search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்கள்"

    • கோவை வழியாக கொல்லம், மங்களூருவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கொல்லம்-கச்சிகுடா இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07045) கொல்லத்தில் இருந்து வருகிற 30-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு செப்டம்பர் 1-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு கச்சிகுடா சென்றடையும்.

    கோவை,

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழியாக கொல்லம், மங்களூருவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓணத்தை முன்னிட்டு செகந்திராபாத்-கொல்லம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்(எண்:07121), இன்று மாலை 4.35 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    கொல்லம்-செகந்திரா பாத் இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07122) வருகிற 29-ந் தேதி இரவு 7 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு வரும் 31-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

    செல்லும் வழியில் இந்த ரெயில்கள் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனாச் சேரி, கோட்டயம், எர்ணாகு ளம் நகரம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    எஸ்.எம்.வி.டி பெங்களூரு-மங்களூரு சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரெயில்(எண்(06569), எஸ்.எம்.வி.டி பெங்களூருவில் இருந்து நாளை மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் சென்றடையும்.

    செல்லும் வழியில் இந்த ரெயில்கள் காசர்கோடு, பைய்யனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரா, கோழிக் கோடு, திரூர், சொர்ணூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரபேட் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மங்களூரு சென்ட்ரல்- எஸ்.எம்.வி.டி பெங்களூரு இடையிலான சிறப்பு ரெயில்(எண்:06570) வருகிற 29-ந் தேதி இரவு 8.05 மணிக்கு மங்களூர் சென்ட்ர லில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு எஸ்.எம்.வி.டி பெங்களூரு சென்றடையும்.

    கச்சிகுடா-கொல்லம் இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07044) கச்சிகுடாவில் இருந்து நாளை மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 11.20 மணிக்கு கொல்லம் சென்ற டையும்.

    கொல்லம்-கச்சிகுடா இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07045) கொல்லத்தில் இருந்து வருகிற 30-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு செப்டம்பர் 1-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு கச்சிகுடா சென்றடையும்.

    செல்லும் வழியில் இந்த ரெயில்கள் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனாச் சேரி, கோட்டயம், எர்ணா குளம் நகரம், ஆலுவா , திருச்சசூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடந்தது.
    • ரெயில்கள் மீது கல் வீசிய 3 பேரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடந்தது. இந்த மாதத்தில் வந்தே பாரத், ஏர்நாடு எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ், நேத்ரா எக்ஸ்பிரஸ் ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவங்கள் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிந்து கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களை தேடிவந்தனர்.

    வந்தே பாரத் ரெயில் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவத்தில் அந்த ரெயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் மாஹே ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ரெயில்கள் மீது கல்வீசிய சைதீஸ், சாதிக் அலி(30), மொய்து(53) ஆகிய 3 பேரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

    • சேலம் வழியாக இயக்கப் படும் சில ரெயில்களின் ேநரம் மாற்றப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை சேலம் மண்டல ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    சேலம்:

    சேலம் வழியாக இயக்கப் படும் சில ரெயில்களின் ேநரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சேலம்- ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு இரவு 12.12 மணிக்கு வந்து கொண்டிருந்த ஆலப்புழா- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் இரவு 12.02 மணிக்கு வந்து செல்லும். அதுேபால் இரவு 12.02 மணிக்கு வந்து கொண்டிருந்த கோவை-சில்ஷார் வாராந்திர ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் இரவு 12.25 மணிக்கு வந்து செல்லும். இதே போல் இரவு 12.02 மணிக்கு வந்து கொண்டிருந்த எர்ணாகுளம்- பாட்னா ரெயில் (வாரம் 2 முறை வரும் ரெயில்) வருகிற 21-ந்தேதி 12.12 மணிக்கு வந்து செல்லும். இந்த தகவலை சேலம் மண்டல ரெயில்வே கோட்டம் தெரிவித்து ள்ளது.

    • நெல்லையில் இருந்து வியாழக்கிழமை தோறும் தென்காசி வழியாக சென்னைக்கு நிரந்தர ரெயில் இயக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தென்காசிக்கு, சென்னை தவிர வேறு ஊர்களுக்கு ரெயில்களே இல்லாத நிலைதான் நிலவுகிறது.

    தென்காசி:

    தென்காசி ரெயில் நிலையமானது நெல்லை-தென்காசி, விருதுநகர்- தென்காசி-கொல்லம் வழித்தடங்களின் மிக முக்கியமான சந்திப்பு ஆகும்.

    இதில் கொல்லம்-தென்காசி-அம்பை-நெல்லை வழித்தடமானது கடந்த 1904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக அமைக்கப்பட்டு கொல்லத்தில் இருந்து சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2012-ம் ஆண்டு அந்த பாதையானது அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு தற்போது ரெயில்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன.

    தென்காசி-ராஜ பாளையம்-விருதுநகர் வழித்தடமானது கடந்த 1927-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக அமைக்கப்பட்டு பின்னர் 2004-ல் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. அந்த தடத்தில் தற்போது பொதிகை, சிலம்பு, கொல்லம், மெயில் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் தென்காசி மாவட்ட பொதுமக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய அரசிடம் தமிழக எம்.பி.க்கள் அதிக அளவில் அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு புதிய வழித்தடங்களில் ரெயில்கள் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க தேவையான அடிப்படை கட்டமைப்புகள் என்னென்ன தேவை என்பது குறித்து ரெயில் பயணிகள் சங்கத்தினர் விளக்கி உள்ளனர்.

    செங்கோட்டை-தென்காசி இடையே இரட்டை அகல ரெயில் பாதை அமைத்தல், தென்காசி ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதிகளை ஏற்படுத்தி டெர்மினல் ரெயில் நிலையமாக மாற்றுதல், நெல்லையில் இருந்து அம்பை, ராஜபாளையம் வழியாக செல்லும் ரெயில்களுக்கு என்ஜின் மாற்றாமலேயே பைபாசில் செல்லும் வகையில் தென்காசி ரெயில் நிலையத்தில் பைபாஸ் லைன் அமைத்தல், பாவூர்சத்திரம், கடையம், அம்பை, சேரன்மகாதேவி ரெயில் நிலைய நடைமேடைகளின் நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டித்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு கோரிக்கைகள் பிரதான தேவையாக உள்ளது.

    புதிய ரெயில்கள்

    வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரெயிலை நிரந்தர ரெயி லாக மாற்றுதல், பிலாஸ்பூர் ரெயிலின் காலிப்பெட்டி களை கொண்டு நெல்லையில் இருந்து வியாழக்கி ழமை தோறும் தென்காசி வழியாக சென்னைக்கு நிரந்தர ரெயில் இயக்குதல், பாவூர்சத்திரம் வழியாக செல்லும் செங்கோட்டை- தாம்பரம் வாரம் மும்முறை ரெயிலின் வேகத்தை அதிகரித்து தினசரி ரெயிலாக இயக்குதல் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசின் ரெயில்வே துறையிடம் வலியுறுத்த வேண்டும்.அதேபோல், நெல்லையில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருக்கு தினசரி ரெயில் இயக்குதல், பாவூர்சத்திரம், தென்காசி, கொல்லம் வழியாக கர்நாடக மாநிலம் மங்களூருக்கு ரெயில் இயக்குதல், குருவாயூரில் இருந்து புனலூர் வரை இயங்கும் ரெயிலை தென்காசி, ராஜபாளையம் வழியாக மதுரைக்கு நீட்டிப்பு செய்தல், எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், தென்காசி, ராஜபாளையம் வழியாக வேளாங்கண்ணிக்கு வாரம் இருமுறை ரெயில், பாலருவி விரைவு ரெயிலை நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு நீட்டிப்பு செய்தல், மதுரையோடு நிற்கும் புதுடெல்லி - மதுரை சம்பர்க்கி ராந்தி ரெயிலை ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக நெல்லைக்கு நீட்டித்தல், ஈரோடு-நெல்லை ரெயிலை பாவூர்சத்திரம் வழியாக செங்கோட்டைக்கு நீட்டித்தல், நெல்லை- கொல்லம் இடையே நேரடி ரெயில்கள் இயக்குதல் உள்ளிட்டவை தென்காசி மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளது.

    மின்மயமாக்கல்

    விருதுநகர்- செங் கோட்டை- கொல்லம், தென்காசி-நெல்லை ஆகிய வழித்தடங்களில் ரெயில்வே மின்மயமாக்கல் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் கூடுதல் ரெயில்களை இயக்குவதற்கு இவை சாதகமாக அமையும். இதுகுறித்து தென்காசி மாவட்ட ரெயில் பயணிகள் கூறுகையில், ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் அனைத்து ரெயில்களையும் விரைவில் ஒப்புதல் அளித்து இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்சிண காசி என்று அழைக்கப்படும் தென்காசிக்கு, சென்னை தவிர வேறு ஊர்களுக்கு ரெயில்களே இல்லாத நிலைதான் நிலவுகிறது.

    எனவே தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு பெங்களூரு, கோவை மற்றும் வட மாநிலங்களுக்கு தென்காசி வழியாக ரெயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பொது மக்கள் வசதிக்காக தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.
    • ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில் பணகுடி அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தையொட்டி உள்ள ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதனை முன்னிட்டு ஏற்கனவே இருந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது. பொது மக்கள் வசதிக்காக தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுரங்கப்பாதை ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தில் உள்ள 4 தண்டவாளங்களின் கீழ் கர்டர் என்று சொல்லப்படும் பாலம் அமைத்து தண்டவாளத்தை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே 2 தண்டவாளங்களில் கர்டர் பாலம் அமைக்கப்பட்ட நிலையில் மற்ற 2 தண்டவாளங்களில் கர்டர் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்காலிக ரெயில்வே கேட்டும் மூடப்பட்டு நேற்று முதல் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.

    இன்று காலையிலும் பணி நடந்தது. ராட்சத கிரேன் மூலமாக தண்டவாளங்கள் அகற்றப்பட்டு கர்டர் பாலம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியை நாளைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கர்டர் பாலம் அமைக்கப்பட்டு ரெயில்வே தண்டவாளம் அமைத்து விட்டால் ரெயில் போக்கு வரத்தில் எந்த ஒரு பாதிப்பும் இன்றி சுரங்கப்பாதை பணியை மேற்கொள்ள முடியும்.

    தற்போது கர்டர் பாலத்திற்காக தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெறுவதையடுத்து அந்த வழியாக ரெயில் போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டது. இதனால் நாகர்கோவிலுக்கு வரவேண்டிய அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அந்த ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்து சேர்ந்தது.

    சென்னை, பெங்களூர், கோவை, ராமேசுவரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரெயில்கள் வள்ளியூர், பணகுடி, ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வரும். இந்த ரெயில் இன்று காலையில் வழக்கமான நேரத்திற்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே கேபின் பகுதிக்கு வந்தது.

    ஆனால் சுரங்கப்பாதை பணி காரணமாக அந்த ரெயில் சுமார் 2 மணி நேரம் அங்கேயே நிறுத்தப்பட்டது. 2 மணி நேரத்திற்கு மேலாக ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். தொடர்ந்து 7.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு 7.45 மணிக்கு சென்றடைந்தது.

    இதேபோல் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 4.50 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயிலும் வள்ளியூரில் 2 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு 6.30 மணிக்கு வந்து சேர்ந்தது.

    பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் 7.30 மணிக்கு வந்து சேரும். இன்று 45 நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தது. ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் ரெயில் அதிகாலையில் 3.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் 4¾ மணி நேரம் தாமதமாக காலை 8.15 மணிக்கு வந்து சேர்ந்தது.

    சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு காலை 7.10 மணிக்கு வந்து சேர வேண்டிய சிறப்பு ரெயில் 8.50 மணிக்கு வந்து சேர்ந்தது. நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.15 மணிக்கு வழக்கமாக புறப்பட்டு செல்லும். இன்று 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக 7.35 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    ரெயில்கள் அனைத்தும் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணி கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில் பணகுடி அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

    • பேராவூரணியில் இரவு ஒரு நிமிடம் நின்று சென்றது.
    • அனைத்து ரயில்களும் பேராவூரணியில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வழியாக சென்ற திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு பேராவூரணியில் ரயில் பயனாளிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் சாதிக் அலி, துணைச் செயலாளர் கௌதமன், பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்க நிர்வாகிகள் பாரதி நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

    திருநெல்வேலியில் இருந்து (வண்டி எண் 06004) தாம்பரத்திற்கு நேற்று மாலை 3.40 மணியளவில் சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்பட்டது.

    இந்த ரயில் பேராவூரணியில் இரவு.9.30மணிக்கு 1 நிமிடம் நின்று சென்றது. இதில் 35 பயணிகள் சென்னைக்கு பயணம் செய்தனர். 23 பயணிகள் முன்பதிவு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இது குறித்து வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி ராஜேந்திரன் கூறியதாவது, திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலில் பேராவூரணியில் இருந்து 35 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

    எனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் சென்னை மற்றும் செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் பேராவூரணியில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என கூறினார்.

    • விரைவு ரெயில் ஸ்ரீரங்கம்- திருச்சி இடையே ரத்து செய்யப்படுகின்றன.
    • சேலம், விருத்தாசலம், பொன்மலை (பை-பாஸ்) வழியாக தஞ்சாவூருக்கு இயக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    திருச்சி ரெயில்வே கோட்டம் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது :-

    திருச்சி சந்திப்பு ரெயில் நிலையத்தில் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 26, 27 ஆகிய 3 நாட்களில் ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.அதன்படி திண்டுக்கல்- திருச்சி- திண்டுக்கல் முன்பதிவில்லா விரைவு ரெயில் (வண்டி எண்-06498/06499) மற்றும் மயிலாடுதுறை- திருச்சி- மயிலாடுதுறை முன்பதிவில்லா விரைவு ரெயில் (16233/16234) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    திருப்பாதிரிபுலியூர்- திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06889) லால்குடி- திருச்சி இடையேயும், வேளாங்கண்ணி- திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06839) பொன்மலை- திருச்சி இடையேயும், திருச்சி- காரைக்கால் டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06880) திருச்சி- திருவெறும்பூர் இடையேயும், திருச்சி- திருப்பாதிரிபுலியூர் டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06890) திருச்சி- வாளாடி இடையேயும், விருத்தாசலம்- திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06891) ஸ்ரீரங்கம்- திருச்சி இடையேயும் ரத்து செய்யப்படுகின்றன.

    இதேப்போல் திருச்சி- விருத்தாசலம் டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06892) திருச்சி-லால்குடி இடையேயும், காரைக்குடி- திருச்சி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06126) குமாரமங்கலம்- திருச்சி இடையேயும், திருச்சி காரைக்குடி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06125) திருச்சி- குமாரமங்கலம் இடையேயும், சென்னை- திருச்சி சோழன் விரைவு ரெயில் (22675) பொன்மலை- திருச்சி இடையேயும் ரத்து செய்யப் படுகின்றன.

    ஹுப்ளி-தஞ்சாவூர் இடையிலான சிறப்பு கட்டண விரைவு ரெயில் (07325) நாளை (செவ்வாய்கிழமை) சேலம், விருத்தாசலம், பொன்மலை (பை-பாஸ்) வழியாக தஞ்சாவூருக்கு இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மண்டபம், ராமநாதபுரம் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தெற்கு ரெயில்வேக்கு நவாஸ்கனி எம்.பி. நன்றி தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், எம்.பி.யுமான நவாஸ்கனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்ல பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க தொடர்ந்து தெற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறேன். மேலும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து நேரிலும் கோரிக்கை விடுத்து வந்தேன்.

    இந்த நிலையில், வருகிற 18-ந்தேதி முதல் சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மண்டபம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும், ராமேசுவரம்-வாரணாசி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்தில் ராமநாதபுரம் நிலையத்தில் நின்று செல்லும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்காக தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும் பல்வேறு ரெயில்களை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் நின்று செல்ல கோரிக்கை விடுத்து வருகின்றேன்.

    அந்த ரெயில் நிலைய நிறுத்த கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இருவழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும்.
    • தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி ரயில் நிலையத்தில் மீண்டும் இரு வழி மார்க்கமாக நின்று சென்ற அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ரெயில் நிறுத்த போராட்டக் குழுவினர் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை வருகின்ற 17ஆம் தேதி அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் ரெயில்வே நிர்வாக கோட்ட மேலாளர் ஹரிக்குமார், கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இரு வழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதனை அடுத்து அறிவி த்திருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்க ப்படுவதாக போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜெக.சண்முகம் தெரிவித்தார்.

    • பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விட்டுள்ளதால், கூட்டம் அதிகரித்துள்ளது.
    • இரண்டு நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர், பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றுள்ளனர்.

    உடுமலை:

    விடுமுறை நாட்கள் என்பதால் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும்ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    பாலக்காடு - திருச்செந்தூர் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பொள்ளாச்சிக்கு காலை 7:10 மணிக்கு வந்து 7:15 மணிக்கு கிளம்புகிறது.பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விட்டுள்ளதால், கூட்டம் அதிகரித்துள்ளது. ெரயிலில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்து ஏறுகின்றனர். ெரயில் பெட்டியில் இடமில்லாமல் நின்று கொண்டே பயணிக்கும் நிலை காணப்படுகிறது.

    இது குறித்து ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-

    பாலக்காடு - திருச்செந்தூர் ெரயிலை மக்கள் அதிகளவு பயன்படுத்துகின்றனர். மற்ற நாட்களை விட, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர், பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றுள்ளனர். 110 பேர் வரை உட்கார்ந்து செல்ல வசதியுள்ளது. மற்றவர்கள் நின்று தான் செல்ல வேண்டும்.

    உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ஏறும் போது மேலும் கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதனால் பயணிகள் நின்று கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் நலன் கருதி ெரயில்வே நிர்வாகம் நான்கு பெட்டிகள் வரை கூடுதலாக இணைக்க வேண்டும். முன்பதிவு செய்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை ெரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் டுவிட்டர் வாயிலாக ெரயில்வே மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வலியுறுத்தினர்.

    • சுற்றுலா தலங்க ளுக்கும் செல்ல கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம், நாமக்கல் வழியாக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
    • கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரெயில் (எண்.07389) இன்று காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி அதி காலை 00.35 மணிக்கு காரைக்குடியை சென்றடை யும்.

    நாமக்கல்:

    கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்க ளுக்கும், சுற்றுலா தலங்க ளுக்கும் செல்ல கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம், நாமக்கல் வழியாக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.

    கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரெயில் (எண்.07389) இன்று காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி அதி காலை 00.35 மணிக்கு காரைக்குடியை சென்றடை யும்.

    மறு மார்க்கத்தில் 29-ந் தேதி மதியம் 12.10 மணிக்கு இந்த ரெயில் (எண். 07390) காரைக்குடியில் இருந்து புறப்பட்டு, 30-ந் தேதி மாலை 5.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

    இந்த ரெயில் ஹூப்ளியில் இருந்து வரும்போது ராணி பெண்ணூர், ஹரிஹார், தாவன்கரே, பிரூர், அர்சி கெரே, எஸ்எம்விடி பெங்க ளூர், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    ஹூப்ளி - காரைக்குடி செல்லும் ரெயில் கர்நாடகா மாநிலம் ஹாவேரியிலும், காரைக்குடியில் இருந்து ஹூப்ளி செல்லும் ரெயில் கராஜ்கியிலும் நின்று செல்லும்.

    இந்த சிறப்பு ரெயில் ஹூப்ளியில் இருந்து காரைக்குடி செல்லும்போது, சேலம் கோட்டத்தில், சேலம் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 6.45க்கு வந்து 6.55க்கு புறப்படும், நாமக்கல்லில் இரவு 7.44க்கு வந்து 7.45க்கு புறப்படும், கரூரில் இரவு 8.23க்கு வந்து 8.25க்கு புறப்படும்.

    காரைக்குடியில் இருந்து ஹூப்ளி செல்லும் ரெயில் 29-ந் தேதி மாலை 3.28 மணிக்கு கரூர் வந்து, 3.30க்கு புறப்படும். நாமக்கல்லில் மாலை 4.03 மணிக்கு வந்த 4.05 மணிக்கு புறப்படும், சேலத்திற்கு 4.50 மணிக்கு வந்து சேர்ந்து 5 மணிக்கு புறப்படும்.

    சேலம், ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்:

    கர்நாடக மாநிலம் அர்சிகெரே நகரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கேரள மாநிலம் கண்ணூர் வரை கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இன்று மதியம் 12.15 மணிக்கு கர்நாடக மாநிலம் அர்சிகெரேயில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் (எண்.06205), மறுநாள் மாலை 5.15 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூரை சென்றடையும்.

    மறு மார்க்கத்தில் கன்னூ ரில் இருந்து 29-ந் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்.06206), மறுநாள் 30-ந் தேதி மதியம் 3 மணிக்கு அர்சிகெரே சென்றடையும்.அர்சிகெரே வில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் தும்கூர், சிக் பனா வர், எஸ்எம்விடி பெங்க ளூரு, கிருஷ்ணராஜபுரம், பங்கா ரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஷோரனூர், திரூர், கோழிக்கோடு, வட கரா மற்றும் தலச்சேரி வழியாக கண்ணூரை சென்றடையும்.

    அர்சிகெரேயில் வரும் இந்த ரெயில் சேலம் கோட்டத்தில், சேலம் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 7.47 மணிக்கு வந்து 7.50 மணிக்கு புறப்படும், ஈரோட்டிற்கு இரவு 8.40 மணிக்கு வந்து, 8.50 மணிக்கு புறப்படும், திருப்பூருக்கு இரவு 9.33 மணிக்கு வந்து 9.35 மணிக்கு புறப்படும். கோவை ஜூனியர் ரெயில் நிலையத்திற்கு இரவு 10.37 மணிக்கு வந்து 10.40 மணிக்கு புறப்படும்.

    மறுமார்க்கத்தில் நாளை கண்ணூரில் இருந்து அர்சி கெரோ செல்லும்போது கோவை ஜூனியர் ரெயில் நிலையத்திற்கு மதியம் 1.50 மணிக்கு வந்து 1.55 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு 2.40 மணிக்கு வந்து 2.42 மணிக்கு புறப்படும். ஈரோட்டிற்கு மாலை 3.35 மணிக்கு வந்து 3.45 மணிக்கு புறப்படும். சேலத்திற்கு 4.35மணிக்கு வந்து 4.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    • இதர பணிகளுக்காகவும் மக்கள் மடத்துக்குளம் வந்து செல்கின்றனர்.
    • சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களும் பயன்பெறுவார்கள் என்றனர்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளத்தை சுற்றிலும் காகித ஆலைகள், நூற்பாலைகள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளும் அதிக அளவு உள்ளன. விவசாயம் சார்ந்த தொழில்களும் இப்பகுதியில் அதிகரித்து வருகிறது. பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களும் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்காகவும், இதர பணிகளுக்காகவும் மக்கள் மடத்துக்குளம் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் திண்டுக்கல்-பாலக்காடு அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு பெற்ற பிறகு, மடத்துக்குளம் ரெயில்வே நிலையத்தில் பாலக்காடு-திருச்செந்தூர், கோவை-பழநி உள்ளிட்ட பயணிகள் ெரயில்கள் நிறுத்தப்பட்டு வந்தன. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு இவ்வழித்தடத்தில் கூடுதலாக ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மடத்துக்குளம் ரெயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் உடுமலை, பழநிக்கு சென்று ரெயில் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. நீண்ட காலமாக வலியுறுத்தியும் மடத்துக்குளம் ரெயில் நிலையம் குறித்த கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    கோரிக்கைகள் குறித்து பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் சார்பில் ரெயில்வே மதுரை மண்டல மேலாளருக்கு மனு அனுப்பப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- மடத்துக்குளத்தில் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல் பாலக்காடு- சென்னை எக்ஸ்பிரஸ், அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களை மடத்துக்குளம் நிலையத்தில் ஒரு நிமிடம் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த ெரயில் சேவைகளை செயல்படுத்தினால் பிற மாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களும் பயன்பெறுவார்கள் என்றனர்.  

    ×