search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் வகுப்பறை செயல்படும் நேரம் மாற்றம்
    X

    கோப்புபடம்

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் வகுப்பறை செயல்படும் நேரம் மாற்றம்

    • ரூ.10.94 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
    • கல்லூரி நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1.55 வரை என மாற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா்- பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் சுமாா் 4 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் இடநெருக்கடியால் கல்லூரி காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக செயல்பட்டு வந்தது. இதனால் மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வந்தனா்.

    இதனிடையே, கல்லூரியில் ரூ.10.94 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கடந்த ஆகஸ்ட் 14 ந்தேதி திறக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து, கல்லூரி செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, காலை 9 மணி முதல் பிற்பகல் 1.55 வரை கல்லூரி செயல்படும் என முதல்வா் எழிலி தெரிவித்துள்ளாா்.

    Next Story
    ×