search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nilgirs"

    • கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடப்பட்டது
    • சிறந்த 3 கிடேரி கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் கால்நடை மருந்தக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.

    முகாமில், கால்நடைக ுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்யப்பட்டது.

    இதுதவிர சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளுதல், தாது உப்பு கலவை வழங்குதல், கால்நடைகளுக்கான சிறு கண்காட்சி அமைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.

    முகாமில், சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகள் 3 பேருக்கும், கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான பரிசுகளை 3 பேருக்கும், 10 பயனாளிகளுக்கு மினரல் மிக்சர் பாக்கெட்டுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, பாராட்டி னார்.

    முன்னதாக, மாவட்ட கலெக்டர் முகாமில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

    முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர். பகவத்சிங், முதன்மை நோய் நிகழ்வியல் அலு வலர் டாக்டர்.சத்திய நாராயணன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் டாக்டர்.எஸ்.பார்த்தசாரதி(ஊட்டி), டாக்டர்.நீலாவண்ணன்(கூடலூர்), பேராசிரியர் மற்றும் தலைவர், எஸ்.பி.ஆர்.எஸ் சாண்டி நல்லா டாக்டர்.என்.பிரேமா, கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர்.எம்.நாகஜோதி (சோலூர்), டாக்டர்.எம்.ராஜமுரளி (ஊட்டி), டாக்டர். ஏ.பொன்கலையாணி (ஊட்டி), மருதனிராஜ் (தலைகுந்தா),டாக்டர்.மேஜர் கணேஷ் (டி-ஆர்.பஜார்). சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹர்ஷத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3, 6 மாதங்களில் 60 லட்ச மதிப்பிலான 180 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உள்ளனர்.
    • சைபர் கிரைம் குற்றவாளிகள் செல்போன் மூலம் வலைவீசி வருகின்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் மூலம் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீஸ் எஸ்.பி பிரபாகர் கலந்து கொண்டு போலீசார் மீட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படை த்தார்.

    இதனை தொடர்ந்து போலீஸ் எஸ்.பி பிரபாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3, 6 மாதங்களில் 60 லட்ச மதிப்பிலான 180 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உள்ளனர். இதே போல் ஒரு கோடியே 23 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது அதன் ஒரு பகுதியாக இன்று 80 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து உள்ளோம்.

    சைபர் கிரைம் குற்றவாளிகள் செல்போன் மூலம் வலைவீசி வருகின்றனர். அவர்கள் அதிக வட்டி தருவதாகவும், பணத்தை இரட்டிப்பு செய்து கொடுப்ப தாகவும் ஆசைவார்த்தைகள் கூறி வருகின்றனர்.

    எனவே பொதுமக்கள் யாரும் சைபர்கிரைம் குற்றவாளிகளிடம் ஏமாறவேண்டாம். சைபர் கிரைம் சார்ந்த கு்ற்றங்களில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×