என் மலர்
நீங்கள் தேடியது "assembly meeting"
- திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசனை செய்துதான் சட்டசபை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம்.
- திமுகவின் ஆதரவுடன் பன்னீர்செல்வம் முன்கூட்டியே செய்த சதித்திட்டங்கள் அம்பலமாகியுள்ளன.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேற்றி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும், அவையில் பங்கேற் அதிமுகவினருக்கு ஒரு நாள் முழுக்க தடை விதித்தார்.
இந்நிலையில், வெளியேறிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுகிறார். சட்டசபை வேறு கட்சி வேறு. 62 அதிமுக எம்எல்ஏக்களால் எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதயகுமார் தேர்வு செய்யப்பட்டவர். ஆர்.பி.உதயகுமார் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவிகளுக்காக முன்பே கடிதம் கொடுக்கப்பட்டது
ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லும் என நீதிமன்ற தீர்ப்பே உள்ள நிலையில் அதை சபாநாயகர் மதிக்கவில்லை. அதிமுக எம்எல்ஏக்களை கொண்ட எதிர்க்கட்சியாக உள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்பதுதான் மரபு.
நேற்று வரை சரியான முடிவு எடுக்காமல் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.
எங்களது கருத்துகளை நியாயமாக தெரிவித்தும் சபாநாயகர் எங்களுக்கு முறையான பதில் கூறவில்லை.
திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசனை செய்துதான் சட்டசபை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ளாத திமுக தலைவர் ஸ்டாலின் கொள்ளைபுறம் மூலமாக பழிவாங்குகிறார்.
திமுகவின் ஆதரவுடன் பன்னீர்செல்வம் முன்கூட்டியே செய்த சதித்திட்டங்கள் அம்பலமாகியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
- பேரவை வளாகத்தில் இருந்தும் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
சபாநாயகர் உத்தரவின்பேரில் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டதை அடுத்து, வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து, அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் தர்ணாவில் ஈடுபட்ட பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களை பேரவை வளாகத்தில் இருந்தும் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
- அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்.
- 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே.நகர் பகுதியில் காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொது செயலாளர் சரவணபெருமாள் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கண்ணன் பங்கேற்றார்.
இதில் திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் குறைந்தபட்சம் ஓய்வூதியம் திட்டத்தை தமிழக அரசு உடனே அமுல்படுத்த வேண்டும் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தினர்.
ஓய்வூ பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி ஏற்படுத்தி தர தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
இதில் ஆரணி, வந்தவாசி, செய்யார் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்த அங்கன்வாடி பணியாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கடந்த மார்ச் 15-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் சட்டசபை கூட்டம் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவதற்கான இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி விவாதிக்க அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தை வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 23 நாட்கள் இந்த கூட்டத் தொடர் நடக்கிறது. #TNAssembly