வருகிற 2-ந் தேதி கிராம சபைக்கூட்டங்கள் தவறாமல் நடத்தப்பட வேண்டும்

கலெக்டர் உத்தரவு காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடவடிக்கை
வருகிற 2-ந் தேதி கிராம சபைக்கூட்டங்கள் தவறாமல் நடத்தப்பட வேண்டும்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சி களிலும் காந்தி ஜெயந்தி முன்னிட்டு வருகிற 2-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபைக்கூ ட்டங்கள் தவறாமல் நடத்தப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செல வினம் குறித்து விவாதித்தல் வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் உள்பட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்கா ணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு ள்ளார்கள்.

மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com