search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமர்"

    • அனுமார் பெரிய உருவம் எடுத்து, சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்தெடுத்து விடுகிறார்.
    • ராமர் அனுமாரைத் தனது தம்பிகளில் ஒருவராக அன்போடு அறிவிக்கிறார்.

    போரில் ராமனது தம்பி இலக்குவன் காயங்களுடன் மயக்கம் அடைகிறார்.

    இலக்குவனைக் காப்பாற்ற சஞ்சீவினி மலையில் இருந்து மூலிகை மருந்தினைக் கொண்டு வருவதற்காக அனுமார் அனுப்பப்படுகிறார்.

    இதை அறிந்த ராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறான்.

    அனுமன் அவற்றைக் கடந்து சஞ்சீவினி மலையை அடைந்தார்.

    ஆனால் அங்கு குறிப்பிட்ட மூலிகையினை அவரால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.

    அன்றைய தினம் முடிவடையும் முன்பு மூலிகையினை கொண்டு வந்தால்தான் இலக்குவனைக் காப்பாற்ற இயலும் என்ற நிலை உள்ளது.

    இதனால் அனுமார் பெரிய உருவம் எடுத்து, சஞ்சீவினி மலையினை அப்படியே அடியோடு பெயர்த்தெடுத்து விடுகிறார்.

    பின்னர் வானத்தில் பறந்து போர்க்களத்தினை வந்து அடைகிறார்.

    பின்னர் மலையில் இருந்து மூலிகை மருந்து இலக்குவனுக்குத் தரப்பட, இலக்குவன் உயிர் பிழைக்கிறார்.

    இதனால் ராமன் பெருமகிழ்ச்சி கொண்டு, அனுமாரை கட்டித் தழுவுகிறார்.

    ராமர் அனுமாரைத் தனது தம்பிகளில் ஒருவராக அன்போடு அறிவிக்கிறார்.

    அனுமார் சஞ்சீவினி மலையைத் தூக்கிக் கொண்டு அயோத்தி வழியே வானத்தில் பறந்து வருகிறார்.

    அப்போது ராமனது தம்பி பரதன் யாரோ அரக்கன் ஒருவன் அயோத்தியை தாக்க வருகிறான் என்று நினைத்துக் கொண்டு அனுமாரை நோக்கி அம்பினைத் தொடுக்கிறார்.

    அம்பினில் ராமன் பெயர் இருப்பதைக் கண்டு, அனுமார் அதை தடுக்காமல் இருக்கிறார்.

    இதனால் அந்த அம்பு அனுமாரது காலைத் துளைக்கிறது.

    உடனே வானத்தில் இருந்து கீழிறங்கி, பரதனிடம், உன் தமையன் இலக்குவனைக் காக்கவே மலையைத் தூக்கிச் செல்வதாகக் கூறினார்.

    இதைக் கேட்டதும் பரதன் தன் தவறை நினைத்து வருந்துகிறார்.

    பதிலுக்குப் பரதன் தான் ஒரு அம்பினை இலங்கையை நோக்கி செலுத்தினால் அதில் அனுமார் அமர்ந்து எளிதாக இலங்கையை அடையலாமே என்கிறார்.

    அனுமாரோ அதை மறுத்துவிட்டு, அடிபட்ட காலுடனே இலங்கையை நோக்கி விரைந்தார்.

    • கணையாழியைக் கண்டதும் சீதை மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து போனாள்.
    • தன் ஆடையிலிருந்து சூடா மணியை அனுமனிடம் சீதை கொடுத்தாள்.

    அசோகவனத்தில் சீதை காணப்பட்டாள். சீதையைக் கண்டதும் அனுமன் ஆடினார், பாடினார், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

    "உயிர் விடும் தருணத்தில் ராம நாமம் சொல்லி என்னைக் காப்பாற்றிய வீரா நீ யார்?" எனக்கேட்டாள். சீதை.

    "அன்னையே நான் ராம தூதன். என் பெயர் அனுமன். ராமபிரான் உங்கள் நினைவாகவே எப்போதும் இருக்கிறார்.

    உங்களுடைய நகைகளைப் பார்த்து ஆறுதல் அடைந்து வருகிறார் என்றார்.

    ராமர் கொடுத்தனுப்பிய கணையாழியை சீதையிடம் கொடுத்தார் ஆஞ்சநேயர்.

    கணையாழியைக் கண்டதும் சீதை மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து போனாள்.

    "தாயே நான் திரும்பிப் போய் ராமனிடம் சொல்ல வேண்டிய செய்தி யாது?" எனப் பணிவுடன் கேட்டார் ஆஞ்சநேயர்.

    அதற்கு சீதை, "நான் இன்னும் ஒரு மாத காலம்தான் உயிர் வைத்திருப்பேன்! இதை என் நாயகன் ராமன் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்.

    ஒரு மாதத்திற்குள் ராமன் வந்து என்னை மீட்காவிட்டால் நான் இறந்து போவது நிச்சயம் என்று கூறுவாய்" என்றாள் சீதா.

    ராமனுக்கு நம்பிக்கை உண்டாக்குமாறு தன் ஆடையிலிருந்து சூடா மணியை அவரிடம் கொடுக்குமாறு அனுமனிடம் சீதை கொடுத்தாள்.

    ஆஞ்சயேர் அதைப் பணிவுடன் பெற்றுக் கொண்டு விடை பெற்றார்.

    • இலங்கைக்குப் போகும் வல்லமை படைத்தவன் அனுமனே என முடிவு செய்தார்கள்.
    • அனுமன் புயல் காற்றைப் போல ஆகாயத்தில் போய்க் கொண்டிருந்தார்.

    ராமனும், லக்குவனும் கிஷ்கிந்தை வருவதை அறிந்த சுக்ரீவனும், அனுமனும் வானரப் படைகளுடன் ராமனைச் சந்தித்தார்கள்.

    தான் வந்த காரணமும் சீதையை ராவணன் கடத்தி சென்றதையும் ராமன் விளக்கினார்.

    இலங்கையில் தான் சீதை இருக்கிறாள் என்பதை அறிந்த அனுமன் யாரை இலங்கைக்கு அனுப்பி சீதையைக் கண்டுபிடிப்பது என யோசனையில் மூழ்கினார்.

    கடலைத் தாண்டி இலங்கைக்குப் போய்த் திரும்பி வரும் திறமை யாருக்கு உண்டு என்பதை வானர வீரர்களும் யோசித்தார்கள்.

    நீலன், அங்கதன், சாம்பவான் போன்றோர் தங்கள் இயலாமையைக் கூறி வருந்தினர்.

    இலங்கைக்குப் போகும் வல்லமை படைத்தவன் அனுமனே என முடிவு செய்தார்கள். இலங்கைக்குப் புறப்பட்டார் அனுமன்.

    அனுமன் புயல் காற்றைப் போல ஆகாயத்தில் போய்க் கொண்டிருந்தார்.

    அவரை எதிர்க்க வந்த சரசை என்னும் அரக்கியை வென்று மேலும் பறந்து சென்றார்.

    எமதர்மன் போல அங்காரதாரை என்ற ராட்சசி குறுக்கே நின்றாள். அவளையும் கொன்றார்.

    மாலை நேரம் அனுமன் இலங்கையில் வந்து இறங்கினார்.

    • தான் தவம் இருந்தபோது கருவுற்றதை அறிந்து அஞ்சனாதேவி வேதனைப்பட்டாள்.
    • அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அனுமன் எனப் பெயரிட்டனர்.

    அஞ்சனாதேவி கணவருடன் சென்று பெருமாளை வணங்கினாள். அதன் பிறகு காற்றையே எந்த நேரமும் உணவாகக் கொண்டு இறைவனைக் குறித்து கடும் தவம் இருந்தாள்.

    இதன் காரணமாய் வாயு பகவானின் அருளினால் ஒரு கரு அவள் வயிற்றில் வளர்ந்தது.

    தான் தவம் இருந்தபோது கருவுற்றதை அறிந்து அஞ்சனாதேவி வேதனைப்பட்டாள்.

    அப்போது அசரிரியாய் ஒரு குரல் வந்தது.

    மகேஸ்வரனின் கருணையால், வாயுதேவனின் உருவமே உன் கருவில் இருப்பதால் பிறக்கும் குழந்தைக்கு "வாயு புத்திரன்" எனப் பெயரிடு, அவன் சகல சக்திகளும் பெற்றவனாய் என்றும் சிரஞ்சீவியாய் வாழ்வான் என அந்தக் குரல் கூறியது.

    அதன்படி அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனுமன் எனப் பெயரிட்டனர்.

    அனுமன் வேதங்கள் புராணங்களையெல்லாம் எல்லாம் கற்று மிகுந்த ஆற்றல் கொண்டவராக விளங்கினார்.

    அஞ்சனா தேவி தன் மகனின் திறமையைக் கண்டு வியந்து கிஷ்கிந்தைக்கு அழைத்துச் சென்று சுக்ரீவனிடத்தில் அறிமுகம் செய்து வைத்தாள்.

    சுக்ரிவன் தனது ஆட்சிப் பொறுப்பை அனுமனிடம் ஒப்படைத்தார்.

    • சிவபெருமான் அருளியபடி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அஞ்சனை என்று பெயரிட்டனர்.
    • ஆஞ்சனைக்கும் நீண்ட நாட்களாகக் குழந்தை பிறக்கவில்லை.

    கேசரி என்ற சிவபக்தர் ஒருவர் திரேதா யுகத்தில் வாழ்ந்து வந்தார்.

    அவருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை.

    அதனால் அவர் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தார்.

    சிவபெருமான் கேசரி முன் காட்சித் தந்தார். அவரிடம் கேசரி தனக்கு பிள்ளை வரம் வேண்டும் என்றார்.

    அதற்கு சிவபெருமான் "பக்தா... உனக்கு மகன் பிறக்க பாக்கியமில்லை. ஒரு மகள் பிறக்கவே பாக்கியம் உள்ளது.

    அந்த மகளுக்கு ஒரு மகன் பிறப்பான். அந்த மகன் வலிமையும், வீரமும் பெற்று மரணம் இல்லாதவனாகச் சிறப்பாக திகழ்வான் எனக் கூறி விட்டு மறைந்து போனார்.

    சிவபெருமான் அருளியபடி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அஞ்சனை என்று பெயரிட்டனர்.

    அஞ்சனைக்கு திருமண வயது வந்ததும் அவளை வானர வீரன் ஒருவனுக்கு கேசரி மணமுடித்து வைத்தார்.

    ஆஞ்சனைக்கும் நீண்ட நாட்களாகக் குழந்தை பிறக்கவில்லை.

    இச்சமயத்தில் தரும தேவதை பெண் வடிவில் தோன்றி திருவேங்கட மலைக்கு கணவனுடன் சென்று பெருமாளை வணங்கி வந்தால் ஆண்மகன் பிறப்பான் எனக் கூறினாள்.

    • ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகேயுள்ள கொடிக்கம்பத்து நந்தி சிறப்பு வாய்ந்தவர்.
    • சோழர்கள், பாண்டியர்கள், ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.

    திருவாரூர் கோவில் சிறப்புகள்

    *அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம்.

    *சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்த (கமலாபுரம்) தலம்; இது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோவில் ஏதுமில்லை.

    *திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.

    *திருவாரூர் - கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம்.

    *திருவாரூர்க் கோவில் - தியாகராஜர் திருக்கோவில், திருமூலட்டானம், பூங்கோவில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது..

    *சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.

    *திருவாரூர் கோவிலில் புற்றிடங் கொண்ட பெருமானுக்கு எதிராக இரண்டு கொடிக்கம்பங்கள் உள்ளன.

    *ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகேயுள்ள கொடிக்கம்பத்து நந்தி சிறப்பு வாய்ந்தவர்.

    *மழை இல்லாத நாட்களில் இவரை வழிபட்டு அறுகம்புல் மாலை சாத்திப் பூஜைகள் செய்து அந்த அறுகம்புல்லை பசுக்களுக்கு கொடுத்தால் பசுக்கள் நன்கு பால் சுரக்கும்.

    *மழை பொழிந்து நீர்வளம் பெருகும்.

    • ஆடிப்பூர விழா அம்பாளுக்கு மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • 54 நாட்கள் 17 முறை ஒன்றிய மனதுடன் வலம் வந்தால் வேண்டியது கிடைக்கும்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-கமலாம்பாள் கோவில்

    திருவாரூர் திருக்கோவிலில் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் ஈசான்யத்தை நோக்கி அருள்மிகு கமலாம்பிகை திருக்கோவில் அமைந்துள்ளது.

    இங்கு எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும், பிறையையும் சூடிக் கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றாள்.

    இவள் க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள், ஆகிய மூன்று தேவியரின் ஒருங்கிணைந்த ஒருமித்த சங்கமமாக கருதப்படுகிறாள்.

    ஆதலால் புனித பாரத தேசத்தில் புகழ்பெற்ற 64 சக்தி பீடங்களுள் அன்னை ஆட்சி புரியும் ஐந்து பீடங்களில் முதன்மையானதாகவும் (காசி&விசாலாட்சி, காஞ்சி&காமாட்சி, மதுரை&மீனாட்சி,

    ஆரூர்&கமலாலயதாட்சி, நாகை & நீலாயதாட்சி) ஆகிய ஐந்து தலங்களில் சக்தி பீடமாகவும் சிவசக்தி சொரூபிணியாகவும் அருள்மிகு கமலாம்பாள் திகழ்கிறாள்.

    மூன்று தேவியரும் ஒன்றாய் நிற்கும் அன்னையை துர்வாச முனிவர் வழிபட்டுள்ளார்.

    அன்னை வலது கரத்தில் மலரினை ஏந்தியும், இடது கரத்தினை இடையில் இருத்தியும், கால்களை யோகாசன நிலையில் அமைத்து மகாராணியைப் போல் காட்சி அளிக்கிறாள்.

    இவளின் அருளை வியந்து திருவாரூர் பிறந்த இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் "நவாவர்ண கீர்த்தனை" பாடியுள்ளார்.

    அன்னையின் தவத்தினால் தான் வன்மீகநாதரே (புற்றிடங் கொண்ட பெருமான்) இத்தலத்திற்கு எழுந்தருளினார் என்பார்கள்.

    இத்திருத்தலத்தில் அருள்மிகு கமலாம்பாள் திருக்கோவில் தனிக்கொடி மரம், தனித்திருமதில் கொண்டு தனிக்கோவிலாக உள்ளது மிகவும் சிறப்புடையதாகும்.

    ஆடிப்பூர விழா அம்பாளுக்கு மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆடி வெள்ளி, தை வெள்ளிக் கிழமைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    54 நாட்கள் 17 முறை ஒன்றிய மனதுடன் அன்னையை வலம் வந்தால் வேண்டியவருக்கு வேண்டுவனவற்றைத் தந்து அருள்பாலிப்பாள் அன்னை கமலாம்பிகை என்பது ஐதீகம்.

    • அருள்மிகு அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்ற தலம்)
    • அருள்மிகு தேவேந்திரன் பூஜித்த லிங்கம்

    திருவாரூர் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ள முக்கிய புறக்கோவில்கள்

    1. அருள்மிகு அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்ற தலம்)

    2. அருள்மிகு கமலாம்பாள்

    3. அருள்மிகு நீலோத்பலாம்பாள்

    4. அருள்மிகு ராகுகால ரவுத்திர துர்க்கை

    5. அருள்மிகு ருணவிமோசனர்

    6. அருள்மிகு விஸ்வகர்மேஸ்வரர்

    7. அருள்மிகு தெட்சிணாமூர்த்தி சுவாமி

    8. அருள்மிகு ஆனந்தீஸ்வரர் கோவில்

    9. அருள்மிகு சித்திஸ்வரர் கோவில்

    10. அருள்மிகு ஹயக்ரீஸ்வரர் கோவில்

    11. அருள்மிகு தட்சனேஸ்வரர் கோவில்

    12. அருள்மிகு அண்ணாமலேஸ்வரர் கோவில்

    13. அருள்மிகு வருணேஸ்வரர்

    14. அருள்மிகு ஓட்டு தியாகேசர்

    15. அருள்மிகு துளசிராஜா பூஜித்த கோவில்

    16. அருள்மிகு தேவேந்திரன் பூஜித்த லிங்கம்

    17. அருள்மிகு சேரநாதர்

    18. அருள்மிகு பாண்டியநாதர்

    19. அருள்மிகு ஆடகேஸ்வரம்

    20. அருள்மிகு புலஸ்தியரட்சேஸ்வரர் கோவில்

    21. அருள்மிகு புலஸ்திய பிரம்மேஸ்வரர் கோவில்

    22. அருள்மிகு பக்தேஸ்வரர் கோவில்

    23. அருள்மிகு வில்வாதீஸ்வரர் கோவில்

    24. அருள்மிகு பாதாளேஸ்வரர்

    • இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன.
    • திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறை சிறப்பு

    திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலில் கருவறைச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆகிய உருவங்கள் கல் திருமேனிகளாக உள்ளன.

    இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன.

    புற்றிடங் கொண்ட பரம்பொருள் கருவறை சுவர்கள் தூண்களால் சூழப்பட்டு அத்தூண்களுக்கு இடையே தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் ஆகிய உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன.

    லிங்கோற்பவரின் இருபுறமும் அன்னமூர்த்தியான பிரம்மனும் வராகமூர்த்தியான விஷ்ணுவும் நின்றுள்ளனர்.

    இது மட்டுமின்றி கருவறை சுவர்களும் கூரைகளும் முழுவதம் ஊசிமுனை இடைவெளியின்றி வண்ண வண்ண ஓவியங்களால் நிரம்பியுள்ளன.

    திரிபுரதகனம், காம தகனம், காலசம்காரம், கஜசம்காரம், ஜலந்தர வதம், தட்சயாக நாசம், அந்தகாசுரவதம், பிரம்ம சிரச்சேதம் ஆகிய அஷ்ட வீரட்ட வரலாறுகளும் நடராஜப் பெருமானின் ஆனந்தக் கூத்து தரிசனமும் மற்றும்

    புஜங்க லலித மூர்த்தி, ஜதியோ நந்தமூர்த்தி, ஊர்த்துவத்தாண்டவர் போன்ற பல்வேறு வகையான நடனமூர்த்திகளும் வண்ண சித்திரங்களாக உள்ளன.

    சட்டைநாதர், பிட்சாடணர், திரிசங்கு ரட்சக மூர்த்தி, ஆயதோத்தார மூர்த்தி, நீலகண்டர், அகோர வீரபத்திரர், மான் மழு தாங்கி கைகூப்பி நின்ற நிலையில் உள்ள நந்தி தேவர்,

    அமர்ந்த நிலையில் உள்ள அதிகார நந்தி, கால பைரவர், தண்டாயுதபாணி, நிருதி, யமன், வருணன், இந்திரன், அக்கினி, முதலிய எண் திசை பாலர்கள்,

    அடியார்கள் வணங்கும் சிவலிங்கம், கங்காளர், கங்காதரர், மகிஷாசுரமர்தனி, ராசிச் சக்கரம் போன்ற பலப் பல புராண வரலாறுகளும்

    சிவ வடிவங்களும் தெய்வங்களும் தேவர்களும் வண்ணச் சித்திரங்களாகச் சுவர்கள், கூரைகள் முழுவதும் காணப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    ஆகையால் திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது நின்று, நிதானமாக இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.

    • ரவுத்திர துர்க்கை என்பதற்கு பெயர் காரணம் அவளுடைய ருத்ராம்சம்.
    • திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கைகள்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-ரவுத்திர துர்க்கை

    தியாகேசர் ஆலயத்தில் தெற்கு பிரகாரத்தில் ரவுத்திர துர்க்கைக்கு தனி ஆலயம் உள்ளது.

    மண பருவத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் ராகுகால பூஜையின்போது இவளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண தடை நீங்கப் பெறலாம்.

    ரவுத்திர துர்க்கை என்பதற்கு பெயர் காரணம் அவளுடைய ருத்ராம்சம்.

    ராகு தோஷ நிவர்த்திக்கும் இந்த துர்க்கையை லட்சார்ச்சனை செய்து வழிபடலாம்.

    திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கைகள்.

    முதல் பிரகாரத்தில் உள்ள மகிடாசுரமர்த்தினி பிரதான துர்க்கை.

    இரண்டாம் பிரகாரத்தில் அதற்கு அங்கமாக முதல் பிரகாரத்தில் மூன்றும், இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் என எட்டு துர்க்கைகள் உள்ளன.

    • கவாய தீர்த்தம் - மனவலிமை பெறலாம். கவாட்ச தீர்த்தம் - தேக ஆரோக்கியம் உண்டாகும்.
    • சிவ தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். சர்வ தீர்த்தம் - அனைத்து யோகங்களும் கைகூடும்.

    ராவணனை கொன்றதால் ராமபிரானுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை விரட்ட ராமேசுவரத்தில் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து ராமர் விடுபட்டார். இங்கு தான் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

    22 புண்ணிய தீர்த்தங்களும், நீராடினால் கிடைக்கும் பலன்களும்:-

    மகாலட்சுமி தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்கள் பெருகும்.

    சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்கள் - சடங்குகளை செய்யாதவர்களும், சந்ததி இல்லாதவர்களும் நற்கதி பெறலாம்.

    சங்கு தீர்த்தம் - நன்றி மறந்த பாவம் நீங்கும்.

    சக்கர தீர்த்தம் - தீராத நோயும் தீரும்.

    சேது மாதவ தீர்த்தம் - செல்வம் கொழிக்கும்.

    நள தீர்த்தம் - இறையருளைப் பெற்று சொர்க்கத்தை அடையலாம்.

    நீல தீர்த்தம் - யாகப் பலன் கிட்டும்.

    கவாய தீர்த்தம் - மனவலிமை பெறலாம்.

    கவாட்ச தீர்த்தம் - தேக ஆரோக்கியம் உண்டாகும்.

    கந்தமான தீர்த்தம் - தரித்திரம் அகலும்.

    பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், பில்லி சூனியப் பிரச்சினைகள் விலகும்.

    சந்திர தீர்த்தம் - கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

    சூரிய தீர்த்தம் - ஞானம் பெறலாம்

    சாத்யாம்ருத தீர்த்தம் - தேவதைகளின் கோபத்தில் இருந்து விடுபடலாம்.

    சிவ தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.

    சர்வ தீர்த்தம் - அனைத்து யோகங்களும் கைகூடும்.

    கயா, யமுனா மற்றும் கங்கா தீர்த்தங்கள் - பிறவிப்பயனை அடையலாம்.

    கோடி தீர்த்தம் - ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப் பயன்படுத்திய தீர்த்தம் இது. சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் இது. இந்த 22 தீர்த்தங்களையும் தவிர, கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம், இதில் நீராடிவிட்டே ஆலய தரிசனத்துக்குச் சென்று 22 தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

    • சத்ரு சம்ஹார யாகம்.
    • ஆஞ்சநேயருக்கு நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.

    மண்ணுலகில் மனிதனாக அவதரித்த மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமன். மற்றொருவர் சூரியன் சந்திரன் முதல் தேவலோக இந்திரன் வரை பெயரை கேட்டாலே அஞ்சி நடுக்கும் ராவணன்.

    கடும் யுத்தம். ஆபத்தான ஆயதங்கள் எல்லாம் பிரயோகிக்கப்பட்ட யுத்தம். ஒரு கட்டத்தில் சர்வேஸ்வரனுக்கு இணையான ராவணன் ஆயுதங்களை இழந்து அனாதைமாதிரி நிற்கிறான். ராமன் பெரும்தன்மையோடு இன்று போய் நாளை வா...என்கிறார்.

    தோல்வி என்பதையே கேள்வி படாத ராவணன் அவமானத்துடன் அரண்மனைக்கு திரும்புகிறான். ஆனால் அந்த கணத்திலும் ஒரு யோசனை தோன்றுகிறது ராவணனுக்கு.

    தன்னைப்போல் இன்னொருவன், உருவத்திலும், பலத்திலும், தவ வலிமையிலும் சிறந்த மயில் ராவணனை என்ற அரக்கனை அழைக்கிறான்.

    எதற்கு? ராம லெட்சுமனரை வெல்ல நல்ல உபாயம் நாடி.

    அரக்கனாக இருந்தாலும் மறுக்காத குணம் என்பதே ஆபத்து என்று வந்தவனுக்கு அபய கரம் நீட்டுவதுதான். மயில் ராவணன் உடனே சம்மதித்தான்.

    ஒரு கொடிய யாகத்தை செய்ய முடிவு செய்தான். சத்ரு சம்ஹார யாகம்.

    காலை புலர்வதற்குள், கதிரவன் உதிப்பதற்குள் யாகத்தை நிறைவு செய்தால் ராவணா... உன்னை வெல்ல எந்த சக்தியாலும் முடியாது என்று சொல்லி உடனே யாகத்தை துவங்கினான்.

    ராவணன் யுத்தகளத்தில் பின் வாங்கி செல்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது விபீஷணுக்கு தெரியும்.

    பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அண்ணனை பற்றி தம்பிக்கு தெரியாதா என்ன?

    உடன் ராமனை அணுகி இப்படி சொல்கிறான். ராமா....இதுவரை முடிவு தெரியாத யுத்தத்தை ராவணன் செய்ததே இல்லை. இப்போது யுத்த களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது எனக்கு தெரியும்.

    இக்கணம் மயில் ராவணன் உதவியை நாடி இருப்பான். மயில் ராவணனும் இசைந்திருப்பான்.

    சத்ரு சம்ஹார யாகம் செய்ய, அதை அவன் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டால் மூவர்கள், தேவர்களின் பரிபூரண ஆசி அவனுக்கு கிடைத்து விடும்.

    யாஹத்தின் நிறைவில் நீங்கள் இருவரும் அக்னி குண்டத்தில் போய் விழுகிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கி விடும்.

    அப்படியா? என்ற ராமன் உடனே ஆஞ்சநேயரை அழைத்தார். வாயு புத்திரா ... நீ உடனே செல். விபிஷணன் சொல்வதுபோல் மயில் ராவணன் யாகம் செய்தால் அதை தடுத்து நிறுத்து.

    ராமனின் கட்டளையை ஏற்று புறப்பட்ட ஆஞ்சநேயர்.... எனக்கு வெற்றி கிட்ட ஆசிர்வதியுங்கள் என்று நரசிம்மர், ஹயகிறிவர், கருடன், வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.

    தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர் வெற்றி பெற அந்தந்த கடவுள் தங்கள் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். அப்படி எடுக்கப்பட்ட உருவம்தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.

    மயில் ராவணை அழித்து ராம லெட்ச்சுமணனை காத்தார். இப்படி பஞ்சமுக ருவத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் பக்த்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.

    இந்த பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு இன்னொரு புராண கதையும் உண்டு.

    காக்கும் தொழிலை செய்யும் மகாவிஷ்ணுவின் கையில் நீங்காமல் இருப்பது சுதர்சனம். இது எவ்வளவு வலிமை வாய்ந்த எதிரியாக இருந்தாலும் வெட்டி தள்ளிவிடும் ஆற்றல் மிக்கது.

    சுதர்சனத்தின் வலிமையை பற்றி அறிந்த மயில் ராவணன் எப்படியாவது அவரிடம் இருந்து அபகரித்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் எண்ணப்படியே ஒரு சமயம் அபகரித்தும் சென்று விட்டான்.

    சுதர்சனத்தை மயில் ராவனைடம் இருந்து மீட்டு கொண்டுவர களத்தில் இறங்கினார் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் பலசாலி. அவரை யாராலும் வெல்ல முடியாது. காற்று வேகத்தில் மோதி எதிரியை பலம் இழக்க செய்பவர். வாளின் வலிமையால் எதிரியை கட்டி பந்தாடிவிடுவார்.

    அவருடன் நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.

    ஆனால் மயில் ராவணன் யார்?

    பல வடிவங்களை எடுக்கும் ஆற்றல் மிக்கவன். பலசாலி. மந்திர தந்திர சாகசம் தெரிந்தவன். கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றல் மிக்கவன். இருப்பினும் அவனாலும் ஆஞ்சநேயரை எதிர் கொள்ள முடியவில்லை. அதனால் தந்திர யுத்தத்தை கையாண்டான்.

    பல உருவங்களாக மாறி ஆஞ்சநேயரை தாக்கினான். இப்போது ஆஞ்சநேயரால் மயில் ராவணனை எதிர் கொள்ள முடியவில்லை.

    இதை அறிந்த பகவான் விஷ்ணு ஆஞ்சநேயரை அழைத்தார். மயில் ராவணன் ஒரே நேரத்தில் பல உருவம் எடுக்கும் சக்தி படைத்தவன். அவனை உன்னால் மட்டும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்காது. அவனை போலவே தந்திர யுத்தம் தான் செய்ய வேண்டும்.

    அவன் எந்த உருவன் எடுக்கிறானோ அந்த உருவத்திற்கு பகையாக உருவத்தை நீ எடுக்க வேண்டும்.

    அவன் பறவையாக உருமாறினால், நீ கருடனாக மாறி அவனை தாக்கு. அவன் யானையாக மாறினால் நீ சிங்கமாக மாறு.

    அவன் பூமிக்கு அடியிலோ, தண்ணீருக்கு அடியிலோ மறைந்து இருந்து தாக்கினால் நீ வராக அவதாரம் எடுத்து அவனை தாக்கு.

    நீ சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்பட ஹயகரிவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து தருகிறேன். இந்த சக்தியோடு உன் பலத்தையும் சேர்த்து மயில் ராவணனை வெல்வாய் என்று ஆசி செய்தார்.

    அந்த கணம் கருடன், நரசிம்மர், வராக மூர்த்தி, ஹயகரிவர் என்று நான்கு சக்திகளை பெற்று பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தார்.

    மயில் ராவணனை வென்று சுதர்சன சக்கரத்தை மீட்டு பகவான் நாராயணன் காலடியில் சமர்ப்பித்தார்.

    பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் எதிரிகள் பயம் அற்று போகும், வழக்கு தொல்லைகள் நீங்கும். கள்வர், திருடர் பயம் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், வாழ்வில் மங்கலம் உண்டாகும்.

    ×