search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெலிகாப்டர் விபத்து"

    • பிரசாரத்திற்கு புறப்பட்டுச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
    • கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இன்று பிற்பகல் தேர்தல் பிரசாரத்திற்காக முலாபகிலு பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது ஹெலிகாப்டர் மீது திடீரென கழுகு மோதியது. இதனால் ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் அவசரமாக பெங்களூரு எச்ஏஎல் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஹெலிகாப்டரில் டி.கே.சிவக்குமாருடன் பயணித்த கேமராமேன் காயமடைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோருடன் டி.கே.சிவக்குமாரும் கலந்துகொண்டார். பின்னர் பிரசாரத்திற்கு புறப்பட்டுச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    • அமெரிக்காவில் ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.
    • இந்த விபத்தில் 3 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஹீலி என்ற இடத்தில் ராணுவத்தினர் நேற்று முன்தினம் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதில் ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டது.

    நடுவானில் பறந்தபோது திடீரென அந்த 2 ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதி, கீழே விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மற்றொரு வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். மீட்பு படையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    கடந்த மாதம் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ராணுவ பயிற்சியின் போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியதில் 9 வீரர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

    • அமெரிக்காவில் ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.
    • இந்த விபத்தில் 9 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ராணுவ பயிற்சியின் போது 2 ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 9 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரம் (இரவு 11 மணி ), போர்ட் கேம்ப்பெல்லுக்கு மேற்கே உள்ள டிரிக் கவுண்டியில் ராணுவத் தளம் இன்று அதிகாலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி 2 பிளாக் ஹாக் மருத்துவ வெளியேற்ற விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பலியான 9 வீரர்களின் அடையாளங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

    இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துருவ் ஹெலிகாப்டர் சோதனையின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    • ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொச்சி அருகே கடலோர காவல் படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் சோதனையின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அவசரமாக தரையிறக்கப்பட்டதில் ஹெலிகாப்டர் ஓடுபாதைக்கு வெளியே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

    ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்தது.
    • இதில் பெண் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

    பொகாடோ:

    தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் குயிப்டோ என்ற பகுதியில் ராணுவ தளவாடங்களை வினியோகம் செய்யும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது. அதில் ஒரு பெண் உள்பட 4 ராணுவ அதிகாரிகள் இருந்தனர்.

    அப்போது திடீரென அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்துக்கு அந்நாட்டின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ இரங்கல் தெரிவித்தார்.

    • ஹெலிகாப்டர் குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் தெருவில் சென்று கொண்டிருந்த 9 வாகனங்களும் சேதமானது.

    தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ஏர் டாக்ஸி நிறுவனத்தை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர் நடுவானில் பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. உடனே விமானி அதனை தரையிறக்க முற்பட்டார். அதற்குள் அந்த ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தெருவில் சென்று கொண்டிருந்த 9 வாகனங்களும் சேதமானது.

    இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தெருவில் சென்ற வாகனங்களில் இருந்த பலர் காயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    • 2011-ம் ஆண்டு காஷ்மீரில் லெப்டினல் பதவியிலும், 2014-ல் குஜராத்தில் கேப்டன் பதவியிலும் இருந்தார்.
    • ஜெயந்த் உடலுக்கு இன்று பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டவரிசையில் அஞ்சலி செலுத்தினர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம்-மல்லிகா தம்பதியின் மகன் ஜெயந்த்(35). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அருணாச்சல பிரதேசத்தில் திரான் பகுதியில் மேஜர்ஜெயந்த், லெப்டினன்ட் ரெட்டி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்.

    ஜெயந்தின் உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு நேற்றிரவு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்டது. ஜெயமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட மேஜர் ஜெயந்த் உடலுக்கு இன்று பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டவரிசையில் அஞ்சலி செலுத்தினர்.

    அதனைதொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்திற்கு அருகில் உள்ள இடத்தில் மேஜர்ஜெயந்த் உடல் வைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி, தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ்டோங்கரே, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், சரவணக்குமார் எம்.எல்.ஏ, தேனி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேஜர் ஜெயந்த் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தார். அதனைதொடர்ந்து மதுரை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் பயின்றார். கல்லூரி என்.சி.சியில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதனைபடைத்தார். இதற்காக குடியரசு தினவிழாவில் பங்கேற்று பதக்கம் பெற்றார். ராணுவத்தில் கடந்த 2010-ம் ஆண்டு சேர்ந்தார். 2011-ம் ஆண்டு காஷ்மீரில் லெப்டினல் பதவியிலும், 2014-ல் குஜராத்தில் கேப்டன் பதவியிலும் இருந்தார்.

    பைலட் பயிற்சியில் தேர்வுபெற்று 2018-ம் ஆண்டு ஸ்ரீநகரில் பைலட்டாகவும், 2021-ம் ஆண்டில் அசாமில் மிசோரி ராணுவ மையத்தில் மேஜராகவும் உயர்ந்தார். 2019-ம் ஆண்டு திண்டுக்கல்லை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான செல்லாசாரதாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    இவர் தனது கணவருடன் மிசோரி ராணுவ குடியிருப்பில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள ராணுவகுடியிருப்பில் மேஜர்ஜெயந்தின் தந்தை வசித்து வருகிறார்.

    மேஜர் ஜெயந்தின் தந்தை ஆறுமுகம் தெரிவிக்கையில், எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றினார். எனது சகோதரரும், ராணுவத்தில் பணியாற்றினார். அதேபோல நானும் ராணுவத்தில் சேர முயன்றும் முடியவில்லை. இதனைதொடர்ந்து எனது ஒரே மகனை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று சிறுவயது முதலே தெரிவித்து வந்தேன். அவரும் அதற்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இன்னும் பல ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இருந்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். இருந்தபோதும் அவரது தற்போதைய சேவை வரை மனநிம்மதி அளிக்கிறது என்றார்.

    • விபத்து நடந்த பகுதியில் 5 குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • பங்ளாஜாப் கிராமத்தின் அருகில் ஹெலிகாப்டரின் கருகிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 2 விமானிகளை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டது.

    இந்திய ராணுவம், சகஷ்த்ர சீமா பால் மற்றும் இந்தோ திபெத்திய எல்லை காவல் படையினர் 5 குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மண்டாலாவின் கிழக்கே பங்ளாஜாப் கிராமத்தின் அருகில் ஹெலிகாப்டரின் கருகிய பாகங்கள் கண்டுபிடிக்கபப்ட்டன. அதில் பயணித்த விமானிகள் விவிபி ரெட்டி, மேஜர் ஜெயந்த் ஆகியோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

    • அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அலபாமா-டென்னஸ்சி எல்லையில் உள்ள மேடிசன் நகரில் நேற்று முன்தினம் மதியம் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் யுஎச்-60 பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர். இது ராணுவத்தின் டென்னஸ்சி நேஷனல் கார்டு பிரிவுக்கு சொந்தமானது என தகவல்கள் கூறுகின்றன.

    இந்த விபத்து பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் விபத்து நடந்த இடத்தில் கரும்புகை எழும்பியதைக் காண முடிந்ததாகவும், அங்கு ஆம்புலன்சுகள் விரைந்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

    வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலியாகினர்.
    • இந்த விபத்தில் இறந்தவர்களில் உக்ரைன் உள்துறை மந்திரியும் அடங்குவார்.

    கீவ்:

    உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் அந்நாட்டு உள்துறை மந்திரி டெஸின் மொனஸ்டிர்ஸ்கி உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

    மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் கீவில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    • மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 குழந்தைகளும் உயிரிழப்பு.
    • 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உக்ரைனின் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உக்ரைனின் அவசர சேவைக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டர் உள்துறை அமைச்சர் டெஸின் மொனஸ்டிர்ஸ்கி உள்பட 8 பேர் பயணம் செய்த நிலையில் விபத்துக்குள்ளானது.

    மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

    இவர்களை தவிர, 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேர் குழந்தைகள் என தேசிய தலைமை காவலர் இஹோர் கிளிமென்கோ தெரிவித்துள்ளார்.

    • ஒரு ஹெலிகாப்டரை அதன் விமானி சாதுர்யமாக மணற்பரப்பில் தரையிறக்கினார்.
    • 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்டு கோஸ்டிலுள்ள கேளிக்கை விடுதி அருகே தரையிலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், தரையிறங்க வந்து கொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதியது.

    ஒரு ஹெலிகாப்டரை அதன் விமானி சாதுர்யமாக மணற்பரப்பில் தரையிறக்கிய நிலையில், மற்றொரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது.

    அதில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ×