search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகுதி ேபாட்டிகள்"

    • விருதுநகரில் மாணவர்கள் விளையாட்டு மையங்களில் சேர தகுதி போட்டிகள் 24-ந்தேதி நடக்கிறது.
    • மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

    விருதுநகர்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயி லும் மாணவ-மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல் வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தரும புரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல் பட்டு வருகின்றன.

    மாணவர்களுக்கான முதன்மை நிலை விளை யாட்டு மைய விடுதிகள் சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், திருச்சி (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.இதேபோல் மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி கள் சென்னை, ஜவஹர் லால் நேரு விளையாட்டு அரங்கம், மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    மாணவ- மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்தூவச்சாரியில் செயல்பட்டு வருகிறது.

    மேற்காணும் விளை யாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கை நடைபெ றும்.

    முதன்மை நிலை விளை யாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு, ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 24-ந்தேதி காலை 7 மணிக்கு விருதுநகர் மாவட்ட விளை யாட்டு அரங்கில் நடக்கிறது.

    ×