என் மலர்
நீங்கள் தேடியது "Lyca Kovai Kings"
- டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- அதன்படி, முதலில் ஆடிய கோவை 169 ரன்கள் எடுத்துள்ளது.
கோவை:
டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர் ஜிதேந்திர குமார் 17 ரன்னும், சுரேஷ் லோகேஷ்வர் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாலசுப்ரமணியன் சச்சின் 15 ரன்னும், ஆண்ட்ரி சித்தார்த் 20 ரன்னும், மாதவ பிரசாத் 4 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.
இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்துள்ளது. ஷாருக் கான் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.
- டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.
- கோவை மற்றும் மதுரை அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளன.
கோவை:
டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோவை மற்றும் மதுரை அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளன.
இந்நிலையில், டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.
கோவை:
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2025 சீசனின் முதல் போட்டி கோவையில் இன்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
பாலசுப்ரமணியன் சச்சின் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். ஆந்த்ரே சித்தார்த் 23 பந்தில் 25 ரன்களும், ஷாருக் கான் 14 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் அஸ்வின், சந்தீப் வாரியர், ஜி.பெரியசாமி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அஸ்வின் 15 ரன்னில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அணியை கடைசி வரை நின்று வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஷிவம் சிங் 82 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், திண்டுக்கல் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- அபாரமாக ஆடிய சாய் சுதர்சன் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார்
- திருப்பூர் அணி தரப்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது சீசன் இன்று கோவையில் கோலாகலமாக தொடங்கியது. கோவையில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், மூன்றாவது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார். அரை சதம் கடந்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார்.
முகிலேஷ் 33 ரன்கள், கேப்டன் ஷாருக் கான் 25 ரன்கள் சேர்த்தனர். திருப்பூர் அணி தரப்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாய் கிஷோர் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்குகிறது.
- முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
- திருப்பூர் அணி 17.5 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது சீசன் இன்று கோவையில் கோலாகலமாக தொடங்கியது.
கோவையில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், மூன்றாவது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார்.
அரை சதம் கடந்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார். முகிலேஷ் 33 ரன்கள், கேப்டன் ஷாருக் கான் 25 ரன்கள் சேர்த்தனர். திருப்பூர் அணி தரப்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாய் கிஷோர் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்குகியது.
இதில், அதிகபட்சமாக துஷார் ரகாஜே 33 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, விஷால் வைத்யா 16 ரன்களும், அஜித் ராம் 11 ரன்களும், ராஜேந்திர விவேக் 6 ரன்களும், என்எஸ் சத்துர்வேத் 4 ரன்களும் எடுத்தனர்.
பால்சந்தர் அனிருத் 3 ரன்களும், விஜய் சங்கர் 2 ரன்களும், கணேஷ் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில் திருப்பூர் அணி 17.5 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
திருப்பூர் அணி 12 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வந்தது.
இதில் புவனேஷ்வரன் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மணிகண்டன் 8 ரன்களில் அவுட்டானார்.
இந்நிலையில், திருப்பூர் தமிழன் அணி 20 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம், கோவை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.
- சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் விளாசினார்.
- நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கோவை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கோவையில் நடைபெறும் ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.
அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் விளாசினார். சுரேஷ் குமார் 33 ரன்கள், ராம் அரவிந்த் 18 ரன்கள் சேர்த்தனர். நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய கோவை அணி 181 ரன்களை குவித்தது.
- தொடர்ந்து ஆடிய நெல்லை அணி 182 ரன்களை எடுத்து வென்றது.
கோவை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் விளாசினார். சுரேஷ் குமார் 33 ரன்கள் சேர்த்தனர்.
நெல்லை அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் டக் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரீ நிரஞ்சன், அஜிதேஷ் குருசாமி 76 ரன்கள் சேர்த்தனர். ஸ்ரீ நிரஞ்சன் 25 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 3 ரன்னிலும், சோனு யாதவ் 20 ரன்னிலும், அருண்குமார் 3 ரன்னிலும் அவுட்டாகினர்.
அஜிதேஷ் குருசாமி தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 112 ரன்னில் ரன் அவுட்டானார்.
இறுதியில், நெல்லை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது.
- முதலில் ஆடிய சேப்பாக் 126 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய கோவை 128 ரன்கள் எடுத்து வென்றது.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடந்தது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 126 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 32 ரன்கள் அடித்தார். சசிதேவ் 23 ரன்கள் அடித்தார்.
கோவை கிங்ஸ் சார்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர் சச்சின் 14 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமாருடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுரேஷ்குமார் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், கோவை அணி 16.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வென்றது. சாய் சுதர்சன் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- அதிரடியாக ஆடிய கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ 58 ரன்கள் சேர்த்தார்.
- கோவை கிங்ஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெற்றுவரும் 12வது லீக் ஆட்டத்தில் பால்சி திருச்சி, லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பால்சி திருச்சி அணி துவக்கம் முதலே தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. அக்சய் சீனிவாசன், மணிபாரதி, டேரில் பெராரியோ ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ, 58 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். இதேபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜ்குமார் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் சேர்த்தார். திருச்சி அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது.
கோவை கிங்ஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகளும், ஷாருக் கான் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் களமிறங்கியது.
- 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது.
- ஆட்டத்தின் முடிவில் 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது கோவை கிங்ஸ் அணி.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் பால்சி திருச்சி, லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பால்சி திருச்சி அணி துவக்கம் முதலே தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
அக்சய் சீனிவாசன், மணிபாரதி, டேரில் பெராரியோ ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ, 58 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார்.
இதேபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜ்குமார் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் சேர்த்தார்.
திருச்சி அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது. கோவை கிங்ஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகளும், ஷாருக் கான் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் களமிறங்கியது.
இதில் அதிகபட்சமாக சுஜய் அரை சதம் அடித்து 72 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். தொடர்ந்து, அதீக் 13 ரன்களும், முகிலேஷ்- சுரேஷ் குமார் தலா 9 ரன்களும், சாய் சுதர்ஷன் 7 ரன்களும், ராம் அரவிந்த் 2 ரன்களும் எடுத்தனர்.
இந்த ஆட்டத்தின் முடிவில் 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து கோவை கிங்ஸ் அணி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.
- சேலம் அணியின் பந்துவீச்சாளர் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
- சுஜய் - சாய் சுதர்சன் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
சேலம்:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சேலத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
லைக்கா கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் சுரேஷ் குமார் 4 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், சுஜய் - சாய் சுதர்சன் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. சுஜய் 44 ரன்களும், சாய் சுதர்சன் 41 ரன்களும் எடுத்தனர். ஆதீக் ரஹ்மான் 31 ரன்களும், ராம் அரவிந்த் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் அடிக்க, கோவை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. சேலம் அணியின் பந்துவீச்சாளர் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய கோவை அணி 199 ரன்கள் குவித்தது.
- தொடர்ந்து ஆடிய சேலம் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய கோவை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. ராம் அரவிந்த் அதிரடியாக ஆடி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். சுஜய் 44 ரன்களும், சாய் சுதர்சன் 41 ரன்களும், ஆதீக் ரஹ்மான் 31 ரன்களும் எடுத்தனர்.
சேலம் அணியின் சார்பில் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. கோவை அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சேலம் அணி வீரர்கள் சிக்கினர். இதனால் விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன. சன்னி சந்து அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், சேலம் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தில் நீடிக்கிறது.
கோவை அணி சார்பில் தாமரைக் கண்ணன் 3 விக்கெட்டும், ஷாருக் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.






