search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை- கே.எஸ்.அழகிரி
    X

    உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை- கே.எஸ்.அழகிரி

    • மழை தொடங்கியதுமே அந்தந்த மாவட்ட அமைச்சர்களை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து விட்டார்.
    • செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். சொல்ல வேண்டியதையே சொல்ல வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவசர அழைப்பின் பேரில் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி கூட்டத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருநாள் சென்று வந்ததை பெரிது படுத்துகிறார்கள். ஒரு முதலமைச்சர் எங்கிருந்தாலும் சரி, நடக்க வேண்டிய பணிகள் நடக்கும். மழை தொடங்கியதுமே அந்தந்த மாவட்ட அமைச்சர்களை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து விட்டார்.

    இது போன்ற குற்றச்சாட்டை சொல்ல கூடியவர்கள் மணிப்பூரில் 6 மாத காலம் கலவரம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். பிரதமர் மோடி ஒரு முறை கூட அங்கு சென்றதும் இல்லை. அதுபற்றி பேசியதும் இல்லை.


    இதை போன்ற தலைமையை வைத்துக் கொண்டு பேசுவது கண்மூடித்தனமாக தமிழக அரசு மீது வெறுப்பை காட்டுவதாகத்தான் அர்த்தம்.

    தமிழகத்துக்கு மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியாக எதுவும் ஒதுக்கவில்லை. தர வேண்டிய நிதியை மட்டுமே தந்துள்ளார்கள். தற்போது ஏற்பட்ட பெரும் சேதத்துக்கு தனியாக நிவாரணம் தர வேண்டும்.

    நிவாரணம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தரக் குறைவும் இல்லை. அவர் பேச்சு வழக்கில் பேசுவது போல் பேசி உள்ளார். இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது. செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். சொல்ல வேண்டியதையே சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×