search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anuman"

    • அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததை கூறி மன்னிப்பு கேட்டார்.
    • ஸ்ரீகால பைரவரும் மகிழ்ச்சி அடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்கு கொடுத்து அனுப்பினார்.

    காசியின் காலபைரவராகிய தன்னிடம் அனுமதி ஏதும் பெறாமல் அனுமன் லிங்கத்தை எடுக்க முயல்வது கண்டு கோபம் அடைந்த ஸ்ரீகால பைரவர், என் அனுமதி இல்லாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று அனுமனை தடுத்தார்.

    முதல் முறை சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு போகும் போதும் இந்த காலபைரவர் ஏதோ சூழ்ச்சி செய்து காளிங்க மடுவில் தடுத்துவிட்டார்.

    இப்போது மறுபடியும் தன்னுடைய முயற்சிக்கு தடை செய்கிறார் என்று கோபம் அடைந்த அனுமன் கால பாரவரை தாக்கத் தொடங்கினார்.

    ஆணவத்தால் செய்த போராகையால் அனுமனுக்கு தோல்வியே கிட்டுகிறது.

    அந்த சமயத்தில் அங்கு வந்த முனிவர்கள் காலபைரவரை வணங்கி, "உலக நன்மைக்காகவும், ராமனின் பெருமைக்காகவும் இந்த சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.

    அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததை கூறி மன்னிப்பு கேட்டார்.

    ஸ்ரீகால பைரவரும் மகிழ்ச்சி அடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்கு கொடுத்து அனுப்பினார்.

    தன் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்கு துணை புரிந்ததால் கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், சுயம்புலிங்கத்தை அனுமனுக்கு உறுதி செய்த பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக்கூடாது என்றும் ஸ்ரீகால பைரவர் சாபமிட்டார்.

    அவரின் அந்த சாபப்படியே இன்றும் காசியின் நகர எல்லையில் கருடன் பறப்பதில்லை. அங்கே பல்லிகளும் ஒலிப்பதில்லை.

    • காரணம் காசியில், கங்கைக்கரையில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களாகவே காட்சி அளித்தன.
    • இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அனுமன் திணறினார்.

    "நான் கொண்டு வந்த லிங்கம் இங்கே வேரூன்றி நின்றதற்கு இந்த காளிங்க மடுகு தான் காரணம்.

    இது வற்றியிருந்தால் நான் லிங்கத்தை மாய சிறுவனிடம் கொடுக்காமல், தட்டுத்தடுமாறி சற்று தாமதமாகவாவது ராமேஸ்வரம் போய் சேர்ந்திருப்பேனே என்று மடுகின்மேல் ஆஞ்சநேயருக்கு கடும் கோபம் வந்தது.

    அருகில் இருந்த காரிகிரி என்ற மலையைப் பெயர்த்தெடுத்தார்.

    அந்த மடுகு மீது போட்டு "இந்த மலைப்பிரதேசம் இனி வனப்பிரதேசமாகப் போகக்கடவது என்று சபித்தார்.

    அந்த காரிகிரி மலையே இப்போது நாம் ராமகிரியில் காணும் பெரிய மலை.

    ராமேசுவரத்தில் எல்லோரும் காசி லிங்கத்திற்காக காத்திருப்பார்கள் என்பதால் நேரத்தை வீணாக்காமல் ஆஞ்சநேயர் மறுபடியும் காசிக்கு சென்றார்.

    இந்த முறை காசியில் தெரிந்த காட்சிகள் அனுமனுக்கு ஆச்சரியம் அளித்தது.

    காரணம் காசியில், கங்கைக்கரையில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களாகவே காட்சி அளித்தன.

    இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அனுமன் திணறினார்.

    அப்போது ஒரு குறிப்பிட்ட லிங்கத்திற்கு மேலே கருடன் வட்டமிட்டது.

    அதே நேரம் பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அதுவே சுயம்புலிங்கம் என்பதை உணர்ந்த அனுமன் அதனை எடுக்க முயன்றார்.

    • இந்த தலம் ஸ்ரீ கால பைரவரின் ஷேத்திரம் ஆயிற்றே அவர்தான் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து தன்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிந்து கொண்டார்.
    • தான் கொண்டு வந்த சுயம்புலிங்கத்தை அவரோடு வைத்துக் கொள்ளவே இத்தனை நாடகங்கள் ஆடி இருக்கின்றார்.

    இதற்குள் மதியம் நெருங்கி விட்டது. ஆதவனும் தன் வெப்பத்தை தணித்துக் கொண்டார்.

    புயலாக அடித்த காற்று படிப்படியாக குறைந்து தென்றலாக மாறியது. திருக்காரிக்கரை கிராம மக்களும் தமது இல்லங்களை விட்டு வெளிவரத் தொடங்கினர்.

    இந்த மாறுதல்களையெல்லாம் கவனித்த மாருதி, இவையெல்லாம் சாதாரண மாயைகள் அல்ல. ஒரு தெய்வத்தின் லீலைகள் என்பதை புரிந்து கொண்டார்.

    அவர் யோசித்த போது, உண்மைகள் யாவும் அவர் ஞான அறிவிற்கும் புலனானது.

    இந்த தலம் ஸ்ரீ கால பைரவரின் ஷேத்திரம் ஆயிற்றே. அவர்தான் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து தன்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிந்து கொண்டார்.

    தான் கொண்டு வந்த சுயம்புலிங்கத்தை அவரோடு வைத்துக் கொள்ளவே இத்தனை நாடகங்கள் ஆடி இருக்கின்றார்.

    ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமர் கையால் பிரதிஷ்டையாக வேண்டிய லிங்கம். அதே லக்கனத்தில் கால பைரவர் கையால் திருக்காரிக் கரையில் பிரதிஷ்டையாகி விட்டதே.

    அங்கு ஸ்ரீராமர் தன் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பாரே என்று பலவாறு நினைத்து ஆத்திரமும் துக்கமும் அடைந்தார்.

    • முயற்சியில் தோற்றுப்போன ஆஞ்சநேயர் தனக்கு ஏற்பட்ட கர்வ பங்கத்திற்கு வெட்கப்பட்டு லிங்கத்தைப் பக்தியுடன் வலம் வந்தார்.
    • மன்னிக்கக் கோரி பிரார்த்தித்து நமஸ்கரித்தார்.

    சிறுவன் குரல் கேட்டு திடுக்கிட்ட ஆஞ்சநேயர் விரைந்து கரையேறினார்.

    சிறுவன் நின்ற இடத்துக்கு ஓடி வந்தார். அங்கு "பூமியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    "இப்படி செய்து விட்டானே இந்த சிறுவன்" என்று கோபப்பட்டார்.

    கோபம் கண்ணை மறைக்க, தான் ஏற்கனவே காசியில் இருந்து பெயர்த்தெடுத்து வந்த லிங்கம் தானே இது என்ற அலட்சிய உணர்வு ஏற்பட்டது.

    சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்த தனக்கு, இந்த சிவலிங்கம் எம்மாத்திரம் என்ற ஆணவத்தாலும், தன் பலமிக்க நீண்ட வாலினால் அந்த சுயம்பு சிவலிங்கத்தை சுற்றி இழுத்தார்.

    ஆனால் லிங்கம் அசையவில்லை. சற்றும் லிங்கம் அசையாதிருக்கவே சுற்றியிருந்த வாலை சற்று இறுக்கி, பலமாக இழுத்தார்.

    ஆனால் லிங்கமோ இருந்த இடத்தை விட்டுத் துளி கூட நகரவே இல்லை.

    முயற்சியை கைவிடாத ஆஞ்சநேயர் தன் முழு பலத்தையும் பிரயோகித்து இழுத்தபோது கூட போனால் போகிறது பாவம் என்று பரிதாபப்பட்டுப் பரிகசிப்பது போல லிங்கம் சிறிது வடக்குப் புறமாகச் சாய்ந்ததே தவிர பெயர்ந்து வரவில்லை.

    முயற்சியில் தோற்றுப்போன ஆஞ்சநேயர் தனக்கு ஏற்பட்ட கர்வ பங்கத்திற்கு வெட்கப்பட்டு லிங்கத்தைப் பக்தியுடன் வலம் வந்தார்.

    மன்னிக்கக் கோரி பிரார்த்தித்து நமஸ்கரித்தார்.

    • அதற்கு அச்சிறுவனும் ஐயா, தாகத்தால் அவதிப்படும் தங்களுக்கு நான் அவசியம் உதவுகிறேன். ஆனால் நானோ சிறுவன்.
    • இவ்வளவு பெரிய சிவலிங்கத்தை என்னால் சுமக்க முடியுமா? என்பதுதான் யோசனையாக இருக்கிறது என்று இழுத்தான்.

    இதுதான் தக்க சமயம் என உணர்ந்த ஸ்ரீகால பைரவர் தன் அஷ்டபுஜங்கள் (எட்டு கரங்கள்) சுன வாகனம் (நாய் வாகனம்) முதலியவற்றை கைவிட்டு ஒரு மாடு மேய்க்கும் சிறுவனாக தன்னை மாற்றிக் கொண்டு சில பசுக்களையும் சிருஷ்டித்துக் கொண்டு அவற்றை மேய்ப்பவன் போல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முன்பாக நடமாடினார்.

    அச்சிறுவனைக் கண்ட ஆஞ்சநேயர், "தம்பி, தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் எனக்கு தண்ணீர் இருக்கும் இடத்தைக் காண்பிப்பாயாக" என்று கேட்டுக் கொண்டார்.

    சிறுவன் வடிவில் இருந்த சேத்திர பாலரும் தன்னுடன் மாருதியை, காளிங்க மடுகின் கரைக்கு அழைத்துச் சென்றார்.

    காளிங்க மடுகு, சுவையான தண்ணீருடன் கடல் போல் நிரம்பி இருப்பதைக் கண்ட ஆஞ்சநேயர் மிகுந்த ஆனந்தம் அடைந்தார்.

    அதிக தாகத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆஞ்சநேயர் மனமகிழ்ந்து, "சிறுவனே, இந்த சுயம்பு லிங்கத்தைச் சற்று நேரம் வைத்திருப்பாயாக.

    இதைக் கீழே வைக்கக்கூடாது.

    நான் தாக சாந்தி செய்து கொண்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறினார்.

    அதற்கு அச்சிறுவனும் ஐயா, தாகத்தால் அவதிப்படும் தங்களுக்கு நான் அவசியம் உதவுகிறேன். ஆனால் நானோ சிறுவன்.

    இவ்வளவு பெரிய சிவலிங்கத்தை என்னால் சுமக்க முடியுமா? என்பதுதான் யோசனையாக இருக்கிறது என்று இழுத்தான்.

    அதற்கு மாருதி, "பயப்படாதே, இது பாரமாக இல்லாதவாறு யான் உனக்கு வரம் அளிக்கிறேன்" என்று கூறினார்.

    அந்த தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் வடிவில் இருக்கும் பைரவர் மாருதியிடம் இருந்து அந்த சிவலிங்கத்தை வாங்கிக் கொண்டார்.

    "ஐயா தாங்கள் விரைவில் வந்து சிவலிங்கத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்.

    என்னால் அதிக நேரம் பாரம் தாங்க முடியாது. அப்படி தாங்க முடியாமல் போனால் சிவலிங்கத்தைக் கீழே வைத்துவிட நேரிடும்" என்று தன் எண்ணத்தை மறைமுகமாகத் தெரிவித்தார்.

    தான் வரமளித்தும் சிறுவன் பயப்படுகிறானே என்று நினைத்த மாருதி விரைவில் சிவலிங்கத்தை வாங்கிக் கொள்ளவே எண்ணினார்.

    ஏனெனில், முகூர்த்த லக்னம் வேறு நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தவராய் மடுகில் இறங்கி, தாகம் தீரும் வரை நீரை அருந்தினார். பின்னர் "அப்பாடா என்று ஒரு ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்.

    அவசரமாக சற்றே நீராடிக் களைப்பையும் போக்கிக் கொண்டார்.

    இதற்குள் அந்த சிறுவன் வடிவில் இருந்த கால பைரவர், தான் திட்டமிட்டபடியே, அந்த மடுகுக் கரையில் ஏற்கனவே நிர்ணயம் செய்திருந்த இடத்தில் அந்த சுயம்பு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து விட்டார்.

    "பாரம் தாங்க முடியாததால் லிங்கத்தை பூமி மீது வைத்து விட்டேன்" என்று உரக்கக் கூறி விட்டு மறைந்து விட்டார்.

    • அங்கிருக்கும் சுயம்பு லிங்கங்களில் ஒரு பெரிய சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டார்.
    • பிறகு ஆகாய மார்க்கத்தில் ராமேஸ்வரத்தை நோக்கிப் பயணமானார்.

    காசி பட்டணத்திற்கு சென்ற அனுமான் அன்றிரவு அங்கு உறங்கி மறுநாள் ஆதவன் உதிக்கும் முன்னரே எழுந்தார்.

    புனித கங்கையில் நீராடி, பக்தி சிரத்தையுடன் ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசித்தார்.

    அங்கிருக்கும் சுயம்பு லிங்கங்களில் ஒரு பெரிய சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டார்.

    பிறகு ஆகாய மார்க்கத்தில் ராமேஸ்வரத்தை நோக்கிப் பயணமானார்.

    கால பைரவருக்கு கொடுத்த வாக்குப்படி ஆதவன் உதயமாகி தன் பூரண சக்தியுடன் பிரகாசிக்கத் தொடங்கினார்.

    வாயு பகவானும் ஒப்புக் கொண்டபடி தென் திசையில் இருந்து வடதிசை நோக்கிப் பிரளயகாலப் புயல் போல் வீசத் தொடங்கினார்.

    ங்கா தேவியும் ஆஞ்சநேயர் கண்களுக்கு எங்கும் புலப்படாமல் மறைந்து போனார்.

    சுட்டுப் பொசுக்குகின்ற சூரிய வெப்பத்தின் கொடுமை, வேகத்தைக் குறைக்கும் பலமான எதிர்க்காற்று, தன் தோளின் மேல் இருக்கும் சிவலிங்கத்தின் பாரம் இவைகளினால் ஆஞ்சநேயர் விரைவில் களைத்துப் போனார்.

    தாங்க முடியாத தாகத்தோடு குடிதண்ணீரைத்தேடி அலைந்தார்.

    ஆகா, இன்று என்னவாயிற்று. நேற்று இதே வழியாக செல்லும் போது ஆறுகள், குளங்கள், கிணறுகள் எல்லாம் நீர் நிரம்பியிருந்தனவே.

    ஒருநாள் இரவுக்குள் எல்லாம் எப்படி வற்றிப்போயின?

    என்றுமில்லாத அளவில் இன்று ஏன் ஆதவன் இப்படி சுட்டுப் பொசுக்குகிறான்?

    எதிர் காற்றும் பலமாக இருக்கிறதே? முன்பு சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்து வரும்பேது கூட இத்தனை களைப்பு எனக்கு ஏற்படவில்லையே என்றெல்லாம் பலவாறாக சிந்தித்தப்படியே திருக்காரிக்கரை கிராமத்தை வந்தடைந்தார் மாருதி.

    • திட்டத்தின் முதல் கட்டமாக சூரிய பகவானை அணுகினார் கால பைரவர்.
    • “நாளை காலை முதல் மதியம் வரை நீ உனது பரிபூரண சக்தியைப் பிரயோகித்துப் பிரகாசிக்க வேண்டும்” என்று ஆணையிட்டார்.

    திட்டத்தின் முதல் கட்டமாக சூரிய பகவானை அணுகினார் கால பைரவர்.

    "நாளை காலை முதல் மதியம் வரை நீ உனது பரிபூரண சக்தியைப் பிரயோகித்துப் பிரகாசிக்க வேண்டும்" என்று ஆணையிட்டார்.

    அடுத்து கங்கா தேவியிடம் கால பைரவர் சென்றார்.

    "பவானி நாளை சூர்யோதயம் முதல் மதியம் வரை காசியில் இருந்து திருக்காரிக்கரை வரை உள்ள பிரதேசத்தில் நீ ஆஞ்சநேயன் கண்களுக்கு மதியத்திற்கு பிறகே புலப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

    பிறகு பைரவர் வாயு பகவானிடம் சென்றார்.

    "வாயு தேவா, நாளை காலை முதல் மதியம் வரை திருக்காரிக்கரையில் இருந்து காசி வரை வடதிசை நோக்கி, உனது முழு பலத்தையும் பிரயோகித்துப் பெரும் புயலாக வீசவேண்டும் என்று பைரவர் கேட்டுக் கொண்டார்.

    அது தன் மைந்தனுக்கு எதிரான சூழ்ச்சி என்பதை அறியாத வாயு பகவானும் அப்படியே செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டார்.

    இப்படியாக தன்னுடைய திட்டத்திற்கு பலமான அஸ்திவாரத்தை போட்டுக் கொண்ட பைரவர் அன்று இரவே, தன் இருப்பிடமாகிய திருக்காரிக்கரை கிராமவாசிகளின் கனவில் தோன்றி, "நாளை விடியற்காலை முதல் மதியம் வரை யாரும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியே வர வேண்டாம்" என்று கட்டளையிட்டார்.

    • ராமர் கட்டளையை சிரமேற்கொண்டு, அக்கணமே காசியை நோக்கி ஆகாய மார்க்கத்தில் திருக்காரிக்கரை வழியாக பறந்தார் மாருதி.
    • திருக்காரிக்கரை அதாவது இன்றைய ராமகிரி கிராமத்தை கால பைரவ சேத்திரம் என்றும் அழைப்பது உண்டு.

    ராமர் கட்டளையை சிரமேற்கொண்டு, அக்கணமே காசியை நோக்கி ஆகாய மார்க்கத்தில் திருக்காரிக்கரை வழியாக பறந்தார் கடமை தவறாத கர்ம வீரரான மாருதி.

    திருக்காரிக்கரை அதாவது இன்றைய ராமகிரி கிராமத்தை கால பைரவ சேத்திரம் என்றும் அழைப்பது உண்டு.

    ஏனெனில் ஸ்ரீ கால பைரவ மூர்த்தி பிரதான கடவுளாக எழுந்தருளி பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    இப்போது சிவலிங்க வடிவம் போல் தோற்றம் தரும் பெரியமலை அந்நாளில் அங்கு இல்லை.

    அந்த இடத்தில் காளிங்கு மடுகு என்ற பெரிய ஒரு நீர்த்தேக்கம் இருந்தது.

    அதன் தென்கரையோரம் தன் பததினி ஸ்ரீ காளிகாதேவியுடன் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீகால பைரவர் ஆகாய மார்க்கத்தில் போகும் ஆஞ்சனேயரைக் கண்டு தன் ஞான திருஷ்டியால் மாருதி செல்லும் நோக்கத்தை உணர்ந்து கொண்டார்.

    காசியில் இருந்து ஆஞ்சநேயர் கொண்டு வர இருக்கும் சுயம்பு லிங்கத்தை தன்னுடைய சேத்திரமாகிய திருக்காரிக்கரையில் தன் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

    அதற்கு ஒரு நல்ல திட்டம் செய்தார்.

    • இதனால் கோபம் கொண்ட ஸ்ரீராமர் அவனை யுத்தத்திலே வதம் செய்து தனது தேவியை மீட்டுக் கொண்டு வந்தார்.
    • பிறகு வானர பரிவாரங்களோடு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார்.

    திரேதாயுகத்திலே ஸ்ரீமன் நாராயணன் ராமாவதாரம் எடுத்து வந்தபோது, சீதா தேவியை இலங்கை வேந்தன் ராவணாசுரன் கவர்ந்து சென்று, சிறை வைத்தான்.

    இதனால் கோபம் கொண்ட ஸ்ரீராமர் அவனை யுத்தத்திலே வதம் செய்து தனது தேவியை மீட்டுக் கொண்டு வந்தார்.

    பிறகு வானர பரிவாரங்களோடு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார்.

    பிரம்ம அம்சத்தில் பிறந்தவனும், வேதங்களை நன்கு பயின்றவனும், சிறந்த சிவபக்தனுமாகிய ராவணனை வதம் செய்த காரணத்தால் ராமருக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டு இருந்தது.

    அந்த தோஷத்துடன் அயோத்தி சென்று, முடிசூடிக் கொண்டு, அரசாள்வது முறையாகாது என்றும் குல குருவான வசிஷ்டர் முதலான முனிவர்கள் கூறினர்.

    எனவே ராமேஸ்வரத்தில் அதற்கு ராமர் பரிகாரம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக காசியில் இருந்து ஒரு சுயம்பு (இயற்கையாக தோன்றியது) லிங்கத்தைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து பூஜித்து, பிரம்ம கத்தி தோஷத்தில் இருந்து விடுபட ஸ்ரீராமர் முடிவு செய்தார்.

    ஆஞ்சனேய சுவாமியை அருகில் அழைத்து, "வாயுபுத்திரா, இன்றே நீ காசித்தலம் செல்வாயாக என்று பணித்தார்.

    • குறுக்கே குரங்கு வால் ஒன்று தென்பட்டது. அதை நகர்த்த குரங்கைக் கேட்டார்.
    • அப்போது ஆஞ்சநேயர் நாமத்தையும், ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும்.

    ஆஞ்சநேயப் பெருமான் வலிமை முழுவதும் அவருடைய வாலில் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இதற்கு ஒரு வரலாறு உள்ளது.

    பீமர் பாரிஜாதம் பூ தேடி காட்டில் அலைந்த போது மிகவும் களைப்படைந்து விட்டார்.

    குறுக்கே குரங்கு வால் ஒன்று தென்பட்டது. அதை நகர்த்த குரங்கைக் கேட்டார்.

    படுத்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறியாமல் தனது வேண்டுகோளை வேகமாகச் சொல்லிக் கோபப்பட்டார்.

    உடனே அனுமார் "வயோதிகத்தினால் என்னால் என் வாலை நகர்த்த முடியவில்லை.

    நீயே அதை எடுத்து ஓரமாக நகர்த்தி விடு" என்று சொன்னார்.

    பீமர் வாலை அப்புறப்படுத்த முயற்சி செய்தார். பலமுறை முயன்றும் முடியவில்லை.

    அப்போது ஆஞ்சநேயர் தான் வாயு புத்திரன் என்று அறிமுகப்படுத்தி வாலைத்தானே நகர்த்தி பீமன் போவதற்கு வழிகொடுத்து வாழ்த்தினார்.

    தான் எவ்வளவு முயன்றும் முடியாத ஒன்றை இவ்வளவு சுலபமாக செய்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டு பீமன் அனுமனையும் அனுமன் வாலையும் வணங்கினார்.

    பீமன் ஆஞ்சநேயரைப் பார்த்து உங்கள் வாலின் வலிமையையும் மகிமையையும் தெரியாமல் உதாசீனப்படுத்திய என்னை மன்னித்து எனக்கு சர்வ சக்திகளையும் மங்களத்தையும் அளித்தீர்களே!

    அதேபோல உங்களது வாலைப் பூஜித்து துதிப்பவர்களுக்கும் சர்வ மங்களத்தையும் கொடுத்து அருள வேண்டும் என்று வணங்கி வரம் அளிக்கக் கேட்டுக் கொண்டார்.

    அப்படியே அனுமாரும் வரம் அளித்தார்.

    இந்த வரலாற்றை ஒட்டியே இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

    இந்த வழிபாட்டுச் செயல்முறை வருமாறு:

    அனுமாருடைய உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியிலிருந்து ஆரம்பித்து தினசரி முதலில் சந்தனப் பொட்டு வைத்து அந்த சந்தனப் பொட்டின் மேல் குங்குமத் திலகம் இட்டு வர வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் இம்மாதிரி தொடர்ந்து வைத்துக் கொண்டே வந்து வாலின் நுனி வரை முடிக்க வேண்டும்.

    அப்படி முடிக்கிற நாளன்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி பூஜை செய்ய வேண்டும்.

    அப்போது ஆஞ்சநேயர் நாமத்தையும், ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும்.

    அப்படி செய்தால் நினைத்த காரியம் பலித்துப் பூரண பலனும், பெரும்பேறும் கைகூடும்.

    • மாளிகையை விட்டு வெளியில் செல்லும் போது தனது வாலின் நுனியை மட்டும் நீட்டினார்.
    • ஆஞ்சநேயரும் மிகவும் மகிழ்ந்து சனி பகவானிடம் வேண்டுகொள் விடுத்தார்.

    ஆஞ்சநேயர் மூலம் நட்சத்திரத்தில் தோன்றியவர் ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க வந்தார்.

    ஆஞ்நேயர் பொதுவாக தினமும் தோட்டத்தில் மலர்ந்த பூக்களைப் பறித்து ராமரை வழிபட்டு பாடல்களைத் தன்னை மறந்து பாடிக் கொண்டிருப்பார்.

    அன்று தன்னைப் பிடிக்க சனீஸ்வரர் வாசலில் காத்துக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டார் ஆஞ்நேயர்.

    சனி பகவான் அவர் கடமையைச் செய்ய வந்துள்ளார். செய்யட்டும். நான் எனது கடடையைச் செய்கிறேன் என்று நினைத்தபடியே இருந்தார்.

    மாளிகையை விட்டு வெளியில் செல்லும் போது தனது வாலின் நுனியை மட்டும் நீட்டினார்.

    வெளியில் காத்துக் கொண்டிருந்த சனி பகவான் ஆஞ்சநேயரின் வாலைக் கண்டதும் அவரது வாலில் ஏறி அமர்ந்து இறுக்கிப் பிடித்து கொண்டார்.

    சனி பகவானை விரட்டுவது எப்படி என சிறிது நேரம் யோசித்தார் ஆஞ்சநேயர்.

    ராமபிரானைத் துதிக்கும் போது துள்ளிக் குதித்துக் கொண்டே வழிபட வேண்டும் என முடிவு எடுத்தார்.

    அதன்படியே ஆஞ்சநேயர் குதிக்கத் தொடங்கினார். இதனால் வாலின் நுனியில் இருந்த சனி பகவானுக்கு உடல் வலி எடுத்தது.

    ஆஞ்சநேயர் குதிப்பதை நிறுத்திவிட மாட்டாரா.... என யோசித்த சனி பகவான் உடல் வலி அதிகமாகவே ஆஞ்சநேயரிடம் எப்போது குதிப்பதை நிறுத்துவாய்? என்று கேட்டார்.

    இதைக் கேட்டதும் "சனி பகவானே... ஏழரை வருஷத்திற்கு துள்ளிக் குதித்துக் கொண்டே தான் இருப்பேன்" என்றார்., சனி பகவான் பயந்து போனார்.

    இனிமேலும் ஆஞ்நேயரைப் பிடித்துக் கொண்டிருப்பதால் நமக்கு எந்தப்பயனும் இல்லை என யோசித்த சனி பகவான் ஆஞ்சநேயரை விட்டு விலகி விட முடிவு செய்தார் அதன்படி ஆஞ்சநேயரிடம் சொல்லிவிட்டு வெளியேறினார் சனி பகவான்.

    ஆஞ்சநேயரும் மிகவும் மகிழ்ந்து சனி பகவானிடம் வேண்டுகொள் விடுத்தார்.

    "சனீஸ்வரர்... என்னை விட்டு விலகியது போல் ஏழரை ஆண்டு சனி பிடிக்கும் போது உன்னிடமிருந்து விலக வேண்டும் என நினைத்து என்னை வழிபடும் என் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவையும், சங்கடத்தையும் நீ கொடுக்கக்கூடாது" எனக் கேட்டுக் கொண்டார்.

    சனி பகவான் சம்மதித்தார் எனவே ஏழரை சனி, அஷ்டம சனியின் போது நமது துயரங்கள் விலக ஆஞ்சநேயரை வழிபட்டால் பக்தர்கள் சனி பகவானிடமிருந்து விடை பெறுவதற்கு ஆஞ்சநேயர் துணைபுரிவார்.

    • மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.
    • பொருளாதார மேன்மை உண்டாகும்.

    ஹனுமன் முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹமுகம், ஹக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார்.

    கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி" என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும்.

    தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.

    மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.

    வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது.

    பொருளாதார மேன்மை உண்டாகும்.

    மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.

    இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர்

    சொல்லின் செல்வன் என சீதையால் போற்றப்பட்ட அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல் வன்மை, ஆரோக்யம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.

    பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.

    ×