search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடுங்குளிர்"

    • பஞ்சாப் மாகாணத்தில் கடுங்குளிர் காரணமாக குழந்தைகளுக்கு நிமோனியா வேகமாக பரவுகிறது.
    • கடந்த வருடம் 990 பேர் உயிரிழந்ததால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம்.

    பாகிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. கடுங்குளிர் காரணமாக குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 36 பேர் கடந்த வாரம் உயிரிழந்ததாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், நிமோனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வருகிற 31-ந்தேதி வரை பள்ளிகளில் காலை கூட்டத்திற்கு (morning assemblies) தடைவிதிக்கப்பட்டுள்ளது. நர்சரி குழந்தைகளுக்கு வருகிற 19-ந்தேதி வரை தடுப்பூசி செலுத்த அறிவிக்கப்பட்டள்ளது.

    மேலும் குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வெதுவெதுப்பான ஆடைகள் அணிய வேண்டும். இவைகள் நிமோனியா தொற்றிக் கொள்வதில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    லாகூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் 10-ல் 8 பேர் நிமோனியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் பஞ்சாப் மாகாணத்தில் 990 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ? என அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நிமோனியாவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து பஞ்சாப் மாகாண காபந்து முதலமைச்சர் நக்வி, மூத்த டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

    • பெரிய சேதம் ஏதும் நிகழும் முன் தீ உடனடியாக அணைக்கப்பட்டது.
    • ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சந்தன் (23) மற்றும் தேவேந்திரா (25) என இளைஞர்கள் இருவர் கைது.

    அசாமில் இருந்து டெல்லி செல்லும் ரெயிலில் குளிர் தாங்க முடியாததால் வரட்டியை தீமூட்டி குளிர்காய்ந்த அரியானாவைச் சேர்ந்த இருவரை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

    டெல்லி செல்லும் சம்பார்க் கிராந்தி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதாக கேட்மேன் அதிகாரிகளை எச்சரித்தார். இதையடுத்து, ஓடும் ரெயிலில் நெருப்பை பற்றவைத்த இருவர் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பேரழிவு தவிர்க்கப்பட்டது.

    இதுகுறித்து அலிகரில் உள்ள ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி கூறுகையில், "ஜனவரி 3 ஆம் தேதி இரவு, பர்ஹான் ரெயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரெயில்வே கிராசிங்கில் கேட்மேன், வந்து கொண்டிருந்த ரெயிலின் பெட்டியிலிருந்து தீ மற்றும் புகை வெளியேறியதை கண்டு உடனடியாக பர்ஹான் ரயில் நிலையத்தில் உள்ள தனது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பிறகு ஆர்பிஎஃப் குழு ரெயிலை அடுத்த ஸ்டேஷன் சாம்ரௌலாவில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதே நேரத்தில், ஓடும் ரெயிலின் வழியாகச் சென்று பாதுகாப்பு படை பார்த்தபோது, கடும் குளிரில் இருந்து விடுபடுவதற்காக, ரெயில் பெட்டி ஒன்றில் சிலர் வரட்டியில் தீ மூட்டி இருப்பதைக் கண்டறிந்தனர்.

    பெரிய சேதம் ஏதும் நிகழும் முன் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. பின்னர் ரெயில் அலிகார் சந்திப்பிற்குச் சென்றது. அங்கு இதுதொடர்பாக 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

    மேலும், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சந்தன் (23) மற்றும் தேவேந்திரா (25) என இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பின்னர் அவர்களுடன் இணைந்த மற்ற 14 சக பயணிகளும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்" என்றார்.

    • உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.
    • டெல்லிக்கு வந்து சேரும் ரெயில்கள் காலதாமதம்.

    வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளனர்.

    தலைநகர் டெல்லி மட்டுமல்லாமல் உ.பி., ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களை பார்க்க முடியாது அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

    மிகவும் அதிக அளவில் பனிமூட்டம் அடர்ந்து காணப்படும் என இந்திய வானிலை மையம் டெல்லிக்கு "ரெட் அலர்ட்" பிறப்பித்துள்ளது.

    டெல்லியில் 25 மீட்டருக்கும் குறைவான தூரத்தைக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பதால் 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் காலதாமதமாக வந்து கொண்டிருக்கின்றன.

    டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேரும், புறப்படும் 110 விமான சேவைகளில் பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தர பிரதேச மாநில சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் பல வானங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர பலியானார். பெரேலியில் சரக்கு லாரி ஒன்று பெரேலி- சுல்தான்புர் நெடுஞ்சாலையில் ஒரு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    • எதிரே வரும் நபர் தெரியாத வகையில் கடும் பனி மூட்டம்.
    • வெப்ப நிலை 9.4 டிகிரி செல்சியஸ் குறைந்து குளிர் நிலவியது.

    வடஇந்தியாவில் தற்போது குளிர்காலம் என்பதால் கடுங்குளிர் நிலவி வருகிறது. காலையில் மக்கள் எழுந்ததும் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். வாகனங்கள் சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் உள்ளதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. இதனால் விமான சேவை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

    டெல்லி விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இன்று காலை டெல்லி விமான நிலையம் மூலம் பயணம் செய்ய இருந்த பயணிகள், விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு சேவை குறித்து தெரிந்து கொள்க என டெல்லி விமான நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

    அதேபோல் ஐதராபாத்திலும் கடும் பனி மூட்டம் காரணமாக பெங்களூரில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்ற விமானம், மீண்டும் பெங்களூருவுக்கே திருப்பி அனுப்பிவிடப்பட்டது.

    ×