என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன் போர்"

    • ரஷியா ஆக்கிரமித்துள்ள 20 சதவீத உக்ரைன் நிலப்பகுதிகளான டொனெட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்க உடன்பாடு எட்டப்படவில்லை
    • கடும் குளிர் நிலவுவதைக் கருத்தில் கொண்டு கீவ் மற்றும் இதர நகரங்கள் மீது ஒரு வாரத்திற்குத் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.

    நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சித்ததை எதிர்த்து ரஷியா அந்நாட்டின் மீது கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. இந்த போரானது 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

    போரை முடிவுக்கு கொண்டு வர கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் பொறுப்புடன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

    இதன் விளைவாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் முறையாக அமெரிக்கா - ரஷியா - உக்ரைன் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை அபுதாபியில் நடைபெற்றது.

    பிப்ரவரி 1-ஆம் தேதி இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரஷ்யா ஆக்கிரமித்துள்ள 20 சதவீத உக்ரைன் நிலப்பகுதிகளான டொனெட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்க இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என்று தெரிகிறது.

    இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷ்ய அதிபர் புதினும் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள். இது பேச்சுவார்த்தையை மிகவும் கடினமாக்குகிறது" என்று கூறினார்.

    இருப்பினும், விரைவில் ஒரு சுமுகமான தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிபர் புடினுடன் தான் பேசியதாகக் குறிப்பிட்ட டிரம்ப், கடும் குளிர் நிலவுவதைக் கருத்தில் கொண்டு கீவ் மற்றும் இதர நகரங்கள் மீது ஒரு வாரத்திற்குத் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்டதாகவும், அதற்குப் புதின் சம்மதித்ததாகவும் தெரிவித்தார்.

    இதற்கிடையில், பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோ வருமாறு ஜெலன்ஸ்கிக்கு ரஷியா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.    

    • ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் நிலப்பகுதிகளான டொனெட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்க உடன்படவில்லை.
    • மின்சாரமின்றி மக்கள் கடும் குளிரில் தவிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

    நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சித்ததை எதிர்த்து ரஷியா அந்நாட்டின் மீது கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. இந்த போரானது 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

    போரை முடிவுக்கு கொண்டு வர கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் பொறுப்புடன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

    இதன் விளைவாக கடந்த வாரம் வெல்லக்கிழமை முதல் முறையாக அமெரிக்கா - ரஷியா - உக்ரைன் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை அபுதாபியில் நடைபெற்றது. பிப்ரவரி 1-ஆம் தேதி இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையொட்டி "மிகச் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன" என்று டிரம்ப் ட்வீட் செய்தார்.

    இருப்பினும், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள 20 சதவீத உக்ரைன் நிலப்பகுதிகளான டொனெட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்க இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்நிலையில் தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் உடைய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ளார்.

    இதற்கிடைய உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக கீவ், கார்க்கிவ் உள்ளிட்ட நகரங்களின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இதனால் மின்சாரமின்றி மக்கள் கடும் குளிரில் தவிக்கும் சூழல் உருவாகி உள்ளது. எனவே உக்ரைனில் நிலவும் கடும் குளிர் காலத்தைக் கருத்தில் கொண்டு, மனிதநேய அடிப்படையில் மின்சாரக் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ரஷிய அதிபர் புதினுக்கு டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதை ரஷியா ஏற்றுக்கொண்டதாகவும், ஒரு வார காலத்திற்கு தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

    • 200 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது.
    • எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைனில் பயணிகள் ரெயிலை குறிவைத்து ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

    நேற்று கார்கிவ் நகரில் சுமார் 200 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    அதேநேரம், ஒடெசா நகரில் ரஷ்யா 50-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி நடத்திய தாக்குதலில் இதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்தத் தாக்குதலில் ஒடெசா நகரில் 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், ஒரு தேவாலயம், மழலையர் பள்ளி மற்றும் பள்ளிகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக இதன்போது எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் ஸ்லோவியான்ஸ்க் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு தம்பதியும், ஜபோரிஜியா பகுதியில் ஒரு முதியவரும் தாக்குதலில் பலியாகியுள்ளனர். இதன்மூலம் ஒரே நேரத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    • தெற்கு பிரான்சின் மார்சேய் துறைமுகம் அருகே இந்தக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது.
    • மார்சேய் துறைமுகத்தில் அந்தக் கப்பல் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் எண்ணெய் விற்பனை உட்பட பல்வேறு வணிகர்களுக்கு தடைகளை விதித்துள்ளன.

    ஆனால் தடைகளை மீறி ரஷியா கப்பல்கள் மூலம் ரகசியமாக எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது.

    இந்நிலையில் மத்திய தரைக்கடலில் Grinch என்ற எண்ணெய் கப்பல் பிரான்ஸ் kadarpadaiஅதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இது ரஷியாவுடையது என்று சந்தேகிக்கப்படுகிறது. 

    தெற்கு பிரான்சின் மார்சேய் துறைமுகம் அருகே இந்தக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது. கப்பலில் இருந்த 58 வயதான இந்திய கேப்டன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

    மற்ற ஊழியர்கள் கப்பலிலேயே இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்சேய் துறைமுகத்தில் அந்தக் கப்பல் தற்போது பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

       

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து முதல் முறையாக உக்ரைன் - ரஷியா - அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.
    • உக்ரைன் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமாக கார்க்கிவ் உட்பட 17 பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    நேட்டோ நாடுகளுடன் சேர முயற்சித்த உக்ரைனால் தங்களுக்கு ஆபத்து என கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.

    தீர்வு எட்டப்படாமல் நான்கு ஆண்டுகளை கடந்து உக்ரைன் -ரஷியா போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்றத்துமுதல் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் போரை நிறுத்த பல முயற்சிகளை செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து முதல் முறையாக உக்ரைன் - ரஷியா - அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.

    டான்பாஸ் உள்ளிட்ட கைப்பற்றிய பிராந்தியங்களை ரஷியா விட்டுத் தர மறுப்பதால் இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சூழலில் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் நேற்று உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.

    உக்ரைன் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமாக கார்க்கிவ் உட்பட 17 பகுதிகள் மீது ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.

    குடியிருப்பு கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அங்கு குளிர்காலம் என்பதால் மக்கள் மின்சாரமின்றி கடும் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர்.  

    • உக்ரைன் ஒரு முடிவில்லாத சுழற்சியில் சிக்கிக்கொண்டுள்ளது
    • இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் இருப்பதாக டிரம்ப கூறியுள்ளார்.

    நேட்டோ நாடுகளுடன் சேர முயற்சித்த உக்ரைனால் தங்களுக்கு ஆபத்து என கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.

    தீர்வு எட்டப்படாமல் நான்கு ஆண்டுகளை கடந்து உக்ரைன் -ரஷியா போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்றத்துமுதல் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் போரை நிறுத்த பல முயற்சிகளை செய்து வருகிறார்.

    அமெரிக்காவின் அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை கடந்த ஆகஸ்டில் சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் முடிவு எட்டப்படவில்லை.

    இதற்கிடையே கடந்த ஜனவரி 19 முதல் சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்து வரும் நிலையில் நேற்று இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.

    அங்கு வைத்து அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து ஜெலன்ஸ்கி போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

    இதன்படி, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய மூன்று நாடுகளும் முதன்முறையாக நேரடியாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    முன்னதாக மாநாட்டில் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைன் ஒரு முடிவில்லாத சுழற்சியில் சிக்கிக்கொண்டுள்ளது என்றும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, போரை நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் சாடினார்.

    மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது என்றும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் இருப்பதாக டிரம்ப கூறியுள்ளார்.

    இதற்கிடையே அமெரிக்காவின் சிறப்புத் தூதர்கள் இருவர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கு மத்தியில் உக்ரைனின் தென்கிழக்குப் பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

    • ரஷியா கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமைதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது
    • காசா பகுதியில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைச் சீரமைப்பது மற்றும் அங்கு அமைதியை நிலைநாட்டுவது இதன் நோக்கம்.

    போர் நிறுத்தத்தின் பின் காசாவின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைக் கண்காணிக்க காசா அமைதிக் குழுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ளார்.

    இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

    அந்த வகையில் காசா அமைதிக் குழுவில் உறுப்பினராக இணையுமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ரஷியா கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமைதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது.

    இத்தகைய சூழலில், ரஷிய அதிபர் புதினை காசா அமைதிக் குழுவில் இணையுமாறு டிரம்ப் அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தக் குழுவின் முக்கிய நோக்கம் காசா பகுதியில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைச் சீரமைப்பது மற்றும் அங்கு அமைதியை நிலைநாட்டுவது என்று கூறப்படுகிறது. 

    இதற்கிடையே காசா அமைதிக் குழுவில் சேர மறுத்தால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200 சதவீதம் வரி விதிப்பேன் என அந்நாட்டு அதிபர் மாக்ரோனை டிரம்ப் மிரட்டியுள்ளார். 

    • அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என ஜெலன்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டார்.
    • ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் கைது செய்துள்ள நிலையில், அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என ஜெலன்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டார்.

    இந்நிலையில் புதினை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "அதற்கான அவசியம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.

    அவருடன் எப்போதும் ஒரு சிறந்த உறவை வைத்திருக்கவே விரும்பினேன். ஆனால் தற்போதைய நிலைமை ஏமாற்றமளிக்கிறது. உக்ரைன்-ரஷிய போரைத் தடுக்க முடியாததில் எனக்கு வருத்தம் உண்டு" என்று கூறினார்.

    ரஷியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், பல ரஷிய வீரர்கள் போரில் கொல்லப்படுவதாகவும் குறிப்பிட்ட டிரம்ப் , இந்தப் போரை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்தார்.

    உக்ரைனில் செய்த போர் குற்றங்களுக்காக ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • அந்த 10 சதவீதம்தான் அமைதியின் தலைவிதியையும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் தலைவிதியையும் தீர்மானிக்கும்.
    • நாங்கள் சரணடைய தயாராக இருக்கிறோம் என்று யாராவது நினைத்தால் அது தவறானது என்றார்.

    ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    இதற்காக 20 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரைத்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா-உக்ரைனுடன் அமெரிக்க குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    மேலும் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:-

    அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராகிவிட்டது. 10 சதவீதம் மீதமுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உக்ரைன் 10 சதவீத தொலைவில் உள்ளது.

    அந்த 10 சதவீதம்தான் அமைதியின் தலைவிதியையும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் தலைவிதியையும் தீர்மானிக்கும்.

    போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் விரும்பினாலும், எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க எந்தவொரு தீர்வும் வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்.

    உக்ரைனின் நீண்டகால பாதுகாப்பை பலவீனப்படுத்தக்கூடிய அல்லது ரஷியாவைத் தூண்டிவிடக்கூடிய சலுகைகள் மூலம் அமைதி ஒப்பந்தம் ஏற்படக்கூடாது. நாங்கள் சரணடைய தயாராக இருக்கிறோம் என்று யாராவது நினைத்தால் அது தவறானது என்றார்.

    • இதுதொடர்பாக புதின் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
    • 6 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய Chaklun-V ரக டிரோன் பாகங்கள் காணப்பட்டன.

    தலைநகர் மாஸ்கோவின் அருகே உள்ள நோவ்கோரோட் பகுதியில் அதிபர் புதினின் அரசு இல்லத்தை குறிவைத்து கடந்த டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உக்ரைன் 91 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டி இருந்தது.

    ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் இந்த குற்றச்சாட்டை மறுத்தது. இதுதொடர்பாக புதின் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

    இந்நிலையில் நோவ்கோரோட் பகுதியில் உள்ள புதினின் இல்லத்தைத் தாக்க உக்ரைன் அனுப்பியதாகக் கூறப்படும் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோவை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    அந்த வீடியோவில், 6 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய Chaklun-V ரக டிரோன் பாகங்களுக்கு அருகில் ரஷிய வீரர் ஒருவர் நிற்பது போன்ற காட்சிகள் உள்ளன.

     இந்த வீடியோ நகைப்புக்குரியது என உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. இத்தகைய போலியான ஆதாரத்தை உருவாக்க ரஷியா இரண்டு நாட்கள் ஆகியுள்ளதாக உக்ரைன் செய்தித் தொடர்பாளர் கிண்டலாக தெரிவித்தார்.

    இதற்கிடையில், அமெரிக்கவின் சி.ஐ.ஏ புலனாய்வு அமைப்புநடத்திய ஆய்வில், உக்ரைன் புதினின் இல்லத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று முடிவுக்கு வந்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. 

    • நாடு முழுவதும் ராணுவத்திற்குப் பின்னால் ஒற்றுமையாக இருக்கிறது.
    • உக்ரைனுக்கு எதிரான சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ரஷியா தனது இலக்குகளை எட்டி வெற்றி பெறும்.

    ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    இதற்காக 20 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரைத்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா-உக்ரைனுடன் அமெரிக்க குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    மேலும் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின், புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைகாட்சியில் உரையாற்றினார். இதில் உக்ரைன் போர்க்களத்தில் உள்ள ரஷிய வீரர்களை பாராட்டினார்.

    அவர் கூறியதாவது:-

    போர்க்களத்தில் உள்ள எங்களின் நாயகர்களான உங்கள் (ரஷிய வீரர்கள்) மீதும், நமது வெற்றியின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

    ரஷியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மற்றும் நான் உங்களுக்கு உறுதிஅளிக்கிறோம். புத்தாண்டின் இந்தத் தருணத்தில் வீரர்களுக்காக வேண்டிக்கொள்கிறோம்.

    நாடு முழுவதும் ராணுவத்திற்குப் பின்னால் ஒற்றுமையாக இருக்கிறது. உங்களை பற்றி மக்கள் நினைக்கிறார்கள். உங்களை நம்புகிறார்கள்.

    நமது அனைத்து வீரர்களுக்கும் தளபதிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நாங்கள் உங்களையும் எங்கள் வெற்றியையும் நம்புகிறோம்.

    உக்ரைனுக்கு எதிரான சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ரஷியா தனது இலக்குகளை எட்டி வெற்றி பெறும். ரஷியா மக்களின் ஒற்றுமை, தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இவ்வாறு புதின் கூறினார்.

    • அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
    • அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார்.

    மாஸ்கோ அருகே உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை குறிவைத்து 91 டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் ரஷியா நேற்று தெரிவித்தது.

    ஆனால் அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதவிட்ட பிரதமர் மோடி, "ரஷிய அதிபரின் இல்லத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.

    போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட தூதரக ரீதியிலான முயற்சிகளே சரியான வழி" என்று தெரிவித்துள்ளார்.

    அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் வகையிலான இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார். அதே சமயம் விரைவில் அமைதி உடன்படிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

    ×