search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான சேவை பாதிப்பு"

    • தொடர் மழையினால் அவர்களுடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது.
    • வீட்டில் தான் அந்த தம்பதி வசிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி சங்கரலிங்க புரம். இங்குள்ள 2-வது தெருவில் வசித்து வருபவர்கள் மாரிமுத்து - அடைக்கம்மை தம்பதியினர். மாற்றுத்திறனாளிகளான இவர்கள் இருவரும் கண்பார்வை இழந்தவர்கள்.

    ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி உள்ளிட்டவைகளை விற்பனை செய்து அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்களது வாழ்வினை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தொடர் மழை இந்த மாற்றுத்திறனாளி தம்பதியின் வாழ்வினை அடியோடு புரட்டி போட்டு உள்ளது.

    இவர்கள் வாழ்ந்த ஓட்டு வீடு ஏற்கனவே லேசாக சேதம் அடைந்து காணப்பட்ட நிலையில் தொடர் மழைக்கு முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. தொடர் மழையின் போது வீட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்தது தெரியாமலும், மழைநீர் உள்ளே வருவது தெரியாமலும் இருந்த மாற்றுத்திறனாளி தம்பதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தங்கள் வீட்டில் தங்க வைத்து உதவி செய்துள்ளனர்.

    தொடர் மழையினால் அவர்களுடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் விழக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. தற்போது அந்த வீட்டில் தான் அந்த தம்பதி வசிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

    தொடர்மழை காரணமாக ஏற்கனவே தங்களுடைய ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி விற்பனை செய்ய முடியாத நிலை ஒருபுறம் உள்ளது. மறுபுறம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய வீடு என தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர் மாரிமுத்து - அடைக்கம்மை தம்பதியினர்.

    தொடர் மழையின் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரத்தையும் இழந்து, வீட்டையும் இழந்து பரிதவித்து வருவதாகவும், தங்களுக்கு அரசு உரிய உதவி செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் மாற்றுத்திறனாளி தம்பதியினர்.

    • மற்ற பகுதிகளில் உள்ள தண்ணீரை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
    • முதல் 2 நாட்கள் மிகவும் ஆபத்தான நிலையில் தண்ணீர் சூழ்ந்திருந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 17-ந் தேதி பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்தாலும் ஒருசில இடங்களில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. வெள்ளத்தால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் தூத்துக்குடி வந்து மின் இணைப்பு வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதேபோல் தூத்துக்குடியில் தேங்கிய மழை நீரை அகற்றுவதற்கு சென்னை, திருப்பூர், கோவை மாநகராட்சி ஊழியர்கள் தூத்துக்குடி வந்து வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-


    தூத்துக்குடியில் வெள்ள நீரை அகற்றுவதற்காக சென்னை, திருப்பூர், கோவை மாநகராட்சியை சேர்ந்த 600 பம்பிங் ஆப்ரேட்டர்கள், துப்புரவு தொழிலாளர்கள் கடந்த வாரம் தூத்துக்குடிக்கு வந்தனர்.

    அவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி, மாவட்ட மீட்பு குழுவினருடன் சேர்ந்து தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாநகரில் வடக்கு, மேற்கு பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. மற்ற பகுதிகளில் உள்ள தண்ணீரை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    மாநகரில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி சவாலாக இருந்தது. எனினும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த ஊழியர்கள், அதிக சக்தி கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது மாநகரில் 80 சதவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு விட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சென்னையை சேர்ந்த பம்பிங் ஆப்ரேட்டர்கள் கூறும்போது, முதல் 2 நாட்கள் மிகவும் ஆபத்தான நிலையில் தண்ணீர் சூழ்ந்திருந்தது. வடிகால் பகுதிகளில் பல இடங்களில் சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் தண்ணீரை வெளியேற்றுவது கடினமாக இருந்தது. மேலும் மாநகர் பகுதிகள் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் தண்ணீரை எங்கிருந்து பம்பிங் மூலம் வெளியேற்றுவது என்பது எங்களுக்கு தெரியவில்லை. எனினும் கடின முயற்சிக்கு பின்னர் தண்ணீர் வெளி யேற்றப்பட்டது என்றனர்.

    தூத்துக்குடி மக்கள் கூறும்போது, மாநகரில் பல இடங்களில் தண்ணீர் வடிந்த நிலையிலும் இன்னும் சில இடங்களில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் தான் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், வேலைக்கும் சென்று வருகிறோம். வரும் புத்தாண்டுக்குள் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பும் என நம்புகிறோம் என தெரிவித்தனர்.

    • எதிரே வரும் நபர் தெரியாத வகையில் கடும் பனி மூட்டம்.
    • வெப்ப நிலை 9.4 டிகிரி செல்சியஸ் குறைந்து குளிர் நிலவியது.

    வடஇந்தியாவில் தற்போது குளிர்காலம் என்பதால் கடுங்குளிர் நிலவி வருகிறது. காலையில் மக்கள் எழுந்ததும் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். வாகனங்கள் சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் உள்ளதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. இதனால் விமான சேவை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

    டெல்லி விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இன்று காலை டெல்லி விமான நிலையம் மூலம் பயணம் செய்ய இருந்த பயணிகள், விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு சேவை குறித்து தெரிந்து கொள்க என டெல்லி விமான நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

    அதேபோல் ஐதராபாத்திலும் கடும் பனி மூட்டம் காரணமாக பெங்களூரில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்ற விமானம், மீண்டும் பெங்களூருவுக்கே திருப்பி அனுப்பிவிடப்பட்டது.

    • மழை தொடங்கியதுமே அந்தந்த மாவட்ட அமைச்சர்களை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து விட்டார்.
    • செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். சொல்ல வேண்டியதையே சொல்ல வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவசர அழைப்பின் பேரில் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி கூட்டத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருநாள் சென்று வந்ததை பெரிது படுத்துகிறார்கள். ஒரு முதலமைச்சர் எங்கிருந்தாலும் சரி, நடக்க வேண்டிய பணிகள் நடக்கும். மழை தொடங்கியதுமே அந்தந்த மாவட்ட அமைச்சர்களை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து விட்டார்.

    இது போன்ற குற்றச்சாட்டை சொல்ல கூடியவர்கள் மணிப்பூரில் 6 மாத காலம் கலவரம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். பிரதமர் மோடி ஒரு முறை கூட அங்கு சென்றதும் இல்லை. அதுபற்றி பேசியதும் இல்லை.


    இதை போன்ற தலைமையை வைத்துக் கொண்டு பேசுவது கண்மூடித்தனமாக தமிழக அரசு மீது வெறுப்பை காட்டுவதாகத்தான் அர்த்தம்.

    தமிழகத்துக்கு மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியாக எதுவும் ஒதுக்கவில்லை. தர வேண்டிய நிதியை மட்டுமே தந்துள்ளார்கள். தற்போது ஏற்பட்ட பெரும் சேதத்துக்கு தனியாக நிவாரணம் தர வேண்டும்.

    நிவாரணம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தரக் குறைவும் இல்லை. அவர் பேச்சு வழக்கில் பேசுவது போல் பேசி உள்ளார். இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது. செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். சொல்ல வேண்டியதையே சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெங்களூர் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • வானிலை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும்.

    தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாததால் விமான சேவை இன்று 3-வது நாளாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை,பெங்களூரில் இருந்து தூத்துக்குடி வரும் விமானங்களும், இதேபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூர் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் வேறு மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
    • ரெயில் நிலையத்தில் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நேற்று முதல் பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் ரெயில்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் காலை 2.40 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வரும். அந்த ரெயில் இன்று காலை 3 மணிக்கு திண்டுக்கல் வந்தடைந்தது. ஆனால் 2 மணி நேரம் தாமதமாக 4.58 மணிக்குதான் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது.

    இதே போல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 2.17 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வரும் அந்த ரெயில் 5.55 மணிக்கு வந்தது. சுமார் 3 மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது.

    மதுரை வழித்தடத்தில் ரெயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளதால் பெரும்பாலான ரெயில்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிக்னல் கோளாறு மற்றும் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் வேறு மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி திண்டுக்கல்லில் இருந்து மதுரை வழியாக நெல்லை, நாகர்கோவில் செல்லும் ரெயில்கள் திண்டுக்கல்லில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்டது. இதே போல் மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயிலும் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக சென்றது. இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

    • தொடர் மழையால் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • தூத்துக்குடி செல்ல வேண்டிய 2 விமானங்கள் மதுரையில் தரையிறங்கியது.

    நெல்லை:

    தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது.

    இதற்கிடையே, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழையால் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடி செல்ல வேண்டிய 2 விமானங்கள் மதுரையில் தரையிறங்கியது. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 3.45 மணிக்கு செல்லும் விமானம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

    • விஜயவாடாவில் இருந்து வந்த பயணிகள் விமானம் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது
    • 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதி

    சென்னையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகளில் காற்று வேகமாக வீசியதுடன், மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் சென்னை விமான நிலையத்தில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல், சென்னையில் இருந்து புறப்படும் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

    6 சர்வதேச விமானங்கள் உள்பட 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் வந்த பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    • லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது.
    • இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.

    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

    டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 11:35 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க வந்தது. அந்த நேரத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது கொண்டிருந்ததால், விமானம் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    அதை போல் ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன், நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது.

    அதைப்போல் இன்று அதிகாலை 1:15 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து, 167 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.

    மேலும் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஐதராபாத்தில் இருந்து வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டம் அடித்து விட்டு, தாமதமாக தரையிறங்கின.

    அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான பாங்காக், பிராங்க்பார்ட், பாரிஸ் ஆகிய 3 விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன.

    சென்னையில் நேற்று நள்ளிரவில் இருந்து, இன்று அதிகாலை வரை காற்று, இடி மின்னலுடன் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு 8 விமானங்கள், தாமதம் ஆகி, பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    • இந்திய விமான நிறுவனங்கள் திருச்சியில் இருந்து துபாய், குவைத், தோகா, சார்ஜா மற்றும் மஸ்கட் ஆகிய நகரங்களுக்கு விமானங்களை இயக்குகின்றன.
    • இதில் சார்ஜா செக்டார் அளவு 26 ஆண்டுகளையும், துபாய் 16 வருடங்களையும் நிறைவு செய்துள்ளது. இருப்பினும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தை புதுப்பிக்காததால் சேவைகளின் எண்ணிக்கை சுருங்கி வருகிறது.

    திருச்சி,

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல்வேறு வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கு அதிக போக்குவரத்து நெரிசல் இருந்த போதிலும் பி.ஏ.எஸ்.ஏ.ன் (இருதரப்பு விமான ஒப்பந்தம்) கீழ் திருச்சி கொண்டு வரப்படாததால் விமான சேவை பாதிக்கிறது.

    சமீபத்தில் துபாய் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் இந்தியாவில் திருச்சியை தங்கள் கேரியர்களுக்கான கூடுதல் அழைப்பாக சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே இந்திய விமான நிறுவனங்கள் திருச்சியில் இருந்து துபாய், குவைத், தோகா, சார்ஜா மற்றும் மஸ்கட் ஆகிய நகரங்களுக்கு விமானங்களை இயக்குகின்றன.

    இதில் சார்ஜா செக்டார் அளவு 26 ஆண்டுகளையும், துபாய் 16 வருடங்களையும் நிறைவு செய்துள்ளது. இருப்பினும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தை புதுப்பிக்காததால் சேவைகளின் எண்ணிக்கை சுருங்கி வருகிறது. பக்ரைன், குவைத் போன்ற வளைகுடா நாடுகளுடன் பி.ஏ.எஸ்.ஏ. கீழ் இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஒப்பந்தங்களில் கையெழுத்து உள்ளது. துபாய், அபுதாபி, மற்றும் ராஸ் அல் ஹாய் மா அரபு எமிரேட்ஸின் கீழ் வருகின்றன.

    இதில் உள்ள 8 விமான நிலையங்களுடன் 9-வது விமான நிலையமாக சென்னை விமான நிலையமும் இணைக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை இருந்தபோதிலும் திருச்சி இந்த ஒன்பது விமான நிலையங்களுடன் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. கிழக்கு ஆசிய நாடுகளை தவிர கோவை விமான நிலையம் துபாய் மற்றும் சார்ஜா உடன் அழைப்பு புள்ளியாக சேர்க்கப்பட்டுள்ளது.

    ஏர் அரேபியா சார்ஜாவில் இருந்து கோயம்புத்தூருக்கு சேவைகளை இயக்குகிறது. இருப்பினும் துபாயிலிருந்து கோவைக்கு எந்த சேவையும் இல்லை. வெளிநாடுகளில் பல புதிய ஆபரேட்டர்கள் வருகிறார்கள்

    அவர்கள் திருச்சிக்கு புதிய விமானங்களை தொடங்க வேண்டும் என்று விரும்பினால் பி.ஏ.எஸ்.ஏ.யின் கீழ் திருச்சி சேர்க்கப்படாததால் சேவை பாதிப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×