு எதிராக மதுரை அணியின் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
திண்டுக்கல்:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. முகிலேஷ் அபாரமாக ஆடி 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சுரேஷ் குமார் 22 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்தார்.
மதுரை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டும், சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்.
இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆதித்யா, பால்சந்ஹர் அனிருத் ஆகியோர் டக் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் அருண் கார்த்திக் நிதானமாக ஆடினார்.
கேப்டன் சதுர்வேத் பொறுப்புடன் ஆடினார். இவர் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தார். கார்த்திக் 38 ரன்னில் அவுட்டானார்.
அபாரமாக ஆடிய சதுர்வேத் அரை சதமடித்து, 75 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெகதீசன் கவுசிக் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மதுரை அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
- கோவை அணியில் அதிரடியாக ஆடிய முகிலேஷ், 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் குவித்தார்.
- மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட், சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்
திண்டுக்கல்:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெறும் 2வது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி கேப்டன், பீல்டிங்கைத் தேர்வு செய்ய, கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.
கோவை அணியின் துவக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய் சுதர்சன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தனர். சஜித் சந்திரன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம், மறுமுனையில் சுரேஷ் குமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறுதல் அளித்தார். அவர் 22 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்தார்.
அதன்பிறகு முகிலேஷ் அபாரமாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. தொடர்ந்து அதிரடி காட்டிய முகிலேஷ், 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.
மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட் கைப்பற்றினார். சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.






