search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு வீடுகள்"

    • சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் இன்னும் முடியவில்லை.
    • பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜே.சி.பி.எந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் காட்டூர் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிநடந்து வருகிறது. ரூ.55 கோடி மதிப்பில் கடந்த 2018-ம்ஆண்டு இந்த பணி தொடங்கப்பட்டு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் இன்னும் முடியவில்லை.

    இது தொடர்பாக காட்டூர் சாலை அரியன்வாயில் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் 20-க்கும் மேற்பட்ட கடைகள், 17 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றப்படவில்லை.

    இந்நிலையில் உதவி பொறியாளர் ஜெயமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் வீடு, கடைகளை அகற்ற ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தனர். அவர்களிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜே.சி.பி.எந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திர சேகர், பேரூராட்சித் தலைவர் ருக்மணி மோகன் ராஜ், பொன்னேரி தாசில்தார் மதிவாணன், கிராம நிர்வாக அலுவலர் சாந்தி, கவுன்சிலர் அபூபக்கர் ஆகியோர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வருகிற 5-ந் தேதிக்குள் தாங்களே ஆக்கிரமிப்பு வீடு, கடைகளை அகற்றி கொடுப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வீடு, கடைகளை இடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    • வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றாமல் இருந்தனர்.
    • காலி செய்யாமல் இருந்த 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரத்துடன் அகற்றும் பணி இன்று தொடங்கியது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் நகரப் பகுதிக்குள் வேகவதி ஆறு பாய்கிறது. ஆற்றின் கரையோரத்தில் இரு புறங்களிலும் ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் வேகவதி ஆற்றின் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற போது அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிர்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டது.

    ஆனால் வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றாமல் இருந்தனர். இதனால் வேகவதி ஆறு தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்தது.

    இந்நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையடுத்து வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத் துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தாயார் குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் கரையோரம் அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு காலி செய்யாமல் இருந்த 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரத்துடன் அகற்றும் பணி இன்று தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் வருவாய்த்து றையினரும் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை கண்காணித்து வருகிறார்கள். வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் முழுவதையும் அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் 50 வருடங்களுக்கு மேலாக 3 தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம்.
    • பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர்.

    சென்னை:

    சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரை பகுதியை ஆக்கிரமித்து 200 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த 200 வீடுகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக அறிவித்தனர்.

    இந்நிலையில் நேற்று காயிதே மில்லத் நகர், டோபி கானா நகர், தாய் மூகாம்பிகை நகர் மற்றும் சாந்தி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக கூறி வருவாய் துறையினர் நோட்டீஸ் அளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் இந்த பகுதியில் நாங்கள் 50 வருடங்களுக்கு மேலாக 3 தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம்.

    எங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் அளிக்காமல் இப்பொழுது நாங்கள் வாழ்ந்து வரும் இந்த பகுதியை காலி செய்து கொண்டு போகச் சொன்னால் நாங்கள் எங்கே போவோம் என்று கூறி புலம்பியபடி பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர்.

    இதனையடுத்து தங்களை காலி செய்ய சொல்வதற்கு பதிலாக ஆற்றின் கரைகளை வலுப்படுத்தி சுவர் எழுப்பி தங்களை தாங்கள் வாழ்ந்த இந்தப் பகுதியிலேயே வாழ விட வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கையும் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறையின் உதவியோடு 10 வீடுகளை இடித்தனர். மீதமுள்ள 190 வீடுகள் வருகிற திங்கள் கிழமைக்கு மேல் அகற்றப்படும் என தெரிவித்தனர்.

    • ஏ.வி.எம்.கால்வாயை தூர்வார ரூ.4 கோடியில் திட்டமதிப்பீடு
    • மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் நாட்டு படகுகள், விசைப்படகுகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையில் தற்பொழுது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்டு கூட்டம் முறையாக நடத்த வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் குளச்சல் பகுதியில் உள்ள மீனவர்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கோவளம் பகுதியில் தூண்டில் வளைவுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே உடனடியாக அந்த பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறும்பனை பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும்.

    மண்டைக்காடுபுதூர் முதல் குளச்சல் வரை உள்ள ஏ.வி.எம். கால்வாயில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். சைமன் காலனி ஊராட்சி பகுதியில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூத்தூர் ஊராட்சி பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரியில் சீசன் தொடங்கி இருப்பதால் நடைபாதையில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு பதில் அளித்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    மீனவர்கள் தங்களது படகுகளை புதுப்பித்துக் கொள்வது தொடர்பாக கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும். ஏற்கனவே கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டத்தில் ஒரு மாதமும், கிழக்கு மாவட்டத்தில் ஒரு மாதமும் படகுகளை புதுப்பித்துக் கொள்ள அவகாசம் வழங்கப்படும்.

    மேற்கு மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி குளச்சலில் வைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். எந்த மாதத்தில் படகு புதுப்பிக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கோவளத்தில் தூண்டில் வளைவு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. பெரியகாட்டில் ரூ.6 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேல்மிடாலம் ரேஷன் கடைகளில் மண்எண்ணெய், பாமாயில் இந்த மாதம் குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் கிடைக்காதவர்களுக்கு அடுத்த மாதம் முன்னுரிமை அடிப்படையில் மண்எண்ணெய், பாமாயில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஏ.வி.எம். கால்வாயை தூர்வாரும் பணிக்கு ரூ.4 கோடியே 8 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

    குமரி மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டு உள்ளது.

    சைமன் காலனி பகுதியில் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக பஞ்சாயத்து தலைவருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தூத்தூர் ஊராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் முடிவடைந்ததும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். கன்னியாகுமரியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏரி கால்வாய்களில் கட்டியிருந்ததால் நடவடிக்கை
    • அதிகாரிகள் ஆய்வு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி அருகே ஏரி கால்வாய் செல்கிறது. இதனை ஆக்கிரமித்து 48 வீடுகள் கட்டப்பட்டதால், அங்கு வெளியேறும் தண்ணீர் மருத்துவமனை மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.

    இதனை அகற்றக் கூறி பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் இன்று காலை 7 மணி முதல் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணியில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அகற்றப்பட்டு வரும் வீடுகளில் ஒரு சிலர் தாங்களே அகற்றி கொள்வதாக கூறியதால், அந்த கட்டிடங்களை மட்டும் இடிக்காமல் மற்றவையை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்‌.

    போலீஸ் பாதுகாப்பு

    சம்பவ இடத்தில் வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாணியம்பாடி தாசில்தார் சம்பத், நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் அதிகாரிகளிடம் பேசினார்

    நாகர்கோவில்:

    வடக்கு தாமரைகுளம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் ஏராள மான வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்றம் இடிக்க உத்திரவிட்டிருந்தது.

    இதன்படி இந்த பகுதியில் உள்ள வீடுகளை மாற்ற பொதுப்பணித்துறை அதிகா ரிகள் அவகாசம் அளித்தி ருந்தனர். இந்நிலையில் நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் போலீசாரின் பாதுகாப்புடன் அண்ணா நகர் பகுதிக்கு வந்து ஆக்கிர மிப்பில் இருந்த வீடுகளை இடிக்க தொடங்கினர்.

    இந்தப் பகுதியில் வசிக் கும் மக்களுக்கு ஏற்க னவே வேறு இடங்களில் இடம் ஒதுக்கப்பட்டு அங்கு வீடு களும் கட்டிக் கொடுக் கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் இன்னும் இடங்களும், வீடுகளும் ஒதுக்கப்படாமல் உள்ளது. இதனால் குறிப்பிட்ட அந்த வீடு களை மட்டும் விட்டு விட்டு மற்ற வீடுகளை அதிகாரிகள் இடித்து மாற்றினர்.

    வீடுகள் இடித்து அகற்றப் பட்ட தகவல் அறிந்த கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    பின்னர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.

    • அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்புத்தொகைக்கு கடன் உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
    • மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சாயப்பட்டறை வீதி நீர்நிலை புறம்போக்கில் பொதுமக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு வீடுகளை காலி செய்யச்சொல்லி, நோட்டீஸ் வழங்கினர். இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை காலி செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. நெருப்பெரிச்சல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டது. மேலும் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய குலுக்கல் முறை நடந்தது. அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்புத்தொகைக்கு கடன் உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு உரிய தகவல் அளிக்காததால் தொகை செலுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×