search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "play offs"

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்றுப் போட்டிகள் துவங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #IPL2019
    புதுடெல்லி:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்கள் மாலை 4 மணி, இரவு 8 மணி என்று இரண்டு நேரங்களில் தொடங்கி நடக்கிறது. லீக் சுற்று முடிந்ததும் 3 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி நடக்கிறது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களில் முதலாவது தகுதி சுற்று சென்னையில் மே 7-ம் தேதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் மே 8-ம் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் மே 10-ம் தேதியும், இறுதிப்போட்டி ஐதராபாத்தில் மே 12-ம் தேதியும் நடக்கிறது. 

    தவிர்க்க முடியாத சூழ்நிலையை தவிர ஒரு ஆட்டம் அதிகபட்சமாக 3 மணி 20 நிமிடங்களில் நிறைவடைய வேண்டும் என்பது ஐ.பி.எல். விதிமுறையாகும். ஆனால் இந்த சீசனில் பல ஆட்டங்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து இருக்கிறது.

    முதலில் இந்த ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆட்டங்கள் அனைத்தும் அரை மணி நேரம் முன்னதாக இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதே போல் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடக்கும் பெண்கள் ஐ.பி.எல். ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிகிறது. #IPL2019
    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையிலும், ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற இன்னும் எங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று கேப்டன் ரகானே கூறியுள்ளார். #IPL2018 #RRvKKR
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது.

    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 142 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 18 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 145 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

    தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே கூறியதாவது:-


    துரதிருஷ்டவசமாக நாங்கள் 142 ரன்கள் மட்டுமே எடுத்துவிட்டோம். 170 முதல் 180 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும். இன்னும் எங்களுக்கு பிளேஆப் சுற்று வாய்ப்பு இருக்கிறது. இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று முன்னேற்றம் அடைய வேண்டும்.

    எங்களது கடைசி போட்டி சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் நடக்கிறது. அந்த ஆடுகளம் பற்றி நன்கு அறிவோம். எங்களது அணியில் முக்கிய வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோர்க் சொந்த நாட்டு அணிக்கு திரும்புவதால் அவர்களை தவறவிடுகிறோம். அவர்கள் எவ்வளவு அபாயகரமான வீரர்கள் என்பதை அறிவோம். அதேவேலையில் பட்லர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #IPL2018 #RRvKKR #Rahane
    ×