search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநடப்பு"

    • ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இன்று மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது.
    • கூட்டதிதல் தமிழக அரசு மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இதற்கு எதற்கு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இன்று மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது. துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான பொருளையும் கூறினார். அதனைத் தொடர்ந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக நடத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேப்போல் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரும் பல்வேறு பணிகள் குறித்து 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதன் பின்னர் அ.தி.மு.க மாநகராட்சி எதிர்க்கட்சித் துணைத்தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ் பேசும்போது, 31-வது வார்டில் ஏற்கனவே 11 போர்வெல்கள், மாநகராட்சி சார்பில் 4 போர்வெல்கள் என மொத்தம் 20 போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் அவற்றுக்கு முறையான டேங்க் ஆப்ரேட்டர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் கூட்டத்தொடரில் கவுன்சிலர்கள் பேசுவது பதிவு செய்யப்படுகிறதா? என்று தெரியவில்லை.

    ஏற்கனவே கவுன்சிலர்கள் புகைப்படம் எங்கு வைக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். அதை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் போதுமான தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்று பேசினார்.

    அப்போது இடையில் தி.மு.க. கவுன்சிலர் பேசினார். இதனால் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இடைய காரசார விவாதம் நடைபெற்றது.

    தொடர்ந்து அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து பேசுகையில், மாநகராட்சியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முழு நேரமும் டாக்டர்கள் நியமிக்கப்படாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாக்கடைகள் முறையாக தூர்வரப்படுவதில்லை, ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறினார்.

    மேலும் தமிழக அரசு மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்த மின் கட்டண அறிவிப்பு மக்களை பாதிக்கும். எனவே இதற்கு நாங்கள் எதற்கு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

    அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத் தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ், கவுன்சிலர்கள் தங்கவேல், நிர்மலா தேவி, ஹேமலதா, பாரதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகளை குறித்து விரிவாக பேசினர்.

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
    • வேறு இடம் பார்த்து ரேசன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

    ஆணையாளர் விஜய் குமார் பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பல வாசகங்களுடன் கூடிய தட்டிகளுடன் கூட்ட அரங்கில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளே நுழைந்தனர். அ.தி.மு.க. உறுப்பினர் பழனிச்சாமி பேசும்போது, எங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடை பழுதாகி உள்ளதால் கடை உரிமையாளர் கடையை காலி செய்ய சொல்கிறார்.

    வேறு இடம் பார்த்து ரேசன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் நகராட்சி தி.மு.க. உறுப்பினர் ஜேம்ஸ், ரேசன் கடைகளில் ரேகை வைக்கும் பிரச்சனை அனைத்து வார்டுகளில் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என கூறினார்.

    கூட்டத்தில் தொடர்ந்து துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சத்தியசீலன், அம்பிகா, ரங்கநாதன், வேல்முருகன், பாலசுப்ரமணி, கதிரவன், கோவிந்தராஜ், பரிமளா, மகேஸ்வரி, கிருஷ்ணவேணி, புஷ்பா, தீபா, சுமதி, செல்வி, உள்ளிட்ட பலர் வடிகால் வசதி, வாட்டர் டேங்க் முன் உள்ளமுள்செடிகள் அகற்றுதல், சாலை வசதி, மின் விளக்கு வசதி, சாக்கடை அடைப்பை சரி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதனை தொடர்ந்து சேர்மன் விஜய்கண்ணன் உறுப்பினர்களின் கோரிக்ைக பரிசீலிக்கப்படும் என்றார்.

    முந்தைய கூட்டத்தில் உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதன் காரணமாக இந்த கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகின்றது. மாலை 6 மணியளவில் இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தீர்மானம் மீதான விவாதம் முடிந்ததும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அப்படி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஒட்டெடுப்பு நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×