search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village meeting"

    • கலெக்டர் உத்தரவு
    • காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சி களிலும் காந்தி ஜெயந்தி முன்னிட்டு வருகிற 2-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபைக்கூ ட்டங்கள் தவறாமல் நடத்தப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செல வினம் குறித்து விவாதித்தல் வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் உள்பட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்கா ணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு ள்ளார்கள்.

    மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார்.

    • புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு தகவல்
    • அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, குடியரசு தினமான வரும் 26-ந் தேதியன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதமந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித்திட்டம், மக்கள் நிலை ஆய்வு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்புத் திட்டம் மற்றும் இதரப் பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.

    மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை ெதரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.







    கரூர் பகுதியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை வகித்து பேசினார். #DMK #SenthilBalaji
    வேலாயுதம்பாளைம்:

    கரூர் மாவட்டம் நன்செய்புகழுர் ஊராட்சி அரசு பள்ளி, திருக்காடுதுறை ஊராட்சி ஆலமரத்து மேடு பகுதி, கோம்புபாளையம் ஊராட்சி சமுதாயக்கூடம், வேட்டமங்கலம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் கரூர் மாவட்ட தி.மு.க.சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,

    கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை வகித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தாமல் இருப்பதால் உள்ளாட்சி பகுதிகளில் சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகள் சரி செய்யப்படாமல் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

    மோடி அரசு வந்தவுடன் பெட்ரோல், டீசல், கியாஸ், கேபிள் டி.வி. விலைகள் அதிக அளவு உயர்ந்துவிட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எல்லா ஓப்பந்தங்களையும் உறவினருக்கு கொடுத்து மகனையும், மருமகனையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழக அரசு அனைத்து வகையிலும் கொள்ளையடித்து வருகிறது. இன்னும் மூன்று மாதத்தில் புதிய ஆட்சி அமையும். அப்போது தமிழகத்திற்கு விடிவு காலம் வரும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலிலும், 21 சட்டமன்ற தொகுதிக்கு வரும் இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து பேசினார். சிலர் மனு கொடுத்தனர். கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

    கூட்டத்தில் மாநில விவசாய அணிசெயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கந்தசாமி மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய, பேரூர், கிளை பொருப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். #DMK #SenthilBalaji
    மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்தின் காட்டூர் கடப்பாக்கம், தத்தை மஞ்சி, அ.ரெட்டிப்பாளையம் வேளூர், காணியம்பாக்கம் ஆகிய 6 ஊராட்சிகளில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. #DMK
    சென்னை:

    மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்தின் காட்டூர் கடப்பாக்கம், தத்தை மஞ்சி, அ.ரெட்டிப்பாளையம் வேளூர், காணியம்பாக்கம் ஆகிய 6 ஊராட்சிகளில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமையிலும் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் வாகை சந்திரசேகர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.மணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், சுந்தரம், மீஞ்சூர் பேரூர் செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய அவைத்தலைவர் தன்சிங், மாவட்ட பிரதிநிதிகள் தமிழரசன், பாளையம், முனுசாமி, ஒன்றிய துணை செயலாளர் கஸ்தூரி தசரதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK

    காரிமங்கலம் அருகே கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜிட்டாண்ட அள்ளி கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இந்தகூட்டத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மகேந்திரமங்கலம் போலீசார் அரசு ஊழியர்கள் போராட்டம் நடைபெறுவதால் அதிகாரிகள் கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்த வாரம் சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அதிகாரிகள் கலந்து கொள்வதாக வாக்குறுதி அளித்து சமாதானம் செய்தனர். அதனை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். 

    இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சட்டப்பேரவை கூட்டத்தில் சரியாக நடக்காதவர்கள், கிராமசபை கூட்டத்தை நடத்தி வருகிறார்கள் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்து உள்ளார். #ponradhakrishnan #mkstalin #bjp #kodanadmurders
    சென்னை:

    மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டப்பேரவை கூட்டத்தில் சரியாக செயல்படாதவர்கள், கிராமசபை கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். மக்களவை தேர்தலில் வெற்றி பெற முடியாது என நினைத்ததால் கிராமசபை கூட்டத்தை திமுக நடத்துகிறது.

    பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற பயிற்சி எடுத்து வருபவர்களுக்கு வாழ்த்துகள்.

    கோடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. அது இப்போது வெளிவர வேண்டிய அவசியம் என்ன? கோடநாடு விவகாரத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பின்னணியில் யார் என தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #mkstalin #bjp #kodanadmurders
    தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் கனிமொழி எம்.பி. 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ஊராட்சி சபை கூட்டங்களில் பங்கேற்கிறார். #KanimozhiMP #dmk

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற முழக்கத்தோடு மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கையும், ஆட்சியின் அவலங்களையும் மக்களிடம் நேரில் எடுத்துச் சொல்லும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்திட வேண்டும் எனவும் அதில் பங்கேற்போர் பட்டியலையும் அறிவித்துள்ளார்.

    அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழகத்திற்கு உட்பட்ட 204 ஊராட்சிகளிலும் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் தலைமைக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., ஆஸ்டின், மனுராஜ் சுந்தரம், நாமக்கல் ராஜேஷ், திருப்பூர் சுந்தரம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    அதன் முதற்கட்டமாக வருகிற ஜனவரி 8, 9, 10-ந்தேதி ஆகிய 3 நாட்கள் நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழகத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களில் ஊராட்சிக் கழகங்கள் வாரியாக நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

    சம்பந்தபட்ட ஒன்றிய கழகச் செயலாளர்கள் மற்றும் ஊராட்சி கழகச் செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KanimozhiMP #dmk

    பெரியபட்டினத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கீழக்கரை:

    பெரியபட்டினம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. உதவி பொறியாளர் ஜம்பு முத்து ராமலிங்கம் தலைமை தாங்கினார். பெரியபட்டினம் ஊராட்சி செயலர் ஜலால் முன்னிலை வகித்தார்.

    பெரியபட்டினம் ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லா கிராமமாக உருவாக்குவது எனவும், கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு அரசு மானியத்தில் கழிப்பறை கட்டி கொடுக்கப்பட வேண்டும்.

    ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு தற்போது அதிகமாக இருப்பதால் ஆழ்துளைக் கிணறு அமைத்து குளங்களை நிரப்பி பொதுமக்கள் குளிப்பதற்கு வசதி செய்து தர வேண்டும்.

    மேலும் அந்த ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீருக்கு பயன்படுத்தி கொள்ளவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பெரியபட்டினம் கிராமத்தை விவசாய நல்வாழ்வு இயக்க கிராமமாக தேர்வு செய்தமைக்கு அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திவ்ய பாரதி, கல்வி வளர்ச்சி அலுவலர் நூர்ஜஹான், வட்டார சுகாதார ஆய்வாளர் கதிரேசன், கிராம நிர்வாக அலுவலர் சிவபால நாதன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் பைரோஸ் கான், நகர் செயலாளர் முகம்மது ஆசிக், சேகு ஜலாலுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    குத்தாலம் ஒன்றியம் நக்கம்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 2017-18ம் ஆண்டுக்கான சமூக தணிக்கைக்குப்பின் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் நக்கம்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 2017-18ம் ஆண்டுக்கான சமூக தணிக்கைக்குப்பின் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராமபிரமுகர் கேசவன் தலைமை தாங்கினார். இதில் வட்டார வள அலுவலர் சமூக தணிக்கையாளர் வெங்கட்ராஜீலு கலந்து கொண்டு 2017-18ம் ஆண்டில் ரூ.12 லட்சம் செலவில் செய்யப்பட்ட 5 பணிகளின் தணிக்கை செய்யப்பட்ட பணி பதிவேடுகள், விவரங்கள் வாசித்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 51 மனுக்கள் பெறப்பட்டன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஊராட்சி செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

    கொழையூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு கிராம பிரமுகர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். வட்டார வள அலுவலர் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு ரூ.13 லட்சம் செலவில் செய்யப்பட்ட 6 பணிகளின் தணிக்கை செய்யப்பட்ட பணி பதிவேடுகளை பார்வைக்கு வைத்தார். கூட்டத்தில் 10 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பணிமேற்பார்வையாளர் பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஊராட்சி செயலாளர் அன்பரசி நன்றி கூறினார்.

    ×