search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல் எண்ணெய்"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    • ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அடுத்த தெள்ளானந்தல் கிராமத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிக வரித்துறை சார்பில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு மையத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி குத்து விளக்கேற்றி மையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு,பிச்சாண்டி பேசியதாவது:-

    மணிலா உற்பத்தியில் இந்தியாவிலேயே திருவண்ணாமலை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. மணிலாவை எண்ணெய்யாக மாற்றி விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆண்டுக்கு ஒரு மாதம் மட்டுமே மழை பெய்யும் இஸ்ரேல் நாட்டில் மழை நீரை சேமித்து ஆப்பிள் மற்றும் மாதுளை பழங்களை விளைவித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

    விவசாயிகள் கூட்டாக இணைந்து செயல்பட்டால் அதிக விளைச்சலுடன் அதிக லாபத்தையும் ஈட்டலாம். திருவண்ணாமலையில் டான்காப் என்ற ஆலை ஆரம்பிக்கப்பட்டது. அது பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டது.

    தற்போது துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் தெள்ளானந்தால் கிராமத்தில் சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துல் மற்றும் ஊக்குவிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் இன்று திறக்கப்பட்டுள்ள மையம் குறித்து துண்டு பிரசுரம் அச்சிட்டு விநியோகித்தால் அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

    இந்த மையத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவும் அதற்கு நல்ல விளை கிடைப்பதற்காகவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என இவ்வாறு அவர் பேரினார்.

    இதில் கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி, வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், துணை இயக்குநர் சிவக்குமார், விற்பனை குழு செயலாளர் சந்திரசேகர், உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாட்டுக்கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்து பேரல்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
    • போலீசார் அங்கிருந்த கலப்பட எண்ணெய் மற்றும் மாட்டு தோல்களை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துனி ராமகிருஷ்ணா நகரில் பசு மாடுகளை கொன்று அதன் கொழுப்பில் இருந்து எண்ணெய் தயாரித்து சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்வதாக போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு புகார் வந்தது.

    இதையடுத்து போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்குள்ள கால்வாய்களில் ரத்தம் வழிந்து ஓடிய கறைகள் படிந்திருந்தது.

    மேலும் அப்பகுதியில் மாட்டு கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. அங்கு பயங்கரமாக துர்நாற்றம் வீசியது. போலீசார் வருவதைக் கண்டு அங்கிருந்த கும்பல் தப்பி சென்றனர். இதையடுத்து போலீசார் அதிரடியாக அங்குள்ள குடோனுக்குள் சென்று சோதனை நடத்தினர்.

    அங்கு மாட்டுக்கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்து பேரல்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இந்த கும்பல் மாடுகளை கொன்று எண்ணெய் தயாரித்து வந்தது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த கலப்பட எண்ணெய் மற்றும் மாட்டு தோல்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த கும்பல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சர்வதேச சந்தையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் விலையில் சரிவு.
    • உள்நாட்டுச் சந்தையிலும் அதற்கு ஏற்றவாறு, விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை.

    மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், சர்வதேச சந்தையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் உள்நாட்டுச் சந்தையிலும் அதற்கு ஏற்றவாறு, விலைக்குறைப்பு நடவடிக்கையை உறுதிபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் சமையல் எண்ணெயின் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் 15 ரூபாய் உடனடியாக குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    விலை குறைப்பு எந்த வகையிலும் நீர்த்துப்போகாமல் இருக்க, உற்பத்தியாளர்களும் சுத்திகரிப்பாளர்களும்விநியோகஸ்தர்களுக்கு விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் பயன் நுகர்வோருக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சமையல் எண்ணெய்களின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து, கடந்த மே மாதம் முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுடன் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை நடத்திய ஆலோசனை கூட்டத்தில், ஃபார்ச்சூன் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் பேக்கின் விலை ரூ.220-லிருந்து ரூ. 210 –ஆகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை குறைக்கப்பட்டது.
    • ஒரே கம்பெனியின் சமையல் எண்ணெய் விலை, வெவ்வேறு மண்டலங்களில் வேறுபாடாக இருக்கிறது.

    புதுடெல்லி :

    இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில், 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வந்ததால், இந்தியாவில் அதன் சில்லரை விலையும் அதிகரித்து வந்தது. ஆனால், சமீபகாலமாக சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருகிறது. அதனால், இந்தியாவில் கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை குறைக்கப்பட்டது.

    அதன் பிறகும் சர்வதேச சந்தை விலை குறைந்திருப்பதால், அதுபற்றி விவாதிக்க மத்திய உணவு செயலாளர் சுதன்சு பாண்டே, அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பெரும் உற்பத்தியாளர்கள் கூட்டத்தை நேற்று கூட்டினார். அதன்பிறகு அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 10 சதவீதம் குறைந்திருப்பதால், அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்குமாறு வலியுறுத்தினோம். விலையை 10 ரூபாய் குறைக்குமாறு கூறினோம். அதற்கு பெரும் உற்பத்தியாளர்கள், அடுத்த வாரத்துக்குள் பாமாயில், சோயாபீன், சன்பிளவர் ஆயில் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எண்ணெய்களின் விலையை ரூ.10 குறைப்பதாக உறுதி அளித்தனர்.

    இந்த எண்ணெய்கள் விலை குறைந்தால், இதர சமையல் எண்ணெய்கள் விலையும் குறைந்துவிடும். மேலும், ஒரே கம்பெனியின் சமையல் எண்ணெய் விலை, வெவ்வேறு மண்டலங்களில் ரூ.3 முதல் ரூ.5 வரை வேறுபாடாக இருக்கிறது. எனவே, நாடு முழுவதும் ஒரே மாதிரி விலையை நிர்ணயிக்குமாறு கூறினோம். அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×