search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு"

    • பெரும்பான்மையான பள்ளிக் கூடங்களில் விளையாட்டுத் திடல்களே இல்லை.
    • ஒருபுறமிருக்க தமிழ்நாட்டு கல்விச்சூழலில் இன்னொரு புதிய கலாச்சாரம் தோன்றியிருக்கிறது.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாரத்திற்கு இரு பாடவேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த பாடவேளைகளில் விளையாட்டு கற்பிக்கப்படுவதில்லை. மாறாக, அந்த பாடவேளைகளில் பிற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பெரும்பான்மையான பள்ளிக் கூடங்களில் விளையாட்டுத் திடல்களே இல்லை.

    இவை ஒருபுறமிருக்க தமிழ்நாட்டு கல்விச்சூழலில் இன்னொரு புதிய கலாச்சாரம் தோன்றியிருக்கிறது. விளையாட்டுத்திடல்களும், விளையாட்டுப் பாடமும் இல்லாத பள்ளிக்கூடங்களை தொழில்நுட்பப் பள்ளிகள் என்ற பெயரில் பிற மாநிலங்களைச் சேர்ந்த கல்விக் குழுமங்கள் தொடங்கி வருகின்றன. அந்தப் பள்ளிகளுக்கு எந்த தடையும் இல்லாமல் தமிழ்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் குறைந்தது 7 விளையாட்டுக்கான கட்டமைப்புகளுடன் விளையாட்டுத் திடல்கள் ஏற்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 385 கிராம ஊராட்சி களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் 380 ஊராட்சிகளில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 385 கிராம ஊராட்சி களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் 380 ஊராட்சிகளில் முழுமையாக பணிகள் முடிக்கப் பட்டுள்ளன.

    மேலும், மகுடஞ்சாவடி யில் 2 மைதானமும், ஏற்காடு, பனமரத்துப்பட்டி, ஓமலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு ஊரக விளையாட்டு மைதானமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஊரக விளையாட்டு மைதானப் பணிகள் 99 சதவிகிதம் முடிவடைந்துள்ளது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டு சங்கங்கள் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், அத்தனூர்பட்டி ஊரக விளையாட்டு மைதானத்தினை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    ஊரக விளையாட்டு மைதானம் தரமுடன் நீண்ட நாட்களுக்கு இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி, கொளத்தூர், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, ஓமலூர், சேலம், சங்ககிரி, தலைவாசல், தாரமங்கலம், வாழப்பாடி, வீரபாண்டி மற்றும் ஏற்காடு வட்டாரங்களில் உள்ள ஊரக விளையாட்டு மைதானங்களுக்கு ரூ. 4.66 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் நடைமேடை, பேவர் பிளாக் நடைபாதை, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஓமலூர் மற்றும் வீரபாண்டி வட்டாரங்களில் உள்ள ஊரக விளையாட்டு மைதானங்களில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மைதானம் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மாணவ, மாணவியர் களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் அவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தினை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அதிகரிக்கச் செய்ய வேண்டும். வகுப்பறையில் விளையாட்டிற்கென ஒதுக்கப்படும் நேரத்தினை மற்ற பாடங்களுக்காக எடுத்துக்கொள்ளாமல் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பாக விளையாட அனுமதிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகள் மாணவ, மாணவியர்களிடையே மிகச் சிறந்த ஒழுக்கத்தை கற்றுத்தரும் என்பதாலும், காலை, மாலை இரு வேலையும் விளையாடு வதால் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், அட்மா குழுத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் உள்ளிட்ட அலு வலர்கள் உடனிருந்தனர்.

    • மாணவ-மாணவிகள் விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் பேசினர்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலைய ரங்கத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டி களில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் நவாஸ்கனி, தனுஷ்குமார் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகு ராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அப்போது அவர்கள் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்துவது மட்டுமின்றி அவர்களை விளையாட்டு துறையிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

    விளையாட்டு துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் விளை யாட்டு போட்டிகளில் பங்கேற்று சிறந்து விளங்கு கின்றனர்.

    விருதுநகர் மாவட்டமும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குகிறது. மாணவ-மாணவிகள் விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    • முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள அனிதா கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு, போட்டி யில் வெற்றிப் பெற்ற வீரர்கள் 1,800 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றி தழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகை யில், இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு உரிய முறையில் நிறைவேற்றித்தரும் என்று அவர் பேசினார்.

    மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சட்டப் மன்ற உறுப்பினர் சின்னப்பா, கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மை மருத்துவர் முத்து கிருஷ்ணன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, அரியலூர் நகர துணை காவல் கண்கா ணிப்பாளர் சங்கர்கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பாஸ்ட் புட் மேற்கத்திய கலாச்சாரம் திணிக்கப்பட்டுள்ளதால் பல நோய்கள் இளைஞர்களை தாக்குகிறது.
    • ரத்த சோகை, ரத்த அழுத்தம், இருதய நோய் பிரச்சனைகள் சிறுவயதிலேயே வருகிறது.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட மருத்துவக்குடி கிராமத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி ஒதுக்கீடு செய்த தொகுதி நிதி ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து சிறிது நேரம் விளையாடவும் செய்தார்.

    பின்னர் விழாவில் பேசியதாவது:-

    இன்றைய இளைஞர்களுக்கு விளையாட்டு அவசியமானது.

    ரத்த சோகை, ரத்த அழுத்தம், இருதய நோய் பிரச்சனைகள் சிறுவயதிலேயே வருகிறது.

    30 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பு என்றால் 55 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு தான் வந்ததாக கேள்விப்பட்டி ருக்கிறோம்.

    ஆனால் இன்று பாஸ்ட் புட் மேற்கத்திய கலாச்சாரம் திணிக்கப்பட்டுள்ள தால் பல நோய்கள் இளைஞர்களை தாக்குகிறது.

    எந்த ஒரு உடற்பயிற்சியும் விளை யாட்டும் இல்லாமல் நாள் முழுவதும் கம்ப்யூட்டர், கைபேசியை பார்த்துக் கொண்டிருப்பதை மாற்றி அமைக்க அரசும் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராம்பிரசாத், திருபுவனம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம், துணைத்தலைவர் கமலாசேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் ம.க.பாலு, சமிம்நிஷா ஷாஜகான், முத்துபீவி ஷாஜகான், பரமேஸ்வரிசரவணன், பா.ம.க மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், மாநில உழவர் பேரியக்க செயலாளர் ஆலயமணி, பா.ம.க முன்னாள் மாவட்ட செயலாளர் குமார், கிராம நாட்டான்மைகள் இளங்கோவன், பாலகி ருஷ்ணன், அசோக்குமார், ரமேஷ், பாலகுரு, ராமன், பொறுப்பாளர்கள் சாமிநாதன், வினோத், இளஞ்செழியன், ஒப்பந்த க்காரர் ஞானபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பாடல் மற்றும் செயல்பாடுகள் மூலமாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.
    • நோக்கு திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு வைக்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நொடக்கப் பள்ளியில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி இயக்கங்கள் இணைந்து நடத்தும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா பள்ளி தலைமை ஆசிரியர் மதியரசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அழியாநிதி மனோகரன் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது.

    பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் எழிலாரசி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முருகேசன், சத்தியா, ஜோதிலட்சுமி தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர்கள் ஜெயம், அன்னமேரி ஜான்சிலின் வரவேற்றனர்.

    விழாவில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்காள் தயாநிதி, நிறைவாணி, உமா, யோகா, அஸியா, சிவசங்கரி, சுவேதா, எழிலாரசி, பத்மா, கயல்விழி, ஆனந்தி, பிரதீபா, ஹேமமாலினி, சுகந்தி, பிரியா, கலைச்செல்வி, பங்கேற்றனர்.

    திருவிழாவில் வானவில் மன்ற கருத்தாளர்கள் பிரகாஷ் மேனன், அனுப்பிரியா, பித்தௌஸ் பர்வின், தயாநிதி ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித நுணுக்கங்களை விளை யாட்டின் மூலமாகவும், பாடல் மற்றும் செயல்பாடுகள் மூலமாகவும் கற்றுக் கொடுத்தனர்.

    மாண வர்களின் உற்று நோக்குத் திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் பொம்மலாட்ட கலைஞர்கள் ஆர்த்தி, ஆஷா, ஹரிணி ஆகியோர் பொம்மலாட்ட கலையை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தி மீண்டும் மஞ்சப்பை எனும் கருத்தை அவர்களுக்கு கண் முன் நிறுத்தினார்கள்.

    இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் நிறைவாணி நன்றி கூறினார். 

    விளையாட்டு விடுதி, மையங்களில் சேர தேர்வு போட்டிகள் நடக்கிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சா வூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாத புரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களு க்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது.

    மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்க ளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கம், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் நெல்லை யிலும், மாணவிகளுக்கான முதன்மை நிலை விளை யாட்டு மைய விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கம் மற்றும் ஈரோட்டிலும் செயல்பட்டு வருகிறது.

    மாணவ-மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்காக 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்பு, முதன்மை நிலை விளை யாட்டு மையங்களில் 6 ,7, 8-ம் வகுப்பு சேர்க்கையும் நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணி அளவில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்பதை திவிறக்கம் செய்து விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேர்வு போட்டியின்போது கொண்டு வர வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தின் 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ள 24-ந் தேதி காலை 7 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகரில் மாணவர்கள் விளையாட்டு மையங்களில் சேர தகுதி போட்டிகள் 24-ந்தேதி நடக்கிறது.
    • மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

    விருதுநகர்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயி லும் மாணவ-மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல் வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தரும புரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல் பட்டு வருகின்றன.

    மாணவர்களுக்கான முதன்மை நிலை விளை யாட்டு மைய விடுதிகள் சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், திருச்சி (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.இதேபோல் மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி கள் சென்னை, ஜவஹர் லால் நேரு விளையாட்டு அரங்கம், மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    மாணவ- மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்தூவச்சாரியில் செயல்பட்டு வருகிறது.

    மேற்காணும் விளை யாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கை நடைபெ றும்.

    முதன்மை நிலை விளை யாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு, ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 24-ந்தேதி காலை 7 மணிக்கு விருதுநகர் மாவட்ட விளை யாட்டு அரங்கில் நடக்கிறது.

    • கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
    • கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பலமுரு பல்கலைக்கழக துணை வேந்தர் லட்சுமிகாந்த் ரத்தோடு மற்றும் சென்னை யில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் நிறுவன தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    கல்லூரியின் தலைவர் செந்தில்குமார், ஆலோசகர் பேராசிரியர் கோதண்ட பாணி, நிர்வாக இயக்குனர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பதக்கங்க ளும், சான்றித ழ்களும் வழங்கப்பட்டது.

    இதில் கல்லூரி துணை முதல்வர் கலைமணி சண்முகம் மற்றும் கல்விப்புல தலைவர் ருக்மாங்கதன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில் மற்றும் உதவியாளர் சதீஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • விளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு அரங்கங்களில் நடைபெறுகிறது.

    கீழக்கரை

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி, சத்தான உணவு வழங்குதல் கீழ்கண்ட நகரங்களில் விடுதிகள் நடைபெற்று வருகிறது.

    மாணவர்களுக்கு மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை ராமநாதபுரம், சென்னை, கோவை, உதகமண்டம் விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி உள்பட 17 நகரங்களிலும், மாணவிகளுக்கான விடுதி ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், சென்னை, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை நாகர்கோவில் உள்பட 10 நகரங்களிலும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான முதன்மை விளையாட்டரங்கம் சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி மற்றும் நெல்லை மாணவிகளுக்கான முதன்மை விளையாட்டு மைய விடுதி சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கம் மற்றும் ஈரோடு விடுதிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.

    மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 24-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு அரங்கங்களில் நடைபெறுகிறது.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது
    • மவுண்ட் சீயோன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மவுண்ட சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 22வது ஆண்டு விழா போட்டியின் தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைப்பெ ற்றது.டீன் முனைவர் எஸ்.ராபின்சன் வரவேற்பு ரையாற்றினார். கல்வி நிறுவனத்தின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் ஒலிம்பிக் கொடியையும், இயக்குநர் முனைவர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் தேசிய கொடியையும் ஏற்றினர். இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் கல்லூரி கொடியை ஏற்றி வைத்தார்.

    தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் ஆண்டுவிழா போட்டியை தொடங்கி வைத்தார். ஒலிம்பிக் ஜோதியை நான்கு ஹவுஸ் கேப்டன்கள் மற்றும் எமரால்டு குழுவினர் ஏந்திச் சென்று, ஒலிம்பிக் ஜோதி பீடத்தில் வைத்தனர்.மின்னியில் மற்றும் மின்னணு பொறியியல் துறைத் தலைவர் டி.திவ்ய பிரசாத் வரவேற்புரையாற்றினார். மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனத்தின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமையுரையாற்றினார்.

    இயக்குநர் டாக்டர். ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், கல்வி ஒருங்கிணைப்பாளர் விவியன் ரேச்சல் ஜெய்சன், முதல்வர் முனைவர் பி.பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜ சோழன் அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் சர்வதேச கூடைப்பந்து நடுவர் முனைவர் ரமேஷ்குமார் துரைராஜு கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.மாணவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பல கட்டங்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கட்டமைப்பு பொறியியல் துறை தலைவர் ராதா நன்றியுரை ஆற்றினார்.

    • சாகிர் உசேன் கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
    • தமிழ்த்துறை தலைவர் இப்ராகிம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள சாகிர் உசேன் கல்லூரியின் 53-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார். சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா வாழ்த்துரை வழங்கினார்.

    உடற்கல்வி இயக்குநர் காளிதாசன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கல்லூரி செயலர் பொன்னாடை அணிவித்தார். சிறப்பு விருந்தினராக இளையான்குடி பாரத ஸ்டேட் வங்கி தலைமை மேலாளர் காயத்ரி கலந்து கொண்டு பேசினார். பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பல்கலைக்கழக அளவில் மற்றும் கல்லூரியில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு வழங்கினார். ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அப்துல் சலீம், அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் சபினுல்லாகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை தலைவர் இப்ராகிம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

    ×