என் மலர்

    நீங்கள் தேடியது "Occupied houses"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏரி கால்வாய்களில் கட்டியிருந்ததால் நடவடிக்கை
    • அதிகாரிகள் ஆய்வு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி அருகே ஏரி கால்வாய் செல்கிறது. இதனை ஆக்கிரமித்து 48 வீடுகள் கட்டப்பட்டதால், அங்கு வெளியேறும் தண்ணீர் மருத்துவமனை மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.

    இதனை அகற்றக் கூறி பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் இன்று காலை 7 மணி முதல் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணியில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அகற்றப்பட்டு வரும் வீடுகளில் ஒரு சிலர் தாங்களே அகற்றி கொள்வதாக கூறியதால், அந்த கட்டிடங்களை மட்டும் இடிக்காமல் மற்றவையை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்‌.

    போலீஸ் பாதுகாப்பு

    சம்பவ இடத்தில் வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாணியம்பாடி தாசில்தார் சம்பத், நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்புத்தொகைக்கு கடன் உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
    • மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சாயப்பட்டறை வீதி நீர்நிலை புறம்போக்கில் பொதுமக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு வீடுகளை காலி செய்யச்சொல்லி, நோட்டீஸ் வழங்கினர். இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை காலி செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. நெருப்பெரிச்சல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டது. மேலும் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய குலுக்கல் முறை நடந்தது. அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்புத்தொகைக்கு கடன் உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு உரிய தகவல் அளிக்காததால் தொகை செலுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×