என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

கடல் தாண்டி சென்று சீதையை கண்ட அனுமன்
- கணையாழியைக் கண்டதும் சீதை மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து போனாள்.
- தன் ஆடையிலிருந்து சூடா மணியை அனுமனிடம் சீதை கொடுத்தாள்.
அசோகவனத்தில் சீதை காணப்பட்டாள். சீதையைக் கண்டதும் அனுமன் ஆடினார், பாடினார், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.
"உயிர் விடும் தருணத்தில் ராம நாமம் சொல்லி என்னைக் காப்பாற்றிய வீரா நீ யார்?" எனக்கேட்டாள். சீதை.
"அன்னையே நான் ராம தூதன். என் பெயர் அனுமன். ராமபிரான் உங்கள் நினைவாகவே எப்போதும் இருக்கிறார்.
உங்களுடைய நகைகளைப் பார்த்து ஆறுதல் அடைந்து வருகிறார் என்றார்.
ராமர் கொடுத்தனுப்பிய கணையாழியை சீதையிடம் கொடுத்தார் ஆஞ்சநேயர்.
கணையாழியைக் கண்டதும் சீதை மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து போனாள்.
"தாயே நான் திரும்பிப் போய் ராமனிடம் சொல்ல வேண்டிய செய்தி யாது?" எனப் பணிவுடன் கேட்டார் ஆஞ்சநேயர்.
அதற்கு சீதை, "நான் இன்னும் ஒரு மாத காலம்தான் உயிர் வைத்திருப்பேன்! இதை என் நாயகன் ராமன் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்.
ஒரு மாதத்திற்குள் ராமன் வந்து என்னை மீட்காவிட்டால் நான் இறந்து போவது நிச்சயம் என்று கூறுவாய்" என்றாள் சீதா.
ராமனுக்கு நம்பிக்கை உண்டாக்குமாறு தன் ஆடையிலிருந்து சூடா மணியை அவரிடம் கொடுக்குமாறு அனுமனிடம் சீதை கொடுத்தாள்.
ஆஞ்சயேர் அதைப் பணிவுடன் பெற்றுக் கொண்டு விடை பெற்றார்.