search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சாய் சுதர்சன் அதிரடி.. லைக்கா கோவை கிங்ஸ் 181 ரன்கள் குவிப்பு
    X

    சாய் சுதர்சன் அதிரடி.. லைக்கா கோவை கிங்ஸ் 181 ரன்கள் குவிப்பு

    • சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் விளாசினார்.
    • நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    கோவை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கோவையில் நடைபெறும் ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் விளாசினார். சுரேஷ் குமார் 33 ரன்கள், ராம் அரவிந்த் 18 ரன்கள் சேர்த்தனர். நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×