search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எழுச்சி மாநாடு முகூர்த்த கால் நடும் விழா
    X

    எழுச்சி மாநாடு முகூர்த்த கால் நடும் விழா

    • மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு முகூர்த்த கால் நடும் விழா நடந்தது.
    • அனைத்து பிரிவு தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமி ஆணைக்கிணங்க வரும் ஞாயிற்றுக்கிழமை (9-ந்தேதி) காலை 7 மணி அளவில் விமான நிலையம் அருகே உள்ள வலையங் குளம் கருப்பு கோவில் அருகே அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டிற்கு முகூர்த்த கால் நடும் விழா நடைபெற இருக்கிறது.

    இந்த கால்கோள் நடும் நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    எனவே மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞர் அணி, மாணவரணி, மகளிர் அணி, வர்த்தக அணி, வழக்கறிஞர் பிரிவு, விவசாய பிரிவு, மீனவரணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, கலை பிரிவு இலக்கிய அணி, அண்ணா தொழிற்சங்கம், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு உள்பட அனைத்து பிரிவு தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×