search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேண்டுகோள்"

    • ஏர்வாடியை குப்பையில்லா நகரமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என கீழக்கரை வட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • கடைக்காரர்கள்தான் சாலையில் கொட்டுகிறார்கள்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி ஏர்வாடி பகுதியில் உள்ள லாட்ஜ் உரிமையாளர் களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வட்டாட்சியர் பழனிக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தங்கும் விடுதியில் இருந்து குப்பைகளை வெளியே கொட்டக்கூடாது. நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகளை போட வேண்டும். சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏர்வாடியை குப்பையில்லா நகரமாக்க லாட்ஜ் உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது லாட்ஜ் உரிமையாளர்கள் கூறும்போது, குப்பைகளை நாங்கள் வெளியில் கொட்டுவதில்லை. டீ கப், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகளை இதர கடைக்காரர்கள் தான்சாலை யில் கொட்டுகிறார்கள்.

    போலீசார் லாட்ஜ் முன்பு நிறுத்தப்படும் வாகன ங்களை அப்புறப்படுத்து கிறார்கள். ஆனால் போக்கு வரத்துக்கு இடையூறாக கடைகளை வைக்க போலீசார் அனுமதிக் கிறார்கள். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றனர். அப்போது வட்டாட்சியர் பழனிக்குமார், போலீசாரி டம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பரமசிவன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுப்பொருட்களை உழவன் செயலில் பதிய வேண்டும் என அரியலூர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
    • விவசாயிகள் இச்செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு வேளாண் துறையின் திட்டப்பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இடுப்பொருள்களை உழவன் செயலில் மூலம் பதிவு செய்து பயன் பெறலாம் என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- அரியலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களில் பயன்பெறுவதற்காகவும், விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், அவர்களது தேவையை முன்கூட்டியே வேளாண்மைத்துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப் பலன்களை பெறுவதற்காகவும், உழவன் செயலியினை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் இச்செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு வேளாண் துறையின் திட்டப்பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர். அரியலூர் மாட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் கைபேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப் பலன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். முன்பதிவு செய்வதினால் வழங்கப்படும் இடுபொருள்கள் மற்றும் திட்டப் பலன்களை உரிய காலத்தில் பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

    • கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் வருகிற ஜூன் 3-வது தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • கலைஞர் புகைப்படத்திற்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு. முபாரக் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் 100-வது பிறந்தநாள் வருகிற ஜூன் 3-வது தேதி நடக்க உள்ளது.

    இதனை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும், கழக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்திலும் அறிவுரை வழங்கி உள்ளனர்.

    திராவிட இயக்கத்தை கண் இமைப்போல பாதுகாத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கடைசி மூச்சு வரை பாடுபட்ட மகத்தான தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா, கழக தோழர்கள் வெகு சிறப்புடன் கொண்டாட வேண்டிய பொன்நாள். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்து உள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து நகர-ஒன்றிய-பேரூர் –ஊராட்சி பகுதிகளிலும் கல்வெட்டுகள் அமைத்து, கட்சிக்கொடியேற்றறி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    பொது இடங்களில் கலைஞர் புகைப்படத்தை அலங்கரித்து வைத்து, கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    ஜூன் 3-ந்தேதி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் காணும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அதில் நகர-ஒன்றிய-பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

    கலைஞருக்கு மலர் அஞ்சலி செய்வதோடு, அன்னாரின் அடிச்சுவட்டை பின்பற்றி, கழகத்தை காத்து வரும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகம் உயர உழைப்போம் என்ற உறுதி மொழியை நாம் அனைவரும் ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

    • மேல் மண் கீழாகவும் மாறும் போது மண்ணில் உள்ள சத்துக்கள் சீராக பரவுவதால் சத்துப் பற்றாக்குறை பிரச்னை குறைய வழி ஏற்படுகின்றது
    • மழை நீர் மண்ணில் சேமிக்கப்படுவதால் மண்ணில் ஈரப் பதம் தக்க வைக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மழையை அனைத்து விவசாயிகளும் தவறாது கோடை உழவு செய்ய பயன்படுத்திக் கொள்ளுமாறு கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோடை உழவு செய்வதனால் மண்ணின் அடியில் உள்ள பயிர்களை உண்ணும் மற்றும் பல நோய்களை கடத்தும் பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப்புழுக்கள் ஆகியவை வெளியே கொண்டு வரப்பட்டு சூரிய ஒளி மற்றும் வெப்பம் காரணமாக கொல்லப்படும்.

    மேலும் மண்ணிலிருந்து வெளி வரும் சிறு பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் போன்றவற்றை பறவைகள் கொத்தி தின்று அவைகளை அழித்து விடுவதால், அடுத்து சாகுபடி செய்யும் பயிரில் பூச்சி நோய் தாக்குதல் இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்த ஏதுவாகிறது.

    மண்ணின் இறுக்கம் குறைந்து மழை நீர் எளிதில் ஊடுருவி மண்ணில் நைட்ரஜன் சத்து இயற்கையாக நிலை நிறுத்தப் படுகின்றது. மழை நீர் மண்ணில் சேமிக்கப்படுவதால் மண்ணில் ஈரப் பதம் தக்க வைக்கப்படுகிறது. மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. மண்ணில் உள்ள களைகளின் விதைகள் முளைத்து செடிகளாக வளர்கின்றது. மறு உழவு செய்யும்போது களை செடிகள் மடக்கி உழப்பட்டு மீண்டும் களைகள் வளராமல் தடுக்கப் படுவதால் களை மேலாண்மைக்கான செலவு மற்றும் நேரம் சேமிக்கப்படுகின்றது. களை செடிகள் இயற்கை எருவாக்கப்படுகிறது.

    நன்கு ஆழமாக உழவு செய்யும்போது கீழ் மண் மேலாகவும், மேல் மண் கீழாகவும் மாறும் போது மண்ணில் உள்ள சத்துக்கள் சீராக பரவுவதால் சத்துப் பற்றாக்குறை பிரச்னை குறைய வழி ஏற்படுகின்றது. கோடை உழவு செய்த பின் மண் மாதிரி எடுத்து ஆய்விற்கு அனுப்பும் போது ஆய்வு முடிவுகள் மிகவும் சரியாக இருக்கும்.

    மண் வளம் மற்றும் சத்து மேலாண்மை எளிதாகும். கோடை உழவு செய்யும் போது மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் வேர்கள் எளிதில் வளர்வதுடன் சத்துக்கள் எளிதாக பயிருக்கு கிடைப்பதால் நல்ல வளர்ச்சி கிடைக்கின்றது. எனவே, அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதல் கூறப்பட்டுள்ளது.

    • சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது
    • தனிநபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு இது போன்ற பல குற்றங்களை தடுக்க கேமராவின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது.  இதனை தடுக்கும் விதமாக சின்ன சேலம் பகுதியில் உள்ள புதிய பஸ் நிலையம், அம்சாகுளம், நயினார் பாளையம் செல்லும்ரெயி ல்வே கேட் சாலை, கூகையூர் ரோடு, மூங்கில் பாடி சாலை போன்ற முக்கிய இடங்களில் 23 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் நடந்த குற்றத்தடுப்பு கண்காணிப்பு கேமரா தொடக்க விழாவில் டி.எஸ்.பி. மோகன் ராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் வளர்ந்து வரும் முக்கிய நகரமாகும். தனிநபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு இது போன்ற பல குற்றங்களை தடுக்க கேமராவின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது. தொழில் செய்பவர்கள் அவர்களுடைய சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது. பொருத்த வேண்டும் வே என்றார்.. நிகழ்ச்சியில் கூடுதல் டி.எஸ்.பி. ரமேஷ், இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப் இன்ஸ்பெக்டர் பாரதி, மணிகண்டன், தனிப்பிரிவு காவலர் கணேசன், ராகவேந்திரா நிதி நிறுவன இயக்குனர் ஏ.டி.ஆறுமுகம் மற்றும் போலீஸ் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • திருத்தப்பட்ட டப் திட்டம் 2022 மார்ச் 31ந் தேதியுடன் காலாவதியாகிவிட்டது.
    • திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ரெப்போ ரேட் உயரும் போது கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வந்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் சர்தோஷிடம், சிறு குறு மற்றும் நடுத்தர பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களை பாதுகாக்கும், கோரிக்கையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்வைத்தது.பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு 33 ஆயிரத்து 525 கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது. உள்நாட்டு விற்பனை பனியன் வர்த்தகம் 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 55.32 சதவீதமாக இருக்கிறது.

    சிறு, குறு நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், புது வரவு எந்திரங்களை பயன்படுத்தவும், டப் திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. திருத்தப்பட்ட டப் திட்டம் 2022 மார்ச் 31ந் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. எனவே மீண்டும் டப் திட்டத்தை, 2022 ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து செயல்படுத்த வேண்டும். பல்வேறு காரணங்களால் பனியன் நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பொருளாதார சிக்கலை தீர்க்க ஏதுவாக பேக்கிங் கிரெடிட் மீதான வட்டி சலுகை, 3 மற்றும் 2 சதவீதம் என்பதை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ரெப்போ ரேட் உயரும் போது கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். எனவே, கொரோனா காலத்தில் இருந்தது போல் ஏற்றுமதி மறுநிதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தி வட்டி உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க ஆவன செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பொருளாதார சரிவை சரிக்கட்டும் வகையில் நிலுவை கடன் மதிப்பில் 20 சதவீதம், பிணையமில்லா கடனாக வழங்கப்பட்டது. நூல் விலை உயர்வு, உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் தற்போதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தில் நிலுவை கடன் மதிப்பில் 30 சதவீதம் வரை கடன் வழங்க வேண்டும். அன்னிய செலாவணியை ஈட்டித்தரும், திருப்பூர் நகரின் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டில் மத்திய அரசின் பங்களிப்பு அவசியம். திருப்பூரின் ஓராண்டு ஏற்றுமதி வர்த்தக மதிப்பில் 1 சதவீத தொகையை, திருப்பூர் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வழங்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் விளக்கினர். 

    • மக்கள் திட்டப்பணிகளை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு தாருங்கள் என்று நகர்மன்ற தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • கீழக்கரை நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. துணைத்தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான், ஆணையாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கீழக்கரை நகராட்சி சார்பில் நகர்மன்றத்தலைவர் செஹனாஸ் ஆபிதா வாழ்த்து தெரிவித்தார். துணைத்தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கூட்டத்தில் பேசிய தலைவர், கீழக்கரை நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்று ஓராண்டுகள் நிறைவ டைந்துள்ளது. மக்கள் கோரி க்கைகளை நிறைவேற்ற எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும், கீழக்கரை பொது மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதேபோன்று ஆதரவு தந்து கீழக்கரை மக்களுக்கு எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் அனைத்து வார்டுகளிலும் குறைகள் ஏதுமின்றி சிறப்பாக செயல்படுவதற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    கீழக்கரை நகராட்சிக் குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் காலி இடங்களுக்கான வீட்டுமனை பட்டாக்கள் வழங்க, கீழக்கரை வட்டாட்சியர் மூலமாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    நகர் பகுதியில் மேற்கொள்ள உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து வாசிக்கப்பட்டு ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அனைத்து வார்டு கவுன்சிலர்களும் தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் தேவையான பணிகள் குறித்து விளக்கி பேசினர்.

    கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கை மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள நகர்மன்ற தலைவர் அறிவுரை வழங்கினார்.

    கவுன்சிலர் சுகைபு:- கீழக்கரையில் வள்ளல் சீதக்காதிக்கு தனி நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும். நகராட்சி தூய்மை பணியா ளர்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு அரசு மருத்துவமனையில் மாற்று வழி ஏற்படுத்த வேண்டும்.

    கவுன்சிலர் முகம்மது காசிம்:- 14-வது வார்டு பகுதியில் பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்காத நிலை உள்ளது. உடனடியாக மக்களுக்கு இந்த வசதி ஏற்படுத்திக்கொடுத்தால் வீடு வீடாகச்சென்று வரி வசூல் செய்வதற்கு தயாராக உள்ளேன்.

    சப்ராஸ் நவாஸ்: ஏர்வாடி முக்கு ரோட்டில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகள் முழுமையாக எரியவில்லை. பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

    பாதுஷா:- கீழக்கரை நகராட்சியில் நீண்ட காலமாக வருவாய் ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    கூட்டத்தில் மேற்பார்வை யாளர்கள் சம்பாசிவம், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, அலுவ லர்கள் தமிழ்ச் செல்வன், உதயக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    • இந்த மாதத்திற்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசிகளை போட வேண்டும் என வலியுறுத்தினர்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக் கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் கடந்த மாதம் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வேளாண், வேளாண் பொறியியல், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற மானியங்கள், திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்க உரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சாந்தி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

    அப்பொழுது பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசிகளை போட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் 100 மாடுகள் இருந்தால் மட்டுமே தடுப்பூசி போட முடியும் என்பதால், சுற்று வட்டார பகுதியில் உள்ள மாடுகளை ஓரிடத்தில் சேர்த்து முகாம்களை நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் ராகி கொள்முதல் நிலையத்தில் ராகி விற்பனை செய்வதற்கு வருவாய்த் துறையினர் சான்றிதழ் வழங்க கால தாமதம் செய்வதாகவும், நாள் கணக்கில் அலைக் கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேசிய கலெக்டர் தருமபுரி மாவட்டத்தில் ராகி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொள்முதல் நிலையத்தில் தருமபுரி நகர் பகுதிக்கு வினியோகம் செய்கின்ற அளவிற்கு கூட ராகியை விவசாயிகள் கொடுப்பதில்லை. எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள ராகி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைவித்த ராகியை விற்பனைக்காக கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு ராகி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்கு உரிய சான்றிதழை வருவாய்த் துறையினர் உடனடியாக வழங்க வேண்டும்.

    இதில் சிட்டா, அடங்கல் வழங்கும்பொழுது ராகி பயிர் ஒரு வருடத்திற்குள்ளாக சாகுபாடி செய்யப்பட்டிருந்தால் கூட, அந்த ராகி பயிர்களுக்கு சிட்டா, அடங்கல்களை வருவாய்த் துறையினர் தடையில்லாமல் வழங்க வேண்டும். மேலும் ராகி வைத்துள்ளவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்துறை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். இந்த ராகி கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி விவசாயிகள் போதிய வருவாய் ஈட்டி கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

    • கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • விவசாயிகள் தங்க ளது கால்நடைகள் கட்டப் பட்டிருக்கும் கொட்டகை மற்றும் தரைத்தளத்தில் கொசுவை ஒழிக்க கொசு மருந்தை அடிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    இந்தியாவில் வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் வேலூர், விழுப்பரம், திருவண்ணா மலை, தருமபுரி, ஈரோடு, சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களில் கால்நடை களுக்கு தோல் கழலை நோய் பரவி வருகிறது.

    இந்நோய் பரவாமல் தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறை மூலம் அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் உள்ள கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தொடர்பான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்நோய் கூலக்ஸ் என்ற கொசு கடிப்பதன் மூலமும் கடிக்கும் பூச்சிகள் மற்றும் உண்ணிகள் மூலம் கால்நடைகளுக்கு பரவும் ஒரு தொற்று நோயாகும். எனவே விவசாயிகள் தங்க ளது கால்நடைகள் கட்டப் பட்டிருக்கும் கொட்டகை மற்றும் தரைத்தளத்தில் கொசுவை ஒழிக்க கொசு மருந்தை அடிக்க வேண்டும்.

    கண்ணில் நீர் வடிதல், சளி ஒழுகுதல், கடுமையான காய்ச்சல், உடல் முழுவதும் வீக்கம் மற்றும் உருண்டையான கட்டிகள் உடைந்து சீழ் வெளியேற்றம், கால்களில் வீக்கம், மாடுகள் சோர்வாக காணப்படுவது போன்றவை தோல் கழலை நோயின் அறிகுறிகள் ஆகும்.

    நோய் தாக்கம் ஏற்பட்டு உள்ள கால்நடைகளுக்கு உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்தவர்களை அணுகி உரிய ஆலோசனை பெற்று நோய்க் கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தங்கள் கிராமத்தில் நடக்கும் தோல் கழலை நோய் தொடர்பான முகாம்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்

    • விதை உற்பத்தி செய்ய சான்று விதைகளையே பயன்படுத்த வேண்டும்.
    • கலெக்டர் அலுவலகம் பின்புறம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    விதைகளே நல்விளைச்சலுக்கு ஆதாரமாகும். தரமான விதைகள் என்பது சான்றளிக்கப்பட்ட விதைகளாகும். விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் விதை உற்பத்தி செய்ய சான்று விதைகளையே பயன்படுத்த வேண்டும்.

    விதைக்கப்படும் விதையில் பிற தானிய விதை, உயிரற்ற பொருட்கள் மற்றும் களை விதை ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் விதைத் தூய்மையானதாக இருக்கும். அதனால் விதையின் தரம் உயர்கிறது.

    புறத்தூய்மை பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளான முளைப்புத்திறன், ஈரப்பதம் ஆகியவை கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலையத்தில் மிகக் குறைந்த செலவில் செய்து தரப்படுகிறது.

    அதற்கு விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள விதைக் குவியலில் இருந்து விதை மாதிரி எடுத்து விதை மற்றும் ரகம், பெயர், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு முகப்புக் கடிதத்துடன் ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 என்ற வகிதத்தில், வேளாண்மை அலுவலர், விதைப் பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகம், கலெக்டர் அலுவலகம் பின்புறம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    தாங்கள் அனுப்பிய விதை மாதிரிகளின் விதை பரிசோதனை முடிவுகள் 30 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி தெரிவித்துள்ளார்.

    • பொங்கல் பண்டிகையை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கொண்டாட பொது மக்களுக்கு நகராட்சி தலைவர், கமிஷனர் வலியுறுத்தியுள்ளனர்.
    • பொதுமக்கள் டயர், துணி, பிளாஸ்டிக்குகள் போன்ற பொருட்களை போகி பண்டிகையின்போது எரிக்க கூடாது

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகையை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கொண்டாட பொது மக்களுக்கு நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், கமிஷனர் முகமது சம்சுதீன் ஆகியோர் வலி யுறுத்தியுள்ளனர்.

    இதுதொடர்பாக கமிஷனர் முகமது சம்சுதீன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சுரண்டை நகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகை யையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுத்தம் செய்யப்பட்டு அகற்றப்படும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பை களை சாலைகளிலும், வாறுகால்க ளிலும் கொட்டாமல் நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அதன்படி வார்டு எண் 6 இந்து நாடார் மண்டபம் அருகில், வார்டு எண் 10 வாடியூர் ரோடு, வார்டு எண் 14 சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகில், வார்டு 18 வரகுணராமபுரம், வார்டு எண்21 நகராட்சி அலுவலகம் பின்புறம் ஆகிய இடங்களில் குப்பைகளை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குப்பைகளை சாலைகளில் கொட்டாமல் மேற்கண்ட இடங்களில் வழங்க கேட்டுக் கொள்ளப் படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் பொதுமக்கள் டயர், துணி, பிளாஸ்டிக்குகள் போன்ற எந்த பொருட்களையும் போகி பண்டிகையின்போது எரிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டு இது தொடர்பாக சுகாதார ஆய்வாளர் கருப்பசாமியால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராமர், ஜெயபிரகாஷ், சுகாதார மேற்பார்வையாளர்கள், பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கால்நடை பராமரிப்புத் துறையில் ஆட்சேர்ப்பு- வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவாது:-

    கால்நடை பராமரிப்புத் துறையில் அனிமல் ஹேண்ட்லர், அனிமல் ஹேண்ட்லர் டிரைவர் ஆகிய பணியிடங்களுக்கு 90 மணி நேரம் பயிற்சி அளித்து, ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது எனவும், இதற்கான பணி நியமன ஆணை ஜுன் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியிடப்படும், ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்தி கொள்ளுமாறு செல்போன்களில் வாட்ஸ் அப் செயலி மூலம் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவை கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பற்றவை என தெரிவிக்கப்படுகிறது.

    கால்நடை பராமரிப்புத் துறைக்கு தொடர்பில்லாத தவறான இத்தகவலை நம்பி பொதுமக்கள் ஏமாறவேண்டாம். இதுபோன்ற தகவல்கள் பரப்புபவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×