search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டபம், ராமநாதபுரம் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை
    X

    மண்டபம், ராமநாதபுரம் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை

    • மண்டபம், ராமநாதபுரம் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தெற்கு ரெயில்வேக்கு நவாஸ்கனி எம்.பி. நன்றி தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், எம்.பி.யுமான நவாஸ்கனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்ல பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க தொடர்ந்து தெற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறேன். மேலும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து நேரிலும் கோரிக்கை விடுத்து வந்தேன்.

    இந்த நிலையில், வருகிற 18-ந்தேதி முதல் சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மண்டபம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும், ராமேசுவரம்-வாரணாசி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்தில் ராமநாதபுரம் நிலையத்தில் நின்று செல்லும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்காக தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும் பல்வேறு ரெயில்களை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் நின்று செல்ல கோரிக்கை விடுத்து வருகின்றேன்.

    அந்த ரெயில் நிலைய நிறுத்த கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×