search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "time change"

    • வருகிற 28-ந் தேதி, ஐப்பசி பவுர்ணமி என்பதால், சிவாலயங்களில் அன்னாபிேஷக பூஜைக்கு ஏற்பாடு நடந்தது.
    • 11 மணி முதல் 12 மணி வரை அன்னாபிேஷகமும், 12:30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    திருப்பூர்:

    ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவாலயங்களில் அன்னாபிேஷகம் நடத்துவது வழக்கம். குறிப்பாக மாலை 6 மணிக்கு, மூலவருக்கு அபிேஷகம் நடத்தி, அன்னத்தால் லிங்கத்திருமேனிக்கு அலங்காரம் செய்து பக்தர் வழிபடுவர்.

    வருகிற 28-ந் தேதி, ஐப்பசி பவுர்ணமி என்பதால், சிவாலயங்களில் அன்னாபிேஷக பூஜைக்கு ஏற்பாடு நடந்தது. இந்நிலையில் பவுர்ணமி நாளில், சந்திரகிரஹணம் ஏற்படுவதால் அன்னாபிேஷக நேரம் மாற்றப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருப்பூர் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வழக்கமாக மாலை நேரம் நடக்கும் அபிேஷக பூஜை, 28ந் தேதி காலை நேரத்திலேயே நடக்கிறது. காலை 10:30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், அதனை தொடர்ந்து 11 மணி முதல் 12 மணி வரை அன்னாபிேஷகமும், 12:30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    கிரஹணம் ஏற்படுவதால், கோவில்கள் வழக்கம் போல் மதியம் நடை அடைக்கப்பட்டு, அடுத்த நாள் (29-ந் தேதி) காலை 6 மணிக்கு திறந்து சாந்திபூஜைகள் செய்து, வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சாமளாபுரம் தில்லைநாயகி சமேத ஸ்ரீசோழீஸ்வரர் கோவிலில் மாலை 4 மணிக்கு அபிேஷக பூஜை துவங்குகிறது. மாலை 6 மணிக்குள் அன்னாபிேஷக பூஜைகள் நிறைவு செய்யப்படும். இரவு 7 மணிக்கு, கிரஹணத்தை முன்னிட்டு நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

    • சென்னை சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்துக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    • திருப்பூருக்கு 7.25 மணிக்கு வந்த ரெயில் இனி 7.18 மணிக்கும் வந்து செல்லும்.

    திருப்பூர்

    சென்னை சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சேலத்துக்கு மாலை 5.58 மணிக்கு வந்த ரெயில் இனி 5.48 மணிக்கும், ஈரோட்டுக்கு 6.47 மணிக்கு வந்த ரெயில் இனி 6.37 மணிக்கும், திருப்பூருக்கு 7.25 மணிக்கு வந்த ரெயில் இனி 7.18 மணிக்கும் வந்து செல்லும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பாலக்காடு டவுன்- ஈரோடு மெமு எக்ஸ்பிரஸ் ெரயில்(06818)
    • பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2:40 மணிக்கு பதில், 3 மணிக்கு ெரயில் புறப்படும்.

    திருப்பூர்,செப்.25-

    பாலக்காடு டவுன்- ஈரோடு மெமு எக்ஸ்பிரஸ் ெரயில்(06818) நேரம் வருகிற ஜனவரி மாதம் 1 -ந் தேதி முதல் மாற்றப்படுகிறது.பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2:40 மணிக்கு பதில், 3 மணிக்கு ெரயில் புறப்படும். கஞ்சிக்கோடு, வாளையார், எட்டிமடை, மதுக்கரை, போத்தனூர் நிலையங்களுக்கு தாமதமாக வரும். கோவைக்கு மாலை 4:17மணிக்கு வந்த ெரயில், ஜனவரி 1-ந்தேதி முதல் 20 நிமிடம் தாமதமாக, மாலை 4:37 மணிக்கு வரும். கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், வஞ்சிபாளையம், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் நிலையங்களுக்கு 10 முதல் 25 நிமிடம் வரை தாமதமாக வரும்.

    திருப்பூருக்கு மாலை 5:30மணிக்கு பதிலாக மாலை 5:48 மணிக்கு வரும். இரவு 7:10மணிக்கு ஈரோடு சென்றடைந்த ெரயில் 7:25 மணிக்கு சென்று சேரும். கோவை - நிஜாமுதீன் கொங்கு எக்ஸ்பிரஸ் (எண்:12647) வருகிற ஜனவரி மாதம் 7-ந்தேதி முதல் மாலை 4:15 மணிக்கு பதில் மாலை 4:25மணிக்கு புறப்படும். திருப்பூர், ஈரோடு, சேலத்துக்கு 5 முதல் 10 நிமிடம் தாமதமாக செல்லும்.

    தினமும் திருவனந்தபுரத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படும் சபரி எக்ஸ்பிரஸ் (எண்:17299, 17230) இரு மார்க்கத்திலும், திருச்சூர் - சொர்ணூர் இடையே உள்ள வடக்கஞ்சேரி நிலையத்தில் ஜனவரி 1-ந்தேதி முதல் நின்று செல்ல ெரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது.

    • ரூ.10.94 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
    • கல்லூரி நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1.55 வரை என மாற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா்- பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் சுமாா் 4 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் இடநெருக்கடியால் கல்லூரி காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக செயல்பட்டு வந்தது. இதனால் மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வந்தனா்.

    இதனிடையே, கல்லூரியில் ரூ.10.94 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கடந்த ஆகஸ்ட் 14 ந்தேதி திறக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து, கல்லூரி செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, காலை 9 மணி முதல் பிற்பகல் 1.55 வரை கல்லூரி செயல்படும் என முதல்வா் எழிலி தெரிவித்துள்ளாா்.

    • சேலம் வழியாக இயக்கப் படும் சில ரெயில்களின் ேநரம் மாற்றப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை சேலம் மண்டல ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    சேலம்:

    சேலம் வழியாக இயக்கப் படும் சில ரெயில்களின் ேநரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சேலம்- ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு இரவு 12.12 மணிக்கு வந்து கொண்டிருந்த ஆலப்புழா- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் இரவு 12.02 மணிக்கு வந்து செல்லும். அதுேபால் இரவு 12.02 மணிக்கு வந்து கொண்டிருந்த கோவை-சில்ஷார் வாராந்திர ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் இரவு 12.25 மணிக்கு வந்து செல்லும். இதே போல் இரவு 12.02 மணிக்கு வந்து கொண்டிருந்த எர்ணாகுளம்- பாட்னா ரெயில் (வாரம் 2 முறை வரும் ரெயில்) வருகிற 21-ந்தேதி 12.12 மணிக்கு வந்து செல்லும். இந்த தகவலை சேலம் மண்டல ரெயில்வே கோட்டம் தெரிவித்து ள்ளது.

    • 27 ரெயில்களில் புறப்படும் பயணிக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    • திருச்சி நிலைய அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்துக்கு (மாலை, 4:50 மணிக்கு) வந்து சேரும்.

     திருப்பூர்:

    திருச்சி மார்க்கத்தில் நடக்கும் பொறியியல் மேம்பாட்டு பணி காரணமாக 27 ெரயில்களில் புறப்படும் பயணிக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    வருகிற ஆகஸ்டு 13ந்தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் புறப்படும் ெரயில் சேரன் எக்ஸ்பிரஸ் (எண்:12673) காட்பாடி நிலையத்திற்கு இரவு 11:48 மணிக்கு வந்து 5 நிமிடம் தாமதமாக இரவு 11:53 மணிக்கு வரும். இந்த ெரயில் ஜோலார்பேட்டை நிலையத்திற்கு அதிகாலை 1:03க்கு பதிலாக 10 நிமிடம் தாமதமாக 1:13 மணிக்கு வந்து சேரும்.

    ஆகஸ்டு 14ந்தேதி மயிலாடுதுறை - கோவை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (எண்:12083) மதியம் 2:55 மணிக்கு பதில் 5 நிமிடம் தாமதமாக 3 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்படும். கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் நிலையங்களுக்கு தாமதமாக வரும்.

    ஆனால் திருச்சி நிலைய அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்துக்கு (மாலை, 4:50 மணிக்கு) வந்து சேரும். இந்த 2 ரெயில்கள் உட்பட 25 ெரயில்களின் புறப்படும், பயணிக்கும் நேரம் ஆகஸ்டு 2-வது மற்றும் 3-வது வாரம் குறிப்பிட்ட தேதியில் மாற்றப்பட்டுள்ளது. இத்தகவலை ரெயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் பயணிகள் அறியலாம் என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • திருநெல்வேலி ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 3 மணிக்கு சென்று 3.05 மணிக்கு புறப்படும்.
    • நாகர்கோவிலுக்கு 4.50 மணிக்கு சென்று சேரும்.

    திருப்பூர் :

    கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.22668) திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லும் நேரம் வருகிற 28-ந் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி திருநெல்வேலி ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 3.20 மணிக்கு சென்று 3.25 மணிக்கு புறப்பட்டது. இனி 3 மணிக்கு சென்று 3.05 மணிக்கு புறப்படும். வள்ளியூர் ரெயில் நிலையத்துக்கு 4.01 மணிக்கு சென்று 4.02 மணிக்கு புறப்பட்டது. இனி 3.43 மணிக்கு சென்று 3.45 மணிக்கு புறப்படும். நாகர்கோவிலுக்கு 5.05 மணிக்கு சென்று சேர்ந்தது. இனி 4.50 மணிக்கு சென்று சேரும்.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராமேசுவரம் - மதுரை ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.
    • மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    பரமக்குடி - சத்திரக்குடி இடையே ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை (1-ந் தேதி) முதல் 31-ந் தேதி வரை வியாழன் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து வழக்கமாக காலை 11 மணிக்கு புறப்படும் மதுரை ரெயில் (06654), ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு செல்லும். பாம்பன் ரெயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த ரெயில் ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்றுப் போட்டிகள் துவங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #IPL2019
    புதுடெல்லி:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்கள் மாலை 4 மணி, இரவு 8 மணி என்று இரண்டு நேரங்களில் தொடங்கி நடக்கிறது. லீக் சுற்று முடிந்ததும் 3 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி நடக்கிறது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களில் முதலாவது தகுதி சுற்று சென்னையில் மே 7-ம் தேதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் மே 8-ம் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் மே 10-ம் தேதியும், இறுதிப்போட்டி ஐதராபாத்தில் மே 12-ம் தேதியும் நடக்கிறது. 

    தவிர்க்க முடியாத சூழ்நிலையை தவிர ஒரு ஆட்டம் அதிகபட்சமாக 3 மணி 20 நிமிடங்களில் நிறைவடைய வேண்டும் என்பது ஐ.பி.எல். விதிமுறையாகும். ஆனால் இந்த சீசனில் பல ஆட்டங்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து இருக்கிறது.

    முதலில் இந்த ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆட்டங்கள் அனைத்தும் அரை மணி நேரம் முன்னதாக இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதே போல் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடக்கும் பெண்கள் ஐ.பி.எல். ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிகிறது. #IPL2019
    ×