search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேண்டுகோள்"

    • இணைய குற்றங்களுக்கு பலியாகாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சில அறிவுரைகளை தெரிவிக்கிறேன்.
    • சைபர் குற்றங்கள் நடந்தால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in-ல் உங்கள் புகாரை பதிவு செய்யவும்.

    சென்னை:

    தமிழக சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார், அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சைபர் கிரைம் கட்டணமில்லா எண்ணான 1930-க்கு இணைய நிதி மோசடி தொடர்பாக நாளொன்றுக்கு 900 அழைப்புகளை பெறுகிறோம். அதில் கிட்டத்தட்ட 100 புகார்கள் தினசரி அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை எங்களுக்கு 1,63,955 அழைப்புகள் வந்துள்ளன.

    அவற்றில் 22,849 புகார்கள் என்.சி.ஆர்.பி.யில் போர்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொழில் நுட்பத்தின் விரைவான முன்னேற்றத்தால் இணைய குற்றத்தின் அச்சுறுத்தல் முன்பை விட அதிகமாக உள்ளது. இதனால் நம்மை பாதுகாக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதும் முக்கியம்.

    இணைய குற்றங்களுக்கு பலியாகாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சில அறிவுரைகளை தெரிவிக்கிறேன்.

    ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற நமது தனிப்பட்ட சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வைரஸ் தடுப்பு மென்பொருள் மற்றும் செயலிகளை புதுப்பித்து வைத்திருப்பது பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவும்.

    ஆன்லைன் செயல்பாடுகள் குறித்தும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூக ஊடகத்தளங்கள் அல்லது பிற ஆன்லைன் தளங்களில் தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது முக்கியம். நமது வீட்டு முகவரி, தொலைபேசி எண் அல்லது நிதி விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களை பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    மேலும் உங்களது அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் வலுவான மற்றும் தனித்துவமான கடவுச் சொற்களை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. உங்கள் பெயர், பிறந்ததேதி அல்லது பொதுவான சொற்றொடர்கள் போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய தகவலைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

    சைபர் குற்றவாளிகள், முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் தனிநபர்களை ஏமாற்றுவதற்காக, முறையான நிறுவனங்களாக காட்டி ஏமாற்றும் மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். எனவே நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியது அவசியமாகும்.

    இதுபோன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சைபர் குற்றவாளிகளுக்கு பலியாகாமல் நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க முடியும். இணைய பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்க கைகோர்ப்போம். ஏதேனும் சைபர் குற்றங்கள் நடந்தால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in-ல் உங்கள் புகாரை பதிவு செய்யவும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 70 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
    • அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 7-வது மாவட்ட பிரதிநிதிகள் பேரவை கூட்டத்தில் வேண்டுகோள்

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 7-வது மாவட்ட பிரதிநிதிகள் பேரவை பெரம்பலூரில் நடந்தது. பேரவைக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். பொருளாளர் ராஜேந்திரன் சங்கத்தின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் சங்கத்தின் மாநில செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் 70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழு பரிந்துரையின்படி நிர்ணயம் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 21 மாத ஓய்வூதிய தொகையினை வழங்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். நீட்டிக்கப்பட்ட ஓய்வூதிய வயதினை மீண்டும் 58 வயதாக நிர்ணயம் செய்து, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். அரசு துறைகளில் தற்காலிக பணி மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் காலமுறை ஊதியத்தில் நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்திற்கென்று அறிவிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரியினை விரைவில் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • குடியிருக்கும் இடத்தை சுற்றிலும் குப்பைக்கூளம் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
    • சளி, காய்ச்சல் ஏற்பட்டால் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பகுதியில் காய்ச்சல் பரவலை தடுக்க பொது மக்கள் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என நகர சபை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபாபர்வீன் அஷ்ரப் அலி வெளியிட்டு உள்ள செய்திக்கு றிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. பருவ மழை காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் கலங்கலாக வருகிறது. பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடித்தால் தான் நோய்தொற்றை கட்டுப்படுத்த முடியும். அதே போல குடியிருக்கும் இடத்தை சுற்றிலும் குப்பைக்கூளம் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    பழைய டயர்கள், காலி பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் வீட்டில் கொசுத் தொல்லையை ஒழிக்க முடியும்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல் ஏற்பட்டால் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கபசுர குடிநீர் குடிக்க வேண்டும்.

    காய்ச்சல்-சளி தொந்தரவுகள் அதிகம் இருந்தால் உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இதனால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நோய்த்தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாநிலம் முழுவதும் கிரில் தொழிலுக்கு தனித்தொழிற்பேட்டைகள் அமைக்க வலியுறுத்தல்
    • கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் உண்ணாவிரதம், கதவடைப்பு போராட்டம் நடத்த முடிவு

    கோவை,

    கோயம்புத்தூர் கிரில் தயாரிப்பாளர் நல சங்கமான கோஜிம்வா தலைவரும், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மாவட்ட கிரில் தொழில் கூட்டமைப்பு நெட்கோபியா ஒருங்கிணை ப்பாளருமான திருமலை எம்.ரவி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியிடம் தொழில் முனைவோர்கள் சந்திப்பு கூட்டத்தில் எங்கள் அமைப்பு சார்பில் மனு அளித்தோம். அதில் விசைத்தறி கூடங்களுக்கு 750 யூனிட் வழங்குவது போல, கிரில் தயாரிப்பு கூடங்களுக்கும் 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

    ஆனால் விசைத்தறிக்கூ டங்களுக்கு தற்போது 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. நாங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்..

    விசைத்தறிக் கூடங்களைப் போலவே கிரில் தயாரிப்பு கூடங்களும் கூலிக்கு தொழில் செய்யும் நிலையில் தான் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சொத்து வரி ,தொழில் வரி, மின்கட்டணம், தொழிலாளர் சம்பளம், மூலப்பொருட்கள் விலை ஆகியவை உயர்ந்து உள்ளது. இதனால் கிரில் தயாரிப்பு பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளது.

    எனவே வாடி க்கை யாளர்க ளிடம் விலை உயர்வை கட்டாய ப்படுத்தி திணிக்க வேண்டிய சூழ லில் உள்ளோம். இதனால் எங்க ளுக்கு ஆர்டர்கள் குறைந்து பல லட்சம் தொழிலா ளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிரில் தொழிலாளர்கள் நலம் காக்க தனி நலவாரியம் அமைக்க வேண்டும்,. மேலும் பயிற்சி பெற்ற கிரில் தொழிலாளருக்கு பற்றாக்குறை இருப்பதால், அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் கிரில் பிட்டர், கிரில் வெல்டர் பாடதிட்டங்களை புதிதாக தொடங்க வேண்டும். அவர்களுக்கு பயிற்சியுடன் ஊதியமும் வழங்க தயாராக உள்ளோம்.

    மாநிலம் முழுவதும் கிரில் தொழிலுக்கு தனித்தொழிற்பேட்டைகள் அமைத்து அதனை இலவசமாகவோ, எளிய தவணை முறையிலோ கொடுக்க வேண்டும். தற்போது முக்கிய பிரச்சினையாக உள்ள பீக் ஹவர் மின்சார கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் .எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் உண்ணாவிரதம் மற்றும் கதவடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3, 6 மாதங்களில் 60 லட்ச மதிப்பிலான 180 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உள்ளனர்.
    • சைபர் கிரைம் குற்றவாளிகள் செல்போன் மூலம் வலைவீசி வருகின்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் மூலம் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீஸ் எஸ்.பி பிரபாகர் கலந்து கொண்டு போலீசார் மீட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படை த்தார்.

    இதனை தொடர்ந்து போலீஸ் எஸ்.பி பிரபாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3, 6 மாதங்களில் 60 லட்ச மதிப்பிலான 180 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உள்ளனர். இதே போல் ஒரு கோடியே 23 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது அதன் ஒரு பகுதியாக இன்று 80 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து உள்ளோம்.

    சைபர் கிரைம் குற்றவாளிகள் செல்போன் மூலம் வலைவீசி வருகின்றனர். அவர்கள் அதிக வட்டி தருவதாகவும், பணத்தை இரட்டிப்பு செய்து கொடுப்ப தாகவும் ஆசைவார்த்தைகள் கூறி வருகின்றனர்.

    எனவே பொதுமக்கள் யாரும் சைபர்கிரைம் குற்றவாளிகளிடம் ஏமாறவேண்டாம். சைபர் கிரைம் சார்ந்த கு்ற்றங்களில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் கோவையில் மட்டும் 62,659 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
    • கோவை மாவட்டத்தில் 5817 விவசாயிகள் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் மட்டும் 62,659 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ள வங்கி கணக்கில் மட்டும் தான் பணம் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. கோவை மாவட்டத்தில் 5817 விவசாயிகள் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. எனவே அவர்கள் உடனடியாக வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும்.

    இதற்காக அவர்கள் சேமிப்பு கணக்கு வைத்து உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று ஆதாரை இணைக்கலாம். வங்கியில் கணக்கு இல்லாத விவசாயிகள் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் ஜீரோ பேலன்ஸ் அடிப்படையில் கணக்கு தொடங்கலாம். அப்போது அவர்களின் ஆதார் எண் 48 மணி நேரத்துக்குள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு விடும்.

    இதுகுறித்து மேலும் விவரங்கள் பெற விரும்புவோர் அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தேஜஸ் ரெயில் அரியலூரில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது
    • பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று வேண்டுகோள்

    அரியலூர், 

    மாவட்ட தலைநகரான அரியலூரில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும் சிமெண்ட் ஆலைகள், மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன. இதனால் பல மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள், கல்வியாளர்கள், உற்பத்தியாளர்கள், டாக்டர்கள், மாணவர்கள் அரியலூருக்கு வந்து செல்கின்றனர். ஆத்தூர்- பெரம்பலூர்- அரியலூர்-தஞ்சாவூர் என தேசிய நெடுஞ்சாலை என்.எச். 136- ஒட்டியுள்ளது அரியலூர் ெரயில் நிலையம் மட்டுமே. இதனால் அந்த சாலையையொட்டி உள்ள ஊர்களை சேர்ந்தவர்களும் பக்கத்து மாவட்டமான பெரம்பலூரில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் பஸ்களிலும், கார்களிலும் அரியலூர் வந்து ரெயிலில் பயணம் செய்கின்றனர். வைகை, பல்லவன் ரெயில்களில் தினமும் அரியலூரில் இருந்து பலர் பயணம் செய்கின்றனர். சென்னை, மதுரைக்கு விரைவாக பயணம் மேற்கொள்ள பல பயணிகள் விரும்புகின்றனர். அரியலூர் ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.7 கோடிக்கு டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது. எனவே அரியலூர் ரெயில் நிலையத்தில் தேஜஸ் ெரயில் நின்று சென்றால், பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். தென்னக ரெயில்வேக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே அதற்கான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    • மதுரையில் நாளை அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தி.மு.க. அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டுமாறு வேண்டுகிறேன்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அதி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் எந்தவிதமான வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக மக்கள் மீது சொத்து வரி, மின்கட்டண உயர்வு மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

    தி.மு.க. அரசின் இத்தகைய நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், உடனடியாக விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் அதி.மு.க. பொதுச் செயலாளர், முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட அதி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மதுரை பெத்தானியாபுரம் திடலில் நடைபெறுகிறது.

    இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்படுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க, உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் பொது மக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டுமாறு வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அடுக்குமாடி குடியிருப்புகளின் பெயர்களை பயன்படுத்தி ஒருசிலர் மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.
    • கூட்டத்தில் துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகள், மகளிர் தங்கும் விடுதி மற்றும் தனியார் விடுதி உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

    கோவை மாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் பெயர்களை பயன்படுத்தி ஒருசிலர் மோசடியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கைது செய்து உள்ளோம்.

    இன்னும் நிறைய அடுக்கு மாடி குடியிருப்புகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படாமல் உள்ளது. எனவே அங்கு விரைவில் கண்காணிப்பு காமிராவை பொருத்த வேண்டும். அப்போதுதான் குற்றசம்பவங்கள் நடந்தால், குற்றவாளிகளை கைது செய்ய ஏதுவாக இருக்கும்.

    கோவை மாநகரில் ஏராளமான கல்லூரி, தொழிற்சாலைகள் உள்ளன. எனவே வெளியூரில் இருந்து பலர் இங்கு வந்து தங்கி உள்ளனர்.

    அவர்கள் பற்றிய முழு விவரங்களை நீங்கள் கேட்டுப்பெற வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும்

    கோவை விடுதிகளில் தங்கி உள்ள ஒருசிலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம். அப்படி இருந்தால் அவர்கள் குறித்த தகவல்களை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இதற்காக நாங்கள் விரைவில் புதிய சாப்ட்வேரை அறிமுகப்படுத்த உள்ளோம். அதில் விடுதியில் அறை எடுத்து தங்குபவர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் குற்ற சம்பவங்கள் ஏதாவது நிகழ்ந்தால், குற்றவாளிகளின் விவரங்களை முழுமையாக அறிய உதவியாக இருக்கும். இதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு முகூர்த்த கால் நடும் விழா நடந்தது.
    • அனைத்து பிரிவு தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

        மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமி ஆணைக்கிணங்க வரும் ஞாயிற்றுக்கிழமை (9-ந்தேதி) காலை 7 மணி அளவில் விமான நிலையம் அருகே உள்ள வலையங் குளம் கருப்பு கோவில் அருகே அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டிற்கு முகூர்த்த கால் நடும் விழா நடைபெற இருக்கிறது.

    இந்த கால்கோள் நடும் நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    எனவே மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞர் அணி, மாணவரணி, மகளிர் அணி, வர்த்தக அணி, வழக்கறிஞர் பிரிவு, விவசாய பிரிவு, மீனவரணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, கலை பிரிவு இலக்கிய அணி, அண்ணா தொழிற்சங்கம், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு உள்பட அனைத்து பிரிவு தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை பயன்படுத்தலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வுசெய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளின் பயன்பாடற்ற நிலங்களை பண்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்வ தற்காக கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்படுத்திடும் வகையில் திட்டம் துவங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் கடந்த ஆண்டு 169 ஊராட்சிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிளஸ்டர் அமைத்து திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 261 ஊராட்சிகளில் 284 விவசாயிகள் கொண்ட கிளஸ்டர் அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 429 ஊராட்சிகளிலும் செயல்ப டுத்திட திட்டமிடப் பட்டுள்ளது.

    வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்ட கலைத்துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஒருங்கிணைந்து பயன்பாடற்ற விளை நிலங்களை கண்டறிந்து அந்த நிலங்களை சீரமைத்து பண்ணையை திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து, சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாய பணிகளை மேற்கொள் ளவும், தேவையான இடுபொருட்களை கூட்டுறவுத்துறை வழங்கிடும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால் இந்த திட்டம் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே தங்கள் ஊராட்சி பகுதிகளில் விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • "குருதி பிளாஸ்மா கொடுப்போம், வாழ்வை பகிர்ந்து கொள்வோம்"

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    இந்த பேரணியில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது குருதி பிளாஸ்மா கொடுப்போம், வாழ்வை பகிர்ந்து கொள்வோம்" என்ற பிரச்சார முழக்கத்துடன், விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர். முன்னதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு உடனடியாக ரத்தம் தேவை. எனவே ரத்ததானம் செய்வது மிகவும் அவசியம். எனவே நீங்கள் அனைவரும் ரத்ததானம் கொடுப்பது மட்டுமின்றி ரத்ததானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் போது இனம், மதம் பாகுபாடின்றி அனைவரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன்பிறகு உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், ஊட்டி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, துணை இயக்குநர் (சுகாதா ரப்பணிகள்) பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×