search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை குறைப்பு"

    • வங்கி சேவையை பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    • அதிகபட்சம் 24 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.

    சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ இந்திய சந்தையில் தனது விவோ X90 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை கடந்த ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை ரூ. 85 ஆயிரம் என்று நிர்ணம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    விலை குறைப்பின் படி விவோ X90 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 74 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. விலை குறைப்பு தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி சேவையை பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரை கேஷ்பேக் அல்லது அதிகபட்சம் 24 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.

     

    கேஷிஃபை சேவையை பயன்படுத்தும் போது ரூ. 8 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. விவோ வி ஷீல்டு பாதுகாப்பு திட்டங்களை பயன்படுத்தும் போது 40 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. பயனர்கள் விவோ X90 ப்ரோ மாடலை ப்ளிப்கார்ட், விவோ அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் ரிடெயில் ஸ்டோர்களில் புதிய விலையில் வாங்கிட முடியும்.

     

    விவோ X90 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் 2800x1260 பிக்சல் FHD+ BOE Q9 OLED HDR10+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் டிமென்சிட்டி 9200 பிராசஸர்

    இம்மோர்டலிஸ் G715 GPU

    12 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், OIS

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    50MP 50mm போர்டிரெயிட் கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    4870 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • ஐபோன் 14 வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 சீரிஸ் விலை குறைக்கப்பட்டது.
    • ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைப்பு.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை சில தினங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்தது. புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 13 போன்ற மாடல்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஐபோன் 14 வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 சீரிஸ் விலை குறைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக குறைத்து இருக்கிறது. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பு ஐபோன்களின் 128 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மாடல்களுக்கு பொருந்தும்.

     

    புதிய விலை விவரங்கள்:

    ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 59 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 69 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 69 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 79 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 99 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 79 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 10 ஆயிரம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விலை ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் ஆன்லைன் வலைதளத்துக்கானது ஆகும். எனினும், மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் ஐபோன் மாடல்களை இதைவிட குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதுதவிர ஆன்லைன் வலைத்தளங்களில் சிறப்பு விற்பனையின் போது கூடுதல் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    • தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியத்தை உடனே வழங்கவேண்டும்.
    • தேர்தல் சமயத்தில் சிலிண்டர் விலை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுக்காத மத்திய அரசு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 விலையை குறைத்து அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியத்தை உடனே வழங்கவேண்டும். அப்படி வழங்கும்பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயன்படுத்தும் லட்சக்கணக்கான குடும்பங்களும் கூடுதல் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் தேர்தல் சமயத்தில் சிலிண்டர் விலை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுக்காத மத்திய அரசு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 விலையை குறைத்து அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

    சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்த மத்திய அரசுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கி றேன்.

    இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.

    • கடந்த பிப்ரவரி மாதம் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியது.
    • மத்தியஅரசின் இந்த விலை குறைப்பு கேரள மாநிலத்திலும் உடனடியாக அமலுக்கு வந்தது.

    திருவனந்தபுரம்:

    சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியது.

    இந்நிலையில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது. தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.200 குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மத்தியஅரசின் இந்த விலை குறைப்பு கேரள மாநிலத்திலும் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் 1,100 ரூபாயக்கு மேல் விற்கப்பட்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலை 1000 ரூபாய்க்கு கீழ் வந்துள்ளது. எர்ணாகுளம் மற்றும் கோட்டயத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.910-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கோழிக்கோடு மற்றும் மலப்புரத்தில் ரூ.911-க்கும், திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் ரூ.912-க்கும், ஆலப்புழா மற்றும் திருச்சூரில் ரூ.915-க்கும், பத்தினம்திட்டா மற்றும் கொச்சியில் ரூ.920-க்கும், பாலக்காட்டில் ரூ.921-க்கும், கண்ணூர், காசர்கோடு மற்றும் வய நாட்டில் ரூ923-க்கும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கப்படுகிறது.

    • 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது.
    • கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    சேலம்:

    பெண்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆண்டும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே சென்று கடந்த மார்ச் மாதம் 1118 ரூபாய் 50 காசாக உயர்ந்தது.

    2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை முதல் முறையாக ரூ. ஆயிரத்தை தாண்டியது.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1068.50 ஆக இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்து ரூ.1118.50 ஆனது.

    கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ஏறிக் கொண்டே சென்றதால் குடும்ப தலைவிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    இந்த சிலிண்டர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதித்தது. தங்களது மாத வருவாயில் குறிப்பிட்ட தொகைைய கியாஸ் சிலிண்டருக்கே ஒதுக்க வேண்டியுள்ளது என்று கூறி அவர்கள் வேதனைப்பட்டு வந்தனர்.

    இப்படி சிலிண்டர் விலை தாறுமாறாக ஏறி இருந்ததால் கிராமப்புறங்களில் பலர் விறகு அடுப்புகளுக்கும் மாறினார்கள். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை வெகுவாக குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. சிலிண்டர் விலை குறையுமா? என இல்லத்தரசிகளும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் சேலத்தில் ரூ.1190 ஆக இருந்த கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.990 ஆக குறைந்திருக்கிறது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர் விலை 1000-க்கும் கீழ் குறைந்திருக்கிறது.

    இந்த விலை குறைப்பு இன்று முதல் (புதன்கிழமை)அமலுக்கு வந்துள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பெண்கள் பலர் சிலிண்டர் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக பெண்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு:-

    சேலம் புதுரோடு பகுதியை சேர்ந்த குடும்ப தலைவி கவுசல்யா (25): மின்சாரம், காய்கறிகள் மற்றும் அத்தியா வசிய பொருட்கள் விலை உயர்ந்தி ருக்கும் நிலையில் கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை வரவேற்கிறோம்.

    சேலத்தை சேர்ந்த வங்கி ஊழியர் கலைமதி (30): அரசு இலவசமாக எந்த பொருளையும் தர வேண்டாம். விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும். அந்த வகையில் கியாஸ் விலையில் ரூ.200 குறைத் துள்ளது வரவேற்கதக்கது. இதேபோல் காய்கறி உள்ளிட்டவற்றின் விலையை யும் கட்டுப் படுத்த வேண்டும்.

    அம்மாபேட்டையை சேர்ந்த பெரியநாயகி (40): ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளனர். குழந்தை களை படிக்க வைக்கவே சிரமப்பட்டு வருகிறோம். கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது ஒவ்வொரு மாதமும் பெரும் சுமையாகவே இருந்தது. தற்போது இந்த விலை குறைப்பு வரவேற்கத்தக்கது தான். மேலும் ரூ.200 குறைத்தால் நன்றாக இருக்கும்.

    மத்திய அரசு எந்த இலவசமும் கொடுக்காமல் பொதுமக்கள் வாழ்க்கை தரம் உயர நல்ல திட்டங்களை கொண்டு வந்து நாட்டு மக்கள் வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும்.

    • ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
    • ஐபோன் 13 மாடலுக்கு எக்சேன்ஜ் சலுகைகள் மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் புதிய ஐபோன் 13 மாடலை ரூ. 58 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இத்துடன் எக்சேன்ஜ் சலுகைகள் மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி விலை ரூ. 58 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 901 குறைந்துள்ளது.

    இத்துடன் எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீதம் (அதிகபட்சம் ரூ. 750) வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 35 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் ஐபோன் 13 மாடலை மிக குறைந்த விலையில் வாங்கிட முடியும். இதில் எக்சேன்ஜ் தொகை, பயனர்கள் கொடுக்கும் ஸ்மார்ட்போனின் நிலையை பொருத்து வேறுப்படும்.

    ப்ளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை குறைப்பு குறுகிய கால சலுகையா அல்லது நீண்ட காலத்திற்கு வழங்கப்படுமா என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இது ஐபோன் வாங்க சரியான காலம் ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 12MP+12MP பிரைமரி கேமரா, 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி, 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி, வைபை 6, ப்ளூடூத் 5 போன்ற வசதிகள் உள்ளன.

    • சர்வதேச சந்தையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் விலையில் சரிவு.
    • உள்நாட்டுச் சந்தையிலும் அதற்கு ஏற்றவாறு, விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை.

    மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், சர்வதேச சந்தையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் உள்நாட்டுச் சந்தையிலும் அதற்கு ஏற்றவாறு, விலைக்குறைப்பு நடவடிக்கையை உறுதிபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் சமையல் எண்ணெயின் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் 15 ரூபாய் உடனடியாக குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    விலை குறைப்பு எந்த வகையிலும் நீர்த்துப்போகாமல் இருக்க, உற்பத்தியாளர்களும் சுத்திகரிப்பாளர்களும்விநியோகஸ்தர்களுக்கு விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் பயன் நுகர்வோருக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சமையல் எண்ணெய்களின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து, கடந்த மே மாதம் முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுடன் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை நடத்திய ஆலோசனை கூட்டத்தில், ஃபார்ச்சூன் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் பேக்கின் விலை ரூ.220-லிருந்து ரூ. 210 –ஆகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×