search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வடஇந்தியாவில் கடும் பனிமூட்டம்: டெல்லியில் 110 விமானம், 25 ரெயில் சேவைகள் பாதிப்பு
    X

    வடஇந்தியாவில் கடும் பனிமூட்டம்: டெல்லியில் 110 விமானம், 25 ரெயில் சேவைகள் பாதிப்பு

    • உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.
    • டெல்லிக்கு வந்து சேரும் ரெயில்கள் காலதாமதம்.

    வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளனர்.

    தலைநகர் டெல்லி மட்டுமல்லாமல் உ.பி., ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களை பார்க்க முடியாது அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

    மிகவும் அதிக அளவில் பனிமூட்டம் அடர்ந்து காணப்படும் என இந்திய வானிலை மையம் டெல்லிக்கு "ரெட் அலர்ட்" பிறப்பித்துள்ளது.

    டெல்லியில் 25 மீட்டருக்கும் குறைவான தூரத்தைக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பதால் 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் காலதாமதமாக வந்து கொண்டிருக்கின்றன.

    டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேரும், புறப்படும் 110 விமான சேவைகளில் பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தர பிரதேச மாநில சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் பல வானங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர பலியானார். பெரேலியில் சரக்கு லாரி ஒன்று பெரேலி- சுல்தான்புர் நெடுஞ்சாலையில் ஒரு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    Next Story
    ×