search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vandhe bharath rail"

    • சென்னை சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்துக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    • திருப்பூருக்கு 7.25 மணிக்கு வந்த ரெயில் இனி 7.18 மணிக்கும் வந்து செல்லும்.

    திருப்பூர்

    சென்னை சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சேலத்துக்கு மாலை 5.58 மணிக்கு வந்த ரெயில் இனி 5.48 மணிக்கும், ஈரோட்டுக்கு 6.47 மணிக்கு வந்த ரெயில் இனி 6.37 மணிக்கும், திருப்பூருக்கு 7.25 மணிக்கு வந்த ரெயில் இனி 7.18 மணிக்கும் வந்து செல்லும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டின் 5வது வழித்தடமாக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
    • வாரத்தில் 6 நாட்களுக்கு சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

    பிரதமா் மோடி தமிழகம், கா்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 4 தென் மாநிலங்களில் இன்று முதல் 2 நாட்கள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக, தென்மாநில சுற்றுப்பயணத்துக்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டு பெங்களூரு வந்தார். இங்கு இன்று காலை 9.45 மணிக்கு கன்னட பக்தி இலக்கிய முன்னோடியான கனக தாசா் மற்றும் மகரிஷி வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து முதலில் மரியாதை செலுத்தினார்.

    பின்னர், பிரதமர் மோடி நாட்டில் 5-வதாகவும், தென் இந்தியாவில் முதலாவதாகவும் வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை சென்னை-மைசூரு இடையே இன்று காலை 10 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் காலை 11.30 மணிக்கு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைக்கிறார். பெங்களூரு விமான நிலையத்தில் நெரிசலை சமாளிப்பதற்காக கட்டப்பட்டுள்ள இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்தால் பயணிகள வருகை மற்றும் விமான சேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெங்களூருவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி பெங்களூருவில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பெங்களூரு கெம்பே சர்வதேச விமான நிலையம், கவர்னர் மாளிகை மற்றும் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ×