search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இல்லத்தரசிகள் மகிழ்ச்சி"

    • 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது.
    • கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    சேலம்:

    பெண்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆண்டும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே சென்று கடந்த மார்ச் மாதம் 1118 ரூபாய் 50 காசாக உயர்ந்தது.

    2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை முதல் முறையாக ரூ. ஆயிரத்தை தாண்டியது.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1068.50 ஆக இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்து ரூ.1118.50 ஆனது.

    கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ஏறிக் கொண்டே சென்றதால் குடும்ப தலைவிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    இந்த சிலிண்டர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதித்தது. தங்களது மாத வருவாயில் குறிப்பிட்ட தொகைைய கியாஸ் சிலிண்டருக்கே ஒதுக்க வேண்டியுள்ளது என்று கூறி அவர்கள் வேதனைப்பட்டு வந்தனர்.

    இப்படி சிலிண்டர் விலை தாறுமாறாக ஏறி இருந்ததால் கிராமப்புறங்களில் பலர் விறகு அடுப்புகளுக்கும் மாறினார்கள். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை வெகுவாக குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. சிலிண்டர் விலை குறையுமா? என இல்லத்தரசிகளும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் சேலத்தில் ரூ.1190 ஆக இருந்த கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.990 ஆக குறைந்திருக்கிறது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர் விலை 1000-க்கும் கீழ் குறைந்திருக்கிறது.

    இந்த விலை குறைப்பு இன்று முதல் (புதன்கிழமை)அமலுக்கு வந்துள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பெண்கள் பலர் சிலிண்டர் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக பெண்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு:-

    சேலம் புதுரோடு பகுதியை சேர்ந்த குடும்ப தலைவி கவுசல்யா (25): மின்சாரம், காய்கறிகள் மற்றும் அத்தியா வசிய பொருட்கள் விலை உயர்ந்தி ருக்கும் நிலையில் கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை வரவேற்கிறோம்.

    சேலத்தை சேர்ந்த வங்கி ஊழியர் கலைமதி (30): அரசு இலவசமாக எந்த பொருளையும் தர வேண்டாம். விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும். அந்த வகையில் கியாஸ் விலையில் ரூ.200 குறைத் துள்ளது வரவேற்கதக்கது. இதேபோல் காய்கறி உள்ளிட்டவற்றின் விலையை யும் கட்டுப் படுத்த வேண்டும்.

    அம்மாபேட்டையை சேர்ந்த பெரியநாயகி (40): ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளனர். குழந்தை களை படிக்க வைக்கவே சிரமப்பட்டு வருகிறோம். கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது ஒவ்வொரு மாதமும் பெரும் சுமையாகவே இருந்தது. தற்போது இந்த விலை குறைப்பு வரவேற்கத்தக்கது தான். மேலும் ரூ.200 குறைத்தால் நன்றாக இருக்கும்.

    மத்திய அரசு எந்த இலவசமும் கொடுக்காமல் பொதுமக்கள் வாழ்க்கை தரம் உயர நல்ல திட்டங்களை கொண்டு வந்து நாட்டு மக்கள் வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும்.

    ×