search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடித்து அகற்றம்"

    • ஒருவர் வீடுகள் உள்ள நிலம் தனக்கு சொந்தமானது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
    • ஜே.சி.பி. எந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட சக்தி நகரில் சுமார் 30ஆண்டு காலமாக 13 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த 2001-ம் ஆண்டு நத்தம் புறம்போக்கு நிலத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்கினர். அதைத்தொ டர்ந்து 13 குடும்பத்தினரும் வீடு கட்டி வசித்து வருகி ன்றனர்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் 13 வீடுகள் உள்ள நிலம் தனக்கு சொந்தமானது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் பொது மக்கள் தரப்பில் சரியாக ஆஜராகாத நிலையில், தனி நபருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் வீடுகளை காலி செய்து கொள்ளுமாறு தனியார் சார்பில் பேனர் வைக்க ப்பட்டது.

    கடந்த மாதம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த முயன்றனர். அதற்காக மின் இணை ப்புகள் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதனையடுத்து அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் வீடுகளை காலி செய்தனர். இந்த நிலையில் இன்று காலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த 13 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

    • தமிழக அரசு இந்த பஸ் நிலையத்தை புனரமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.
    • நகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் 40 ஆண்டுகள் பழமையான பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் நுழைவு வாயிலான மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கல்விக்காகவும், பணிகளுக்காகவும், கோவை, திருப்பூர், நீலகிரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் அதிகளவில் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சுமார் 40 ஆண்டு கால பழமையான மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தின் பல்வேறு பகுதிகள் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகின்றன. இதனால் தமிழக அரசு இந்த பஸ் நிலையத்தை புனரமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தர விட்டது.

    இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தில் காரமடை, வெள்ளியங்காடு, அன்னூர், புளியம்பட்டி செல்லும் பஸ்கள் நிற்கும் நிறுத்தத்தில் இருக்கும் கட்டிடத்தின் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் இருந்தன.

    இதனை அறிந்த மேட்டுப்பாளையம் நகர் மன்றத்தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், வருவாய் ஆய்வாளர் ஆரிப் உள்ளிட் டோர் கட்டிடங்களின் மேல் தளத்தை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டிடங்களின் மேல் தளத்தை பயணிகளின் பாதுகாப்பு கருதி நகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. முன்னதாக இந்த கட்டிடத்தின் வழியாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் செல்லாதவாறு கயிறுகளை கட்டி நகராட்சி பணியாளர்கள் மூலம் எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
    • கோட்டார் ரெயில் நிலையம் பகுதியில் 35 வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் இருந்து வந்தது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறக்கிங்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. அங்கு குடியிருந்தவர்களுக்கு அஞ்சுகிராமம் அருகே உள்ள பால் குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டது.

    இதுபோல் கோட்டார் ரெயில் நிலையம் பகுதியில் 35 வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் இருந்து வந்தது. இந்த வீடுகளில் குடியிருந்து வந்தவர்களை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை கடந்த சில மாதத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கியது. அதன்படி வீடுகளில் குடியிருந்து வந்தவர்கள் வீடுகளை காலி செய்தனர். இந்த நிலையில் இன்று காலை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி தலைமையில், வருவாய் அதிகாரி ராமலிங்கம், கிராம நிர்வாக அதிகாரி லோகன்ராஜ் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லைன் உதவியுடன் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் இருந்த 35 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

    ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • காவிரி ஆற்றங்கரையோரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பரிகார கடைகள் அமைத்து இருந்தனர்.
    • அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 14 கடைகளை 4 ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடித்துஅகற்றும் பணியை தொடங்கினர்.

    கொடுமுடி:

    ஈேராடு மாவட்டம் கொடுமுடியில் புகழ்பெற்ற மகுடேஸ்வரர் கோவில் உள்ளது. காவிரி கரையோரம் அமைந்துள்ள இந்த கோவில் சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.

    இதனால் இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடிய பின்னர் ஆற்றோரம் உள்ள பரிகார கடைகளில் பரிகாரம் செய்து விட்டு பின்னர் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பரிகார கடைகள் அமைத்து இருந்தனர்.

    இதையடுத்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுப்பணித்துறை சார்பில் பல முறை நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் யாரும் கடையை அகற்ற வில்லை.

    இந்த நிலையில் இன்று காலை கோர்ட்டு உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் போலீசாருடன் கொடுமுடி காவிரி ஆற்றங்கரைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 14 கடைகளை 4 ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடித்துஅகற்றும் பணியை தொடங்கினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் அதிகாரிகளிடம் எங்கள் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கொடுங்கள் என்றனர். ஆனால் தேவையான அனுமதி கொடுத்து விட்டோம் என்று கூறிவிட்டனர்.

    கடைகள் இடித்து அகற்றப்படுவதை பார்த்து ஒரு சில வியாபாரிகள் கதறி அழுதனர். ஆனாலும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து அங்கு பதட்டமான நிலை உருவாகி உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் அதிகாரிகளிடம் பேசினார்

    நாகர்கோவில்:

    வடக்கு தாமரைகுளம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் ஏராள மான வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்றம் இடிக்க உத்திரவிட்டிருந்தது.

    இதன்படி இந்த பகுதியில் உள்ள வீடுகளை மாற்ற பொதுப்பணித்துறை அதிகா ரிகள் அவகாசம் அளித்தி ருந்தனர். இந்நிலையில் நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் போலீசாரின் பாதுகாப்புடன் அண்ணா நகர் பகுதிக்கு வந்து ஆக்கிர மிப்பில் இருந்த வீடுகளை இடிக்க தொடங்கினர்.

    இந்தப் பகுதியில் வசிக் கும் மக்களுக்கு ஏற்க னவே வேறு இடங்களில் இடம் ஒதுக்கப்பட்டு அங்கு வீடு களும் கட்டிக் கொடுக் கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் இன்னும் இடங்களும், வீடுகளும் ஒதுக்கப்படாமல் உள்ளது. இதனால் குறிப்பிட்ட அந்த வீடு களை மட்டும் விட்டு விட்டு மற்ற வீடுகளை அதிகாரிகள் இடித்து மாற்றினர்.

    வீடுகள் இடித்து அகற்றப் பட்ட தகவல் அறிந்த கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    பின்னர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.

    • ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன
    • கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அப்பகுதியில் கடைகள் கட்டப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

    ×