என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Occupied houses"

    • ஒரு குடும்பத்திற்கு இடமாற்றுப்படியாக ரூ.5000, வாழ்வாதார உதவிக்காக ஓராண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படுகிறது.
    • உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.

    சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, அங்கிருந்தவர்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    அதன்படி அவர்களுக்கு, ரூ.17 லட்சம் மதிப்பிலான 390 சதுர அடியில் இலவச வீடுகள் வழங்கப்பட உள்ளன.

    மேலும், ஒரு குடும்பத்திற்கு இடமாற்றுப்படியாக ரூ.5000, வாழ்வாதார உதவிக்காக ஓராண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படுகிறது.

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அடையாறு நதியை சீரமைக்க தமிழ்நாடு அரசின் புதிய நிறுவனமான சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் (CRTCL) மூலம் ரூபாய் 1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தினை செயல்படுத்த நடப்பு ஆண்டில் தமிழக அரசு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை அறவே தடுத்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும்.

    இதன் ஒரு பகுதியாக அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர்.

    சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3வது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலூர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில் இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளன. (ஒரு வீடு 17 லட்சம்: 390 சதுர அடி)

    மேலும், அடையாறு ஆற்றங்கரையில் உள்ள ஜோதி ராமலிங்கம் நகர். திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகர்ஆகிய 5 இடங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு 390 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக சுமார் ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

    மேலும், பயனாளிகளுக்கு குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுப்படியாக ஒருமுறை ரூபாய் 5000. வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூபாய் 2500 என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ரூபாய் 30000. மின்சார இணைப்பு கட்டணம் ரூபாய் 2500 என்ற அடிப்படையிலும் குடியமர்விற்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக விரிவான சமுதாய வளர்ச்சி திட்டங்கள். உடனடி குடும்ப அட்டை மாற்றம் செய்தல், விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி சமூக பாதுகாப்பு திட்ட உதவி மாற்றம் செய்தல், கல்வி, அங்கன்வாடி, தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி சேர்க்கை போன்ற அனைத்து திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், மாண்பமை உயர்நீதிமன்ற நீதிமன்ற உத்தரவின்படி ஆற்றங்கரையில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மறு குடியமர்விற்கு ஒப்புதல் தராத ஆக்கரமிப்பாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், நதிநீர்சீரமைப்பு திட்டம் என்பதாலும், மழைக்கால வெள்ளத்தடுப்பு காரணங்களுக்காக ஆற்றங்கரையில் வசிக்கும் ஆக்கரமிப்பாளர்களை அரசு உரிய உதவிகளுடன் மறு குடியமர்வு செய்து வரும் அரசின் இந்த செயலுக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
    • கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம் ஊராட்சி உள்ளது. இங்கு ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.

    இந்த நிலங்களில் பலர் உரிய அனுமதி பெற்று வீடு கட்டி கோவிலுக்கு வரி செலுத்தி வசித்து வருகின்ற னர். 25-க்கும் மேற்பட்ட வீடுகள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளன. இந்த நிலையில் சிலர் கோவிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை முறையாக செலுத்தாமலும், கோவில் நிலத்தில் உரிய அனுமதி யின்றியும் கட்டிடம் கட்டி வசித்து வந்ததாக கூறப்படு கிறது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கு தெரியவந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதியின்றி வசித்து வருபவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் படியும், வரி செலுத்தாத வர்கள் வரி பாக்கியை செலுத்துமாறும் பலமுறை நோட்டீஸ் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதில் தீர்வு ஏற்படாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் அனுமதியின்றி கட்டிடம் கட்டி வசித்து வந்த வீடுகளை, இடித்து அப்புப்புறப்படுத்தும்படி நிலம் மீட்பு தீர்ப்பாணையம் உத்தரவிட்டது.

    இதையடுத்து கோவில் அதிகாரிகள் அனுமதியின்றி கட்டப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் வீட்டை காலி செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து நேற்று மாலை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனுமதியின்றி கட்டப்பட்ட2 வீடுகளை இடித்து அகற்றுவ தற்காக போலீசாருடன் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த வர்களை வெளியே செல்லும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு வீட்டை காலி செய்வதற்கு மேலும் சில நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டு மென கோரிக்கை வைத்த னர். அதற்கு அதிகாரிகள் கடந்த 2010-ம் ஆண்டே இது குறித்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்ப்பு வழங்கப்பட்ட தாகவும் இனி அவகாசம் தர முடியாது எனவும் தெரி வித்தனர். மேலும் அந்த வீடுகளில் வசித்தவர்கள் கோவில் நிர்வாகத்தை அணுகி உரிய அனுமதி பெற்று மீண்டும் அதே இடத்தில் வீடு கட்டி வசிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 வீடுகளில் வசித்தவர்கள் போலீசார் பாதுகாப்புடன் வெளி யேற்றப்பட்டு அந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப் பட்டன.

    • ஏரி கால்வாய்களில் கட்டியிருந்ததால் நடவடிக்கை
    • அதிகாரிகள் ஆய்வு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி அருகே ஏரி கால்வாய் செல்கிறது. இதனை ஆக்கிரமித்து 48 வீடுகள் கட்டப்பட்டதால், அங்கு வெளியேறும் தண்ணீர் மருத்துவமனை மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.

    இதனை அகற்றக் கூறி பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் இன்று காலை 7 மணி முதல் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணியில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அகற்றப்பட்டு வரும் வீடுகளில் ஒரு சிலர் தாங்களே அகற்றி கொள்வதாக கூறியதால், அந்த கட்டிடங்களை மட்டும் இடிக்காமல் மற்றவையை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்‌.

    போலீஸ் பாதுகாப்பு

    சம்பவ இடத்தில் வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாணியம்பாடி தாசில்தார் சம்பத், நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

    • அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்புத்தொகைக்கு கடன் உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
    • மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சாயப்பட்டறை வீதி நீர்நிலை புறம்போக்கில் பொதுமக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு வீடுகளை காலி செய்யச்சொல்லி, நோட்டீஸ் வழங்கினர். இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை காலி செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. நெருப்பெரிச்சல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டது. மேலும் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய குலுக்கல் முறை நடந்தது. அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்புத்தொகைக்கு கடன் உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு உரிய தகவல் அளிக்காததால் தொகை செலுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×