search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகள்"

    • மாவட்டம் முழுவதும் பத்து செந்தமிழ் நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்டமாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் அண்ணலகராஹரம் ஊராட்சி முகுந்தநல்லூரில் விளிம்புநிலை மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கல்யாணசுந்தரம் எம்.பி, அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் செந்தமிழ் நகர் என்ற விளிம்பு நிலை மக்களுக்காக பட்டா வழங்கி வீடுகள் கட்டும் திட்டம் தஞ்சாவூர் மாவட்ட நிர்வா கத்தால் அறிமுகப்ப டுத்தப்பட்டு செயல்படுத்த ப்பட்டு வருகிறது.

    இதுவரையில் மாவட்டம் முழுவதும் பத்து செந்தமிழ் நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இத்திட்டம் இரண்டு கட்டங்களை உள்ளடங்கியது. முதல் கட்டம் அந்த பட்டா கொடுப்பதற்கான தகுதியான இடங்களை நேரடி பேச்சுவார்த்தை மூலம் தனியாரிடமிருந்து பெறப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக குடிநீர், நல்ல சாலை, கழிவுநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டு ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்டமாகும்.

    இரண்டாவதாக ஒவ்வொரு பயனாளிகளுக்கும் நல்ல தரமான வீடுகள் கட்டிக் கொடுப்பது திட்டத்தின் நோக்கம் ஆகும். அந்த வகையில் கும்பகோணம் ஒன்றியம் அண்ணலகராஹரம் ஊராட்சி முகுந்தநல்லூர் விளிம்புநிலை மக்களுக்கு 38 விலையில்லா வீட்டு மனை பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, கும்பகோணம் ஒன்றிய குழு தலைவர் காயத்ரி அசோக்குமார், தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரிய நாராயணன், உதவி பொறியாளர்கள் சிவப்பிரகாசம், ஐயப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்டமாகும்.
    • ஒவ்வொரு வீடும் 320 சதுரடியில் மழை நேரங்களில் தண்ணீர் புகாதபடி உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் செந்தமிழ் நகர் என்னும் விளிம்பு நிலை மக்களுக்காக பட்டா வழங்கி வீடுகள் கட்டும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    இதுவரையில் மாவட்டம் முழுவதும் 10 செந்தமிழ் நகர் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் 2 கட்டங்களை உள்ளடக்கியது.

    பட்டா கொடுப்பதற்காக தகுதியான இடத்தை நேரடி பேச்சுவார்த்தை அந்த மூலம் தனியாரிடம் இருந்து பெறப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக குடிநீர், நல்ல சாலை, கழிவு நீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டு ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்ட மாகும்.

    2-வது கட்டமாக ஒவ்வொரு பயனாளிக்கும் நல்ல தரமான வீடுகள் கட்டி கொடுப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    இதில் முதல் கட்டமாக 10 செந்தமிழ் நகர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    2-வது கட்டமாக 4 செந்தமிழ் நகரில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பூதலூர் ஒன்றியம் புதுக்குடி ஊராட்சியில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்க ளுக்கு 13 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த வீடுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

    முன்னதாக கலெக்டர் உள்ளிட்டோரை நரிக்குறவர் சமுதாய மக்கள் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.

    இந்த வீடுகள் மாவட்ட கலெக்டரின் தன் விருப்பநிதி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடனுதவி திட்டத்தின் மூலமாகவும் நிறைவேற்றப்ப ட்டுள்ளது. வீடுகளை திறந்து வைத்த பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறி யதாவது:-

    விளிம்பு நிலை மக்களின் நலனில், மிகுந்த அக்கறை கொண்டு, கடந்த ஆண்டு, அவர்களின் குடியிருப்புக்கு நேராக சென்று, அவர்களோடு உணவு சாப்பிட்டு குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்வதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்.

    மேலும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் விளிம்புநிலை மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

    குறிப்பாக, சாதி சான்றிதழ் போன்ற, அடிப்படை தேவைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும்.

    அடுத்த கட்டமாக வீடு, மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் தற்போது தஞ்சை மாவட்டம் புதுக்குடி கிராமத்தில் 40 சென்ட் நிலத்தை தனியார் ஜனகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் விலையின்றி இந்த இடத்தை விளிம்பு நிலை மக்களுக்கு அளித்தனர்.

    இதையடுத்து இங்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    நல்ல தரமான வீடுகளாக கட்டப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு வீடும் 320 சதுர அடியில் மழை நேரங்களிலே, தண்ணீர் புகாதபடி உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.

    இந்த 13 வீடுகளும் திறந்து வைக்கப்ப ட்டுள்ளது.

    இதனால், இந்த விளிம்புநிலை மக்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். முதல்-அமைச்சரின் இந்த சிறப்பு திட்டத்தில் இந்த வீடுகளை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ, ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, பூதலூர் ஒன்றியக் குழுத் தலைவர் அரங்கநாதன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அடிப்படை வசதி செய்து கொடுக்காததால் பயனாளிகளால் புறக்கணிக்கப்பட்ட சுனாமி வீடுகள் சமூக விரோதிகள் கூடாரமாக மாறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    • சீமை கருவேல மர காடுகளுக்குள் வீடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட மக்களை சுனாமி பேரலை பாதிப்பிலிருந்து பாதுகாக்க திட்டம் வகுத்து கோடிகளை கொட்டி 144 கான்கிரீட் வீடுகளை கட்டி மணல் குடியில் ரம்மியமான கிராமம் அமைக்கப்பட்டது. அங்கு அடிப்படை வசதிகளோ வாழ்வாதார முன்னேற்பாடுகளோ செய்து கொடுக்கப் படாததால் குடியிருப்பு காலியாகி கருவேலமரம் மண்டிக்கிடக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி சுனாமி தாக்கியதில் தமிழகத்தில் மட்டும் 2,758 பேர், புதுவையில் 377 பேர். தென்னிந்தியாவின் மொத்த பொருளாதார இழப்பில் 50 விழுக்காட்டை(சுமார் ரூ.4,700 கோடி) அளவுக்கு, தமிழகம் சந்தித்தது. இதனால் திரும்பும் திசையெங்கும் மரண ஓலம் பசி பட்டினியில் வாடிய மக்களை மீள் கட்டமைப்பு செய்வதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதிலும் குறிப்பாக வீடுகளை இழந்து தவிக்கும் பாதுகாப்பாற்ற மீனவ மக்களுக்கு இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களை கவலையின்றி பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை மத்திய அரசின் நிதி உதவியோடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ராஜீவ்காந்தி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டப்பட்டது.

    அதனை பேரலை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளின் போது பாதிக்கப்பட்ட மக்களை தேர்வு செய்து கடந்த 2009-10-ம் நிதியாண்டில் வழங்கப்பட்டது.

    இந்தமாதிரியான மீனவ குடியிருப்புகள் பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதியில் கட்டப் பட்டுள்ளதை போல் ராமநாதபுரம் மாவட்டம் மணக் குடியில் அமைந்துள்ளது.

    மணக்குடி ஆற்றுநீர் கடலில் கலக்கும் ரம்மியமான முகத்துவாரம் பகுதி இயற்கையின் பசுமை மாறாது மண்மணக்கும் இடமாக இருக்கும் இந்த மணக்குடியில் க ழிவறை, படுக்கை அறை, வரவேற்பறை என அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட 144 கான்கிரீட் சுனாமி வீடுகள் ரூ.425.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு ஆழிப் பேரலையில் பாதிக்கப்பட்டு பகுதியில் வாழ்ந்துவந்த மீனவ மக்களுக்கு வழங்கப்பட்டது.

    மீனவ கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வாழ்வாதாரமே மீன்பிடி தொழில்தான். தற்போது மீனவ கிராமங்களிலிருந்து மீள்குடியேற்றம் என்ற பெயரில் வேளாண் பகுதியில் அவர்களை குடியேற்றியதால் வாழ்வாதாரத்திற்கு அவர்களால் என்ன செய்ய இயலும்?.

    இந்த கிராம மக்கள் போக்குவரத்து, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் வாழ தகுதியற்று தனித்து விடப்பட்டதை போல இருந்ததால் பேரெழுதி பூஜை போட்டு மகிழ்வோடு குடியேறினர். மக்கள் ஒரு சில மாதங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக வீட்டை காலி செய்ய தொடங்கி ஒட்டுமொத்த கிராமமே காலியானது.

    வசிக்க மக்கள் இல்லாததால் மெல்ல மெல்ல சமூக விரோதிகளின் கூடாரமாகி சீமை கருவேலமரம் வளரவே வீட்டை சுற்றி காடு என்ற நிலை மாறி இப்போது சீமை கருவேலமர காடுகளுக்குள் வீடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மது, மாது என ஊருக்கு ஒதுக்குபுறமாக எந்த தொந்தரவும் இல்லாத ரிசார்ட்டாக மாறியுள்ள மணக்குடி சுனாமி வீடுகள் இப்போது சமூக விரோதி களின் கூடாரமாக மாறி வருகிறது.

    இது தொடர்பாக கருப்பன் குடும்பன் பச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் சதீஷ்குமார் கூறுகையில், அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தகுதி வாய்ந்த சரியான பயனாளிகள் தேர்வு செய்யப்படாமல் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு வீடு ஒதுக்கியதால் இங்கு குடியேற மக்கள் முன்வர வில்லை. மணக்குடி சுனாமி குடியிருப்பில் குடிநீர், போக்குவரத்து, மின்சாரம், சாலை, மருத்துவம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப் படாததால் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என பாதிக்கப்பட்ட பயனாளிகள் கூறுகின்றனர் என்றார்.

    • ரூ.4.51 கோடியில் இலங்கை அகதிகளுக்கு 90 வீடுகள் கட்டும் பணிகளை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஆய்வு செய்தார்.
    • முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களை சேர்ந்த 3ஆயிரத்து 242 பேர் உள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஒக்கூர் ஊராட்சியில் இலங்கை அகதிகளுக்கான குடியிரு ப்புக்கள் கட்ட ப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் குறித்து, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) ஜெசிந்தா லாசரஸ் , கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் முகாம் வாழ் தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

    இந்த ஆய்வின்போது, கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-

    நமது அண்டை நாடான இலங்கையில் நெருக்கடியான சூழ்நிலை யின் காரணமாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த ஈழத்தமிழர்களின் நலனை காக்கும் வகை யில் அவர்களின் தாய் தமிழகமாக திகழ்ந்து வரும் தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மற்றும் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தமிழக அரசு அவர்களுக்கு வழங்கி பாதுகாத்து வருகிறது.

    அதன்படி சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊரணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய

    6 பகுதிகளில் முகாம் வாழ் தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளது. அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கென அரசுத்துறைகளுடன் தனியார் தொண்டு நிறுவ னங்களின் பங்களிப்புடன் ஆய்வு செய்து, அதனை ஆலோசனைக் குழுவின் மூலம் பரிசீலித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களை சேர்ந்த 3ஆயிரத்து 242 பேர் உள்ளனர். அதில் ஒக்கூர் ஊராட்சியில் மட்டும் 236 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒக்கூர் ஊராட்சியில், ஒரு குடும்பத்திற்கு 300 சதுர அடி வீடும், 20 சதுர அடி கழிப்பிடமும் என 320 சதுர அடியில் 88 தொகுப்பு வீடுகளும், 2 தனி வீடுகளும் மொத்தம் 90 வீடுகள் என ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை விரைந்து தரமான முறையில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் விசாலாட்சி, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமா அருணாசலம், வட்டாட்சியர் பாலகுரு, தனி வட்டாட்சியர் (இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு) உமா உள்பட பலர் உடனிருந்தனர்.

    • செங்கிப்பட்டியில் எங்களுக்கு சொந்தமாக குடிமனையோ, வீடுகளோ கிடையாது.
    • ஆதிதிராவிட மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்கி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி சேர்ந்த பொதுமக்கள் 60-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் காமராஜ், மாதர் சங்க மாவட்ட செயலாளர்கள் தமிழ் செல்வி , தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா செங்கிப்பட்டியில் எங்களுக்கு சொந்தமாக குடிமனையோ, வீடும் கிடையாது.

    ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக ஆதிதிராவிட மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்கி உள்ளது. அதில் நீண்டகாலமாக குடியேறாமல் காலிமனை உள்ளது.

    குடியேறாமல் இருக்கும் காலி குடிமனை பட்டாவை ரத்து செய்து புதிதாக குடியேறி இருக்கும் எங்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் சுமார் 50 ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகின்றனர்
    • 50 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த இடத்தை விட்டு அகற்றினால் நாங்கள் இந்த இடத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றனர்.

    கன்னியாகுமரி:

    தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் சுமார் 50 ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் தனியார் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற தர்மபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பாக தலைவர் ரெங்க நாயகி கணேசன், ஊராட்சி செயலர் பாமா ஆகியோர் சம்பவ இடம் சென்றனர்.

    அவர்கள் பொக்லைன் எந்திரம் மற்றும் ஆட்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், வயதான முதியோர்கள், குழந்தைகள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள், 50 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த இடத்தை விட்டு அகற்றினால் நாங்கள் இந்த இடத்திலேயே தீக்கு ளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் ஈத்தா மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாமி தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். தர்மபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி ராம லெட்சுமி (பொறுப்பு), ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் செய்யது அலி பாத்திமா, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கனக பாய், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோரும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொது மக்கள், நாங்கள் வசித்து வரும் குடியிருப்பு வீடுகளை உடனடியாக காலி செய்து மாற்று இடத்திற்கு செல்ல முடியாத நிலையில் வறுமை யில் உள்ளோம். எங்கள் மீது மாவட்ட நிர்வாகம் கருணை கூர்ந்து நாங்கள் குடியிருப்பதற்கு மாற்று இடம் தந்து உதவ வேண்டும், முடியாத பட்சத்தில் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    இதன் பேரில் அதிகாரிகள் தற்காலிகமாக ஆக்கிர மிப்பு அகற்றுவதை நிறுத்தி வைத்து உள்ளனர்.

    • பெரியபட்டினத்தில் வீடுகளை காலி செய்ய பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
    • யூனியன் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கமிஷனர் ராஜேந்திரன் வரவேற்றார். அலுவலக உதவியாளர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத் தலைவர் சிவலிங்கம்: மாயாகுளத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும். கிராம சபை கூட்டத்தில் 100 நாட்கள் பணியாளர்களை வைத்து கூட்டம் நடத்துகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    பைரோஸ்கான்: பெரியபட்டினம் ஊராட்சியில் ஜலாலியா நகர், தங்கையா நகர் ஆகிய பகுதிகளில் 2011-ம் ஆண்டு 80 பேருக்கு அரசு இலவச பட்டா வழங்கி உள்ளது.இந்த இடத்தில் கடந்த 11 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்கள் குடியிருந்து வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த மக்களை வீடுகளை விட்டு காலி செய்யுமாறு ஊராட்சி தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

    கமிஷனர்: இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

    கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி: காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட செங்கழுநீர்ஓடை, அலை வாய்க் கரைவாடி, ஸ்ரீநகர், கோகுலம் நகர், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் வருவதில்லை. அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கலாராணி: இந்த யூனியன் கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் கோரிக்கையை யாரும் முழுமையாக கேட்பதி ல்லை. எங்களின் குரலை கேட்டால்தான் மக்களின் குரலை நிவர்த்தி செய்ய இயலும். அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருமுருகன்: ஆலங்குளம் கண்மாயில் அடர்ந்து வளர்ந்த கருவேல் மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மழைக்காலங்களில் நீரை தேக்க வழி இல்லாமல் உள்ளது. ஆலங்குளத்தில் துணை சுகாதார நிலையம் சேதமடைந்த நிலையில் உள்ளது.

    சுமதி ஜெயக்குமார்: முத்து ப்பேட்டை ஊராட்சியில் ஏராளமானோருக்கு டெங்கு நோய் பாதிப்பின் அறிகுறி உள்ளது. கொசு மருந்து அடித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெரியபட்டினம் கவுன்சிலர் பைரோஸ் கான்: ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீருக்காக ரூ. 2,883 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பி.டி.ஓ. கணேஷ் பாபு நன்றி கூறினார்.

    • ஆத்திரமடைந்த புரோகிதர்கள் ஐயாவாளை சபித்தனர்.
    • நீர் தெருவெங்கும் ஓடியதால் வீடுகள் அனைத்தும் நீரால் சூழ்ந்தது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருவிசநல்லூரில் ஸ்ரீதரஐயவாள் என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன் பக்திநெறி தவறாமல் வாழ்ந்து வந்தார்.

    ஒரு சமயம் தன் தந்தையாருக்கு நீத்தார் கடனைச்செலுத்து வதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதற்காக புரோகி தர்கள் சிலரை வரவழைத்து சம்பிரதாயப்படியான சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு அந்த புரோகிதர்களை நீத்தாராக பாவித்து வணங்கி, அவர்களுக்கு உணவிட்ட பிறகு தான் குடும்பத்தில் உள்ளவர்கள் பசியாற வேண்டும்.

    அந்த நேரத்தில் வீட்டு வாசலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பசியால் சுருண்டு விழுந்து கிடந்ததை பார்த்துவிட்டார். உடனே சமைத்து வைத்திருந்த உணவை எடுத்துச் சென்று, பசியால் மயங்கி கிடந்த அவருக்கு ஊட்டிவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த புரோகிதர்கள் ஐயாவாளை சபித்தனர். இங்கு தீட்டுபட்டுவிட்டது. நீ கங்கைக்கு சென்று நீராடி வந்தால் தான் அவை சரியாகும் என கூறினர். ஐயவாளும் கங்கை சென்று நீராடி வர பல மாதங்கள் ஆகும். அதுவரை தந்தையின் பிதுர்கடன் தீராமல் அல்லவா இருக்கும் என்ன செய்வது என கடவுளை நினைத்து வேண்டினார்.

    அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் கங்கை நீர் பொங்கியது. இந்த நீர் தெருவெங்கும் ஓடியதால் வீடுகள் அனைத்தும் நீரால் சூழ்ந்தது. உடனடியாக மக்கள் ஐயவாளிடம் வந்து முறையிட்டு கங்கையை அடக்குமாறு வேண்டினர். அதே போல் ஐயாவாளும் செய்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று நடைபெற்றது.

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை அமாவாசையை கங்காவரதண மகோத்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று அதிகாலை 4.00 மணி முதல் புனித நீராடல் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நீராடினர். பின்னர் காவிரி ஆற்றுக்கு சென்று அங்கும் நீராடி மடத்தில் சிறப்பு அலங்காரத்தில் உள்ள ஸ்ரீதர ஐயவாளை வழிபட்டனர்.

    • 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
    • நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 11 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    2020ம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத காங்கயம் சத்யா நகா், தொட்டியபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-

    காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றாா்

    • வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை.
    • சேதமடைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தை புதிதாக கட்டித்தர நடவடிக்கை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கிடங்கள், காலமாநல்லூர், சின்ன ங்குடி, கீழையூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பார்வையிட்டு வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்,

    மேலும் சின்னங்குடி மீனவர் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையம், அரசினர் உயர்நிலைப்பள்ளி சுற்றி குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றவும் சேதமடைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தை புதிதாக கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்களிடம் உறுதியளித்தார்.

    அதைத் தொட ர்ந்து கீழையூர், கிடாரங்கொ ண்டான், புன்செய், தலைச்சங்காடு உள்ளிட்ட ஊராட்சிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிரு ப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து ஆறுதல் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஒன்றிய உதவி செயற்பொறியாளர் முத்துகுமார், ஒன்றிய குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
    • கோட்டார் ரெயில் நிலையம் பகுதியில் 35 வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் இருந்து வந்தது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறக்கிங்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. அங்கு குடியிருந்தவர்களுக்கு அஞ்சுகிராமம் அருகே உள்ள பால் குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டது.

    இதுபோல் கோட்டார் ரெயில் நிலையம் பகுதியில் 35 வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் இருந்து வந்தது. இந்த வீடுகளில் குடியிருந்து வந்தவர்களை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை கடந்த சில மாதத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கியது. அதன்படி வீடுகளில் குடியிருந்து வந்தவர்கள் வீடுகளை காலி செய்தனர். இந்த நிலையில் இன்று காலை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி தலைமையில், வருவாய் அதிகாரி ராமலிங்கம், கிராம நிர்வாக அதிகாரி லோகன்ராஜ் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லைன் உதவியுடன் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் இருந்த 35 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

    ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • ஒகளூர் கிராமத்தில் 5 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது
    • கோர்ட்டு உத்தரவின்படி நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் கோர்ட்டு உத்தரவின்படி அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஓகளூர் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து வாய்க்காலில் சில குறிப்பிட்ட பகுதி குடியிருப்பு பகுதியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனை அறிந்த குன்னம் தாசில்தார் அனிதா சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டார். அதன்பின்னர் கோர்ட்டு உத்தரவின் படி 5 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன."

    ×